நான்மணிக்கடிகை/12/வாழ்க்கை உண்மைகளை வெளிக்காட்டும்..

சங்ககால இலக்கியங்களில், பதினெண் கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான 'நான்மணிக்கடிகை' என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் 'நான்மணிக்கடிகை' எனப் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் விளம்பி நாகனார்.இவரின் காலம் கி.பி. 200 க்கு முன்னர் ஆகும்.

தொடர்ச்சி..

56 -👇👇👇

மாண்டவர் மாண்ட வினை பெறுப; வேண்டாதார்

வேண்டா வினையும் பெறுபவே; யாண்டும்,

பிறப்பால் பிறப்பார் அறன் இன்புறுவர்;

துறப்பார், துறக்கத்தவர்.       

அறிவாற் சிறந்தவர்கள் மாட்சிமைப்பட்ட செயல்களையே செய்வர். அறிவிற்குறைந்தவர்கள் தீவினையே செய்வர். உயர்ந்த குடியில் பிறந்தோர் இருமையிலும் (இம்மை, மறுமை) அறத்தையே விரும்பிச் செய்வர். பற்றற்றத் துறவிகள் வீட்டின்பத்தையே (சொர்க்கம்) விரும்புவர்.

 

57 -👇👇👇

என்றும் உளவாகும், நாளும், இரு சுடரும்;

என்றும், பிணியும், தொழில் ஒக்கும்; என்றும்

கொடுப்பாரும் கொள்வாரும் அன்னர்; பிறப்பாரும்

சாவாரும் என்றும் உளர்.       

விண்மீன்களும், சந்திரனும், சூரியனும் என்றும் உள்ளன. நோயும் முயற்சியும் என்றும் உள்ளன. ஈவாரும், ஏற்பாரும் என்றும் உள்ளனர். பிறப்பாரும் இறப்பாரும் என்றும் உள்ளனர்.

 

58 -👇👇👇

இனிது உண்பான் என்பான் உயிர் கொல்லாது உண்பான்;

முனிதக்கான் என்பான் முகன் ஒழிந்து வாழ்வான்;

தனியன் எனப்படுவான் செய்த நன்று இல்லான்;

இனியன் எனப்படுவான் யார் யார்க்கேயானும்

முனியா ஒழுக்கத்தவன்.       

ஓருயிரையும் கொல்லாமல் காய்கறி உணவுகளை உண்பவன் இனிதாக உண்பவனாவான்; முகமலர்ச்சியற்றவன் பிறரால் வெறுக்கப்படுபவன் ஆவான்; பிறர்க்கு உதவி செய்யாதவன் துணையில்லாதவன் ஆவான். எவராலும் வெறுக்கத்தகாத இயல்பை உடையவன் இனியவன் ஆவான்

 

59 -👇👇👇

ஈத்து உண்பான் என்பான் இசை நடுவான்; மற்ற அவன்

கைத்து உண்பான் காங்கி எனப்படுவான்; தெற்ற

நகை ஆகும் நண்ணார் முன் சேறல்; பகை ஆகும்,

பாடு அறியாதானை இரவு.  

பிறருக்குக் கொடுத்துண்பவன் புகழுடையவனாவான். பிறருக்குக் கொடுத்துண்பவனது கைப்பொருளையே பறித்து உண்பவன் பேராசைமிக்கவனாவான். தன்னை விரும்பாதார் முன் தான் விரும்பிச் செல்லல் இகழ்ச்சிக்கு இடமாகும். தகுதியறியாதவனை ஒன்று வேண்டிச் செல்லல் பகைக்கு இடமாகும்.

 

60 -👇👇👇

நெய் விதிர்ப்ப, நந்தும், நெருப்பு அழல்; சேர்ந்து

வழுத்த, வரம் கொடுப்பர், நாகர்; தொழுத் திறந்து

கன்று ஊட்ட, நந்தும், கறவை; கலம் பரப்பி

நன்று ஊட்ட, நந்தும், விருந்து.      

யாகத்தில் நெய்யைச் சொரிய நெருப்பு வளர்ந்து எரியும். வணங்கினால் தேவர் நன்மை தருவர். கன்றுகளை உண்பிக்க பசுவிற்குப் பால் பெருகும். இனிமையாய் விருந்தளித்தால் விருந்தினர் மகிழ்வர்.

 

நான்மணிக்கடிகை தொடரும்…..


ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக👉

Theebam.com: 'நான்மணிக்கடிகை' /01/வாழ்க்கை உண்மைகளை வெளிப்படு...

தேடல் தொடர்பான தகவல்கள்:

நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு, என்றும், உண்பான், இலக்கியங்கள், நான்மணிக்கடிகை, எனப்படுவான், நந்தும், ஆவான், என்பான், பதினெண், செய்வர், கீழ்க்கணக்கு, இடமாகும், செல்லல், உள்ளனர், நெருப்பு, ஊட்ட, பிறருக்குக், முன், நன்று, சங்க, உண்பவன், பிறப்பாரும், ஆகும், விரும்பிச்

1 comments:

  1. From face book-

    Manu Sella
    தன்னை விரும்பாதார் முன் தான் விரும்பிச் செல்லல் இகழ்ச்சிக்கு இடமாகும்.
    Reply1d
    Manu Sella
    முகமலர்ச்சியற்றவன் பிறரால் வெறுக்கப்படுபவன் ஆவான்;
    Reply1d
    Manu Sella
    உயர்ந்த குடியில் பிறந்தோர் அறத்தையே விரும்பிச் செய்வர்.
    Reply1d
    Sivamalar Yogesan
    Manu Sella அதென்னங்ங உயர்ந்த குடி
    Reply1d
    Sivamalar Yogesan
    சொல்லுங்ங
    Reply1d
    Atputhan Santhiya
    👍அருமை மிக அருமை
    Reply1d
    Manu Sella
    Atputhan Santhiya நன்றி,தொடர்வோம்
    Reply1d
    உருத்திரசிங்கம் நாகேஸ்வரி
    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா
    Reply1d
    Manu Sella
    உருத்திரசிங்கம் நாகேஸ்வரி நன்றி,தொடர்வோம்
    Reply1d
    Ganesalingam Selvanayagam
    👍அருமை
    Reply1d
    Manu Sella
    Ganesalingam Selvanayagam நன்றி,தொடர்வோம்
    Reply20h
    Gowre Chandra
    தமிழ் இனிது 👌
    Reply1d
    Manu Sella
    Gowre Chandra நன்றி,தொடர்வோம்
    Reply20h
    Pathmanathan Ratnasingam
    அருமையான பதிவு
    Reply1d
    Manu Sella
    Pathmanathan Ratnasingam நன்றி,தொடர்வோம்
    Reply20h
    Parathakularani Shanmugaraja
    Reply1d
    Manu Sella
    Parathakularani Shanmugarajaநன்றி,தொடர்வோம்
    Reply20h
    Khavi Khavi
    நல்லொழுக்கமே உயர்குடி.மாறாக துர்குணம் தாழ்மை.சில/பலரின் பிறவி இயல்பாகின்றது..
    Reply1d
    Manu Sella
    Khavi Khavi உண்மையே, நன்றி,தொடர்வோம்
    Reply20h
    Selva Uthayan
    வாழ்த்த வேண்டிய பதிவும்
    உணரவேண்டிய பதிவும்...
    நிறைவான பதிவுக்கு மனதரா வாழ்த்க்கள்
    May be an image of 1 person and text
    Reply20h
    Manu Sella
    Selva Uthayan நன்றி,தொடர்வோம்
    Reply20h
    நித்தியம் சண்முகலிங்கம்
    மிகவும் அருமையான பதிவுகள்
    Reply20h
    Manu Sella
    நித்தியம் சண்முகலிங்கம் நன்றி,தொடர்வோம்
    Reply20h
    Denmark Shan Subramaniam
    இனிய வாழ்த்துகள்
    Reply16h
    Manu Sella
    Denmark Shan Subramaniam நன்றி,தொடர்வோம்
    Reply10h
    Kandiah Srithas
    தன்னை
    அறிந்து கொண்டு
    தன்னைச்சார்ந்தோரை
    புரிந்து கொண்டு
    வாழப்பழகிக்கொள்பரே
    வாழ்வில் உயர்ந்தவர்
    Reply13h
    Manu Sella
    Kandiah Srithas நிச்சயமாக/நன்றி,தொடர்வோம்

    ReplyDelete