ஏன் இந்தப் போராட்டம்? -: பறுவதம் பாட்டி


அன்று சனிக்கிழமை பாடசாலை விடுமுறை ஆகையால்  காலை படுக்கையிலிருந்து எழ மனமின்றி படுத்துக்கொண்டிருந்தேன்அவ்வமயம் பக்கத்தில் பறுவதம் பாட்டியின் ஸ்பீக்கர் போன் மாமா வீட்டில் வாழும் அண்ணாமலைத் தாத்தாவின் பெயர் கூறி அலறிக்கொண்டது. நானும் அவர்கள் உரையாடலை செவிமடுக்க தயாராகிக் கொண்டேன்.

''பாத்தியே பறுவதம்! zee tv -  junior super stars  நிகழ்ச்சியை ''ஆவலோடு  பேச  ஆரம்பித்தார் தாத்தா.

''ஓம்,அந்தக் கொடுமையையும் பார்த்தனான்.''பாட்டி அருவருத்துக் கொண்டார்.

''ஏன் பறுவதம் அப்பிடிச் சொல்லுறாய்? அந்தக் குழந்தைகள் என்னா நடிப்பு நடிக்குதுகள்.நீ..''

சற்று சத்தமாகவே குறுக்கிட்டுக் கொண்டார் பாட்டி. 'நடிக்கினம் சரி. இல்லை எண்டு சொல்லேல்லை. அதை சரியான முறையில இவங்களுக்கு பயன்படுத்த தெரியலையே!''

''நீ என்ன பறுவதம் சொல்லுறாய்?''

''அதிலை என்ன எல்லாம் காதல் ,குடும்ப பிரச்சனைகள் எல்லே போகுது .அந்தக் குழந்தைகளையும் பழுதாக்கி,வீடுகளிலை இருந்து இதை பார்க்கிற பிள்ளைகளையும் பழுதாக்கினம். இதுவரை ஊடகத்தின் பெயரையும்,நிகழ்வுகளின் பெயர்களையும் ஆங்கிலத்தில வச்சு மொழியை அழித்துக் கொண்டு வந்தார்கள்.இப்போது பண்பாட்டையும் அழிக்க துவங்கிவிட்டினம்.
இந்த வெள்ளைக்காரங்களின்ர பழக்க வழக்கங்களை முந்தி எங்கட ஆட்கள் பகிடி பண்ணுறவை.ஆனால்  அவங்கட நாட்டு தொலைக்காடசியில குழந்தைகளுக்கென 24 மணித்தியாலமும் நிகழ்ச்சிகள் இருக்கு. அதில அப்பிடி வயதுக்கு மீறின 
காட்சிகள் அனுமதிக்கப் படுவதில்லை.
''ஏன் ,இங்கை கனடாவிலையும் தமிழ் வானொலி ஒண்டு நேயர் விருப்பம் நிகழ்ச்சிக்கு -coffee double double- எண்டு தானே பெயர் வைச்சிருக்கினம்'' தாத்தாவும் பாட்டி பக்கம் மாறிக்கொண்டார் .
 ''சரி தமிழில் உழைத்துக்கொண்டு தமிழை பூண்டோடு அழிக்க எல்லா ஊடகங்களும் தயாராகிவிட்டன. அழிக்கட்டும்.
அப்படியெனில் இலங்கையில யாருக்காக இந்த உரிமைப் போராட்டம்,யுத்தம்,அழிவு,ஒன்றும் விளங்கவில்லை.
போராடாமல் இருந்திருந்தால்  பல லட்ஷம் சனங்களின்ர உயிர்களாவது மிஞ்சியிருக்கும் .''
''சரியாய் சொன்னாய்  பறுவதம் இப்பிடியே போனா சில வருஷத்திலே உலகத்தில தமிழர் எண்ட இனமே இருக்காது எண்டு சொல்லுறது தெளிவா தெரியுது.''
கவலை தோய்ந்த முகத்துடன் பாட்டி தங்கள் உரையாடலை முடித்துக்கொண்டார்.
நானும் அம்மாவின் வழமையான தேவாரத்துடன் படுக்கையிலிருந்து எழுந்து காலைக் கடன்களுக்காக விரைந்து கொண்டேன்.                                                       

ஆக்கம்:பேரன்,செல்லத்துரை மனுவேந்தன்.

1 comments:

  1. செழியன்Saturday, November 19, 2016

    தமிழனுக்கு தமிழில் படிக்க ,பேச விருப்பமில்லை.தமிழனைக் கண்டாலே தமிழனு பிடிக்குது இல்லை. இதையும் சேர்த்துக்கொள்ளுங்க!

    ReplyDelete