ஏழு நாட்களில் உங்கள் முகம் அழகுபெற...


அப்படியெனில் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள நேச்சுரல் மாஸ்க்கை முகத்திற்கு போடுங்கள். இதனால் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் ஒரே வாரத்தில் மறைவதைக் காணலாம். சரி, இப்போது ஏழே நாட்களில் சரும சுருக்கங்களைப் போக்கும் அந்த மாஸ்க்கை எப்படி செய்வதென்றும், பயன்படுத்துவதென்றும் காண்போம்.
படி #1
முதலில் ஒரு பல் பூண்டு எடுத்து தோலுரித்து, நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
 படி #2
பின் அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 படி #3
அடுத்து அதோடு 1 டேபிள் ஸ்பூன் க்ளே பவுடர் சேர்த்து கலந்து, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
 படி #4
பின் முகத்தில் உள்ள அழுக்கை, பாலில் நனைத்த பஞ்சுருண்டை பயன்படுத்தி துடைத்து எடுத்துவிட வேண்டும்.
 படி #5
பிறகு தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை முகத்தில் தடவி 20-30 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், ஒரே வாரத்தில் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து, சருமம் இளமையுடன் மிளிர்வதைக் காணலாம்.

0 comments:

Post a Comment