என்று வளரும் எங்கள் ஈழத்துத் திரைப்படம்?

(அனுபவ  அலசல்)


மாமா வீட்டில் வாழும்அண்ணாமலைத்தாத்தாவுடன்ஈழத்துக் கலைஞர்களின்  பங்களிப்பில் கனடாவில்தயாரிக்கப்பட்டு  தற்போது திரையரங்குகளில்ஓடிக்கொண்டிருக்கும்  திரைப்படம் ஒன்றினைபார்க்கவென்று சென்று திரும்பிய பறுவதம் பாட்டிபடம் முடிந்ததும் தாத்தாவினையும்அழைத்துக்கொண்டு எங்கவீடு வந்தவர்,தாத்தாவுடன் புறுபுறுத்துக்கொண்டமை முதலில்எங்களுக்கு ப்புரியவில்லை.
"என்ன பிரச்சனைஎன்று அம்மா கேட்டபோது தான் பாட்டி  பேசத்தொடங்கினார்.
"என்ன செய்யிறது. படம் பார்க்க தியேட்டர் போகாதனாங்கள் எங்கடகலைஞர்களும் சினிமாத்துறையில முன்னேறவேணும் எண்டுதானேஆதரவு குடுக்கவேணும் எண்டு போறம்.அங்க போனா பழைய நிலை தான்."
"ஏனம்மா படம் சரியில்லையே?" என்றவாறே அம்மாவும் பாட்டியின்அருகில் வந்து உட்கார்ந்து கொண்டார்.
"அதயேன் பிள்ளை கேட்கிறாய்படம் எடுத்தவர் அவற்றைகலியாணவீட்டுக்கு சொந்தக்கரருக்கும்,நண்பர்களுக்கும் அழைப்புவிட்டமாதிரியெல்லொ படத்திலை ஆட்களை நடிக்க எண்டுசேர்த்திருக்கிறார்வந்தவையும் பொம்மை மாதிரி வந்து,வந்து போகினம்.கதைக்கிறவரின் குரல் கேட்கும்போது மற்றவருடைய முகம் தான் திரையிலதெரியுதுஅப்பிடித் தெரிஞ்சாலும் 'ம்எண்டு தான் முகத்தை வச்சிருப்பார்.அவர் சொல்லி முடியும் வரை மற்றவர் முகத்திலை ஈயும் ஆடாது.கதைச்சுக்கொண்டு நிக்கிற இருவரும் யார்,இவர்களுக்கிடையில் என்னஉறவு,எதற்காக சந்திக்கினம்,எங்கை சந்திக்கினம் ஒரு விளக்கமும் இல்லை.நடிகர்மாரிலும் பார்க்க காருகள் தான் நிறைய நடிக்குதுஒழுங்கானகதையில்லைசம்பந்தமில்லாத காட்சிகள்.கடவுளேஎனக்கு ரிக்கற் சிலவையோசிக்கேலைஒரு வளர்ந்த நாட்டில வாழ்ந்தும் எவ்வளவுநேரத்தையும்,பணத்தையும் இப்பிடி செலவழிச்சு ஒரு நல்ல திரைப்படத்தைதரமுடியாமல் எங்கட ஆட்கள் இருக்கினமே எண்டதுதான் கவலையா போச்சுது."
"நடிகர்மாரை தேடிப்போகாம கண்டநிண்டவையளை திரைக்குகொண்டுவந்தா அப்பிடித்தானே இருக்கும்.அத்தோட திரைக்கதை,வசனம் எழுதுறவர் நாலு புத்தகங்கள் வாசிக்கிற பழக்கம் இருந்தா தானே கையில எழுதவரும்”   என்று அண்ணாமலைத்தாத்தாவும் தன்னுடைய கவலையினை வெளிப்படுத்திக்கொண்டார். “ஏனம்மா ஒரு சில நல்ல இலங்கைத் தமிழ் சினிமாப் படங்கள் முந்தி வந்துபோய் பார்த்தநீங்கள் தானே." என்று அம்மா நினைவூட்டினார்.

"அதென்ன இரண்டு,மூண்டு படங்கள் தான்.பிறகுவளரேல்லையேநல்லாயெல்லெவிழுந்திட்டினம்."

“எங்கட சினிமாத்துறையும் இனிமேற் காலத்திலைசாதனைகள் படைக்கத்தான் போகுது.இருந்துபாருங்கோ அம்மா.”

"பார்ப்பம்"என்று அக்கதையினை சலிப்புடன்முடித்துக்கொண்டார் பாட்டி.
எங்கடை கலைஞர்களை ஊக்குவிப்பதில் பாட்டிக்கு இருக்கும் மலையளவுஆர்வத்தினை எண்ணியவாறு  நானும் கொம்பியூற்றரில் மூழ்கினேன்.
.

0 comments:

Post a Comment