தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்? ] பகுதி :04‏



 [தொகுத்ததுகந்தையாதில்லைவிநாயகலிங்கம்]


60,000 ஆண்டுகளுக்குமுன்னர் ஆஃப்ரிக்காவில்தொடங்கிய மனித இனம்போன வழியெல்லாம்அவர்களின்ஜெனடிகல்[genetical]ரேகைகளை விட்டுவிட்டுபோயிருக்கிறது.ஆராய்ச்சியாளர்கள்இதற்கு ஜெனொகிராபிக் ப்ரொஜெக்ட்[GP:Genographic Project] என்றுபெயரிட்டு இருக்கிறார்கள்மனித உடல் ஜீன்களின் கட்டமைப்பாலானது.மனித உடலின்இயக்கத்தின் ஒட்டுமொத்த கட்டளைகள்,திறவுகோல்கள் ஜீன்களில் இருக்கின்றனபரம்பரையாக சிலருக்குநோய் வருதலும் ஜீன்களை சார்ந்ததே."நான் ராஜபரம்பரை யிலிருந்துவந்தவன்'', "நாங்கள் கொடுத்து பழக்கப்பட்டவர்கள்கை நீட்டிப்பழக்கப்படவர்கள் இல்லை!'' இவையெல்லாம் நாடக அரங்கில்அல்லது திரை அரங்கில் பேசுவதை கேட்டிருப்பீர்கள்.ஆனால்இவற்றிற்கும் அறிவியலுக்கும் தொடர்பு இல்லாமல் இல்லை.நிறைய நிறைய தொடர்பு உண்டு."அப்படியே இவன் அப்பனை உரிச்சுவச்சிருக்கான்''. இந்தப் பண்புகளையெல்லாம் பரம்பரை பரம்பரையாககடத்தி வருவது இந்த ஜீன் எனப்படும் மரபணுதான்அதாவது மரபணு(gene) என்பது ஒரு உயிரினத்தின் பாரம்பரிய இயல்புகளைசந்ததிகளினூடாக கடத்தவல்ல ஒரு மூலக்கூற்றுஅலகாகும்.இனப்பெருக்கத்தின் பொழுது பெற்றோர்களிடமிருந்துசந்ததிகளுக்கு மரபணுக்கள் கடத்தப்படுகின்றன.உயிரியல்இயல்புகளுக்கும் தேவையான தகவல்கள் இந்த மரபணுக்களிலேயேகாணப்படுகின்றது.உயிரியல் இயல்புகள் என்னும்போது பார்த்தறியக்கூடிய இயல்புகளாகவோ (தோலின் நிறம்), பார்த்து அறிய முடியாதஇயல்புகளாகவோ (குருதி வகைஇருக்கலாம்

ஒருமுறை குலோத்துங்க மன்னனின் குலகுருவானஒட்டக்கூத்தர்,குலோத்துங்க மன்னனுக்கு பாண்டியர் மகளை பெண்கேட்க சென்றார்.அதற்கு பாண்டிய மன்னர் மறுப்பு கூற ஒட்டக்கூத்தர்பாண்டியர் சோழரை விட பரம்பரையில் தாழ்ந்தவர் என்ற அர்த்தத்தில்இப்படி பாடினார்.

"ஆருக்கு வேம்பு நிகராகுமா அம்மானே?
ஆதித்தனுக்கு நிகர் அம்புலியோ அம்மானே?
வீரர்க்குள் வீரனொரு மீனவனோ அம்மானே?
வெற்றிப் புலிக்கொடிக்கு மீனமோ அம்மானே?
ஊருக்குறந்தை நிகர் கொற்கையோ அம்மானே?
ஒக்குமோ சோனாட்டைப் பாண்டிநாடு அம்மானே?"

அதாவது சூர்ய வம்சத்துக்கு சந்திர வம்சம்ஈடாகாது[ஆதித்தனுக்கு நிகர் அம்புலியோ அம்மானே?]என்றும் மீனவனான பாண்டியன் வீரனாக முடியாது[வீரர்க்குள்வீரனொரு மீனவனோ அம்மானே?] என்றும் கூறியதின் அர்த்தம் இப்பஉங்களுக்கு புரிந்திருக்கும்

உலகிலுள்ள பல்வேறு இனத்தவர்களின் ஜீன் மாதிரிகளை சேகரித்து,
அவற்றினை ஆராய்ந்துஅந்த ஜீனுக்குசொந்தக்காரரின் மூதாதையர்களின்வழியினைக் கண்டறிவது தான் இந்ததிட்டம்மனிதர்களின் Yகுரோமோசோம்களை அடிப்படையாகவைத்து இந்த வழித்தடம்அமைக்கப்பட்டுள்ளது.இந்தவழித்தடங்கள் M என்கிறஅடைமொழியோடு பொருத்தமான எண்ணினைக் கொண்டுஅடையாளப்படுத்தப்படுகிறது. M என்பது Macro-haplogroup என்பதின்சுருக்கம்.ஒவ்வொரு வழித்தடமும்ஆஃப்ரிக்காவிலிருந்து தொடங்கி,வெவ்வேறு கண்டங்களுக்கு பயணிக்கிறதுஉதாரணமாகஇந்தியாவின்முக்கியமாக தென்னிந்தியாஇலங்கையினை குறுக்காக கடந்துஆஸ்திரேலியா வரை செல்லும் வழித்தடம் - M130. இது நடந்தது சுமார்50,000 ஆண்டுகளுக்கு முன்னர். 30,000 ஆண்டுகளுக்கு முன்னர்,இமயமலையின் கணவாய்களின்[a narrow-pass between hills] வழியாகவந்தேறிகள் வந்து குடியேறினார்கள் என்பதற்கு சான்றாக அமையும்வழித்தடம் M20 ஆகும் அப்படியே மற்றவையும் ஆகும் . 

1 comments:

  1. ஆதித்தமிழர்கள் கோண்டுவானா பெரு நிலப்பரப்பு பூமியின் மய்யப்பகுதியில் இருந்த போது ஆப்ரிக்கா ஆஸ்திரேலியா தென்னமரிக்கா இனைந்த ஒரே பெருங்கண்டமாக இருந்து பின்னர் நகர்ந்து விலகிப்போனது என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து !

    சுமேரிய அகத்திய தமிழ் மக்கள், தாமிழிகா தீபகற்ப தமிழ் மக்கள், நாகர், மற்றும் மயன் நாகரிக மக்கள் எல்லாமே பிரிந்து காலப்போக்கில் விலகிப்போனது, மாசலம் உருவான பின்னர் தான் !

    ReplyDelete