இராவணன் நல்லவனா?..கேள்வி(18--24)

கேள்வி(18):- தனி இரு மனிதர்களின் கெளரவப் பிரச்சனைக்காக போர் நடப்பது மனுதர்மமா? கெளரவத்திற்காக நாடும் நாடும் சண்டையிட்டுக் கொள்ளலாமா?

 

இது என் வார்த்தைகளில் இழையோடி வரும் கேள்வி.. ராவணன் இலங்கையை ஆண்ட காலத்தில் பல அரசர்கள் நிம்மதியாக அரசாண்டுருக்கிறார்கள், தசரதன், ஜனகன், கோசல நாடு, கேகய நாடு, அங்க நாடு என அனைத்து நாடுகளும் அமைதியாக இருந்திருக்கின்றன. ராவணன் வம்புச் சண்டைக்கு போகவில்லை, மனிதர்களை கொல்லவில்லை என்பது தெரிகிறதல்லவா?

 

ஒருவன் இறப்பதால் அவன் தோற்றான் என்று அர்த்தமில்லை...... அதுவே அவன் அரசனானால்................ அப்படியென்றால் இறந்துபோனவன் சேனையை தோற்ற சேனை யென்று அழைப்பீர்களா? இல்லை வேறு எப்படி அழைப்பீர்கள்?

ஒருவன் எப்பொழுது தன்னிலை மாறுகிறானோ அப்போதுதான் அவன் அடுத்தவனிடம் தோற்றவனாகிறான்.

 

ஆக முனிவர்கள் முறையிடாமல் எங்ஙனம் விஷ்ணு இராமாவதாரமெடுத்தார்? ஒருவேளை அப்படியில்லை என்றாலும் யார் சொல்லி ராமன் அவதாரமெடுத்தார் விஷ்ணு? தானாகவே தாம் நினைக்கும்போது எடுத்துக் கொண்டாரா? இராமாயணத்தின் ஆரம்பத்திலேயே இது சொல்லப் பட்டிருக்கிறது..

 

ராமாயாணத்தில் அல்ல பாகவதத்தில் சொல்லப்பட்டது. ராமாயணக் கதைப்படி தசரதனுக்கு ராமன் மகனாய் பிறந்தான்.

 

கேள்வி(19):-  ஒரு தலைவனோ அல்லது அரசனோ இல்லை பெரும் மனிதனோ ஒருவனை ஒரு விஷயத்திற்காக அனுப்பினால் அது தூது,,, அதுவே ஒரு சாதாரண மனிதன் (அதாவது துறவியாகிய ராமன்) அனுப்பினால் அப்படியென்றால் அதற்கு பெயரென்ன? அனுமன் எதன் அடிப்படையில் இலங்கை வந்தான்? தூதுவனாகவா? இல்லை வெறும் வானரமாகவா? தூதில்லை என்று யார் சொன்னது?

 

ராமன் அனுமனை அனுப்பியது சீதை எங்கிருக்கிறாள் என்று கண்டு வர.. ராவணனிடம் பேச்சு வார்த்தை நடத்த அல்ல. அது அனுமனாக உருவாக்கிக் கொண்ட சுயபதவி. ராமன் ராவணனிடம் தூதனுப்பியது அங்கதனை. போருக்கு முன்.

 

கேள்வி(20):-அப்படியே ஒரு வானரமாக இருந்தாலும் அவனும் ஓர் உயிரல்லவா? அவனை கைதியாகவா நடத்துவது?

 

மானைக் கொன்ற ராமன் மானை உயிரியாக மதிக்கவில்லையே. சதி என்று அறிந்தே செய்தானல்லவா? இலங்கைக்கு நாசம் விளைவித்த ஒருவனை எப்படி நடத்த வேண்டுமோ அப்படி செய்தான் ராவணன்

 

கேள்வி(21);-எந்த தவறும் செய்யாத ஒரு வானரத்தை கைதியாக நடத்துவது இராவண குல தர்மமோ? அதிலும் வாலில் தீவைப்பது என்ன அநியாயம்?

 

நன்றாக கவனியுங்கள் வெறும் பேச்சினால் என்று ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.. ஆக அனுமன் தான் இலங்கையை எரித்தது என்று எனக்குத் தெளிவாகத் தெரியும் அதற்கு காரணம் யார்? தெளிவில்லாத அரசனின் பேச்சு... அனுமன் கேட்டது சீதையைப் பற்றிதான்.. சீதையை மீட்க வந்திருக்கும் ஓர் தூதுவன் என்று இன்றுவரை என்னால் சொல்லமுடியும்

.. ஆக அவனை நல்லபடியாக பேசி அனுப்பாமல் இழிவு செய்வது இராவண குல தர்மமா?

 

 தூதுவன் என்பவன் தூதிற்கான ஆதாரம் கொண்டுவர வேண்டும். நான் ஜார்ஜ்புஷ் -இன் தூதுவன் என்று சொன்னால் நீங்கள் எப்படி என்னை நடத்துவீர்கள்?

 

....... மானும் கடவுள் படைத்த உயிரினம் தானே? இது நீங்கள் கேட்ட கேள்வி... மானும் கடவுள் படைத்த உயிரனம்தான்... ஆனால் அனுமன் ஒரு மனிதனை உட்காருவதற்குகூட அருகதையில்லாதவனாய் நடத்துதல் ஓர் நல்ல அரசனுக்கு அழகா?

 

அதாவது அறிவுள்ளவர்கள் உயர்ஜாதி அறிவில்லாதோர் அற்பஜந்து அப்படித்தானே!.

 

கேள்வி(22):-ராவணனைப் படைத்த பிரம்மாவையே ஒழித்து விடலாமே....

 

அழகிய கேள்விதான்.. பிறக்கும்போது யாரும் குற்றவாளியாக பிறப்பதில்லை... இதற்காக இராவணன் குற்றமற்றவனானால், கம்சனும் நல்லவன்தான். துரியோதனனும் நல்லவந்தான். பின்லேடனும் நல்லவந்தான்/.... இன்னும்பல அசுரர்களும் குற்றமற்றவர்களாவர்களே!!! நண்பரே நன்றாக யோசியுங்கள்..

அதாவது வினை என்பது நல்லவன் கெட்டவன் என்பதை தீர்மானிக்கிறது.. ராவணன் பல வருடங்கள் புலனடக்கி தவம் செய்தவன். அப்படி பெண்ணாசை கொண்டவனாய் இருந்தால் ஊர்வசி மேனகா என் தன்வசம் ஆயிரக்கணக்கில் இருந்த அஸ்திரங்களைப் பயன்படுத்தி இந்திரன் அவன் தவத்தைக் கலைத்திருக்கலாமே!

 

ஒரு கதாசிரியர் தானே இவனுக்கு இந்த பாத்திரம் என்று சொல்லவேண்டும்? அப்படிக் கொண்டால் ஏன் யாவரும் இராவணனையே கெட்டவனாக சொல்லவேண்டும்.? ஏன் வால்மீகி இராவணனுக்கு சீதையைக் கவரும் சீப்பான உள்ளம் தரவேண்டும்? இராமனை ஏன் கற்புக்கரசனாக சித்தரிக்கவேண்டும்? (பிற்பாடு வேறு..)

 

அப்படியானால் ராவணன் நல்லவனா கெட்டவனா என்ற விவாதமே எதற்கு?

 

வால்மீகிக்கு  ராவணன் என்ன கொடுமை செய்தான்? ஏன் இராவணனை அரக்கனாக காட்டுகிறான்  என்று பொருள்பட கேட்கிறீர்கள்.வட நாட்டவருக்கு என்றும் தென் நாட்டவர் எல்லாவற்றிலும் குறைந்தவர்களாகவே மதிக்கப்பட்டார்கள்.

சீதையின் சுயம் வரத்தில் கலந்து கொண்ட எவருமே ராவண பயம் கொண்டவர்களாகத் தெரியவில்லை. இந்திரன் மகன் ஜெயந்தன் கூட அதில் கலந்து கொள்கிறான்அசுரர்களால் துரத்தப்பட்டு மறைந்து வாழும் ஜெயந்தன் எப்படி வெளிப்படையாக சுயம்வரத்தில் கலந்து கொள்கிறான்?

 

ராவணன் பிராமணன் என்பது நானும் அறிவேன்... பிறப்பினால் அசுரனில்லை ஆயினும் அரக்கன் என்பதை நீவிர் ஒத்துக் கொள்கிறீரா?... ஒத்துக் கொண்டது போல எழுதியிருக்கிறீர்கள்.

 

அசுரன் என்பது பண்புப் பெயர். ஆரியருக்கு பிடித்தம் இல்லாதவர் எல்லாம் அசுரர் தானே. ஆப்பிரிக்கா காரர்போல் தோற்றமளித்த அனுமனையும் மக்களையும் குரங்குகள் என எழுதியவர்,   அதைச் சூட்டி உள்ளார்களே தவிர நான் ஒத்துக் கொள்ளவில்லை.

அனுமன் இலங்கையை அடையும் போது சாதாரணமாகவா நுழைந்தான்.. எத்தனை இன்னல்கள் கடலில்? அத்தனையும் இராவணனுக்குச் சொந்தமில்லாதவையா? ஓர் நல்ல பிராமணன் (பிராமணன் ஆட்சி!!!!) உயிர்கொல்லும் ராட்சத பாம்பு போன்ற விஷமிகளை எதற்காக வைத்திருக்கவேண்டும்?

ஏன் ஆளுயரக் கோட்டை, முதலைகள் உலவும் அகன்ற அகழி கோட்டைகளைப் பற்றி படித்திருப்பீற்களே! நாட்டைக் காக்க அரண்கள் அமைப்பது அரசனின் மிக முக்கியக் கடமை அல்லவா?

 

நாட்டைக் காப்பாற்ற என்றால்..... முதன்முதலில் இலங்கைக்குச் செல்லவிருக்கும் அனுமனால் நாட்டுக்கு தீங்கு வந்துவிடும் என்று நினைத்துவிட்டதுகளோ இந்த ஜந்துகள்?

 

வரும் வெளியாரைத் தடு என்பது அவர்களின் பணி.. இலங்கை மக்கள் இவற்றால் பாதிக்கப்பட்டதாக தெரியவில்லை.

 

கேள்வி(23):-ஒரு நாடும் நாடும் போரிடும்போது கூட ஓலையில் தகவல் அனுப்புவார்கள். அனுமன் தேமெ என பறக்கும்போது ஜந்துகளை ஏவிவிட்ட இராவணன் நல்லவனா?

 

ஆளில்லா விமானம் காஷ்மீர் பகுதியில் பறந்தால் சுட்டுத் தள்ளுவதில்லையா? ஒரு நாட்டினுள் நுழைய அனுமதி பெறவேண்டுமல்லவா?

 

கேள்வி(24):-விருப்பமின்றித் தொடும் பெண்கள் என்பது வால்மீகி ராமாயணத்தில் இல்லை என்று கூறுகிறீர்கள். பின் ஏன் இராவணன் சீதையைக் கடத்தி அவளிடம் அடிக்கடி சம்மதம் பெற அசோகவனம் வரவேண்டும்? ( கிளைக்கதைதான் என்றாலும் இது வால்மீகி ராமாயணத்தில் இருக்கிறது. )

 

அவன் சீதையின் சம்மதம் பெறுவதன் மூலம் ராமனின் கௌரவத்தை உடைக்க முடியும். மனைவியே நம்பிக்கை விட்டால்..!சூர்ப்பனகை மூக்கறுப்பிற்கு இது சரியான தண்டனை அல்லவா..!!

(கேள்விகள் தொடரும்...)

-தாமரை செல்வன்

3 comments:

  1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Monday, August 12, 2013

    கேள்வி(19)இற்கு பதில் "ராமன் அனுமனை அனுப்பியது சீதை எங்கிருக்கிறாள் என்று கண்டு வர.. ராவணனிடம் பேச்சு வார்த்தை நடத்த அல்ல"

    அது முற்றிலும் உண்மையே .ஏனென்றால் ராமன் அனுமானிடம் சீதையின் அடையாளங்களை மட்டுமே கூறுகிறான்.அதுவும் எப்படி சொல்கிறான் தெரியுமா?

    "வாராழி கலசக் கொங்கை
    வஞ்சிபோல் மருங்குவாள் தன்
    தாராழிக்கலைசார் அல்குல் தடங்
    கடற்கு உவமை தக்கோய்!!
    பாராழி பிடரில்தங்கும், பாந்தளும்
    பணி வென்றோங்கும்
    ஓராளித் தேரும் கண்ட உனக்கு
    நான் உரைப்பதென்ன?"

    அதாவது இராமன் அனுமனிடம் சொல்கிறார் "தக்கவனே! என் மனைவி சீதை இருக்கிறாளே, அவளுடைய கொங்கைகள் கலசம் போன்றவை! அல்குலோ தடங்கற்கு உவமை" என்று. இவற்றை அடையாளமாகக் கூறி அனுமனை சீதையை கண்டாறிந்து வா! என்று அனுப்புகிறான். அனுமன் அந்த அடையாளங்களை எப்படி கண்டு பிடிக்க இயலும்??. உண்மையில் இந்த பாடல் " சீதை நீ எப்படி என்னை அடையாளம் கண்டாய் என்று கேட்கும் போது சீதையிடம் அனுமன் இராமன் இந்த அங்க அடையாளங்களை தனக்கு சொன்னதாக நடுங்கிக்கொண்டு சொல்கிறான் அதற்கு அடுத்த செய்யுள்களில், சீதை இராமன் மேல் அடங்காக்கோபம் கொள்வாள். இராமனை கேவலமாக ஏசுவாள்.

    கேள்வி(01):-".....எங்ஙனம் அவன் நாட்டின் அழகிய பெண்களைப் பாதுகாப்பான்?"
    கேள்வி(02):-"பாதுகாப்பில்லாத வாழ்க்கை நடத்திவரும் இளைஞிகளுக்கு மத்தியில் இராவணன் இலங்கையை எப்படி சொர்க்கபுரியாக ஆள முடியும்?"

    இந்த இரண்டு கேள்வியும் ராமனிடம் கேட்கவேண்டியவை.சீதாவை, தன் மனைவியையே இப்படி மாற்றானிடம் வர்ணித்தவன் அழகிய பெண்களை எப்படி எப்படியெல்லாம் கையாள்வான் என்று ஒரு தரம் சிந்தயுங்கள்.அனுமான் சீதாவை கண்டுபிடிக்க ,அடையாளங்களை சரிபார்க்க, என்ன என்ன செய்திருப்பான் என்று சிந்தயுங்கள்.அப்ப பாதுகாப்பில்லாத வாழ்க்கை நடத்திவரும் இளைஞிகள் எந்த நாட்டில் என்பது தெரிய வரும் .

    கேள்வி(08):-"ஓர் தூதுவனை எப்படி நடத்த வேண்டுமென்பது கூட அறியாத ஓர் அரசன் நல்லவனா?."

    அனுமான் தூதுவனே இல்லை என்பதை மேல் பாடல் மூலம் அறிந்திருப்பீர்கள்

    அந்த காலத்தில் மார்பென்பது எளிமையான, காமமற்ற அழகை வெளிப்படுத்தும் அவயம்.அது அழகியல் சார்ந்த விடயம் ஆனால் “இடை,அதற்குக் கீழ் மறைந்திருக்கும் பகுதிகள் என அனைத்தையும் ஒருசேர, இடம்-பொருள்-ஏவலுக்கேற்பப் பொருள் கொள்ளுமாறு அமைந்த பொதுச்சொல் அல்குல்” அப்படி அல்ல.அனுமான் தூதுவனாக மட்டும் இருந்திருந்தால் ,அது செப்புக் கலசமோ? செவ்விளநீரோ? என மார்போடு நின்று இருப்பான் என்பது கவனிக்கத்தக்கது . உலகிலே எந்த பித்தனும் வெறியனுங்கூட இப்படி வேறொருவனிடம் வர்ணிக்க மாட்டான்?.அப்படி என்றால் அனுமான் யார்?கட்டாயம் தூதுவன் அல்ல.

    "இயல்வுறு செயல்வினாவா
    யிருகையு மெயினர் தூண்டத்
    துயல்வன துடுப்பு வீசித்
    துவலை கண் மகளீர் மென்றூ
    கயல்வுறு பரவை யல்கு
    லொளி புறத்தளிப்ப வுள்ளத்
    தயர்வுறு மதுகை மைந்தர்க்
    கயா உயிர்ப் பளித்த தம்மா!"

    ராமாயணத்தில் இப்படி ஒரு பாடலும் வருகிறது .அதாவது வீரர்கள் மனசோர்வு பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் துன்ப நீக்கத்தை உண்டாக்கிற்று ஒரு பொருள் அது எது? பெண்ணின் மறைவிடம் என்கிறது வெளிப்படையாக. எல்லாரும் பயங்கர துக்கத்தில் இருக்கிறார்கள். ஆற்றை படகில் கடக்கிறார்கள். அப்போது துடுப்புகள் தண்ணீரை வாரி அடித்து பெண்களின் ஆடை நனைந்து அல்குல் தெரிந்ததாம்,அதைப் பார்த்து துக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் ஆண்களுக்கு மறுபடியும் உயிர் வந்ததாம், உற்சாகம் பிறந்ததாம்!

    அப்படி என்றால் அனுமானுக்கு உற்சாகம் கொடுத்து தன காரியத்தை முடிக்க ராமன் இப்படி செய்தானோ யார் அறிவார்?

    ReplyDelete
  2. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Thursday, August 15, 2013

    கேள்வி(19)இற்கு பதில் "ராமன் அனுமனை அனுப்பியது சீதை எங்கிருக்கிறாள் என்று கண்டு வர.. ராவணனிடம் பேச்சு வார்த்தை நடத்த அல்ல"

    அது முற்றிலும் உண்மையே .ஏனென்றால் ராமன் அனுமானிடம் சீதையின் அடையாளங்களை மட்டுமே கூறுகிறான்.அதுவும் எப்படி சொல்கிறான் தெரியுமா?

    "வாராழி கலசக் கொங்கை
    வஞ்சிபோல் மருங்குவாள் தன்
    தாராழிக்கலைசார் அல்குல் தடங்
    கடற்கு உவமை தக்கோய்!!
    பாராழி பிடரில்தங்கும், பாந்தளும்
    பணி வென்றோங்கும்
    ஓராளித் தேரும் கண்ட உனக்கு
    நான் உரைப்பதென்ன?"

    அதாவது இராமன் அனுமனிடம் சொல்கிறார் "தக்கவனே! என் மனைவி சீதை இருக்கிறாளே, அவளுடைய கொங்கைகள் கலசம் போன்றவை! அல்குலோ தடங்கற்கு உவமை" என்று. இவற்றை அடையாளமாகக் கூறி அனுமனை சீதையை கண்டாறிந்து வா! என்று அனுப்புகிறான். அனுமன் அந்த அடையாளங்களை எப்படி கண்டு பிடிக்க இயலும்??. உண்மையில் இந்த பாடல் " சீதை நீ எப்படி என்னை அடையாளம் கண்டாய் என்று கேட்கும் போது சீதையிடம் அனுமன் இராமன் இந்த அங்க அடையாளங்களை தனக்கு சொன்னதாக நடுங்கிக்கொண்டு சொல்கிறான் அதற்கு அடுத்த செய்யுள்களில், சீதை இராமன் மேல் அடங்காக்கோபம் கொள்வாள். இராமனை கேவலமாக ஏசுவாள்.

    கேள்வி(01):-".....எங்ஙனம் அவன் நாட்டின் அழகிய பெண்களைப் பாதுகாப்பான்?"
    கேள்வி(02):-"பாதுகாப்பில்லாத வாழ்க்கை நடத்திவரும் இளைஞிகளுக்கு மத்தியில் இராவணன் இலங்கையை எப்படி சொர்க்கபுரியாக ஆள முடியும்?"

    இந்த இரண்டு கேள்வியும் ராமனிடம் கேட்கவேண்டியவை.சீதாவை, தன் மனைவியையே இப்படி மாற்றானிடம் வர்ணித்தவன் அழகிய பெண்களை எப்படி எப்படியெல்லாம் கையாள்வான் என்று ஒரு தரம் சிந்தயுங்கள்.அனுமான் சீதாவை கண்டுபிடிக்க ,அடையாளங்களை சரிபார்க்க, என்ன என்ன செய்திருப்பான் என்று சிந்தயுங்கள்.அப்ப பாதுகாப்பில்லாத வாழ்க்கை நடத்திவரும் இளைஞிகள் எந்த நாட்டில் என்பது தெரிய வரும் .

    கேள்வி(08):-"ஓர் தூதுவனை எப்படி நடத்த வேண்டுமென்பது கூட அறியாத ஓர் அரசன் நல்லவனா?."

    அனுமான் தூதுவனே இல்லை என்பதை மேல் பாடல் மூலம் அறிந்திருப்பீர்கள்

    அந்த காலத்தில் மார்பென்பது எளிமையான, காமமற்ற அழகை வெளிப்படுத்தும் அவயம்.அது அழகியல் சார்ந்த விடயம் ஆனால் “இடை,அதற்குக் கீழ் மறைந்திருக்கும் பகுதிகள் என அனைத்தையும் ஒருசேர, இடம்-பொருள்-ஏவலுக்கேற்பப் பொருள் கொள்ளுமாறு அமைந்த பொதுச்சொல் அல்குல்” அப்படி அல்ல.அனுமான் தூதுவனாக மட்டும் இருந்திருந்தால் ,அது செப்புக் கலசமோ? செவ்விளநீரோ? என மார்போடு நின்று இருப்பான் என்பது கவனிக்கத்தக்கது . உலகிலே எந்த பித்தனும் வெறியனுங்கூட இப்படி வேறொருவனிடம் வர்ணிக்க மாட்டான்?.அப்படி என்றால் அனுமான் யார்?கட்டாயம் தூதுவன் அல்ல.

    "இயல்வுறு செயல்வினாவா
    யிருகையு மெயினர் தூண்டத்
    துயல்வன துடுப்பு வீசித்
    துவலை கண் மகளீர் மென்றூ
    கயல்வுறு பரவை யல்கு
    லொளி புறத்தளிப்ப வுள்ளத்
    தயர்வுறு மதுகை மைந்தர்க்
    கயா உயிர்ப் பளித்த தம்மா!"

    ராமாயணத்தில் இப்படி ஒரு பாடலும் வருகிறது .அதாவது வீரர்கள் மனசோர்வு பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் துன்ப நீக்கத்தை உண்டாக்கிற்று ஒரு பொருள் அது எது? பெண்ணின் மறைவிடம் என்கிறது வெளிப்படையாக. எல்லாரும் பயங்கர துக்கத்தில் இருக்கிறார்கள். ஆற்றை படகில் கடக்கிறார்கள். அப்போது துடுப்புகள் தண்ணீரை வாரி அடித்து பெண்களின் ஆடை நனைந்து அல்குல் தெரிந்ததாம்,அதைப் பார்த்து துக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் ஆண்களுக்கு மறுபடியும் உயிர் வந்ததாம், உற்சாகம் பிறந்ததாம்!

    அப்படி என்றால் அனுமானுக்கு உற்சாகம் கொடுத்து தன காரியத்தை முடிக்க ராமன் இப்படி செய்தானோ யார் அறிவார்?

    ReplyDelete
  3. கேள்வி(19)இற்கு பதில் "ராமன் அனுமனை அனுப்பியது சீதை எங்கிருக்கிறாள் என்று கண்டு வர.. ராவணனிடம் பேச்சு வார்த்தை நடத்த அல்ல"

    அது முற்றிலும் உண்மையே .ஏனென்றால் ராமன் அனுமானிடம் சீதையின் அடையாளங்களை மட்டுமே கூறுகிறான்.அதுவும் எப்படி சொல்கிறான் தெரியுமா?

    "வாராழி கலசக் கொங்கை
    வஞ்சிபோல் மருங்குவாள் தன்
    தாராழிக்கலைசார் அல்குல் தடங்
    கடற்கு உவமை தக்கோய்!!
    பாராழி பிடரில்தங்கும், பாந்தளும்
    பணி வென்றோங்கும்
    ஓராளித் தேரும் கண்ட உனக்கு
    நான் உரைப்பதென்ன?"

    அதாவது இராமன் அனுமனிடம் சொல்கிறார் "தக்கவனே! என் மனைவி சீதை இருக்கிறாளே, அவளுடைய கொங்கைகள் கலசம் போன்றவை! அல்குலோ தடங்கற்கு உவமை" என்று. இவற்றை அடையாளமாகக் கூறி அனுமனை சீதையை கண்டாறிந்து வா! என்று அனுப்புகிறான். அனுமன் அந்த அடையாளங்களை எப்படி கண்டு பிடிக்க இயலும்??. உண்மையில் இந்த பாடல் " சீதை நீ எப்படி என்னை அடையாளம் கண்டாய் என்று கேட்கும் போது சீதையிடம் அனுமன் இராமன் இந்த அங்க அடையாளங்களை தனக்கு சொன்னதாக நடுங்கிக்கொண்டு சொல்கிறான் அதற்கு அடுத்த செய்யுள்களில், சீதை இராமன் மேல் அடங்காக்கோபம் கொள்வாள். இராமனை கேவலமாக ஏசுவாள்.

    கேள்வி(01):-".....எங்ஙனம் அவன் நாட்டின் அழகிய பெண்களைப் பாதுகாப்பான்?"
    கேள்வி(02):-"பாதுகாப்பில்லாத வாழ்க்கை நடத்திவரும் இளைஞிகளுக்கு மத்தியில் இராவணன் இலங்கையை எப்படி சொர்க்கபுரியாக ஆள முடியும்?"

    இந்த இரண்டு கேள்வியும் ராமனிடம் கேட்கவேண்டியவை.சீதாவை, தன் மனைவியையே இப்படி மாற்றானிடம் வர்ணித்தவன் அழகிய பெண்களை எப்படி எப்படியெல்லாம் கையாள்வான் என்று ஒரு தரம் சிந்தயுங்கள்.அனுமான் சீதாவை கண்டுபிடிக்க ,அடையாளங்களை சரிபார்க்க, என்ன என்ன செய்திருப்பான் என்று சிந்தயுங்கள்.அப்ப பாதுகாப்பில்லாத வாழ்க்கை நடத்திவரும் இளைஞிகள் எந்த நாட்டில் என்பது தெரிய வரும் .

    கேள்வி(08):-"ஓர் தூதுவனை எப்படி நடத்த வேண்டுமென்பது கூட அறியாத ஓர் அரசன் நல்லவனா?."

    அனுமான் தூதுவனே இல்லை என்பதை மேல் பாடல் மூலம் அறிந்திருப்பீர்கள்

    அந்த காலத்தில் மார்பென்பது எளிமையான, காமமற்ற அழகை வெளிப்படுத்தும் அவயம்.அது அழகியல் சார்ந்த விடயம் ஆனால் “இடை,அதற்குக் கீழ் மறைந்திருக்கும் பகுதிகள் என அனைத்தையும் ஒருசேர, இடம்-பொருள்-ஏவலுக்கேற்பப் பொருள் கொள்ளுமாறு அமைந்த பொதுச்சொல் அல்குல்” அப்படி அல்ல.அனுமான் தூதுவனாக மட்டும் இருந்திருந்தால் ,அது செப்புக் கலசமோ? செவ்விளநீரோ? என மார்போடு நின்று இருப்பான் என்பது கவனிக்கத்தக்கது . உலகிலே எந்த பித்தனும் வெறியனுங்கூட இப்படி வேறொருவனிடம் வர்ணிக்க மாட்டான்?.அப்படி என்றால் அனுமான் யார்?கட்டாயம் தூதுவன் அல்ல.

    "இயல்வுறு செயல்வினாவா
    யிருகையு மெயினர் தூண்டத்
    துயல்வன துடுப்பு வீசித்
    துவலை கண் மகளீர் மென்றூ
    கயல்வுறு பரவை யல்கு
    லொளி புறத்தளிப்ப வுள்ளத்
    தயர்வுறு மதுகை மைந்தர்க்
    கயா உயிர்ப் பளித்த தம்மா!"

    ராமாயணத்தில் இப்படி ஒரு பாடலும் வருகிறது .அதாவது வீரர்கள் மனசோர்வு பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் துன்ப நீக்கத்தை உண்டாக்கிற்று ஒரு பொருள் அது எது? பெண்ணின் மறைவிடம் என்கிறது வெளிப்படையாக. எல்லாரும் பயங்கர துக்கத்தில் இருக்கிறார்கள். ஆற்றை படகில் கடக்கிறார்கள். அப்போது துடுப்புகள் தண்ணீரை வாரி அடித்து பெண்களின் ஆடை நனைந்து அல்குல் தெரிந்ததாம்,அதைப் பார்த்து துக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் ஆண்களுக்கு மறுபடியும் உயிர் வந்ததாம், உற்சாகம் பிறந்ததாம்!

    அப்படி என்றால் அனுமானுக்கு உற்சாகம் கொடுத்து தன காரியத்தை முடிக்க ராமன் இப்படி செய்தானோ யார் அறிவார்?

    ReplyDelete