தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] பகுதி:24

 [தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
கற்காலத்தில் மெசொப்பொத்தேமியாவில் வண்டல்சமவெளியில் மக்கள் முதல் குடியேறிய பொழுதுஅவர்களின் உடனடியான முக்கிய அக்கறை நம்பகமான நன்னீர் கிடைக்கும் ஒரு இடத்தைகண்டு பிடிப்பதாகும்.இது பயிர்களுக்கு தண்ணீர்விடவும்  மிருகங்களும் தாமும் நன்னீர்குடிப்பதற்காகவும் ஆகும்.முதலாவதாகஅவர்களுக்கு டைகரிஸ்யூப்ரடிஸ்ஆறுகளும்[Tigris and Euphrates rivers] அவைகளின்கிளையாறுகளும்[Upper and Lower Zab] அவர்களின் அந்த தேவைகளைவழங்கின.இதனால் தான் முன்னைய சுமேரியர்களினது கிராமமும் நகரமும்ஆறுகளை அண்டியும் அல்லது அவைகளுக்கு அருகிலும்கட்டப்பட்டன.அவை உயிருக்கு அத்திய அவசியமான தண்ணீரைகொடுத்தாலும் அந்த ஆறுகளை ,குறிப்பாக டைகரிஸ் ஆற்றைமுன்னறிந்துஅதன் நிலையை கூறமுடியாததாகவும்  சில வேளைகளில் அழிக்கக் கூடியகொடிய  வெள்ளத்தை உண்டாக்க கூடியதாகவும் இருந்தன.ஆற்றின்வெள்ளத்தை கட்டுப்படுத்த காலம் காலமாக அங்கு அணை கரையையும்அணையும்[ levees and dams] கட்ட முயற்சித்தார்கள்.ஆனால் தெற்குமெசொப்பொத்தேமியாவின் மிக மென்மையான மண்ணால் கடப்பாட்டஇந்த தடைகள் இலகுவாக ஆற்று வெள்ளத்தால் அரிக்கப்பட்டு படிப்படியாக
விரைவாக சிதைக்கப்பட்டன.மேலும் நாளடைவில்மக்கள் தொகை கூட  சிலர் ஆற்றங்கரையில்இருந்து கிட்டிய தூரத்தில் அல்லது தூரஇடங்களில்  குடியேற விரும்பினார்கள் . அதனால்இந்த புதிய குடியிருப்புகளுக்கு நீர் வழங்கவேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு ஒரு பெரியசவாலாக அமைந்த்தது.
இந்த நிலையில்,முன்னையமெசொப்பொத்தேமியா  குடியிருப்பாளர்கள் ஆற்றில் இருந்து நேரடியாக நீர்எடுப்பதற்கு பதிலாக,வேறு நீர் வளங்களையும் விநியோகத்தையும் ஏற்படுத்திமேற்கூறிய சாவால்களை சமாளிக்க கற்றுக்கொண்டார்கள்.அவை செயற்கை கால்வாய்கள்,கிணறுகள்வாய்க்கால்கள் போன்றவை ஆகும்.தொல்பொருள்ஆய்வுகள்  6000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த நீர்ப்பாசனங்களுக்கானசான்றுகளை ௮டையாளம் காட்டுகின்றன.பார்லி[வாற்கோதுமைபயிர்வளர்ச்சிக்கு போதுமான இயற்கை மழை வீழ்ச்சி அற்ற அங்கு அப் பயிர்செய்யப்பட்டு உள்ளது மேலும்  இதை உறுதிபடுத்துகிறது.ஜூலை தொடங்கிடிசம்பர் வரை உண்டாகும் வெள்ள நீரை 40 தொடக்கம் 60 நாட்களுக்குதிசை திருப்பி வயலுக்கு விடுகிறார்கள்.பின் தக்க தருணத்தில் நீரைதிரும்பவும் ஆற்றுக்கு வழி
திருப்பி விடுகிறார்கள்."உன்னுடைய வாய்க்கால்குப்பை , இடிபாடுகளால் அடைபடட்டும்"[May your canal become choked with debris!] என்ற பலமுறை திருப்ப திருப்ப சபிக்கும்மெசொப்பொத்தேமியா சாபம் இதன் முக்கியத்தைகாட்டுகிறது.ஆகையால் அதற்கு முதன்மை கொடுத்துமன்னர்களும் ஆட்சியாளர்களும்  வாய்க்கால்களை தோண்டி பராமரித்தார்கள் . கால்வாய்கள் அமைப்பதுஒரு பெரிய வேலை என்பதால்,ஹம்முராபி[Hammurabi] போன்ற மன்னர்கள் தமதுபெருவாரியான குடி மக்களை[பிரஜைகளை ] அதில் ஈடுபடுத்தினார்கள்.அங்கு இருக்கும் வாய்க்கால்களை புறக்கணிக்கும் மன்னர்கள் பொதுமக்களால் வெறுக்கப்படுவதுடன் அரசுக்கு எதிரான எதிர்ப்புகளையும்கொந்தளிப்புகளையும் எதிர்நோக்க நேரிட்டது.
இப்படியான ஒரு நிலைப்பாட்டை சங்க இலக்கியத்திலும்காண்கிறோம்.உதாரணமாக புறநானூறு 18 இப்படி அறைகூவுகிறது.
"வித்தி வான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்புற்று ஆயினும் நண்ணி ஆளும்
இறைவன் தாட்கு உதவாதே அதனால்
அடு போர்ச் செழிய இகழாது வல்லே
நிலன் நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம இவண் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே."

அதாவது, ‘வயவேந்தேநீ மறுமைப் பேறாகிய சொர்க்க இன்பம்வேண்டினும்,
இம்மையில் ஒரு பேரரசனாய்ப் புகழெய்தவேண்டினும்நாட்டில் நீர்நிலை பெருக அமைக்கவேண்டும்வித்தி வானோக்கும் புன்புலம்நெல்முதலான தானியங்களை விதைத்து மழை வருவாய்ஒன்றையே பார்த்திருக்கும் வானவாரித் தரிசு நிலம்-வேந்தன் முயற்சிக்கு வேண்டுவ உதவாதுஆகவேநீர்நிலை பெருக அமைப்பாயாக’ எனவற்புறுத்துகிறார்.

கால்வாய் தோண்டியதும் அந்த செயற்கை  கால்வாயிற்கூடாக  ஓடும் நீரின்அளவை கட்டுப்படுத்த ஆற்றம் கரையில்  ஒரு  மடைவாய்மதகுகதவு[sluice gate] அங்கு கட்டப்பட்டது.தேவை கருதி அந்த கதவைதிறந்தோ அல்லது மூடியோ நீர் ஓட்டத்தின் அளவை கூட்டி அல்லது குறைக்கப்பட்டது.பயிர் வளரும் காலத்தில் ஒவ்வொரு விவசாயிக்கும் குறிக்கப் பட்டஅளவு நீரே கொடுக்கப்பட்டது.ஒரு விவசாயி தனது வயலுக்கு நீர் இறைக்கும்முறை வரும் போதுமதகு அதற்கு தக்கவாறு திறந்துமூடிசரிப்படுத்தப்பட்டு  அந்த விவசாயினது வயல் பக்கமாக அமைந்த நீர்பாசனகுழியில் நீர் விடப்பட்டது.பபிலோனியன் மன்னன் ஹம்முராபி[ Babylonian King Hammurabi] தான் முதன் முதல் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டஒரு நீர் சம்பந்தமான ஒழுங்குவிதிகளை ஏற்படுத்தினார்.அந்த முன்னைய விதிமுறைகள் பின்வருவனவற்றை அடங்கி இருந்தது.நீர் விநியோகம் வயலின்பரப்பு அளவின் வீதப்படி வழங்குதல் ]  வயலின் பக்கமாக அமைந்தவாய்க்காலை பராமரிப்பது அந்த வயல் உரிமையாளரை சார்ந்தது.கால்வாயை  எல்லா பாவனையாளர்களும் அடங்கிய ஒரு கூட்டுநிர்வாகத்துக்குள் அமைத்தல் ஆகும்.

இதன் மூலம்  நாம் அறிவது என்னவென்றால் இந்த நாகரிகங்கள் எல்லாம்நீர்பாசனத்தை முழுமையாக அங்கீகரித்ததுடன் அதற்கு உச்ச முக்கியத்தையும்கொடுத்துள்ளது என்பதாகும்.இதுநீரின்றி அமையாது உலகு” என்றவள்ளுவரின் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வாக்கையும் சிலப்பதிகாரம்படைத்த இளங்கோவடிகளின்  "மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் "என்றதையும் மேலும் உறுதி படுத்துகிறது.இவ்வாறு நீரின்இன்றியமையாமையையும்  சிறப்பினையும் நாம் இங்கு காண்கிறோம்.

அது மட்டும் அல்ல அதே  இளங்கோவடிகள் அன்றைய மக்களுக்கு நீரினைஅள்ளிக் கொடுத்த காவேரியை புகழ்ந்து,வாழ்த்தி இப்படி பாடுகிறார்.

"உழவர் ஓதைமதகோதை,
உடைநீர் ஓதை தண்பதங் கொள்
விழவர் ஓதைசிறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவிரி!"
[சிலப்பதிகாரம்/புகார்க் காண்டம் – கானல் வரி]

அதாவதுஉழவரின் ஏர் ஓட்டும் ஓசைமதகிலே நீர் வழியும் ஓசை,வரப்புகளை உடைத்து பாயும் நீரோசைபுதுப்புனலாடி கொண்டாடும்மக்களின் மகிழ்ச்சி ஆராவார ஓசை… என இரு மருங்கும் ஒலிக்க.. அந்தஓசையோடு நடக்கும் காவிரிப் பெண்ணேநடந்தாய் வாழி காவேரி!என்கிறார் .

பன்னிரண்டாம் திருமுறையில் திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணத்தில்23 ம் பாடலும் நீரின் சிறப்பை இப்படி கூறுகிறது.

"அனைய வாகிய நதிபரந்
   தகன்பணை மருங்கில்
கனைநெ டும்புனல் நிறைந்துதிண்
   கரைப்பொரும் குளங்கள்
புனையி ருங்கடி மதகுவாய்
   திறந்திடப் புறம்போய்
வினைஞர் ஆர்ப்பொலி யெடுப்பநீர்
    வழங்குவ வியன்கால்."

அதாவது அவ்வாறாகிய பாலியாற்று நீர் பரந்துஅகன்ற வயல்களின் பக்கலில்இரைந்து பெருகவரும் திண்மையான பெரிய குளக்கரையில்அங்குள்ளசிறந்த அழகுபடுத்தப்பட்ட காவல் மதகுகள் வாய்திறந்திடவெளியே சென்றுபெருகும் தன்மை கண்டுஅவ் விடமுள்ள வீரராய உழவர்கள் தம் மகிழ்வால்ஒலிசெயபெருவாய்க் கால்கள்நீர் பெருகி வரும் என்கிறது.

0 comments:

Post a Comment