ஐ.பி.எல்: பலமான சென்னை - மும்பை அணிகள் இன்று மோதல்

சனி, 6 ஏப்ரல் 2013:சென்னையில் இன்று .பி.எல். கிரிக்கெட் முதல் போட்டி நடைபெறுகிறது. இதில் தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாண்டிங் தலைமை மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
ஏற்கனவெ பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு எதிரக மும்பை அணி கடுமையாக சவால் கொடுத்து 2 ரன்களில் தோல்வி தழுவியது. அதனால் இன்று வெற்றி பெறுவது என்ற உறுதியுடன் விளையாடும்.
சச்சின், பாண்டிங் கூட்டணி நின்று விட்டால் சென்னைக்கு ஆபத்துதான். தோனி தலைமையில் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் அல்பி மோர்கல், டூபிளஸ்ஸிஸ் ஆகியோர் இந்த ஆட்டத்தில் விளையாடமாட்டார்கள். அல்பி மோர்கல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ராம் ஸ்லாம் டி20 தொடரில் விளையாடி வருகிறார். டூபிளெஸ்ஸிஸ் முதுகு வலி பிரச்னையில் இருந்து குணமடைந்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த ஐபிஎல் போட்டியில் சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தவர்கள். சென்னையில் இலங்கை வீரர்கள் விளையாட தடை விதிக்கப்பட்டிருப்பதால் குலசேகரா, அகில தனஞ்ஜெய ஆகியோரும் இந்த ஆட்டத்தில் விளையாடமாட்டார்கள்.
சென்னை அணி முரளி விஜய், மைக் ஹசி, பத்ரிநாத், ரெய்னா, வேயன் பிராவோ, கேப்டன் தோனி, ரவீந்திர ஜடேஜா என பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது.
வேகப்பந்து வீச்சாளர்களாக பென் ஹில்பெனாஸ், திர்க் நேன்ஸ் ஆகியோர் களமிறக்கப்படலாம். சுழற்பந்துவீச்சைப் பொறுத்தவரையில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா கூட்டணி கவனிக்கும்.
சென்னை மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது என்பதால் 11-வது வீரருக்கான இடத்தைப் பிடிப்பதில் தமிழக இளம் ஆல்ரவுண்டரான பாபா அபராஜித், ஷதாப் ஜகாத்தி ஆகியோரிடையே போட்டி நிலவும் என்று தெரிகிறது.
கூடுதல் பேட்ஸ்மேனுடன் களமிறங்குவது என தோனி முடிவெடுத்தால் அனிருத்தாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
மும்பை அணியைப் பொறுத்தவரையில் சச்சின், பாண்டிங், தினேஷ் கார்த்திக், ரோஹித் சர்மா, அம்பட்டி ராயுடு, கைரான் போலார்ட் என முன்னணி பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
இவர்களில் தினேஷ் கார்த்திக் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் 37 பந்துகளில் 60 ரன்களைக் குவித்து ஆட்டத்தின் போக்கை திருப்பினார். அவரின் அதிரடி இந்த ஆட்டத்திலும் தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரிய அளவில் ரன் குவிக்கும் முயற்சியாக இந்த ஆட்டத்தில் கைரான் போலார்ட் முன்வரிசையில் களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் லசித் மலிங்கா சென்னையில் விளையாட முடியாது என்பதால், முனாஃப் படேல், மிட்செல் ஜான்சன், ஜஸ்பிரித் பூம்ரா ஆகியோரை நம்பியுள்ளது மும்பை.
இவர்களில் முனாப் படேல் கடந்த ஆட்டத்தில் 4 ஓவர்களில் 42 ரன்களை வாரி வழங்கியதோடு, விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.
மேலும் சென்னை மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் படேலுக்குப் பதிலாக ரூ.5.3 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட கிளன் மேக்ஸ்வெல் மற்றும் ஜேம்ஸ் பிராங்க்ளின், பிரக்யான் ஓஜா ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளையாட்டு


இலங்கை கிரிக்கெட் வீரர் சமரவீரா ஓய்வு


 இலங்கை கிரிக்கெட் வீரர் சமரவீரா ஓய்வு
இலங்கை கிரிக்கெட் வீரர் திலன் சமரவீரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து தன்னை நீக்கியதால் தான் இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ள சமரவீரா, கொழும்பில் நேற்று (புதன்கிழமை) தேர்வுக் குழுவினரை சந்தித்தப் பிறகு ஓய்வு முடிவை அறிவித்தார்.

இது குறித்து கூறிய சமரவீரா, "வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டதால் பெரும் அதிர்ச்சியடைந்தேன்.

வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிரான தொடர்களில் மூத்த வீரர்கள் இருவருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்க முடிவு செய்ததாக தேர்வுக் குழுவினர் என்னிடம் தெரிவித்தனர்.

அதேநேரத்தில் 9 மாதங்களுக்குப் பிறகு நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் என்னுடைய அனுபவ ஆட்டம் தேவை என்று அவர்கள் கூறினர். எனினும் அடுத்த வாய்ப்புக்காக 9 மாதங்கள் காத்திருக்க விரும்பாததால் ஓய்வு முடிவை எடுத்தேன்.

அதேநேரத்தில் இளம் வீரர்களை களமிறக்குவது என்ற தேர்வுக் குழுவினரின் முடிவுக்கு மதிப்பளித்து, ஓய்வு பெறுவதற்கு இது சரியான நேரம் என நினைத்ததால் கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுகிறேன்." என்று தெரிவித்தார்.

36 வயதாகும் சமரவீரா இதுவரை 81 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 14 சதம், 30 அரை சதங்களுடன் 5,462 ரன்கள் குவித்துள்ளார். இதேபோல் 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2 சதம் உள்பட 862 ரன்கள் குவித்துள்ளார். (டி.என்.எஸ்)


புனே வாரியர்ஸ் அணிக்கு இலங்கையின் மாத்யூஸ் கேப்டன்



 Angelo Mathews Lead Pune Warriors Ipl 6
டெல்லி: ஐபிஎல் 6வது தொடரில், புனே வாரியர்ஸ் அணிக்கு இலங்கையின் ஏஞ்சலோ மாத்யூஸ் கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 3ம் தேதி 6வது ஐபிஎல் தொடர் தொடங்குகிறது. இதில் புனே வாரியர்ஸ் அணியின் கேப்டனாக மாத்யூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆலன் டொனால்ட் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி பயிற்சியாளராக ராப் வால்டர்ஸ் இருப்பார். பிரவீன் ஆம்ரே இன்னொரு உதவி பயிற்சியாளர்.
மாத்யூஸ் கேப்டனாக அறிவிக்கப்பட்டாலும் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட மாட்டார். காரணம் போட்டி சென்னையில் நடைபெறுவதால்.
கடந்த 2 ஆண்டுகளாக மாத்யூஸ்,புனே வாரியர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு


சக வீரரிடம் மோசமாக நடந்து கொண்ட பந்து வீச்சாளர் பிரவீன் குமாருக்கு பிசிசிஐ தடை

பெங்களூர்: தொழில்நிறுவனங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின்போது எதிரணி வீரரை கெட்ட வார்த்தையால் திட்டி மிகவும் மோசமாக நடந்து கொண்ட வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமாருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஓ.என்.ஜி.சி. அணி சார்பில் ஆடிய பிரவீன் குமார், வருமான வரித்துறை அணியின் வீர் அஜீத் அர்கல் என்பவரை மிகக் கடுமையாகவும், கெட்ட வார்த்தையிலும் திட்டமி அவதூறாகவும், மோசமாகவும் நடந்து கொண்டார். இதுகுறித்து கிரிக்கெட் வாரியத்தில் புகார் அளிக்கப்பட்டது.
மேலும் கிரிக்கெட் விளையாடுவதற்கு மனதளவில் பிரவீன் குமார் தகுதியுடன் இல்லை என்று நடுவர் தனஞ்செய் சிங் கிரிக்கெட் வாரியத்தில் அளித்த புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து விசாரணை நடத்திய கிரிக்கெட் வாரியம் தற்போது பிரவீன் குமாரை தற்காலிகமாக தடை செய்து உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், பிரவீன் குமாருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தனது நடத்தை தொடர்பாகஅவர் விளக்கம் தர வேண்டும். அதுவரை அவர் எந்தவிதமான போட்டியிலும் விளையாட அனுமதிக்கப்பட மாட்டார் என்று தெரிவித்தார்.

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்- இந்திய அணி அறிவிப்பு! காம்பீர் நீக்கம்! ஹர்பஜன்சிங்குக்கு இடம்!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. காம்பீர் நீக்கப்பட்டு ஹர்ஜபன்சிங், முரளிவிஜய், ஷிகர் தவாண் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தியா வருகை தரும் ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் 22-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
இந்தத் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட இருக்கிறது. மும்பையில் சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வுக் குழு கூடி இந்திய அணியை தேர்வு செய்தது.
கவுதம் காம்பீர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷிகார் தவாண் சேர்க்கப்பட்டிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹர்பஜன்சிங்கும் அணியில் இடம்பிடித்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.52 கோடி அபராதம்
 போட்டிகள் தொடர்பான சந்தை வர்த்தக ஒழுங்குப்படுத்தும் கமிஷன், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.52.24 கோடியை அபராதமாக விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ‘‘ஐ.பி.எல். உள்ளிட்ட லீக் போட்டிகளை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. போட்டிக்கான அணிகளின் உரிமையாளர் உரிமம், டி.வி. ஒளிபரப்பு உரிமம், ஸ்பானர்ஷிப் ஒப்பந்தம் ஆகியவற்றை வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. பொருளாதாரத்தில் அசுர பலத்துடன் உள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆதிக்கத்தின் காரணமாக, வேறு எந்த தகுதியான போட்டியாளர்களும் இந்த போட்டிகள் மற்றும் அதன் வர்த்தகத்தில் ஈடுபட அனுமதிக்கப்படுவதில்லை’’ என்று சுரிந்தர் சிங் பார்மி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மேற்கண்ட அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அபராதத்தை எதிர்த்து கிரிக்கெட் வாரியம் அப்பீல் செய்ய முடிவு செய்துள்ளது.

விளையாட்டு


198 ஓட்டங்களிற்கு அவுஸ்திரேலியாவிடம் சுருண்டது இலங்கை
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான முதலாவது ஒரு நாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 107 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 305 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
 பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 40 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 198 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.
 இதன்படி அவுஸ்திரேலிய அணி 107 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
 போட்டியின் ஆட்ட நாயகனான 112 ஓட்டங்களைப் பெற்ற அவுஸ்திரேலிய அணியின் அறிமுக வீரர் ஹூகேஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
 இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் தினேஷ் சந்திமால் 73 ஓட்டங்களையும், தில்ஷான் 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். ஏனைய வீரர்கள் யாரும் பிரகாசிக்கவில்லை. 
சறுக்கியது இந்திய அணி! *இங்கிலாந்து வெற்றி துவக்கம்
 ராஜ்கோட்: ராஜ்கோட்டில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்திடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பவுலர்கள் ரன்களை வாரிவழங்கி ஏமாற்றினர். கடைசி ஓவர் வரை போராடியும் ஏமாற்றமே மிஞ்சியது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி, ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடந்தது. "டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக், "பேட்டிங்' தேர்வு செய்தார்.
பெல் அபாரம்:
இங்கிலாந்து அணிக்கு அலெஸ்டர் குக், இயான் பெல் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. இந்திய பந்துவீச்சை பதம்பார்த்த இவர்கள், பவுண்டரிகளாக விளாசினர். பொறுப்பாக ஆடிய குக், ஒருநாள் அரங்கில் தனது 14வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். முதல் விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்த போது, ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்ட பெல் (85 ரன்கள், ஒரு சிக்சர், 9 பவுண்டரி), ரகானேவின் துல்லிய "த்ரோ'வில் "ரன்-அவுட்' ஆனார். சிறிது நேரத்தில் ரெய்னா "சுழலில்' குக் (75) சிக்கினார்.
பீட்டர்சன் நம்பிக்கை:
பின் இணைந்த கெவின் பீட்டர்சன், இயான் மார்கன் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. இஷாந்த் பந்தில் இரண்டு பவுண்டரி அடித்த பீட்டர்சன், அஷ்வின் "சுழலில்' ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்த போது, டிண்டா வேகத்தில் மார்கன் (41) அவுட்டானார். சிக்சருக்கு ஆசைப்பட்ட பீட்டர்சன் (44), டிண்டாவிடம் சரணடைந்தார்.
இரு ஓவரில் 38 ரன்:
கடைசி நேரத்தில் வந்த கீஸ்வெட்டர், சமித் படேல் அதிரடியாக ஆடினர். இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கிய இவர்கள், இஷாந்த் வீசிய 49வது ஓவரில் 20 ரன்கள் சேர்த்தனர். பின் புவனேஷ் குமார் வீசிய 50வது ஓவரில் 18 ரன்கள் எடுத்தனர். இந்த இரு ஓவரில் மட்டும் 38 ரன்கள் எடுக்கப்பட்டன. இங்கிலாந்து அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 325 ரன்கள் குவித்தது. கீஸ்வெட்டர் (24), சமித் படேல் (44) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் டிண்டா 2, ரெய்னா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
நல்ல துவக்கம்:
கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு அஜின்கியா ரகானே, கவுதம் காம்பிர் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. ஸ்டீவன் பின் ஓவரில் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்த காம்பிர் அரைசதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்த போது ரகானே (47) அவுட்டானார். காம்பிர் 52 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த விராத் கோஹ்லி (15) ஏமாற்றினார்.
யுவராஜ் கலக்கல்:
பின் இணைந்த யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா ஜோடி அசத்தியது. பிரஸ்னன் ஓவரில் சிக்சர் அடித்த யுவராஜ் சிங், டெர்ன்பக், ஜோ ரூட் பந்தில் பவுண்டரிகளாக விளாசினார். அபாரமாக ஆடிய இவர் அரைசதம் அடித்தார். நான்காவது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்த போது யுவராஜ் (61) அவுட்டானார். கேப்டன் தோனியுடன் இணைந்த ரெய்னா தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார். இவர், 50 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
தோனி போராட்டம்:
தனிநபராக போராடிய தோனி, சிக்சர் மழை பொழிந்தார். டிரட்வெட் (1 சிக்சர்), சமித் படேல் (2), பிரஸ்னன் (1) ஆகியோரது பந்துவீச்சை சிக்சருக்கு பறக்கவிட்ட தோனி (32) முக்கியமான நேரத்தில் வெளியேற, ஆட்டத்தில் திருப்பம் ஏற்பட்டது. அடுத்து வந்த ரவிந்திர ஜடேஜா (7), அஷ்வின் (13), டிண்டா (3) நிலைக்கவில்லை. கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 8 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 316 ரன்கள் எடுத்து, தோல்வி அடைந்தது.
புவனேஷ்வர் குமார் (20), இஷாந்த் சர்மா (7) அவுட்டாகாமல் இருந்தனர்.
இங்கிலாந்து சார்பில் 4 விக்கெட் கைப்பற்றிய டிரட்வெல், ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இரண்டாவது ஒருநாள் போட்டி கொச்சியில் வரும் 15ம் தேதி நடக்க உள்ளது.
150
நேற்று அதிரடியாக 4 சிக்சர் விளாசிய இந்திய கேப்டன் தோனி, ஒருநாள் போட்டி வரலாற்றில், தனது 150வது சிக்சரை பதிவு செய்தார். இதுவரை இவர், 215 போட்டியில் 150 "சிக்சர்' அடித்துள்ளார்.
34
சிறந்த துவக்கம் அளித்த இந்தியாவின் கவுதம் காம்பிர், ஒருநாள் போட்டியில் தனது 34வது அரைசதத்தை பதிவு செய்தார். இதுவரை இவர், 143 போட்டியில் 11 சதம், 34 அரைசதம் உட்பட 5163 ரன்கள் எடுத்துள்ளார்.
25
பொறுப்பாக ஆடிய இந்தியாவின் சுரேஷ் ரெய்னா, ஒருநாள் போட்டி அரங்கில் தனது 25வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதுவரை இவர், 155 போட்டியில் 3 சதம், 25 அரைசதம் உட்பட 3841 ரன்கள் எடுத்துள்ளார்.
50
அபாரமாக ஆடிய இந்தியாவின் யுவராஜ் சிங், ஒருநாள் போட்டியில் தனது 50வது அரைசதத்தை பதிவு செய்தார். இதுவரை இவர், 278 போட்டியில் 13 சதம், 50 அரைசதம் உட்பட 8146 ரன்கள் எடுத்துள்ளார்.
தோனி செய்தது சரியா
சமீபகாலமாக தோனியின் முடிவுகள் எல்லாமே தவறாகிறது. புஜாராவுக்கு வாய்ப்பு அளிக்காமல், ரவிந்திர ஜடேஜாவை நம்பி இறங்கினார். இவர் வழக்கம் போல பேட்டிங்கில் சொதப்பினார்.
* இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு "டுவென்டி-20' போட்டிகளில், இந்தியா சார்பில் அதிக விக்கெட் (6) வீழ்த்தியவர் யுவராஜ் சிங். இவருக்கு நேற்று ஒரு ஓவர் கூட பவுலிங் செய்ய வாய்ப்பு தரவில்லை.
 முதல் வெற்றி
இங்கிலாந்து அணி கடைசியாக 2006, ஏப்., 12ல் ஜாம்ஷெட்பூரில் நடந்த போட்டியில் இந்தியாவை வென்றது. இதன் பின் இங்கு பங்கேற்ற 13 போட்டிகளில் 12ல் தோற்றது. 2011 உலக கோப்பை தொடரில் ஒரு போட்டி "டை' ஆனது.
நீண்ட இடைவெளிக்குப் பின் (7 ஆண்டுகள்) நேற்று இங்கிலாந்து அணி, இந்திய மண்ணில் முதன்முறையாக ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது