மரங்களின் உரையாடலும் உறவாடலும்


தாவரங்களுக்கு உயிருண்டு என்று கண்டுபிடித்தார் ஜகதீஷ் சந்திர போஸ். அந்தத் தாவரங்களில் ஒன்றான மரங்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன, பாலுறவு கொள்கின்றன, தங்களுடைய குழந்தைகளான இளைய மரங்களை அன்போடு வளர்க்கின்றன என்கிறார் ஜெர்மானியரான பீட்டர் ஊலிபென்.

வனக் காப்பாளராகப் பல்லாண்டுகள் பணியாற்றி, அவற்றின் உரையாடல்களையும் செயல்களையும் தொடர்ந்து கவனித்த பீட்டர் ஊலிபென் ஒரு புத்தகமே எழுதிவிட்டார். அது ஜெர்மனியில் வேகமாக விற்பனையாகிறது. இங்கிலாந்து நாட்டில் உள்ளஹேநகரப் புத்தகக் கண்காட்சிக்கு (மே 25 - ஜூன் 4) வந்த ஊலிபென், மரங்களைப் பற்றி நேரில் கூற, வந்திருந்த வாசகர் கூட்டம் வாய் மூடாமல் கேட்டு அதிசயித்தது. ‘தி ஹிட்டன் லைஃப் ஆஃப் ட்ரீஸ் (The Hidden Life of Trees) என்பது புத்தகத் தலைப்பு.

இந்த நூலில் இருப்பவை அனைத்தும் உண்மையல்ல, பாதி உண்மைகளும் புனைவுகளும் கொண்டவை. இதைப் படிப்பவர் மனங்களைக் குழப்பக்கூடியவைஎன்று இரு விஞ்ஞானிகள்ஆன்லைனில்சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர்.

அப்படி என்ன பேசினார்..

மரங்கள் தனித்து வாழ விரும்பாதவை.. சமூகமாகவே வாழ விரும்புபவை. தங்களுடைய இளைய மரங்களைப் பாசத்தோடு வளர்க்கின்றன. தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன. வலிகளை உணர்கின்றன. நினைவாற்றலும் அவற்றுக்கு இருக்கின்றன. தங்களுக்குள் பாலுறவும் கொள்கின்றன. ஆண்டுக்கு ஒரு முறை கழிவுகளை வெளியேற்றுகின்றன.

வெளியேற்ற வேண்டிய கழிவுகளைத் தங்களுடைய இலைகளுக்கு அனுப்பி விடுகின்றன. குளிர்காலத்தில் காட்டில் நடந்தால் நீங்கள் மிதிக்கும் இலைகள், மரங்களின்டாய்லெட் பேப்பர்என்பதை இனி நினைவில் கொள்ளுங்கள்.

இதை எல்லாம் கேட்டதும் ஓடிச் சென்று மரங்களைத் தழுவிக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறதா, செய்யுங்கள். ஆனால், எல்லா மரங்களும் தழுவல்களை விரும்புவதில்லை. பீச் மரத்தைத் தழுவலாம், பிர்ச் மரத்தைத் தழுவக் கூடாது.

மரங்களை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்பது பற்றி தவறாகவே நமக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மரங்களை வெட்டுவது சுற்றுச்சூழலுக்கு நல்லது, நாம் காடுகளைப் புதுப்பிக்கிறோம் என்று தவறாக வழிகாட்டப்பட்டது. பெரிய மரங்களை வெட்டினால் சிறிய மரங்கள் கிளைவிட்டு வளர உதவும் என்று கூறப்பட்டது. வீட்டில் சின்னஞ்சிறு குழந்தைகள் வளர வேண்டும் என்றால் பெற்றோர்களைக் கொன்றுவிட வேண்டுமா? அப்போதுதான் குழந்தைகள் ஓடியாட அதிக இடம் கிடைக்கும் என்பது உண்மையா?

மரங்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள். தெரு விளக்குகளுக்கு அடுத்துள்ள மரங்கள் இரவு முழுவதும் அந்த அனலில் வெந்து, வெகு சீக்கிரம் இறந்துவிடுகின்றன. நுனி மரங்களை வெட்டினால் மரம் கப்பும் கிளையுமாகப் படர்ந்து வளரும் என்பதும் தவறு. அது கைவிரல்களை வெட்டுவதற்குச் சமம். மரங்களில் 3 சென்டி மீட்டர் ஆழத்துக்கும் அதிகமாக ஏற்படும் எந்தக் காயமும் அதில் ஒரு பூஞ்சையைப் படரவைத்து 10 அல்லது 20 வருடங்களுக்குள்ளாகவே அதை வீழ்த்திவிடும்.’’

ஆப்பிரிக்காவில்அகாசியாரக மரங்களை ஒட்டகச் சிவிங்கிகள் நெருங்கி, அதன் துளிர் இலைகளைச் சாப்பிடத் தொடங்கியதும் அது ஒருவித ரசாயனத்தை வாசனையாக வெளியிடுகிறது. அதே ரகத்தைச் சேர்ந்த பிற மரங்கள் உடனே ஆபத்தை உணர்ந்து விஷச் சத்துள்ள ரசாயனத்தைச் சுரந்து ஒட்டகச் சிவிங்கிகளை நெருங்கவிடாமல் தடுத்துவிடுகின்றன. ஓக் மரங்கள் 600 வார்த்தைகளைப் பேசுவதாக எழுதியிருக்கிறேன். அவை அனைத்தும் ரசாயன மொழியாகும்!” என்கிறார் பீட்டர்.

சுருக்கமாகத் தமிழில்: ஜூரி

தாலிக் கயிறு கணவனை காக்குமா?

"Scientific Contributions[or glories] of Ancient Tamils"/Part:06


தமிழரின் மூட நம்பிக்கைகள் :பகுதி/11A:


 [தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.]
superstitious beliefs of  tamils:
"பெண்கள்"

பெண் பிள்ளை பிறப்பு /Birth of a Daughter:

"யாயே, கண்ணினும் கடுங் காதலளே
எந்தையும், நிலன் உரப் பொறாஅன்; ‘சீறுடி சிவப்ப,
எவன், இல! குறு மகள்! இயங்குதி! என்னும்;’
யாமே,......"[அகநானூறு 12,] 

எம் தாய் தன் கண்ணினும் இவள்பால் மிக்க காதலுடையாள் எம் தந்தையும்(இவள் எங்கேனும் செல்வது காணின்) நிலத்தே இவள் அடி பொருந்தி நடக்கப் பொறாதவனாகி,ஏடி! இளைய மகளே!,நின் சிறிய அடி சிவப்புற என் செயச் சொல்கின்றாய் என்று கூறும்-இப்படித்தான் சங்க காலத்தில் பெண் பிள்ளையின் நிலை இருந்தது.

ஆனால்  வீட்டில் ஆண் குழந்தை பிறந்துவிட்டால் மகிழ்ச்சி பெருமிதம்.பெண் பிறந்துவிட்டால் கவலை.ஏக்கப் பெருமூச்சு.இதுதான் இன்றுள்ள நிலை.இந்த அவலம் ஏன் நமக்கு ஏற்பட்டது?தமிழன் வரலாற்றில் கிறிஸ்துவுக்கு முன்,சங்க கால தொடக்கத்தில் தாய் வழிச் சமூகமே இவ்வுலகில் ஆட்சி புரிந்தது.குழுக்களாக வாழ்ந்த காலத்தில் தாயின் இராச்சியமே நடைபெற்றது.குழுவிற்கு தாய்தான் தலைமை தாங்கினாள்.தாய் என்ற சொல்லே மருவி தலைவி என்றாகிவிட்டது என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.தமிழர் வாழ்வில் பெண் மதிக்கப்பட்டு அவளுக்குரிய கௌரவம் வழங்கப்பட்டு வந்திருக்கிறது.ஆனால் ஆரியர் வஞ்சகமாக ஆன்மீக தத்துவங்களை புகுத்தி தமிழ் நாடுகளை அடிபணிய வைத்தார்கள்.அதுதான் தமிழ்மக்களின் தமிழ்ப் பெண்களின் வாழ்வுக்கு வீழ்ச்சியாக[அஸ்தமனமாக] இருந்தது எனலாம். 

தாய்வழி மரபு,திராவிடர்களின் அல்லது ஆரியர் அல்லாதவர்களின் சிறப்பியல்பாக/விசேஷ அம்சமாக முன்பு இருந்தது.அது இன்னும் நடைமுறை வழக்காக சில தெற்கு இந்தியா பகுதிகளில் காணப்படுகிறது. திராவிடர்கள் பெண்களுக்கு நன் மதிப்பு கொடுத்தார்கள்.இதனால் தான் இன்னும் கிராமிய/நாட்டுப்புற மக்கள் அம்மன் வழிபாட்டில் அடிக்கடி ஈடுபடுகிறார்கள்.இது சங்க பாடல்களில் காணக் கூடியதாகவும் இருக்கிறது.பண்டைய தமிழர்களுக்கு மகள்/பெண் தொல்லையாக இருக்கவில்லை . ஆணின் உயிராதாரமான,இன்றியமையாத பாதியாகவே பெண் கருதப்பட்டது . எப்படியாயினும்,சங்க காலத்திற்கு பின் இந்த நிலை,ஆரியர் கொண்டுவந்த பல மூட நம்பிக்கைகளாலும் கோட்பாடுகளாலும்,மெல்ல மெல்ல சாய/சரிய தொடங்கியது. மகாபாரதத்திலும் இராமாயணத்திலும் பெண் பிள்ளை பிறப்பையிட்டு பெற்றோர் புலம்புவதை காணக்கூடியதாக உள்ளது. 

பெண் பிள்ளை/மகள்,பிறக்கும் வரிசைமுறையில்,ஒற்றை எண்ணில் பிறந்தால் நல்லது என்ற நம்பிக்கை உண்டு.அதாவது முதலாவது,மூன்றாவது,ஐந்தாவது,இப்படி பிறந்தால் சிறப்பு என்பார்கள்.நாலாவதாக பிறந்த பெண் பிள்ளை வீட்டை பாழாக்கும் என்பார்கள் . அது போல ஐந்தாவதாக பிறந்த பெண் பிள்ளை வீட்டிற்கு தங்கம் கொண்டு வரும் என்பார்கள்.ஆனால் ஐந்தாவது ஆண் பிள்ளையோ ஊதாரியாய் எல்லா செல்வத்தையும் அழித்திடுவான் என்பார்கள்.ஆறாவது பெண் பிள்ளையோ செழிப்பை அல்லது வறுமையை கொண்டுவரும் என்பார்கள்.எட்டாவது பெண் பிள்ளையோ எல்லாவற்றையும் அழித்து விடும் என்பார்கள்."எட்டாவது பெண் எட்டி பார்த்த இடம் குட்டிச்சுவரு" என பழ மொழியும் கூறிச் சென்றுள்ளார்கள்.  

மேலும் ஒரு குழந்தை நண்பகலோ நள்ளிரவோ பிறக்கக் கூடாது.அது மட்டும் அல்ல சித்திரை நட்சத்திரத்துடனும் பிறக்கக் கூடாது.ஏன் என்றால் யமனின் நன்றி உள்ள ஏவலர்,"சித்திர  குப்தன்" பிறந்த நட்சத்திரம் அது.இப்படி பல பல எமது வாழ்வில் வந்து சேர்ந்து விட்டன.   

"பல் போனால் சொல் போகும்"

குழந்தையின் முதல் பல் விழும் போது,அதை கவனமாக செழுமை அல்லது வளத்திற்கு இடுகுறியான சாணத்தில் வைத்து வீட்டு கூரையின் மேலாக எறிவார்கள்.அப்படி செய்வது விரைவாக பல் வளர வழி வகுக்கும் என்ற நம்பிக்கையால் ஆகும்.  

மேலும்  குழந்தைக்கு கண்ணாடி காட்டக் கூடாது என்பார்கள்.அது குழந்தையை ஊமை ஆக்கிவிடும் என்ற ஒரு நம்பிக்கை அவர்களிடம் இருப்பதால். 

கல்யாணம்/Marriage 

ஒருவரின் வாழ்க்கையில் கல்யாணம் ஒரு முக்கிய சம்பவம் ஆகும்.இங்கும் பல மூட நம்பிக்கைகள் இணைந்து இருக்கின்றன புது மணப் பெண்,அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் கொண்டுவருவாள் என நம்பப்படுகிறது.முதல் ஒரு வருடத்தில் நடைபெறும் சம்பவங்களை பொறுத்து மணப்பெண் மங்களகரமானவள் அல்லது அமங்கலமானவள் என கருதப்படுகிறது.என்றாலும் பொதுவாக புது மணப்பெண் மங்களகரமானவள் என்றே கருதப்படுகிறது. 

இதற்கு முரண்பாடாக கைம்பெண்ணை[விதவையை] அமங்கலமானவள் என்றே  குறிப்பாக கருதப்படுகிறது.இவர்களை எந்த நல் காரியங்களுக்கும் முன் நிற்க அனுமதிப்பதில்லை.அந்த காரியத்தின் வெற்றியை அது குறைக்கும் என்ற நம்பிக்கையாகும்.அது மட்டும் அல்ல பிள்ளை பெறாத மலடிகளை[barren woman ] தடை செயா விட்டாலும்,முடிந்தவரை தவிர்த்து கொள்கிறார்கள்.கல்யாணம் சம்பந்தமான நிகழ்வுகளில் சுமங்கலி பெண்களையே[married girl ] முன் நின்று நடத்த அனுமதிக்கிறார்கள்.பொதுவாக மணமக்கள் கிழக்கு நோக்கியே மணமேடையில் இருப்பார்கள். 

மேலும் திருமணம் பற்றிய கனவு நல்லதன்று என்றும்,இரண்டு திருமணங்கள் ஒரே வீட்டில் ஒரே இடத்தில் நடந்தால் ஒன்று சிறக்கும் மற்றது கெடும் என்றும்.மணமான பெண் மாப்பிள்ளை வீட்டில் நுழையும் போது வலது காலை எடுத்து வைத்து நடக்க வேண்டும் என்றும்.புது மணத் தம்பதியினர் புது வீட்டில் குடி ஏறக் கூடாது என்றும் கருதப்படுகிறது.அது போல காலையில் சுமங்கலிப் பெண்கள் முகத்தில் விழிப்பது நல்லது என்பார்கள்.

பகுதி/Part-11 B:"கர்ப்பிணி[புள்ளதாய்ச்சி]" அடுத்த வாரம்தொடரும்.

ஊரிலே நடந்தது!?....கனடாவிலிருந்து ஒரு கடிதம்.

அன்புள்ள அப்புவுக்கு,                                                        16-09-2014

நான் நலம் உடையேன்.அதுபோல் உங்கள் சுகமும் ஆகுக.
அப்பு, ஊரிலிருந்து கனடா வந்த களை மாறமுன் நான் எம் பிறந்த தேசத்தில் பட்ட அனுபவங்களை பலரும் அறிந்து கொள்ளும் வகையில் உங்களுடன் பகிர்ந்துகொள்வது பலனுள்ளதாகும் என உணர்கிறேன்.

அப்பு, எம் நாட்டினை நோக்கி பல்வேறு நாட்டினைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றாலும்,அவர்களைப் பார்த்தாவது நம்மவர்கள் திருந்தாதது  ,கொழும்பில் விமானநிலையத்தில் இறங்கியதும் அங்கு எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் எடுத்துக்காட்டியது.

என்ன நடந்தது எனில் , விமான நிலையத்திலிருந்து வெளியேறும்போது ஏனைய நாடுகளில் கூறுவது போன்று  நன்றி என்றுதான் கூறினேன். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரியோ முகத்தை சுழித்தவாறு நன்றி சொல்லக் கூடாது என்றார். உலகத்திலேயே இப்படியான  ஒரு பதிலை எம்நாட்டில் தான் கேட்க முடிந்தது.
நாட்டினை  அந்நாடு  பல முன்மாதிரியான திட்டங்ககள் மூலம் நாட்டினை அபிவிருத்தி செய்துகொண்டாலும், ஒரு சிலரே அதன் பயன் கிடைக்கும் வகையில் உழைக்கிறார்கள்.பலரும் சோம்பேறி வாழ்க்கையிலேயே வீழ்ந்து நோய்வாய்ப்பட்டுக் கொண்டுள்ளார்கள்.இங்கு வெள்ளைக்காரன். நேரமில்லா வாழ்க்கையிலும் உடல்நலத்துக்கென  நேரமொதுக்கி நடந்தும்,சைக்கிள் ஓடியும் உடற்பயிற்சி செய்கிறான்.ஊரில் தேவைக்கு நடந்தாலோ சைக்கிள் ஓடினாலோ எதோ புதினமாகப் பார்கிறார்கள்,மதிப்பில்லாத வேலை என்று குறைப்பட்டுக் கொள்கிறார்கள்.இந்த வாழ்க்கைமுறையில் நோயாண்டி தேவதை  இவர்கள் வீட்டில் தங்காமல் வேறெங்கு தங்குவாள் .

அப்பு,சங்கரனும் என்னைப்போலவே வெளிநாட்டிலிருந்து வந்திருந்தான். அங்குவாழும் குணா குடும்பத்திற்கு தாராளமாக உதவிகள் செய்தான்.சந்தோசமாகச் செய்துகொண்டிருந்தான். ஒரு சந்தர்ப்பத்தில் குணா ''என்ன செலவழிக்க பயப்பிடுறியள்"என்று சங்கரை சீண்டி அவன் மனசை நோகடித்துவிட்டான்.அதனோடு சங்கரன் செய்யும்,செய்யவிருந்த உதவிகளை நிறுத்திவிட்டான்.நன்றி சொல்லும் பழக்கம் அங்கு  வழக்கத்தில் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஒவ்வொரு செயலுக்கும் இங்கு நன்றி சொல்லக் கேட்டுப்  பழகிய இந்த நாடுகளில் வாழ்ந்து பழகிய எம்போன்றோருக்கு இச் சம்பவம்  நெஞ்சில் புண்ணாக்கியே கொள்ளும்.நன்றி சொல்லாவிட்டாலும் குற்றம் சுமத்தாமல் இருந்திருக்கலாம்.நன்றி கூறுவது வெறும் மூன்று எழுத்துத் தான்.ஆனால் அதன் சக்தி கடலளவு.அச்சக்தி உதவி செய்பவனை இன்னும் செய்தத்தூண்டும்.இப்படித்தான் சிலர் கதைக்கத் தெரியாமல் கதைத்து இருந்த நல்ல எதிர்காலங்களையும் தொலைத்துக்கொல்வர்.


அப்பு, வேலன் போன்றோர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்கள். ஆனால் உழைத்து உண்ண தெரியவில்லை. வெறிச்சோடி இருக்கும் அவன் வாழும் வளவில் முருங்கைமரம்  நட்டாலே,தண்ணீர் பாய்ச்சும் செலவில்லாமலேயே பயன்பெறமுடியும். இங்கு இயந்திர வாழ்க்கை வாழும் எம்மவர்கூட வருடத்தில் கிடைக்கும் 2மாத கோடைகாலத்தினை பயன்படுத்தி தமது சிறு நிலத்தில் தோட்டங்கள் செய்துதான் இலாபம் இல்லாவிடினும் சந்தோசம் காண்கிறார்கள். ஆனால் வேலனோ சோம்பேறி வாழ்க்கை வாழ்ந்துகொண்டு தனக்கு காலம் சரியில்லை என்று கூறி விதிமேல் பழியினைப் போட்டு காலத்தினை விரையமாக்கிக்கொண்டு இருக்கிறான்.

அப்பு, எனது நண்பன் அன்ரன் அவனும் தன்னுடைய ஊருக்கு போய் வந்திருந்தான். அவன் ஊருக்குப் போகும்போது நல்லதொரு திட்டத்தோடு சென்றான்.தன்னுடைய நெற்காணிகளை அங்கு வாழும்  உழுதுண்டு வாழும் தமது மாமா குடும்பத்தினருக்கு இனாமாக எழுதிக்கொடுக்கவென்று நினைத்துக்கொண்டு சென்றான்.ஆனால் அவர்களின் திமிர் உரையாடல்கள் அவன் நெஞ்சை உதைத்திட எதுவும் செய்யாது வந்துவிட்டான்.
அப்பு,இங்கு நான் குறிப்பிட்ட சம்பவங்களை பாருங்கள்.எங்கள் எலும்பில்லாத இந்நாக்கினை கவனமாக வைத்திருக்காவிடில்   நாம் என்ன என்னவெல்லாம்  இழக்கவேண்டி வருகிறது.ஒரு உறவை சம்பாதிப்பதற்கு நாம் நீண்ட காலம் உழைக்கவேண்டி உள்ளது.ஆனால் அதே உறவை ஒடித்துவிட ஒரு சொல் அல்லது ஒரு நொடி போதும் என்பது அனுபவசாலிகள் கூ ற்று. அதேவேளை,இச்சொல் சொல்வதினால் நற்பயன் ஏதும் உண்டா என்று ஒரு வினாடி சிந்திப்போமாயின் எமது நாக்கும் தேவையோடு ஆடும்.

அப்பு,உங்களோடு வந்து ஒருமாதம் நின்றாலும் நான் பெற்ற அனுபவங்கள் பல.உங்கள் தேவைகளையும்,சுகத்தினையும் எழுதுங்கள்.மீண்டும் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.

இப்படிக்கு,
அன்பின் மகன் 
செ.ம.வேந்தன்.


உன் வரவு இன்றி ...


உன் வரவு இன்றி  என்னை
 வெறுமை  ஆட்கொள்ளுமோ!.

 உன்  காதல் காணமால் போனால் 
என்   இதயமும் துடிக்குமோ!
என் நிகழ்காலத்திலே  
பாலைவனம் குடி கொள்ளுமோ! ..


நீ என் மீதும் நான் உன் மீதும் 
பொழிந்த அன்பு  தூறல்கள் 

துடிப்பு இன்றி போய்

எங்கள் காதலும் 

அர்த்தம் இன்றி ப்போகுமோ!


நீ வருவாய் என உனக்காக 
 காத்து இருந்த நிமிடங்களும்

என் காதலை தேடி 
நீ திரிந்த தருணங்களும் 

காதல் மீது இருந்த  ஏக்கமும்  

 பொய்யாகி போகுமோ!

                    அகிலன்,தமிழன்.                               

சிவகார்த்திகேயனுக்கு அம்மாவா சிம்ரன்?




ஒரு காலத்தில் நம்பர் ஒன் நடிகையாக வலம்வந்த சிம்ரன், திருமணமாகி குழந்தை பெற்ற பிறகு அக்கா, அண்ணி மாதிரியான கேரக்டர் ரோலில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தில் கூட கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் – பொன்ராம் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படத்தில், முக்கியமான கேரக்டரில் நடிக்கிறாராம் சிம்ரன்.


“சிவகார்த்திகேயன் – சமந்தா என்ற இரண்டு முன்னணி நடிகர்களுடன் நடிப்பதில் மகிழ்ச்சி. பொன்ராமின் முந்தைய படங்களைப் போலவே காமெடியுடன் இந்தப் படம் உருவாகிறது. தென்காசி மற்றும் குற்றாலம் பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. படம் முழுவதும் வரக்கூடிய ஒரு கேரக்டரில் நடிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் சிம்ரன். இந்தப் படத்தில், நெப்போலியன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். காமெடிக்கு, சூரியுடன் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் மற்றும் யோகி பாபு நடிக்கின்றனர்.

ஜாதி மாறி கல்யாணம் செய்யலாமா?-

"Scientific Contributions[or glories] of Ancient Tamils"/Part:05


"Scientific Contributions[or glories] of Ancient Tamils"/Part:05"The Ancient Tamil Poetry
 & Science/Trees have life":[The six parts Tamil article published in theebam.com on "
பண்டைய தமிழ் பாடல்களில் விஞ்ஞானம்"[Science in the Ancient Tami
l Poetries ] is the based for this English article "Scientific Contributions[or glories] of 
Ancient Tamils",but with substantial improvements,For Tamil articles refer :
http://www.ttamil.com/theebam.com ] November /December 2016 ]---