நாளைய தேவை


நாளைய தேவை எது என அறிந்து 
இன்றே போராடு மனமே 
போராடும் உயிரே
நிலையாக நகர்ந்து போகும் 
நாளைய தேவை எது என 
அறியாமல் இருந்தால் 
பாதைகள் திசை மாறி போய்
துன்பங்கள் அதிகமாகும் 
 நாளைய தேவை எது என 
சிந்திக்கிற மனிதன்
 வாழ் நாள் முழுதும் 
மகிழ்வில் திளைக்கிறான்

தேவைகள்
 உடன் பிறந்து வருவதில்லை 
அவை காலத்தின்  மாற்றத்தில்
  கலந்து இருக்கும் உடன் பிறப்பு

உன்னுடைய வாழ்வில் நாளைய தேவை
 எது என கவனி உன் எண்ணம் மலரும் 
வாழ்வும் உயர்ந்து
 மகிழ்வும் நிரந்தரமாகும் 

நாளைய தேவை 
எது என அறியவில்லை என்றால் 
வாழ்வில் இன்பமும் மலராது 
உறவிலும் பிரிவுகள் உருவாகும்

        :-அகிலன்,காலையடி-:         

ஷாக் ஆயிடதிங்க..! சின்னத்திரை நடிகைகளின் சம்பளம் தெரியுமா ?



அதேவேளை அவர்களின் நாடகத்தினை பார்ப்பதனால் 
1.அன்றாட  வீட்டு  வேலைகள் செய்யப்படாது  முடங்கியுள்ளது.
2. குழந்தைகள் கவனிக்கப்படாமையினால் பெற்றோரில் அவநம்பிக்கை ஏற்படுகிறது. அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.
3.வேலையால்  வந்த கணவனுக்கு ஆசையுடன் பேச மனைவிக்கு நேரமின்மையினால் குடும்ப இறுக்கம் வலுவிழக்கிறது.
4.நாடகத்தில் அடுத்த நாள் என்ன நடக்கப்போகிறது என்ற ஏக்கத்துடன் நாளாந்த காட்சிகள் முடிவதனால் தேவையற்ற மனக்குழப்பத்துடன் இரவில் தூக்கம்  கெடுகிறது.
உழைப்பவர்கள் உழைக்கிறார்கள்.ஆனால் நீங்கள் .......அத்தனையும் இழக்கிறீர்கள். தேவைதானா?

                                                                                                                              

அற்புதம்...அற்புதம்....அற்புதம்

 சத்குருவின் விளக்கம்

உலகெங்கும், முக்கியமாக இந்தியாவில், கடவுளின் அவதாரங்கள் என்று தங்களைப் பிரகடனப் படுத்தி, பக்தர்களுக்கு ஆசி வழக்குவதாகக் கூறிக்கொண்டு உட்கார்ந்திருக்கும்  எண்ணற்ற சுவாமிமார்கள், அற்புதங்கள் செய்வதாகக் காட்டிக்கொண்டு  இருக்கின்றார்கள். இந்த அற்புதங்களினால்  தங்களுக்கு எந்தவொரு நன்மையையும் கிடைக்காது என்று அவர்களின் பக்தர்கள் அறிந்திருந்தும், எதோ நம்ப முடியாத என்னவோ நடந்துவிட்ட்தாக எடுத்துக்கொண்டு மேலும், மேலும் பக்த அடிமைகள் ஆகிவிடுகிறார்கள். 

சத்குரு சொல்கிறார், அப்படி ஒருவிதமான அற்புதங்களும் உலகில் நடைபெறுவது இல்லை என்று. நடப்பது எல்லாமே இயற்கையாகவே நடக்கின்றன. எந்தவொரு 'விளைவு' க்கும் விளக்கமான ஒரு 'காரணி' இருந்துகொண்டே இருக்கும். இந்த விளக்கத்தை புரிந்து விளங்குவதற்கான மூளைத்திறன் இல்லாது, அறிவு குறைவாக இருப்பதே அதை 'அற்புதம்',  'அதிசயம்' என்று அவர்கள் நம்புவதற்கு காரணம் ஆகும்.

ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு பொத்தானை அமுக்கினால் இருண்ட வீடு வெளிச்சமாகும் என்று ஒருவர் காட்டியிருந்தால் அவரைக் கடவுள் ஆக்கி இருப்பார்கள். 20 ஆயிரம் கிலோமீடடர் தூரத்தில் இருப்பவருடன் நேரில் பார்த்துக்  கதைத்திருந்தால் அவர் தெய்வம் ஆகி இருப்பார். ஆகாயத்தில் பறந்திருந்தாலும் அவரும் தேவனே!

வரும் காலத்தில் நடைபெற இருக்கும் தொழில்நுட்ப  சாதனைகள் பலவும் தற்போது உள்ள நம்மறிவுக்குப் புலப்பட மாடடா. ஒரு நாள்,   எங்கோ இருக்கும் மனிதனோ, உணவோ அல்லது வேறு எந்தப் பொருளோ எங்கள் முன், 'அங்கே மறைந்து, இங்கே தோன்றி',  கணப்பொழுதில் கொண்டுவரக்கூடிய சாத்தியக்கூறுகள் வரலாம். இப்படி ஒரு விடயம் இப்போது நடைபெற்றால் அது 'அற்புதம்'. ஆனால் வரும் காலத்தில் அது வெறும் இயற்கை நிகழ்வு மட்டுமே! 

நமக்கு ஒரு விடயம் விளங்கவில்லை என்றால் அதற்கு கடவுள் முலாம் பூச முனைவது வெறும் அறியாமையே ஆகும். 

இந்தப் பூமியில் எப்படித்தான் பொருளை மேலே எறிந்தாலும் அது கீழே திரும்பவும் வந்து விழுகிறதே, இது அற்புதம் இல்லையா? நம் பூமி, அசுர வேகத்தில் சுழன்றுகொண்டு, அசுர வேகத்தில் சூரியனையும் சுற்றிக்கொண்டு,  அசுர வேகத்தில் அண்டத்தில் விரைந்து செல்லும்போது நாம் ஒன்றும் தூக்கி வீசப்படாமல் அப்படியே பூமியில் இருக்கிறோமே, இது அதிசயம் இல்லையா? பல விதமான உயிர் இனங்களும் சிக்கலான கலங்கள், உறுப்புகளுடன் பிறந்து, வாழ்ந்து  மடிகின்றனவே; இவை ஆச்சரியம் இல்லையா?  கழிவு, குப்பைகளில்  இருந்து மரம் வளர்ந்து இனிய பழங்கள் வருவதில்லையா? இவை எல்லாம் இயற்கையாகவே நடக்கும் அற்புதங்கள்தான்!

ஒரு புறாவை, சட்டைப் பையில் இருந்து எடுத்துத் தந்து அற்புதம் காட்டிட  இயலுமா என்ற கேள்விக்கு சத்குரு சொன்ன பதில்: "இந்தச் செயலால் எனது சடடைப்பை அழுக்காகும், உங்கள் கையில் ஒரு புறா இருக்கும். இதைத் தவிர இந்த அற்புதத்தால் உலகில் உள்ள எவருக்கும் ஒரு துளி அளவிலும் நனமை இல்லையே! நன்மை இல்லாத ஒரு அற்புதம் தேவைதானா?"

நோய் மாறுவது, பூ விழுவது, கதிரைச் சீலை சுருங்குவது, மாலை வளர்வது, வீபூதி கொட்டுவது, சிலையில் கண்ணீர் வழிவது, முடவர் எழுந்து நடப்பது  என்று  எல்லாமே ஒவ்வொரு காரணியின் நிமித்தம் நடைபெற்ற விளைவுகளே அன்றி அற்புதம் ஒன்றும் இல்லை.  சிலர் இப்படியான விளைவுகளை ஏமாற்று வித்தை மூலமும் கொண்டுவந்து புகழ் சேர்ப்பார்கள். அப்படித்தான் இவைகள் எல்லாம் அற்புதம் என்று வைத்தாலும் இதனால் மனித குலத்துக்கோ (அல்லது எறும்புக்கோ) ஒரு துளி அளவு நன்மைதானும் இல்லையே! இப்படி ஒரு அற்புதம் நடந்தால் என்ன,நடக்காது விடடால் என்ன, எவருக்கு வேண்டும்?

பூ மேலே போனால்தான் அற்புதம்; கீழே விழுவதையும் அதிசயம் என்று கூவித்திரிபவர்களை என்னவென்றுதான் அழைப்பது!

இப்படியான அற்புதங்களை நடத்துபவர்கள், விபூதிக்குப் பதிலாக ஒரு 10 தொன் ஆட்டா  மாவினை தினசரி உருவாக்கினால் இந்தியாவின் உணவுப் பிரச்சனை நீங்கி விடுமே! அத்தோடு, வைத்திய சாலைகள் எல்லாவற்றிலும் ஒரு 'வார்ட் ரவுண்ட்' தினசரி செய்துவிட்டு வரலாமே! சும்மா ஏன் ஓர் உயர்ந்த கதிரையில் ஜடங்கள் போல் உட்க்கார்ந்து கொண்டு இருக்கின்றார்கள்?

ஆதலால், அவர் சொல்கிறார், உலகில் எல்லாமே இயற்கையாக நடக்கும் அற்புதங்கள் என்று.

மனிதனே ஓர் அற்புதம். அவனின் மனம் தேவை இல்லாது கடவுள், சொர்க்கம் என்று அலைந்து திரிகின்றது.

உண்மையில், இந்த மனத்தின் சக்தியினால், அவன் மிருக குணம் உள்ளவனாகவோ, தெய்வீக குணம் கொண்டவனாகவோ மாறக்கூடிய அற்புதம் ஒன்றை நிகழ்த்த இயலும்.

                                 :  selvahurai , santhiragasan :                                
ohmSai Baba of Shirdi

எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:05

எங்கே ,எப்பொழுது எழுத்து கண்டு பிடிக்கப் பட்டது என்ற முதல் இரு கேள்விகளும் எமது கவனத்தை ஒரு முக்கியமான வேறு ஒரு மாற்று கேள்விகளின் பக்கம் திருப்பு கிறது-அதாவது, எழுத்து ஒரு முறை கண்டு பிடிக்கப் பட்டு, மொழியை எழுத்து குறியீடுகளால் பிரதிநிதித்துவம் படுத்தும் அந்த கண்டு பிடிக்கப் பட்ட நுட்பம், அந்த மைய பகுதியில் இருந்து உலகின் மற்ற பகுதிகளுக்கு பரவியதா? அல்லது எழுத்து பலமுறை, வெவ்வேறு பகுதிகளில் சுதந்திரமாக, தன் பாட்டில் வளர்ந்தா? என்ற கேள்விகளின் பக்கம் எம்மை திருப்பு கிறது.

இந்த கேள்விகளுக்கு அநேகமாக ஒரு எளிய பதில்  இருக்க முடியாது. மறு பக்கம்,வெவ்வேறு இடங்களில், அந்தந்த வாய் மொழிகளை பிரதி நிதித்துவம் படுத்தும், அங்கு விருத்தி அடைந்த  குறியீட்டு முறைமைகள், பலவழிகளில் வேறுபட்டு காணப்படுகின்றன. வெவ்வேறு பண்பாடு களுக்கு கிடையில், எந்த வித பரஸ்பர தாக்கங்கள் நடை பெற்று இருந்தாலும், எழுத்து ஆரம்பித்ததும், அதன் பின் அது கணிசமான அளவு தன்னிச்சையாகவும் நெகிழ்வு தன்மையாகவும் அந்தந்த மொழிக்கே உரிய குறிப்பிட்ட பண்புகளை உள்ளடக்கி, ஒரு குறியீட்டு முறைமையை தழுவியது எனலாம். அதாவது,ஆரம்ப எழுத்து அமைப்புகள் எமக்கு சுட்டிக் காட்டுவது என்ன வென்றால், மெசொப்பொத்தேமியாவை அல்லது மெசொப்பொத்தேமியா, எகிப்த்தை மையமாக கொண்டு அந்த எழுத்தைப் பற்றிய கருத்து பல்வேறு திசைகளில் கி மு 3 ஆம் ஆயிர மாண்டு தொடக்கத்தில் இருந்து பரவியது என்பதாகும். 

ஏன் எழுத்து கண்டு பிடிக்கப் பட்டது? என்பதைப் பற்றி பார்ப்போம். பொதுவான மொழிவரலாற்றியல் சார்ந்த கண்ணோட்டத்தின் படி, எழுத்து ஒரு மொழியை பிரதிநிதித்துவம் படுத்தி, மறைமுக தகவல் தொடர்பிற்கும் மற்றும் அறிவு பரிமாற்ற த்திற்கும் வழி வகுக்கிறது என முக்கியமாக கருதப் படுகிறது. அது மட்டும் அல்ல, மொழியானது நீண்ட காலம் புழக்கத்தில் இருப்பதற்கு, அதற்கு எழுத்து வடிவம் இருக்க வேண்டியது மிக மிக அவசியமானதும் ஆகும். வெறும் பேச்சு மொழியோடு மட்டுமே இருந்து விட்டால், அதனைப் பேசுகிற மனிதர்கள் இறக்கும் போது, கூடவே அதுவும் இறந்து விடும். எனவே, எழுத்து முறைமை (writing system), என்பது ஒரு மொழியைப் பார்க்கக்கூடிய வகையில் குறியீடுகள் மூலம் பதிவுசெய்வதைக் குறிக்கும். உதாரணமாக, இதனால் தான் இன்று எமக்கு 4,000 ஆண்டுகள் முந்தைய உலகின் பழமையான வாடிக்கையாளர் புகார்க் (Customer Complaint) கடிதம் கிடைத்துள்ளது. நன்னி (Nanni) என்ற ஒரு  வாடிக்கையாளர், யா-நாசிர் [Ea-nasir] என்ற வணிகருக்கு எதிராக ஒரு செப்பு கப்பல் சரக்கைப் பற்றிய தனது மனக்குறையை வெளிப்படுத்தியுள்ளார். அந்த கடிதத்தில்,இப்படி எழுதி உள்ளது: 

"என்னிடம் நீ வந்த போது  'நான் கிமில்-சின்னிடம் [Gimil-Sin] (அவன் வரும்போது) முதற்தர செப்பு பாளங்களைத் தருவேன்.' என்று கூறிவிட்டு நீ சென்றாய் , ஆனால் நீ என்னிடம் என்ன வாக்குறுதி தந்தாயோ, அதனைப் பின் செய்யவில்லை. நீ தரமற்ற செப்புப் பாளங்களை என்னுடைய தூதுவன், சிட்-சின் [Sit-Sin] முன் வைத்து, அவனிடம் சொல்லியிருக்கிறாய்: 'இதை எடுக்க விரும்பினால் ,இதை எடு,இல்லை என்றால் நீ இடத்தை காலி பண்ணு' என்று.

என்னை எப்படி நீ  நினைத்துக் கொண்டாய், யாரோ ஒருவனை பேசுவது போல, என்னை  அவமதித்து பேசியுள்ளாய்... நான் கூறுவதை கேள் (இப்போதிலிருந்து) இதற்குமேல் நான் இங்கிருந்து உன்னிடம் தரமில்லாத எந்தவொரு செப்பையும் பெற அனுமதிக்கமாட்டேன். நான் (இப்போதிலிருந்து) பாளங்களை தனித்தனியாக என்னுடைய கொல்லை புறத்திலிருந்து தேர்வு செய்து எடுத்துக்கொள்வேன், பின்பு நான் உனக்கெதிராக எனக்குள்ள நிராகரிக்கும் உரிமையை நீ என்னை அப்படி அவமதித்ததற்காகப் பயன்படுத்துவேன்." என்று அந்த கடிதம் கூறுகிறது.
இந்த கடித முத்திரை, ஊர் என்ற நகரத்தில் கண்டு பிடிக்கப் பட்டு, இன்று பிரிட்டிஷ் அருங்காட்சியக த்தில் வைக்கப் பட்டுள்ளது.

பொதுவாக, ஒலியைக் குறிக்கும் குறியீடான எழுத்தை, 

[1]ஓவிய எழுத்து (pictographical/உதாரணம்: பழைய எகிப்திய எழுத்துகள்), 

[2]கருத்து எழுத்து (ideographical/உதாரணம்: சீன மொழி எழுத்துகள்), உருபனெழுத்துக்கள் [(logographic)] சில சமயங்களில் கருத்தெழுத்துக்கள் (Ideogram) என அழைக்கப்படுவதுண்டு. பண்பியல் (abstract) எண்ணங்களை வரைபுருவினாற் குறிப்பதால் இந்தப் பெயர். இங்கு உருபனெழுத்து என்பது ஒரு முழுச் சொல்லை அல்லது ஒரு உருபனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு எழுத்தாகும். உருபன் ஒன்று தனியாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உருபன்கள் சேர்ந்தோ சொல்லை உருவாக்குகின்றன. எடுத்துக்காட்டாக: வாழ் ஒரு உருபன், கிறு ஒரு உருபன், ஆன் ஒரு உருபன். இம்மூன்று உருபன்களும் சேர்ந்து வாழ்கிறான் (வாழ் + கிறு + ஆன்) என்னும் சொல்லை உருவாக்குகின்றன. இச்சொல்லை உருவாக்கிய உருபன்களில் வாழ் என்ற உருபன் தனியாக நின்றும் பொருள்தரும் சொல்லாகக்கூடியது. 

[3]அசை மொழி எழுத்து (syllabary writing /உதாரணம்: தமிழ் -பெரும்பாலும் அசை எழுத்து முறையைக் கொண்டது ),ஆங்கில மொழியைப் போன்ற சிக்கலான அசை அமைப்பையும், பெருமளவிலான மெய்யொலிகளையும், சிக்கலான மெய்யொலிக் கூட்டங்களையும் கொண்ட மொழிகளில் சொற்களை அசையெழுத்து முறையில் எழுதுவது கடினமாகும். ஆங்கிலத்தை இதேமுறையில் எழுதுவதாயின் பல ஆயிரம் எழுத்துக்கள் வேண்டியிருக்கும் எனக்கூறப்படுகிறது. 

[4]ஒலியன் எழுத்து (phonetic writing /உதாரணம்: ஆங்கிலம், ஆனால்,உண்மையில் அப்படி கூறமுடியாது,98% அப்படி இருக்கலாம்? என்பார்கள். ஒலியனெழுத்து (Alphabetic) என்பது ஒவ்வொன்றும், பேச்சு மொழியொன்றிலுள்ள, ஒரு ஒலியனை, அண்ணளவாகப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அல்லது பிரதிநிதித்துவப்படுத்திய சிற்றளவிலான எழுத்துக்களைக் கொண்ட தொகுதி ஆகும் [- அடிப்படையான குறியீடுகள் ஆகும்- ]. ஆங்கிலத்தில் இச் சொல்லைக் குறிக்கும் "அல்பபெட்" (alphabet) என்னும் சொல், கிரேக்க அரிச்சுவடியின் முதல் இரண்டு எழுத்துக்களான "அல்பா", "பீட்டா" என்பவற்றைச் சேர்த்துப் பெறப்பட்டது. ஒரு முழுமையான ஒலியன் எழுத்து முறைமையில் (phonological alphabet), ஒலியன்களும் (phoneme), எழுத்துக்களும் ஒன்றுடனொன்று இரண்டு திசைகளிலும் முழுமையாகப் பொருந்தக்கூடியன ஆகும்: ஒரு சொல்லின் உச்சரிப்புக் கொடுக்கப்பட்டால், எழுதுபவர் ஒருவர் அதற்குரிய எழுத்துக்களைக் கண்டுகொள்ளக்கூடியதாகவும், அதே போல சொல்லுக்குரிய எழுத்துக்கள் கொடுக்கப்படும்போது, பேசுபவரொருவர் அதன் உச்சரிப்பை அறியக்கூடியதாகவும் இருக்கும்.  ஆரம்பத்தில் ஒரு தெளிவற்ற, ஒழுங்கு படுத்தப் படாத 'பட' அல்லது 'ஓவிய' குறியீடு  (pictographical)  மூலம் ஆதி மனிதன் தனது உணர்வுகளை அல்லது அந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் அவனின் ஒலிகளை அல்லது பேச்சு மொழிகளை பார்க்கக்கூடிய வகையில் பதிவு செய்து காட்டினான்.பின் அசை எழுத்து முறைமைகள் [syllabary] தோன்றி இறுதியாக ஒலியன் எழுத்து முறைமை [alphabetic writing] தோன்றியது எனலாம்.

தமிழ் பெரும்பாலும் அசை எழுத்து முறையைக் கொண்டது (syllabary writing system). 'அம்மா' என்ற சொல்லை /அ/ ம்/ மா/ என்று ஒலியன் பிரித்து ஒலிக்க வேண்டும். புறநானூறு போன்ற கடினமான சொற்களை /புற/ /நா/ /னூறு/ அசை பிரித்து ஒலிக்க வேண்டும். அதேபோல, "அகர முதல எழுத்தெல்லாம்" என்பதை பின்வருமாறு அசை பிரிக்கலாம்: /அக/ /ர/ /முத/ /ல/ /எழுத்/ தெல்/ /லாம்/. மற்ற இந்திய மொழிகளும் பெரும்பாலும் அசை எழுத்து முறைமையைக் கொண்டவையே. அசை எழுத்து முறையில் ஓர் எழுத்து ஓர் அசை (ஒலிப்பு முறையில்)யைக் குறிக்கும் வகையில் எழுதப் பெறுகின்றது. அதாவது, க என்னும் உயிர்மெய் எழுத்தை ஒரே எழுத்தாக எழுதுகிறோம்.ஆனால், ஒலியன் எழுத்து முறையில்  க என்பதை எழுத வேண்டும் என்றால் க்அ என்று தான் எழுத வேண்டும். இவ்வாறு ஒலியன் எழுத்து முறையில் எழுதும் வழக்கம் தமிழில் இல்லை. எனினும் ஐ, ஒள தவிர்த்து உள்ள பத்து உயிரெழுத்துகளும் க் முதல் ன் வரை உள்ள பதினெட்டு மெய் எழுத்துகளும், ஒலியன்கள் என்பதால் ஒலியன் எழுத்து முறையில் அமைந்தவை போல் காணப்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் அசை எழுத்து முறையில் கடல் என்று எழுதுவதை, ஒலியன் எழுத்து முறையில் க்அட்அல் என்று எழுதுவர். இதுவே இரண்டிற்கும் உள்ள வேறுபாடு ஆகும்.

இனி எமது கவனத்தை இறுதிக்  கேள்வியான எப்படி எழுத்து கண்டுபிடிக்கப் பட்டது என்பதின் பக்கம் திரும்புவோம். முதலில் அறியப்பட்ட எழுத்து இரண்டு பெரும் நைல்,டைக்ரிஸ் ஆறுகளின் [ the Nile and the Tigris] கீழ் பகுதியில் இருந்து வந்துள்ளது.ஆகவே இரண்டு நாகரிகங்களும் இந்த முக்கிய மாற்றத்திற்கு பொறுப்பானவர்கள் என பொதுவாக எவரும் கருதலாம், ஆனால்,உண்மையில் சுமேரிய எழுத்து கி மு 3100 ஆண்டு எனவும், அதன் பின் குறைந்தது 100 ஆண்டுகள் அல்லது அதற்குப் பின்பே எகிப்திய எழுத்து உருவாகி இருக்கலாம் என அறிய முடிகிறது. எனவே இந்த அதி முக்கிய மாற்றத்திற்கு சுமேரியனே முதன்மை காரணியாக உள்ளான். எகிப்து ,சுமேரியாவிற்கு அண்மையில் இருந்ததால், இந்த சுமேரியரின் யோசனை அல்லது நுட்பம் மிக விரைவாக எகிப்தியரை அடைந்திருக்கலாம் என நாம் கருதலாம். 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி:06  தொடரும்

'Story or History of writing'/Part:05



Question of where and when writing was invented directs our attention immediately to an important alternative: 

• Was writing invented only once, and did the technique of representing language with written signs spread out from one center all over the world, 
or was writing developed multiple times and independently?

Let me just point out that there is probably no simple answer to this question. On the one hand, the various systems of coding oral language that have been developed at different places show a great variety. Whatever the mutual influences of writing systems of different cultures may be, this variety demonstrates, at least, that the development of writing, once it is initiated, attains a considerable degree of independence and flexibility to adapt a coding system to specific characteristics of the language to be represented. On the other hand, the historio-geographic distribution of the various occurrences of early writing systems seems to indicate, that the idea spread in various directions at the beginning of the 3rd millennium BC from centers in Mesopotamia or Mesopotamia and Egypt. 

Why was writing invented? For a long time, a straightforward answer to this question seemed to be beyond any doubt. According to the prevailing philological perspective, writing was essentially considered as a representation of language in a way that allows for an indirect communication and transmission of knowledge.For example,Because of writing only, Now we come to know the grievance from someone called Nanni to another individual known as Ea-nasir, the oldest known written complaint ever recorded, 4000 years ago! The tablet, dated from roughly 1750 B.C. is inscribed in ancient cuneiform, a pictographic form of writing likely developed by the ancient Sumerians, and currently housed in the British Museum.In this letter, Nanni sends the following message to Ea-nasir as below:

"When you came, you said to me as follows : 'I will give Gimil-Sin (when he comes) fine quality copper ingots.'  You left then but you did not do what you promised me. You put ingots which were not good before my messenger (Sit-Sin) and said: 'If you want to take them, take them; if you do not want to take them, go away!'

What do you take me for, that you treat somebody like me with such contempt? I have sent as messengers gentlemen like ourselves to collect the bag with my money (deposited with you) but you have treated me with contempt by sending them back to me empty-handed several times, and that through enemy territory. Is there anyone among the merchants who trade with Telmun who has treated me in this way?

How have you treated me for that copper? You have withheld my money bag from me in enemy territory; it is now up to you to restore (my money) to me in full.

Take cognizance that (from now on) I will not accept here any copper from you that is not of fine quality. I shall (from now on) select and take the ingots individually in my own yard, and I shall exercise against you my right of rejection because you have treated me with contempt."

The tablet was acquired by the British Museum in 1953. It was originally found in the ruins of Ur.

The general attributes of writing systems can be placed into broad categories such as 

[1]pictographical [E.g: old egyptian writing] ,

[2]ideographical, logographic symbols some time called as ideographs as logographic symbols originally derived from ideographs, the symbols of these languages now stand for words and syllables, and do not refer directly to concepts or things.The best known examples of a logographic writing system are Chinese and Japanese.some Egyptian hieroglyphs and some graphemes in cuneiform script are also logograms.  

[3]syllabary writing [E.g:Tamil,Type of writing system is called syllabic alphabet], 

[4]phonetic writing ,E.g: English, However,strictly speaking it is not,May be English is 98% phonetic. 

The early development of writing was interpreted as a universal process leading from a crude representation of words by pictures to the more efficient representation of words decomposed into phonemes by syllabic signs and, finally, to alphabetic writing.In alphabets and syllabaries, individual written characters represent sounds rather than concepts. These characters are called phonograms. Unlike logograms, phonograms do not necessarily have meaning by themselves, but are combined to make words and phrases that have meaning.  

A syllabary is a phonetic writing system consisting of symbols representing syllables. For example ,Amma in Tamil can split as :/A /m /ma / [/அ/ ம்/ மா/], Similarly word purananuru can be split as ;/pura / /na / /nuru / [/புற/ /நா/ /னூறு/] Here, each characters representing syllables and (in some languages or stages of writing) serving the purpose of an alphabet. In many Indian languages, the writing system is based on syllabic system. Since syllables are composed of phonemes, syllabic writing systems are phonetic. South Asian languages like Kannada, Sanskrit, Tamil, Telugu, Malayalam, Gujarathi, Gurmukhi, Bengali, Oriya, Sinhalese, Tibetan, Mynamar language scripts are examples of writing systems based on syllabic system and are phonetic. 

Let me now turn to the last question of how writing was invented. The first known writing derives from the lower reaches of the two greatest rivers in this extended region, the Nile and the Tigris. So, any one could easily assumed that both civilizations-Egyptian and the Sumerian (in what is now Iraq)- may be separately responsible for this totally transforming human development, But, Sumerian script is dated as about 3100 BC and the Egyptian version a century or so later, proof that Sumerian is mainly responsible this invention of writing and its idea or technique may be spread to egypt quickly as it is very close to sumeria.

[Kandiah Thillaivinayagalingam]

Part:06 will follow

ஆடிப் பாடி உறவுகொள்ள இன்பத் தீபாவளி


உன்னைக் கண்டு நான் பாட என்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி...
உல்லா...சம் பொங்கும் இன்பத் தீபா...வளி
உல்லா...சம் பொங்கும் இன்பத் தீபா வளி -- உன்னை

ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாகக் கலந்து
உறவு கொண்டாடும் தீபாவளி...
மக்கள் கொண்டா... டும் தீபா....வளி
மக்கள் கொண்டா... டும் தீபா....வளி -- உன்னை

தீயவனை அழித்த தேவனைப் போற்றி செய்யும்
தீபத் திருநாள் இந்தத் தீபாவளி...
தீபத் திருநா...ள் இந்தத் தீபா...வளி
தீபத் திருநா...ள் இந்தத் தீபா...வளி -- உன்னை

இல்லங்கள் அலங்கரித்துத் தீபங்கள் ஏற்றி
எல்லோர்க்கும் விருந்தோம்பும் தீபாவளி...
எல்லோ...ர்க்கும் விருந்தோம்பும் தீபா... வளி
எல்லோ... ர்க்கும் விருந்தோம்பும் தீபா... வளி --- உன்னை

பலகாரம் இனிப்புப் பட்சணங்கள் புசித்து
படடாசும் வெடிக்கும் இன்பத் தீபாவளி...
பட்டா...சும் வெடிக்கும் இன்பத் தீபா...வளி
பல பட்டா...சும் வெடிக்கும் இன்பத் தீபா...வளி --- உன்னை

Diwali 

    எழுதியவர்:  K.C.Rasaratnam, Melbourne, Australia    

வருங்கால தொழிநுட்பம்:அங்கம்-01

வருங்கால தொலைநோக்கு[புதிய வாசகர்களுக்காக மீள்பார்வை]

இன்றில் இருந்து 2500 வருடம் வரை என்ன நடக்கும்? ஒரு அறிவுபூர்வமான தொழில்நுட்ப அலசல்:-ஆக்கம்:செல்வதுரை சந்திரகாசன்

(இது ஆங்கில மூலத்தின் சுருங்கிய தமிழ் வடிவம்)


௦0.30 மனிதனின் பரிணாம வளர்ச்சியும் தொழில்நுட்பப் புரட்சியும்:
மனிதன் பலவருடங்களாகப் படிப்படியாக வேட்டையாடத் தொடங்கி, விவசாயம் செய்யப் பழகித் தற்போது தொழில்நுட்ப உலகிற்குள் நுழைந்து விட்டான். இத்தகைய வளர்ச்சியின்போது ஏற்பட்ட அனுபவங்களாலும், ஆராய்ச்சிகளினாலும் அல்லது தற்செயலாகவும் பலவிதமான பதிய சாதனங்களைக் கண்டுபிடித்தான். இரண்டாயிரம் வருடங்களின் முன் வாழ்ந்தோர் தற்போது நாம் அனுபவிக்கும் வாழ்க்கை முறையினைக் கனவிலும் அனுமானிதிருப்பர்ர்களா? அதுபோல், இன்னும் இரண்டாயிரம் வருடங்களில் மனிதன் என்னமாதிரி வாழுவான் என்று கற்பனைதான் பண்ணிப் பார்க்க முடியுமா? வேண்டாம்! ஒரு 500 வருடங்களில் தான் என்ன நடக்கும் என்று நம்ம புத்திஜீவித தொலைநோக்கியூடாகப் பார்க்கத்தான் விழைவோமே! நிச்சயமாக 2500 இல் வாழ்வோர் நாங்கள் எவ்வளவுக்கு அறிவற்ற மூடர்களாய் இருந்து சரியாகக் கஷ்டப்பட்டோம் என்று வியக்கத்தான் போகின்றார்கள்.
தற்சமயம், நாம் எங்கள் மூளையின் 10% பகுதியை மட்டும் தான் நம் பலவிதமான செயல்பாடுகளுக்குப் பாவிக்கிறோம். மூளையின் பிறபகுதியினைப் பாவிக்காமல் விட்டால் அது நமக்கு வால் தேய்ந்து போனது போல இல்லாமல் போய்விடும். ஆனால், வருகால மனிதன் மூளையின் 100% பகுதியையும் பாவிப்பது மட்டுமல்ல, மூளையின் கலங்களின் எண்ணிக்கையும் பலமடங்காகப் பெருகிவிடும். இதனால் மனிதன் வருங்காலத்தில் ஒரு அபார ஞாபகசக்தியுள்ள அதிசூர உயிரினமாக திகழுவான். கடந்த காலங்களிலும் பார்க்க தற்போதைய விஞ்ஞான வளர்ச்சி வீதம் படுபயங்கர வேகத்தில் ஏறிக்கொண்டு போகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. இதனால் நீங்கள் கற்பனையே செய்து பார்க்க முடியாத அளவிற்கு பல புதுமைகளைக் காண இருக்கிறீர்கள்.
எனது இந்த எதிர்கால தொலை நோக்கில், தற்சமயம் பலர், இயற்கை கடந்த, தெய்வீகமான, சமகால வழக்கமான, மூடமான விடயங்கள் என்று சொல்லிக்கொண்டு ஒதிக்கி இருக்கும் பல விடயங்கள் உண்மையிலேயே எம் கண்முன்னால் சாதாரணமாக நடக்க இருக்கிறது என்பதை விரிவாக காட்டப் போகிறேன். தற்போதைய மனிதனின் ஒரு பெரிய குறைபாடு என்னவென்றால் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஒட்டுவதுதான்.ஒரு காரியத்தில் இறங்கிவிட்டால் கடிவாளம் பூட்டியதுபோல் அதே சீர் நேர்கோட்டிலேயே குறுகியகோணத்தில் ஆராய்வு செய்து ஏற்கனவே இருப்பனவற்றை திருத்தி அமைக்கும் கைங்கரியதிலேயே ஈடுபடுவதால் முற்றிலும் வேறுபட்ட பதிய பாதைகளைத் தேடுவது பெரும்பாலும் தடுக்கப்படுகிறது.
இந்த புதிய முயற்சியில் முக்கிய கர்த்தாவாகிய சக்தி ஆக்கம் பற்றி முதலில் ஆராய்வோம்.

௦1.00 சக்தி ஆக்கம்: இதுவரை:

1 .01 பழக்கம் மாறவில்லை:
கடந்த 90 வருடங்களாக மின்சாரம் என்னும் ஒரு சக்தியைக் கண்டுபிடித்து இன்னமும் அதையே இன்னும் இலகுவான முறையில் உற்பத்தி செய்வதற்கான வழிமுறைகளைக் கண்டுபிடிப்பதற்கே பகீரதப் பிரயத்தனம் செய்துகொண்டு இருக்கிறான். தற்சமயம் மின்காந்தத் தூண்டல், ஒளி, வெப்ப, இரசாயன மற்றும் அணுத்தாக்கம் என்று பலவிதமான முறைகளினால் மின்சாரம் உற்பத்தி செய்து, அத்தோடு உபயோகிக்கக் கூடிய, X , UV , லேசர் கதிர்களையும், மைக்ரோ, ரேடியோ அலைகளையும் கண்டு பிடித்து தனது சௌகரிய வாழ்வுக்குப் பயன்படுத்திக் கொண்டான்.
இப்போது எனது கேள்வி என்னெவென்றால்,மனிதனின் கண்டுபிடிப்புகள் முடிவடைந்து விட்டதா?இந்த பரந்த விரிந்த அண்டத்தில் வேறு விதமான ஒரு உந்தும் சக்தி ஒன்றைக் கண்டு பிடிக்க முடியாதா?கண்டது கைமண்ணளவு,காணாமல் இருப்பது கடல் அளவாய் இருக்கலாம் அல்லவா?அது சரி, அது ஏன் தொடர்ந்து மின்சாரமாய் இருக்க வேண்டும்? அது ஏன் தொடர்ந்து மின்னோட்டமாய் இருக்க வேண்டும்?இந்தப் பரந்த வெளியில் பாரிய அளவிலான, மிகவும் சக்தி வாய்ந்த சில கதிர்கள். அலைகள், வீச்சுகள், அதிர்வுகள், உமிழ்வுகள், தெறிப்புகள்,எரிவுகள், தூண்டல்கள், கவர்வுகள், எதிர்வுகள், ஈர்ப்புகள், சேர்வைகள், சிதைவுகள், அழிவுகள், ஒளிர்வுகள் அல்லது இன்னும் வார்த்தையே இல்லாத அவைகள், இவைகள் என்று கோடிக்கணக்கான சக்திகள் இருக்கின்றன என்பதை அறிவுடையோர் எவரும் மறுக்க மாட்டார்கள்.
இந்தவிதமான சிந்தனைகளோடு நம் எதிர்காலம் நோக்கி நகர்வோம் வாருங்கள்.


1 .10௦. யுகம்: 2010 - 2050௦ - மின்சாரம்: மைக்றோ - நுண் சிம்பு காலம்:
இக்காலமுன் 20 வருடங்களில் சூரிய சக்தியின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் தொழில்நுட்பம் முன்னேறும்.2020 களில் ஐதரன் வாயு பிரதான எரிபொருளாக மாறும். தாவரங்களே சூரிய ஒளியின் உதவியால் பச்சயமும் நீரும் சேர்ந்து ஐதரசன் மற்றும் பிராண வாயு என்பவற்றை வெளியில் விடுகின்றபோது, மனிதனுக்கு மட்டும் இதை வர்த்தக அளவில் தயாரித்து உபயோகத்தில் விட என்ன அறிவு இல்லாமலா போய்விடுமா? பெரும் அளவில் கிடைக்கும் கடல் நீரையும் சூரிய ஒளியையும் வைத்துத் தயாரிக்கப்படும் ஐதரசன் வாயுவைப் பாரிய மின்கலங்களில் அடைத்து இரசாயன முறையினால் மின்சக்தி உற்பத்தி செய்து உலகம் பூராவும் உபயோகத்தில் இருக்கும். பிந்தியவருடங்களில் சூரிய ஒளித்தொகுப்பு முறையினால் மலிவாக ஐதரன்வாயு உற்பத்தி செய்வார்கள்.வண்டிகளை இயக்கும் உட்தகனஇயந்திரங்கள் எல்லாம் பெற்றோலைக் கைவிட்டு ஐதரசத் தொழில்நுட்பத்தினுள் நுழைந்து விடும்.பிந்திய காலத்தில் ஹைனல் எனப்படும் உயர் வெப்ப கரு மின்பகுப்பு முறையினால் மிக மிக மலிவான விலையில் ஐதரசன் உற்பத்தி செய்யப்படும்.இப்புதிய முறையில் கரியமிலவாயு நமது சுற்றாடலுக்குத் தள்ளப்படுவது முற்றாகவே நிறுத்தப்பட்டுப் பிராணவாயுவே கழிக்கப்பட்ட வாயுவாக வாயுமண்டலத்தினுள் செலுத்தப்படும்.

1).20௦. யுகம்: 2050 - 2200௦ - நன்சாரம்: நனோ -நுண் சிம்பு காலம்:
மனிதன் சிந்திக்கத் தொடக்கி விட்டான். இரு நூற்றாண்டு காலமாக உபயோகமாக இருந்த மின்சக்தி பற்றி வினாவைத் தொடங்கி விட்டான். இதன் விளைவாக மின்சாரம் போய் புதிய நன்சாரம் வந்துவிட்டது. நன்சாரமா? ஆம். 2050 இலிருந்து நனோ நுண் சிம்பு நுட்ப நன்சாரம் வந்துவிடும். இந்த நன்சாரத்தில் மின்சாரம் போன்று மின் அழுத்தம் இருக்காது. இதை உண்டாக்குவதற்கு பெரிய மின் உற்பத்தி நிலையங்கள் தேவை இல்லை. ஆனால் விநியோகச் சுற்றுகள் பாவனையில் இருக்கும். சரி இதை எப்படி தயாரிப்பது? இதற்கு விடை நம் முன்னால் இருக்கும் நமது சூரியன்தான்.

1 .21௦. சூரியன் - சக்தியின் மூலம்:

நெடுங்காலமாகவே சூரிய சக்தியை நன்குணர்ந்த நம்முன்னோர் சூரியனை ஒரு தெய்வமாகவே வணங்கினார்கள். சூரிய ஒளியும் வெப்பமும் இல்லாவிட்டால் உலக ஜீவராசிகள் எல்லாமே அழிந்து போய்விடும். சூரியனிலிருந்து எண்ணிக்கையற்ற சக்தி அலைகள், வீச்சுகள் பூமியை நோக்கி வருகின்றன. ஆனால் பெரும்பகுதி வெளிமண்டலத்தால் திருப்பி அனுப்பப் படுகின்றன. வந்து சேரும் ஒரு சிலவும் மனித கண்களுக்குப் புலனாவதும் இல்லை. இப்படி நம் கண்களுக்குப் புலப்படாத ஒன்றுதான் n - கதிர்கள்.

1 .22௦. நன்சாரம்:
இந்த என்-கதிர்கள் அல்பா, பீற்றா, காமா கதிர்களின் இயல்புகளை ஒத்தும் மாறியும் இருக்கும்.இரண்டு அணுக்கள் கிட்ட நெருங்க நெருங்க இலத்திரங்களுக்கு இடையிலும் கருமையங்களுக்கு இடையிலுமான வெறுத்து ஒதுக்கும் தன்மை கூடிகொண்டே போகும்.n-கதிர்களில் ஏற்படும் இந்த செயல்-எதிர்ச்செயல் ஒரு ஐசொரோபிக் வஸ்துவின் ஊடே பாயும்போது அதன் அணுக்களில் இச்செயல் இன்னும் வக்கிர +, எதிர் - சமிக்கைகளாய் உடனுக்குடன் மாற்றப்பட்டுக் கிடைக்கும் ஓட்டம் தற்போதைய மின்சாரத்திற்கு ஒத்ததாக இருக்கும்.விண்வெளியில் 2000 கி.மீ. உயரத்தில் நிலையான(ஆனால் சுற்றிக்கொண்டிருக்கும்)விண் கோள்களில் பொருத்தப்பட்டிருக்கும் n-கதிர் உணர்பொறிகள் இக்கதிர்களை ஆங்காங்கு மின்சாரக் கம்பங்களில் பொருத்தப்பட்டிருக்கும் பெறுவிகளுக்கு, விட்டு விட்டு நிகழ்வாக, அதிகூடிய அதிர்வோடு அனுப்பவே, அவை நன்னோட்டம் என்னும் மின்னோட்டமாக மாற்றப்பட்டு விநியோகிக்கப்படும்.2100 வரை மின்சாரப் பொருட்கள் யாவும் மின்சாரத்திலும், நன்சாரத்திலும் வேலை செய்யக்கூடியதாக உருவாக்கப்படும்.2100 இலிருந்து நன்சார விநியோகம் கம்பி இல்லா முறையில் நடக்கும்.அப்போதுமுதல் எங்கெங்கு மின்சாரம் வேண்டுமோ அங்கங்கு பெறுவிகளைப் பொருத்திவிட வேண்டியதுதான்.

1) .30௦. யுகம் 2: 2150 - 2300௦
- கோகோன் - பைகோ நுண் சிம்பு காலம்:
கடந்த 150 வருடங்களாக பாவனையில் இருந்த நன்சாரத்தின் குறைபாடுகளான ரேடியோ கதிர்வீச்சு அபாயம், விண்கோள்கள் பராமரிப்பு ஆகிய கஷ்டங்களால் ஒரு புதிய இலகுவான, பாதுகாப்பான ஒரு சக்தியமைப்புத் தேடலின் உந்தலினால் புதிய கோகோன் நுட்பம் கண்டுபிடிக்கப்படது.

1) .31௦. கோகோன் - கோமிக் அலைகள்:

கோகோன் என்பது மின்சாரமும் இல்லை, மின்னோட்டமும் இல்லை.இது இலகுவான அதிர்வுசார்ந்த சக்திதான்.2200 ஆம் ஆண்டில், சூரியனிலிருந்து வரும் கோமிக் அலைகள் பற்றி கண்டறியப்பட்டது.இவ்வலைகள் சூரியனில் இருந்து வரும் கொஸ்மிக் அலைகளைவிட மிகவும் சக்தி வாய்ந்தது.இதற்குள் அல்பா, பீற்றா, காமா துனுக்கைகளை விட புதிய நண்பனான சீற்றாத் துணிக்கைகளும் உள்ளன.
இந்த சீற்றாத் துணிக்கைகளின் அலைகள் சில ஊடகங்களினூடே செல்லும்போது, பூமி மற்றும் சூரியனின் பாரிய ஈர்ப்புச் சக்திகளினால் ஒரு மிகச்செறிந்த கருப்பிரபஞ்ச ஈர்ப்பதிர்வுகளை உண்டாக்கும்.கோமிக் அலைகளினால் அயனாக்கப்பட்ட அணுக்கள் சூரிய + பூமி ஈர்ப்புச் சக்திகளால் மாறி மாறிக் கவரப்படும்.இக்கவர்வுகள் பைகோ நுண் சிம்புவினூடே செலுத்தப் பெறும் அதிர்வுகள் ஒரு உந்தும் சக்தியாக வெளிவரும்.இந்த ஈர்ப்பதிர்வுச் சக்திதான் 23 ஆம் நூற்றாண்டின் முக்கிய சக்தியாக இருக்கும்.அப்போது சகல வீதிகள், தொழில்சாலைகள், அலுவலகங்கள், வாகனங்கள் எல்லாமே கொகோன் அதிர்வுச் சக்தியையே பாவிக்கும்.


1.40௦. யுகம் 4: 2350 -2500 ஓம் - பெம்ரோ / அட்ரோ நுண் சிம்புக் காலம் :
கோகோன் சக்தி மிகவும் வசதியாகவே இருந்தும்,ஓம் அலைகளின் கண்டுபிடிப்பு மனிதனைப் பல ஏணிப்படிகள் மேலே கொண்டு சென்றுவிடும்.

1.41 ஓம் அலைகளில் ஓம் அதிர்வுகள்.
ஓம் அலைகள் சூரியனுக்கும் அப்பால் பிரபஞ்சத்திலிருந்து வருகிறது. இந்த ஓம் அலைகள் கோமிக் அலைகளைவிட பத்தாயிரம் மடங்கு விரைவான அதிர்வுகளைக் கொண்டிருக்கும்.இதற்குள் உள்ள நிறை குறைந்த உப அணுக்கள் நைட்ரோன் எனப்படும் நேர்+எதிர் ஏற்றங்களைக் கொண்டிருக்கும்.இவை பெம்ரோ நுண் சிம்புவினூடே செலுத்தி வரும் அதிர்வுகள் ஓம் சக்தி எனப் பெயரிடப்பட்டு, உலகம் பூராவும் பாவனையில் இருக்கும்.2450 இல் ஓம் சக்தி அட்ரோ நுண் சிம்புகள் ஒரு தலைமுடி அளவிலும் சிறியதாக இருக்கும்.இச்சிம்புகள் எங்கும் இலவசமாகக் கிடைக்கும்.மனிதன் பிறக்கும்போதே இச்சிம்புகள் குழந்தையின் உடலில் பொருத்தப் பட்டுவிடும்.இந்த ஓம் சக்தியின் உதவியோடு உலகம் எங்கும் இயந்திர மனிதர்கள் உட்பட எல்லா விதமான உபகரணங்களும் இயங்கிக்கொண்டு இருக்கும்.இக்காலத்தில் எந்த விதமான சக்தியாக்க இயந்திரங்களோ அல்லது மின் விநியோகச் சுற்றுக்களோ இருக்க மாட்டாது.தற்போது நிலவும் எரிபொருள் பற்றக்குறை என்பது வரும் காலத்தில் இருக்கவே இருக்காது.

1. 42 பகலா இரவா உங்கள் விருப்பம்!

பூமியின் மேலே நிலையான சூரிய மறைப்புத் தட்டுகளும், ஒளிரும் செயற்கைச் சந்திரன்களும் உலாவி வரும். நீங்கள் விரும்பியவாறு மறைக்கும் / ஒளிரும் அளவுகள், நேரங்கள், இடங்கள் என்பனவற்றைத் தரையில் இருந்தே கட்டுப்பாடு செய்து உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றி அனுபவிக்கலாம்.
சரி, வருடம் 2500 ௦ ஆகிவிட்டதால் இத்தோடு நிறுத்துவோம் .
இனி, சக்தியையே நம்பி இயங்கும் வாகனம், பொழுது போக்குத் துறைகளின் வளர்ச்சிதனைப் பார்ப்போம்.


2 .௦ 00 வாகனம்- பொழுதுபோக்கு:
2 .01 பழக்கம் மாறவில்லை
கடந்த 200 வருடங்களாக, சகல இயங்கும் வாகனங்களிலும் உட்தகன இயந்திரங்களைப் பாவிப்பதிலும்,அவற்றை மேலும், மேலும் அதிசக்தி உள்ளவைகளாக மாற்றுவதிலும் தான் மனிதன் விடா முயற்சியில் ஈடுபட்டு இருந்தான்.ஆனால் புதிய, புதிய சக்திரூபக் கண்டுபிடிப்புகளினால் மனிதன் படிப்படியாக வித்தியாசமான இயந்திர நுட்பங்களினுள் புகுந்துவிட்டான்.

2 .10 யுகம் 1 : 2010 - 2050 - மின்சாரம்:

முதல் பத்து வருடங்களில் வாகனங்களில் எதனோல் கலந்த பெட்ரோலும், பின்னர் பெற்றோல்/ மின்சாரம் கலந்த இயக்கிகளும், அதன் பின்னர் முழு அளவு மின்சார தானுந்திகளும் (automovers) பாவனைக்கு வரும்.இந்தத் தானுந்திகள் மிகவும் சிறிய அளவினதாக, ஆனால் மிகவும் பலமுள்ளதாகவும் இருக்கும்.இவற்றின் கூரையில் நனோ சூரிய மின் கலங்கள் பொருத்தப்பட்டு வேண்டிய அளவு சக்தியை சூரியனிலிருந்து பெற்றுக்கொள்ளும்.அப்போது, இதனால் எரிபொருள் செலவு என்பது மின்கலன்களின் பராமரிப்புக்குத் தேவையான அளவு மாத்திரமே.

2020 இலிருந்து ஐதரசன் எரிபொருள் இன்னும் மிகக்குறைந்த செலவில் சக்தி கூடிய உட்தகன இயந்திரங்களை இயக்குவதற்குப் பாவிக்கப்படும். இக்காலத்தில்,நுண்ணறிவில் தானியங்கும் தானுந்தி பாவனைக்கு வரும். இவ்வாகனக் கணனியின் திரையில்,நீங்கள் சென்றடைய வேண்டிய இடத்து விலாசத்தை இட்டதுமே,இதன் உணர்விகள், சுற்றாடலில் காணப்படும் வாகனங்கள், தடைகள் எல்லாவற்றையும் கண்காணித்து உரிய இடத்திற்கு விபத்தே இல்லாமல் அழைத்துச் செல்லும்.நீங்கள் இந்தப் பயணத்தின் போது ஒரு தூக்கமே போடலாம்.இப்போது, வாகன விபத்து என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் தானுந்தியின் வேகம் 200 கி.மீ.வரையே இருக்கும்.
ஆனால், 2020 இலில் வீதிகளின் நெரிசல் காரணமாக விண்வழியே செல்லக்கூடிய வான் கார் (aircar) தனிப்பட்ட உபயோகத்திற்காக கண்டுபிடிக்கப்படும்.இவ்வண்டி, 300 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியதாய் இருந்தாலும்,அதன் பாரிய (ஆனால் மடிக்கக்கூடிய) சிறகுகளும், அது மேல் ஏறுவதற்குத் தேவையான நீண்ட ஓடுபாதையும் மனிதனுக்குச் சங்கடத்தை உண்டுபண்ணும்.சிறகுகள் மடிக்கப்பட்ட நிலையில் வீட்டிலிருந்து ஒரு ஓடுபாதை நோக்கிப் போகவேண்டி இருக்கும்.

இதனால், 2030 இல் வான் ஷூட்டர் (airshooter) எனப்படும் வாகனம் ஒரு புதிய அத்தியாயத்தினுட்புகும்.இது, உயர்நுட்ப ஐதரசன் மின்கலங்களினால் இயக்கப்படும்.சின்னஞ்சிறு ஜெட் இயந்திரங்கள் அடங்கிய,சிறகுகள் இல்லாத 2 - 5 இருக்கைகளைக் கொண்டது.வீட்டில் இருந்தபடியே மேலெழுந்து பறக்கலாம்.திரும்பவும் வீட்டின் முன்பாகவே வந்து இறங்கலாம்.முக்கியமாக, இதன் ஜெட் இயந்திரங்கள் காற்றினை மட்டும்தான் மிக அழுத்தத்துடன் பின்னே தள்ளும்.கொடிய கரியமில வாயுவை அல்ல.வான் ஷூட்டர், எதிர்பாராத விபத்து ஏற்ட்பட்டால் உபயோகிக்க வான் குடைகளைக் கொண்டிருக்கும்.

2035 இல் சமநிலை தழம்பியதால் ஏற்றபட்ட ஒரு சில விபத்துகளின் பின்னர், ஜி-பலன்சர் எனப்படும் மின்பொறி முறை புவியீர்ப்பு தள நிறுத்திக் கருவி கண்டுபிடிக்கப்படும்.இதனால், வாகனம் ஒருபக்கம் சரிவது என்பது பழைய கதையாகி, விபத்து என்பதே இல்லாமல் போய்விடும்.
மேலும்,இவை தானிங்கு சாதனங்களைக் கொண்ண்டிருக்கும் என்பது சொல்லவே தேவை இல்லை.

2 .11 3D - மாய மெய்மை - பிரயாணங்கள் குறையும்:

2020இல் முப்பரிமாண மாய மெய்மைத் தொழில் நுட்பம் ஆரம்பக்கட்டத்தில் இருக்கும்.தற்போது தொலைபேசியில் குரல் கேட்டுக் கதைப்பது போல,இக்காலத்தில் உங்கள் உறவினர், நண்பர்கள், ஊழியர்களுடன் நேருக்கு நேர், முகத்தோடு முகம் பார்த்துக் கதைக்கலாம். ஆரம்பத்தில் முப்பரிமாண உருவம் திரையில் மட்டும்தான் தெரியும்; காலப்போக்கில் உங்கள் முன்பாகவே முழு உருவத்தின் மாயத் தோற்றம் காணப்படும்.இவர்களுடன் வேண்டியமட்டும் கதைக்கலாம்.ஆனால், விருந்து மட்டும் தற்சமயம் வைக்க இயலாது. அதுவும் நடக்கும் இன்னும் 200 வருடங்களில்!இக்காரணத்தினால் மனிதன் பிரயாணம் செய்வது குறைந்து விடும்.


2 .12 இயந்திர மனிதர் - பிரயாணங்கள் இன்னும் குறையும்
மேலும்,புதிய பரம்பரை இயந்திர மனிதர் 2040 களில் பலவிதமான மனித கருமங்களைச் செய்யத் தொடங்கிவிடுவர்.அத்தோடு 2050 இல் 500 கி.மீ. வேகத்தில் தானே இயங்ககூடிய வான்ஷூட்டர்கள் வந்துவிட்டதால் மனிதன் பிரயாணம் செய்வது மேலும் குறையும்.

2 .20 யுகம் 2 : 2050 - 2200 - நன்சாரம்
தற்போது, என் கதிர்களின் கண்டுபிடிப்பினால் சக்தியானது நேரடியாகவே வான்வெளி உணர்பொறியில் இருந்து பெறப்படுவதால்,இன்னும் சிறந்த தொழில்நுட்பத்தோடு கூடிய 2000 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய வான்ஜெட்டுகள்(airjets) பாவனைக்கு வரும்.சகல பண்டப் போக்குவரத்து யாவும் கடல் மார்க்கமாக 500 கி.மீ. வேக,தானியங்கிக் கடல் கப்பல்கள் மூலம் நடத்தப்படும்.ஆகவே,பயணம் செய்ய வேண்டிய அவசியம் என்னும் குறையும்.

2 .30 யுகம் 3: 2200 - 2350 - கோகோன்
கோகோன் சக்தி காலத்தில் பிரயாணத் துறையில் பிரமாண்டமான வளர்ச்சி ஏற்பட்டு அதிகூடிய தொழில்நுட்ப சாதனங்களோடு கூடிய படுவேக(3000 கி.மீ./ம) ஜெட்டுகள் பாவனைக்கு வந்துவிடும்.அப்போது எந்தவொரு நில-நீர் வாகனங்களும் இருக்காது.ஆதலால், வான் என்ற பதமும் வாகனப் பெயரின் முன் பாவிப்பது இல்லாமல் போய்விடும்.

2 .31 3 D - உலகப்படம் - ஏன் பயணம்?
உலகின் எந்த மூலை, முடுக்குகள் எதுவானாலும் சகல விதமான துல்லிய விபரங்களுடனும், நீங்கள் விரும்பிய அளவில் நீள. அகல, உயரங்களோடு, முழு உருவமாகவே உங்கள் முன்னால் இருக்கும்போது அவற்றை நேரில் போய்ப் பார்க்க வேண்டும் என்று யார் விரும்புவார்?

2 .32 உலகமே உன் காலடியில்! -இன்னுமா பயணம்?


2200 இல், உங்களுக்குத் தேவையான, நீங்கள் போக விரும்பும் அதியசய உலகம்,பூந்தோட்டம்,கடற்கரை,பவளப்பாறை மற்றும் எந்தப் பொழுதுபோக்கு இடங்கலாயினும் சரி,மாய மெய்மை நுட்பத்தினால் உங்கள் வீட்ட்டின் உள்ளேயே உருவாக்கிவிடலாம்.நம்பினால் நம்புங்கள், இதற்கு உங்களுக்கு ஒரு செலவும் இருக்காது,ஏக்கர் கணக்கில் நிலமும் தேவை இல்லை. எல்லாம் உங்கள் மூளைக்குள்ளேயே கட்டப்பட்டு அவற்றின் உண்மையான,அதே ஆனந்த உணர்ச்சியினை அனுபவிப்பீர்கள். இன்னுமா பயணம் தேவை?

2350இல் superjet களின் வேகம் 5000 கி.மீ.ஐத் தாண்டிவிடும்.ஆனால் பயணம் செய்வோர் தொகைதான் குறைந்துவிடும்.

2 .40 யுகம் 4: 2350 - 2500 - - எல்லாம் ஓம் மயம்
இவ்வளவு முன்னேற்றத்தின் பின்பும்,மன்னிக்கவும்,மனிதன் இன்னமும் குண்டுசட்டிக்குள்தான் குதிரை ஒட்டிக் கொண்டிருப்பது தெரியவரும். இன்னமும் ஒருவட்டத்தினுள் இருந்தபடி பிரயாணம் செய்வதற்கு ஒரு வண்டியைத் தான் எப்பவும் உருவாக்கத் துடித்துக்கொண்டு இருக்கிறான். பிரயாணம் ஒன்றைச் செய்வதற்கு உண்மையில் ஒரு வாகனம் தேவையா?வாகனமே இல்லாமல் பயணிக்க முடியாதா? முடியும்! மேலே செல்லுங்கள்!


2 .41 சக்திச் சொட்டுத் தத்துவம் ( Quantum Theory ) - எல்லாம் சக்தி மயம்
மனிதனின் அறிவு ஞானம்,இருண்ட,குறுகிய கோணத்திலிருந்து வெளிப்பட்டு, சக்திச் சொட்டுத் தத்துவம் பற்றிய சிந்தனை தலை தூக்கத் தொடங்கியது.இந்தப் பிரபஞ்சத்திலே உள்ள எந்த, எல்லா உயிர்கள், பொருட்கள், செடிகள், கொடிகள், சூரியர், சந்திரர், வெள்ளிகள் கிரகங்கள், வெளிமண்டலங்கள், அணுக்கள், மூலக்கூறுகள், சிறிதோ, பெரிதோ எல்லாம் ஒரு முடிவே இல்லாத பலவித அதிர்வுகளைக் கொண்ட சக்திகளேயாகும்.இம்மாபெரும் சக்தி எப்போதும் எம் கண்முன்னே இருந்தும்,மனிதனின் சிற்றறிவும், குறிகிய மனப்பாங்கும், தான் நினைப்பதே சரி என்ற அகங்காரமும் இவ்வளவு காலமும் இச்சக்தியின் மகத்துவத்தை அறியக் குறுக்கே நின்றன.


2400 இல், ஒவ்வொரு பொருட்களுக்குமான சக்தியின் அளவு மற்றும் அதன் அதிர்வு எண்ணிக்கை ஆகியவற்றைத் துல்லியமாகப் பகுப்பறிந்து, அந்தந்தப் பொருட்களை உருவாக்குவதற்கான வழிமுறைகளைக் கொண்ட பெம்ரோ சிருஷ்டி நுண் சிம்பு தயாரிக்கப்படும்.இந்த நுண் சிம்புவின் உதவியால் எந்த ஒரு பொருளையும், தற்போது கடதாசியில் பிரதி எடுப்பதுபோல், முழு உருவத்தையும், முப்பரிமாணத்தில் பிரதி பண்ண முடியும்.அதாவது, நீங்கள் பேருந்து ஒன்றைப் பிரதிபண்ண வேண்டுமென்றால், பேருந்துக்கான மூலபொருட்கள் (உபரிப் பாகங்கள் அல்ல) கொண்ட அறையினூடே அந்தப் பேருந்துவைச் செலுத்தி எடுத்தால் போதும், நுண் சிம்பு தன் வேலையைச் செய்து, புதிய பேருந்து அறையின் அடுத்த பக்கத்தால் வெளிவரும். 2450இல் இப்படி எதுவும் பிரதி பண்ணலாம்.இனிப் பொருட்கள் வாங்க அங்கும் இங்கும் அலையவே தேவை இல்லை.பயணங்கள் என்பது கணிசமான அளவு குறைந்து விடும்.

2 .42 சிந்தனாசக்தி ( Thought Energy ) - பயணமே வேண்டாம்!
2450இல் சிந்தனாசக்தி பற்றிய புரிந்துணர்வு உண்டாகும்.சிந்தனை என்பது ஒரு தூய சக்தி வடிவமே.இச்சக்தியானது அதிவேக அதிர்வுகளைக் கொண்டது.இது மனத்திற் தங்கியிருக்கிறது.நீங்கள் ஒரு பொருளை, அதாவது வீடு, கார், விலைமிக்க தொலைக்காட்சி அல்லது அழுக்குப் படர்ந்த சாக்கடை எதையும் பார்த்தாலும் அவை யாவும் பலவிதமான சேர்க்கையிலான, விதவிதமான அதிர்வுகளைக் கொண்ட சக்தியின் ரூபங்களே. ஒரு மனிதன் தன் குறைந்த ஐந்து அறிவினைக் கொண்டு, அவனின் பார்வையில், அவனின் புலன்களுக்கு எட்டிய வரையில் ஒன்றைப் பார்த்து அது 'இன்னது', 'இருக்கிறது' என்றுதான் முடிவு செய்வான். அதனால், அவனுடை புலன்களுக்கு அப்பாற்பட்ட,பல பரிமாணமுள்ள வேறுபல பொருட்கள் இருந்தும்,அவனுடைய கண்களுக்குத் தெரியவில்லை என்ற காரணத்திற்காக, அந்தப் பொருட்கள் இல்லை என்று ஆகிவிடுமா? மனிதனுக்குத் தெரிந்த நாலு பரிமாணங்களாகிய நீளம், அகலம், உயரம், நேரம் (அல்லது வெளி) ஆகியவை எதையும் முன்பக்கமாகத்தான் நகர்ந்துகொண்டு இருக்கின்றன என்ற மயக்கத்தில் அவன் இருகின்றான்.ஆனால் அவை பின்னோக்கியும் நகரலாம்.

2480 இல் இந்த மயக்கத்தில் இருந்து மனிதன் விடுபட்டு, சிந்தனாசக்தி பற்றிய முற்றுணர்வு தரும் ஓர் ஆறாவது அறிவினைப் பெறுவான்.


2 .43 சிந்தனாசக்தி - பொருளைப் பிரதி எடுக்கலாம்
தற்சமயம்,உதாரணமாக, கார் ஒன்றைச் செய்வதற்கு பல சக்திகள் ஒன்றுசேர்ந்து தொழிற்பட வேண்டியிருக்கிறது. முதலில் சிந்தனைச் சக்தியைத் தொடர்ந்து வடிவமைப்பு, வரைபடம், மூலப்பொருட்கள் பென்சில், பேப்பரிலிருந்து மேசை, கணணி, மனிதர், இரும்பு, அலுமினியம், இயந்திரம், ஆணி, தொழிற்சாலை அது, இது என்று பலவிதமான, வித்தியாசமான சக்திகளின் ஒட்டுமொத்த மாற்றமே இறுதியில் கார் என்ற சக்தியாக வெளிவருகிறது. 2450 இல் மனிதன் இந்தச் சிந்தனாசக்தியைப் பாவித்து,சிக்கல்மிக்க, நீண்ட செய்முறைகள் இல்லாமல், நினைத்த உடனேயே விரும்பியதை உருவாக்கும் ஆற்றலைப் பெறுவான். அதுமட்டுமல்ல,சமய முனிவர்களைப்போல் முக்காலமும் உணர்ந்து ஒரு பொருளைப் பார்க்குமிடத்து, அப்பொருளில் உள்ள பொருட்கள் இதற்கு முன்பு எப்படி இருந்தது என்றும், பிற்காலத்தில் என்னவாக மாறும் என்பதும் அறியக்கூடிய புலனைப் பெறுவான்.


2 .44 சிந்தனாசக்தி -
இங்கே மறைந்து அங்கே தோன்றலாம்
அவ்வேளை, இச்சக்தியின் ஒளியிலும்விட அதிவேக அலைகளின் அதிர்வுகளைக் கண்காணித்து, எந்த ஒரு பொருளையோ அல்லது மனிதனையோ, சட நிலையிலிருந்து சக்தி நிலைக்கு மாற்றித் திரும்பவும் இன்னொரு இடத்தில் சட நிலைக்கு மாற்றும் DARA எனப்படும் செப்ரோ நுண் சிம்பு நுட்பத்தை கண்டுபிடிப்பான்.இதன்மூலம், இங்கே மறைந்து அங்கே தோன்றும் ஆற்றல் மனிதனுக்கு இயல்பாகவே வந்துவிடும்.இந்த நுட்பத்தினால், பிரயாணத் தூரம், நேரம் என்பன ஒரு கேலிக்கதையாய் விடும்.ஒருவர், இங்கே மறைந்து அண்டத்தின் எந்த இடத்திலும் கணப்பொழுதில் தோன்றிவிடலாம்.
சரி, இத்தோடு நிறுத்துவோம்.
இனி அடுத்தபகுதிகளில்மேலும் வினோதமான விடயங்களைப் பார்ப்போம்.
[மேற்படி கட்டுரை 2011 ம் ஆண்டு தீபத்தில் வெளியானது,மறு வெளியீடு செய்யப்படுகிறது.]technology tamil

…………………………..அவுஸ்த்திரேலியாவிலிருந்து தொடரும்.....