சிரிக்கச் சில நிமிடம்...



தங்கமான வீடு 

மனிதன் 1 :உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா?

மனிதன் 2 :ஓட்டுவீடு, அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... 'தங்க' வீடெல்லாம் கிடையாது.

வியாதி 

ஆசிரியர்: "நான் பாடம் நடத்தும்போது அவன் ஏன்டா வெளியில போறான்...?"

 மாணவன்: "அவனுக்குத் தூக்கத்துல நடக்கற வியாதி இருக்கு சார்...!"

மகா கஞ்சன் 

மகன் : கஞ்சன் அப்படின்னா என்னப்பா?

தந்தை : கண்ணிலே காசையே காட்டாத வந்தாண்டா கஞ்சன்

மகன் : காசுன்னா என்னப்பா???!!!!

தழும்புகள் 

சீடன்: "சுவாமி! நீங்கள் திருமணமான பின் தான் துறவி ஆனீர்களா?"

சுவாமி: "சீடனே! எப்படிக் கண்டுபிடித்தாய்?"

சீடன்: "உடம்பெல்லாம் காயம்பட்ட தழும்புகள் நிறையத் தெரியுதே!"

ஏழுமலை 

ஆசிரியர்:இது யாரோட கையெழுத்து?"/\/\/\/\/\/\/\"

பையன:என் அப்பாவோட கையெழுத்து ?

ஆசிரியர் :உன் அப்பா பெயர் என்ன ?

பையன் :ஏழுமலை..

மரியாதை 

தந்தை: "அப்பாங்கற மரியாதை இல்லாம என் முன்னாடியே 'தண்ணி' அடிக்கிறியா?"

மகன்: "நான் உனக்குப் பின்னாலதான் நின்னு குடிச்சிட்டிருந்தேன், நீதான் படார்னு திரும்பிட்ட!"

தேவாங்கு 

Man 1:எதுக்குடா அவன அடிச்சே”

man2:“ஆறு வருஷத்துக்கு முன்ன என்ன தேவாங்குன்னு

சொன்னான்”

... Man1:“அதுக்கு இப்போ ஏன் அடிக்கிறே?”

Man2:“நான் நேத்து தான தேவாங்க பாத்தேன்!”.

Man1:!!!!!!!!!!!!!!!!!!!!!!!!?????????

துடைப்பம் 

அவன்: என்னது, இன்னிக்கு வீட்டுக்குப் போயி உன் பொண்டாட்டிக் கிட்டே தைரியமா எதிர்த்துப் பேசப்போறியா? எப்ப இருந்துடா இப்படி மாறினே.

இவன்: காலையில நான் துடைப்பத்தை ஒளிச்சி வெச்சதிலிருந்து.

பத்துத்தலை 

வேலு: ஒரு தலைக்கு கட்டிங் செஞ்சா பத்து தலைக்கு இலவசம்னு அந்த சலூன்ல போட்டிருந்தாங்களே போய்ப்பாத்தியா?

பாலு: பத்து தலையும் ஒரே உடம்புல இருக்கணுமாம்

 புத்திசாலி 

போலீஸ் : உனக்கு நாளை காலை 5 மணிக்கு தூக்கு தண்டனை

கைதி : ஹ ஹ ஹ

போலீஸ் : ஏன் சிரிக்கிற.?

கைதி : ஐயோ ஐயோ நான் எழுந்திருகிறதே 8 மணிக்கு தான்.!

திருட்டு 

நோயாளி: "உங்களுக்கு ஏதாவது பணப் பிரச்சினையா டாக்டர்?"

டாக்டர்: "ஆமா.. ஏன் கேட்கிறீங்க?"

நோயாளி: "என்னோட சொத்தைப் பல்லை எடுக்கச் சொன்னா, நைஸா தங்கப் பல்லை எடுத்துட்டீங்களே!"

அவன்தான் 

தேவி: நம்ப டைப்பிஸ்டை நிமிர்ந்து பார்க்காதவன் புதுசா வந்த கிளார்க்தான்!

மாலதி: அதிசயமாயிருக்கே!

தேவி: காரணம். அவன்தான் அவ புருஷன்.

பாப்பா 

காதலன்: டார்லிங்! நம்ம மேரேஜ் இப்ப வேணாம். ஆடி போய் ஆவணி வந்தா…நான் ‘டாப்’பா வந்துருவேன்!

காதலி: ம்ஹூம்..அதுக்குள்ளே நமக்கு ‘பாப்பா’ வந்திடும் டியர்…!

தேடுதல் 

பாலு;இன்ஸ்பெக்டர் இண்டர்நெட் பைத்தியம் போல..

வேலு :எதை வெச்சு சொல்றே?

பாலு:கொலைகாரனை கூகுள் சர்ச்-ல போய்த் தேடுறாரே..! 

குப்பை 

வாத்தியார்: தென்னை மரத்தில இருந்து 6 இலையும், பனை இருந்து 6 இலையும், கீழே விழுது, ரெண்டையும் கூட்டினால் என்ன வரும்?

மாணவன்: குப்பை தான் சார்.

சுத்துதே 

"என்னடா விட்டத்தையே வெறிச்சுப் பார்த்துக்கிட்டிருக்கே?"

"இரண்டு இறக்கை உள்ள பறவை எல்லாம் வானத்தைச் சுத்தி வருது! இந்த ஃபேனுக்கு மூணு இறக்கை இருந்தும் வீட்டுக்குள்ளேயே சுத்துதே!"

 பரிகாரம் 

ஜோதிடர் : கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும்

கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க..................

கணவன் : இதுக்கு பரிகாரமே இல்லையா, ஜோதிடரே ...........

தொகுப்பு:செ.மனுவேந்தன் 

0 comments:

Post a Comment