தமிழரும், குலதெய்வங்களும்

 

தமிழ் மக்கள் குலதெய்வங்களை விரும்புவது ஏன்?

 


ஆரிய முற்றுகைக்கு முன்பிருந்தே, இந்து வெளி நாகரிக காலம் தொடங்கி தமிழ் மக்கள் தங்களுக்கென்று சொந்தமான பலவிதமான தெய்வங்களைத் தங்கள், தங்கள் இரசனைகளுக்குத் தகுந்தால்போல் உருவம் கொடுத்து வழிபட்டு வந்துள்ளனர். இந்த தெய்வங்களின் வடிவங்களும், நோக்கங்களும் காலத்திற்கேற்ப மாற்றம் அடைத்துக்கொண்டு வந்திருக்கின்றன.

 

 காலம், காலமாக, தமிழர், முக்கியமாக கிராம வாசிகள், அவரவர் ஊருக்குத் தேவையான குலதெய்வம் என்றும், காவல் தெய்வம் என்றும் வடிவமைத்து, ஊரில் உள்ளோர் எல்லோரும் ஒன்று சேர்ந்து விழா எடுத்து கொண்டாடி மகிழ்வர்.

 

முருகன் என்றால் தமிழ் கடவுள் என்றும், அய்யனார் ஊர் காவல் தெய்வம் என்றும், மாரியம்மன் கொடிய நோய்களை தடுப்பவர் என்றும், கருப்புசாமி தேவர்களுக்கே காவலன் என்றும் போற்றி வழிபடுவர். மேலும், முனீஸ்வரன், இடும்பன், கண்ணகி, சுடலை மாடன் என்று எல்லாம் ஊர்களுக்கான சிறுதெய்வங்களில் ஒரு சிலவே.

 

இவற்றைவிட பெருதெய்வங்களும், அவற்றைச் சார்ந்தவைகளான சிவன், விஷ்ணு, பராசக்தி, மீனாட்சி, அம்மன் போன்ற கடவுள்களும் கிராமம், நகரம் எங்கும் வழிபடப் படுகின்றனர்..

 

இந்தக் கடவுள்மார்களின் உருவம், முகம் , தோற்றம் எல்லாம் தமிழர்களின் சாயலில் ஆக்கப்பட்டிருந்ததனால்தான் அவர்கள் எல்லாம் 'நம்ம கடவுள்' என்ற ஒரு ஆத்மாத்தமான உணர்வு ஏற்பட்டது.

 

ஆண் தெய்வங்களுக்கு ஒரு வேட்டி கட்டி, தேவையாயின் ஒரு கொடுக்குக் கட்டி, குடுமி வைத்து, மேலுடை இன்றி, ஒரு முறுக்கு மீசையையும் வைத்து, திருநீற்றுக் குறியுடன், சந்தணப் பொட்டினையும் வைத்துச்  சிலை அமைத்து விட்டால், கிராமத்தில் ஆலமரத்தின் கீழ் இருந்து தீர்ப்பு சொல்லும் நம்ம நாட்டாண்மை போலவே அவர்களுக்குத் தென்பட்டு மரியாதை ஏற்படும்.

 

பெண் தெய்வங்களுக்கு, மிகவும் அழகிய சேலை உடுத்து, கண் கவரும் மேலாடைகள் அணிந்து, பெண்கள் விரும்பும் அனைத்து நகைகளையும் உடம்பெல்லாம் சாத்தி, 'இலக்சுமிகரமான' ஒரு தோற்றத்தில் சிலை அமைத்தால் எவருக்கும் பார்த்தால் கை எடுத்துக் கும்பிடவே தோன்றும்.

 

அத்தோடு, நம்மை நம் தெய்வங்கள் எந்த எதிரிகளில் இருந்தும், என்ன கஷடங்களில் இருந்தும் காப்பாற்றுவார்கள் என்பதற்காக, தெய்வங்களின் கைகளில் ஆயுதங்களையும் கொடுத்து வைத்துள்ளதால், இத்தெய்வங்களை வணங்கினால் நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என்று மனோதத்துவ ரீதியாக திருப்திப்படுகிறார்கள்.

 

(வேற்று மதக் கடவுள்கள் தங்களைக் காப்பாற்றச் சொல்லி, தங்களை வணக்காதவர்களை கொன்றொழிக்குமாறு மக்களை ஆயுதம் ஏந்தக் கூறியுள்ளார்கள் என்பதைக் கவனிக்கவும்)

 

அத்தோடு, தமிழ் மக்கள் கடவுளுக்குப் பலம் கூட்டுவதாக எண்ணி பல தலைகள், பலகைகளையும் கொடுத்து தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளனர்.

 

போதாதற்கு, எங்கள்  கடவுள்மார் செய்த அற்புதங்கள், திருவிளையாடல்கள் எல்லாம் நமக்கு தெரிந்த, போய்வந்த, புகழ் பெற்ற  'நம்ம' ஊர்களில் நடைபெற்று இருப்பதை அறியும்போது நம்ம கடவுள், நம்முடனேயே, நமது  பக்கத்திலேயே எப்பொழுதும் இருக்கிறார், அருள் புரிகிறார்  என்ற உணர்வு இவர்களுக்கு ஏற்படுகிறது.

 

ஆதலால், இவர்கள் புறச் சமயங்களில் இலகுவில் நாட்டம்  செலுத்த முடியவில்லை.

 

5-6 ஆயிரம் தூரத்தில் உள்ள எங்கோ ஒரு சில ஊர்களில், ஆயிரம்,ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்ததாகக் கூறப்பட்ட ஒரு சிலரைக் கடவுளின் பிரதிநிதிகள் என்று சொல்ல, உலகம் என்றாலே அங்குள்ள ஒரு நதியைச் சுற்றியுள்ள சில ஊர்களை மட்டும்தான் கொண்டது என்று விளங்கி வைத்திருந்த வேறு சிலரால், அந்த ஊர்களில் உள்ளவர்களுக்காகவே, அவர்களை பற்றி மட்டுமே எழுதப்பட்ட சில நூல்களை வைத்துக்கொண்டு, தமிழ் மக்களுக்கு வாய்க்குள் நுழையமுடியாத பெயர்களை உச்சரிக்கும்படி சொன்னால் எவருக்குத்தான் ஒரு பிடிப்பு வரும்?

 

மதம் மாறிய தமிழ் மக்களும் இருந்தார்கள். என்னமாதிரி, என்ன காரணங்களுக்காக அவர்கள் எல்லோரும் பிடிக்கப்பட்டார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும்.

 

அவர்களுக்கு பூமியின் இந்தப் பகுதியில் தமிழ் மக்கள் இருந்தார்கள் என்பதே தெரியாது (இன்னமும்) தான்!.

 

அந்த புத்தகங்களில் இரண்டொரு தமிழ் பெயர்கள் பொன்னைய்யா, கந்தையா என்றும். தமிழ் ஊர்கள் திருவூர், மதுரை என்று வந்திருந்தால் என்றாலும் ஒரு பிடிப்பு வந்திருக்கும். அவர்களின் உருவமோ, உடைகளோ நம்மைப் போல ஒன்றும் இல்லாத போது எப்படித்தான் தமிழ் மக்களுக்கு ஒரு பற்று வரும்?

 

அதனால்தான் நம்மவர் நம்மளை ஒத்த கடவுள்களை நம்ம குலதெய்வங்களாக ஏற்றுக்கொண்டனர்.

 

புறச் சமயத்தவர்கள் ஒரே ஒரு கடவுளை மட்டுமே வணங்க வேண்டும் என்றும், ஒரே ஒரு தூதுவர் சொன்னதையே மதிக்கவேண்டும் என்றும் மிகவும் கண்டிப்பான கட்டளை இட்டு, தவறுவோருக்கு மரண தண்டனை வரை கொடுத்துவிடுவார்கள். அப்படி சொல்லப்பட்டுள்ளவை சரியோ, பிழையோ அல்லது, உண்மையோ, பொய்யோ அல்லது ஒத்துக்கொள்ளப்படக்கூடியவையோ அல்லது ஒதுக்கப்படவேண்டியவையோ என்று அறிவு பூர்வமாகச் சிந்தித்துப் பார்த்து விலகி இருக்க அனுமதி இல்லை. எது உண்மையான தூதுவர் என்ற பிரச்சனையின் நிமித்தம் சமயங்களுக்கிடையில் எதிர் வாதங்கள் எழுந்துகொண்டு இருக்கும்.

 

ஆனால், நம் சமயத்தில் எவரையும் வணங்கலாம், எப்படியும் வணங்கலாம் என்று பூரண சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

 

ஆனாலும், இந்தச் சுதந்திரம் மக்களைப் பிழையான வழிகளுக்கும் திரும்பத் தூண்டுகின்றது.

 

நினைத்தவர்கள் எல்லோருமே சுவாமிகளாகின்றனர்; கடவுளின் அவதாரம் என்று தங்களை அறிவித்துக் கொள்ளுகிறார்கள். பலவிதமான வேறு, வேறு பெயர்களோடு மனித சுவாமிகள் புதிது, புதிதாக முளைத்துக் கொண்டே இருக்கின்றார்கள்.  இவர்கள் தெய்வ விரோதக் செயல்களில் ஈடுபடுகிறார்கள். பல முட்டாள் கூட்டத்தினரைத் தம் வயப்படுத்தி, நமப வைத்து ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றார்கள்.

 

ஆதலால்தான் சொல்கிறேன், சைவ சமயம் நம்பிக்கையுள்ள ஒன்றாக தொடர்ந்து இருக்க வேண்டும் என்றால் குலதெய்வங்களோடு நிறுத்தவேண்டும், பெரும் தெய்வங்களை மதிக்கவேண்டும். மேலும், மேலும் புதிய கடவுள்கள் அவசியமில்லை. ஏற்கனவே உள்ள தெய்வங்கள் போதும்.

 

புசித்து மலம்கழிக்கும்  பாவப்பட்ட மனித தெய்வங்கள் ஒன்றும் அறவே தேவை இல்லை.

எழுத்து:செல்வதுரை சந்திரகாசன்

0 comments:

Post a Comment