சிரிக்க சில நிமிடம்..... சில நிமிடம்.

 

01.

தந்தை : டேய்! எப்பவுமே நம்மளைவிட வயசுல பெரியவங்ககிட்ட மரியாதையா நடந்துக்கணும் புரியுதா?

மகன் : ஏம்ப்பா! அம்மா உங்களைவிட வயசுல பெரியவங்களா?

 

02.

பையன் : அம்மா ஸ்கூலில் இன்னக்கி ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி நடந்துச்சிம்மா.

அம்மா : நல்ல செய்திய மொதல்ல சொல்லு.

பையன் : ஸ்கூல் தீ பிடிச்சி எறிஞ்சி போச்சிம்மா

அம்மா : கெட்ட செய்தி

பையன் : வாத்தியானுங்க எல்லாம் தப்பிச்சிட்டானுங்க

 

03.

போலீஸ் : பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?

டிரைவர் : அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.

 

04.

நோயாளி : நீங்க ஒரு பல் டாக்டரா?

டாக்டர் : இல்லை... முப்பதிரெண்டு பல்லுக்கும் டாக்டர்....

 

05.

வந்தவர் : என் மனைவிக்குவீசிங்ப்ராப்ளம் டாக்டர்

டாக்டர் : அதுக்காக ஏன் இவ்வளவு கவலைப்படறீங்க

வந்தவர் : பாத்திரங்களைவீசிஎறியறாளே என் மேல

டாக்டர் : ???

 

06.

ஒருத்தி : ஆபீஸ்ல நடந்த பார்ட்டில என்னோட வீட்டுக்காரர் சின்ன பிள்ளையாட்டம், புது சட்டைல காப்பிய கொட்டி கறையாக்கி அதோடு வீட்டுக்கு வந்தாரு!

மற்றொருத்தி : அடக் கடவுளே! நல்லா அடிச்சு துவைச்சியா?

ஒருத்தி : பின்னே.. விடுவேனா? ஆள் மூச்சு பேச்சில்லாம ஆஸ்பத்திரில கிடக்குறாருன்னா பார்த்துக்கோயேன்!

 

07.

ராமு : பல் ஆஸ்பத்திரிக்கு எப்படிப் போகணும்.

பாபு : சொத்தையோட போகணும்.

 

08.

இராமு : கோபம் வந்துட்டாஎன் மனைவி காளியாயிருவா….

நண்பன் : நீ என்னாவாய்???

இராமு : நான் காலியாயிடுவன்.

 

09.

காதலன் : எப்பவுமே உன்னோட நினைப்பாவே இருக்கு டார்லிங்.

காதலி : இப்போதானே நாம பேசி முடிச்சோம்?

காதலன் : அச்சச்சோ! மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!

 

10.

நண்பன் 1 : டேய் மச்சான் நேத்து உங்க வீட்டுக்கு போய் உன்ன எங்கனு கேட்டேன் , அதுக்கு உங்க அப்பா "அந்த மாடு எங்கயாச்சும் மேய போய் இருக்கும்னு சொன்னாரு " எனக்கு ரொம்ப கஸ்டமா போச்சு டா....

நண்பன் 2 : அது கூட பரவாயில்லை மாப்பிள.... நான் திரும்பி போனதும் உன்னைத் தேடி ஒரு "எருமை" வந்துச்சுனு சொன்னாருடா....

 

11.

இராமு : அந்த டாக்டர் போலி என்று எப்படி கண்டு பிடிச்சீங்க?

நண்பன் : தையல் போடறதுக்கு Tailor கடைக்கு போக சொல்லுறாரு!!

 

12.

பெண் : ஹலோ இது கஸ்டமர் கேர் தானே?? ?

கஸ்டமர் கேர் : ஆமாம் சொல்லுங்க மேடம்

பெண் : என் அஞ்சு வயசு பையன் சிம் கார்டு விழுங்கிட்டான்..

கஸ்டமர் கேர் : அப்படினா டாக்டர் கிட்ட கூட்டி கிட்டு போங்க மேடம்

பெண் : இல்லை சார் அதுல 95 பைசா பேலன்ஸ் இருந்துச்சி. அவன் பேசும்போது காசு போகுமா சார்?

கஸ்டமர் கேர் : ?????

 

13.

ஒருவர் : இந்தச் சின்ன ஆபரேஷனுக்கு 10 ஆயிரம் ரூபாய் பீஸா? சரியான பகல் கொள்ளையாயிருக்கே! டாக்டர் யாரு?

மற்றவர் : தெரியலைங்களே! முகமுடி போட்டிருந்தாரு!

 

14.

ராமு : வரதட்சணை வாங்குவது தப்புன்னு முன்னாடி சொன்னீங்க. இப்ப சரின்னு சொல்றீங்களே, ஏன்?

சோமு : அப்ப என் பொண்ணுக்குக் கல்யாணம். இப்ப என் பையனுக்குக் கல்யாணம்.

 

15.

நோயாளி : டாக்டர், தூரத்துல உள்ளது தெரியமாட்டேங்குது டாக்டர்...

டாக்டர் : அப்படினா பக்கத்துல போயி பாக்க வேண்டியதுதானே.....

 

16.

நீதிபதி : வீட்டுக்கு ரெய்ட் பண்ண வந்தவங்ககிட்ட ""ன்னு உங்க பல்லை காட்டினீங்களாமே?

குற்றவாளி : என் "சொத்தை"யெல்லாம் காட்டச் சொன்னாங்க . . . அதான்.

 

17.

ரேணு : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை.

பானு : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.

ரேணு : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே!

 

18.

சர்தார் : தம்பி நீ என்ன படிச்சிருக்க?

பையன் : பி..

சர்தார் : அடப்பாவி! படிச்சதே ரெண்டு எழுத்து! அதையும் தலை கீழா படிச்சிருக்கே!

 

19.

நபர் 1 : ப்ச் ! வர வர காய்கறி கடையில் நாம் தேடுவது கிடைக்க மாட்டேன் என்கிறது. டாக்டருங்க எதையாவது சொல்லி நம்ம உயிரை வாங்குறாங்க...

நபர் 2 : ஏன் என்ன ஆச்சு?

நபர் 1 : காரட்டை பச்சையா சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது என்று சொல்லிட்டார். நானும் கடை கடையா ஏறி இறங்குறேன். ஒரு கடையில கூட கிடைக்கல...

நபர் 2 : !!!!?????!!!!

 

20.

பாபு : என் மனைவி என்னை லச்சாதிபதி ஆக்கி விட்டாள்!

கோபு : ம்ம். நீ கொடுத்து வைத்தவன்!

பாபு : போடா! நான் கல்யாணத்திற்கு முன் கோடீஸ்வரனாக இருந்தேன்!

தொகுப்பு:செ.மனுவேந்தன்

0 comments:

Post a Comment