மதம் என்றால்......ஆக்கம்:அகிலன் தமிழன்

  தருமம்  போதிக்க வேண்டிய  இன்று
 மனித நேயம் தொலைக்க
 காரணியாக இருப்பது ஏன்?                                 
இது யார் சாபம்?
மனிதனின் சாபமா!
அல்லது
  இறைவனின் சாபமா!


வாழ்வின்  நம்பிக்கை இழந்தவனுக்கு
நம்பிக்கை கொடுத்த மதம்
இன்று
தன் பிள்ளைகளை
 சீர் அழிக்கும்  
மதம் மானது ஏன்?


பசிக்கு  அழுபவர்களை
  எந்த மதமும் கவனிப்பதில்லை 
விழுந்தவனை  உயர்த்தி விட
எந்த மதமும்  முன்  வருவதில்லை 
 தன் வயிறு வளர்த்து
மதத்துக்கு போதை ஊட்டி 
போதையில்  
 மக்களை  அது 
அடிமை படுத்துது.  





0 comments:

Post a Comment