காதல் உறவாக...










உன் காதலுக்கு

காத்திருந்து காக்கவைத்துக் 
காணாமல் போனயடி
காதல் கொண்ட கண்களோ 
கண் இமை மூடாமல் காத்து இருக்க
உன் காதலுக்கு 
நீ பாறை கொண்டு தாக்காதே 
உன்னுடன் வாழ துடிக்கும் மனதை

காதல் உறவாக வேண்டும் 
உறவாடும் இதயமே உன்னருகில் நான் 
உயிர் வாழவே உன் அன்பை கொடுத்து
உன் நிழலில் சேர்க்க வேண்டும் - என்னை 
உன்னுடன் கணம் கூட மாறாமல் குணமோடு 
வாழவே கரம் தர வேண்டும்  
என்னுடன் நிமிடங்களை கொடுத்து 
வலி இன்றி மகிழ்ச்சியை தெளிக்க 
நீ பேசிடவேண்டும் 
உலர்ந்து போகாத அன்பாக இருந்து 
உள்ளமதனை உயர்த்திவிடவேண்டும்.
                       -காலையடி,அகிலன்.

0 comments:

Post a Comment