வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்

ராமு : தீபாவாளி முடிஞ்சு ஒரு மாசமாச்சு. இப்ப உங்க வீட்டுக் கொல்லையில் வெடிச்சத்தம் கேக்குதே?

சோமு : தீபாவாளிக்கு பத்த வச்சதுதான். இப்பதான் திரிபுடிச்சு வெடிக்குது.

.

ராமு : நிலம் எங்க மாமனார் வாங்கித் தந்தது. வீடு கட்டற செலவு பெண்டாட்டி ஆபீஸில் லோன் போட்டு வாங்கியது. வீட்டுல இருக்கிற பொருள் எல்லாம் மச்சான் பாரீன்ல இருந்து அனுப்பி வைச்சது .. .. எப்படி இருக்கு என் வீடு ?

சோமு : ம் .. .. .. உங்க வீடா ?

.

ராமு : எல்லாப் பொண்ணுங்களையும் கூடப் பொறந்த சகோதரியா பாக்குறேன்டா

சோமு : உன் பார்வையப் பார்த்தால் அப்படித் தெரியலியே.....

ராமு : உன் கூடப் பிறந்த சகோதரியா நினச்சுப் பாக்குறேன்டா - மச்சி.

.

ராமு : பொண்ணு கிளி மாதிரி இருப்பாள்னு தரகர் சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...

சோமு : என்னாச்சு?

ராமு : பேசியதையே திரும்பத் திரும்பப் பேசி கழுத்தை அறுக்கிறாளே

.

ராமு : சுருட்டு கம்பெனி கேஷியர் சுகுமாரன் எங்கே ?

சோமு : அவர், பணத்தை சுருட்டிட்டு ஒடிட்டார்

.

ராமு : குடி குடியை கெடுக்கும்ங்றது சரியா போச்சு

சோமு : எப்படி?

ராமு : எனக்கு கல்யாணம் ஆனதுமே என் மனைவி என்னை குடிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டா..

.

சோமு : அந்த பேஷண்ட் ரஜினி ரசிகர்ன்னு நினைக்கிறேன்

ராமு : எப்படிச் சொல்றே?

சோமு : நான் ஊசி போட்டதும் என் வலி தனி வலின்னு சொல்றாரு

.

ராமு : பல மொழிகள்ல இருந்து குரூப் டான்ஸர்களை வரவழைச்சு இருக்கீங்களே .. .. நடனத்துக்கு நடனம் வித்தியாசம் காட்டவா ?

சோமு : ஊஹும் .. .. தொப்புளுக்குத் தொப்புள் வித்தியாசம் காட்டத்தான்

.

ராமு : முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்கிறது சரியாப் போச்சா... எப்படி ?

சோமு : காலையில் மனைவியைத் திட்டினேன், சாயங்காலம் பின்னிட்டா

.

சோமு : எதுக்கு நின்னுக்கிட்டே சாப்பிடுறீங்க.. .?

ராமு : பொண்டாட்டி சம்பாத்தியத்துல உட்கார்ந்து சாப்பிடறான்னு மத்தவங்க கேலி பண்ணக் கூடாதுல்லே..

.

ராமு : 20 வருஷம் முன்னாடி நீங்க எழுதின கதைகளை இப்பப் படிச்சாலும் நீங்களா இப்படி எழுதினீங்கன்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு.

சோமு : உங்களுக்கு ஆச்சரியம் ,,,,, எனக்கு சந்தேகம்.

.

ராமு : ஆபீஸில் உன் மேலே குற்றச்சாட்டு எழுந்துள்ளதா ? என்ன ?

சோமு : நான் எழுந்திருக்கிறதே இல்லைன்னு

.

ராமு : கொடுத்த கடன் என்னாச்சு ? எனக்கு வர வர ஞாபக மறதி ஜாஸ்தியாயிட்டே வருது,,,,,,

சோமு : அப்ப இன்னும் கொஞ்ச நாள் பொறுங்களேன் ,,,,

ராமு : எவ்வளவு நாள் ,,,,?

சோமு : உங்களுக்கு முழுசா மறதி ஏற்படற வரைக்கும்.

.

தொகுப்பு: செ. மனுவேந்தன்


0 comments:

Post a Comment