சிரிக்க சில நிமிடம்

 


01.

சாது: போய் செடிகளுக்கு தண்ணீர் ஊற்று

பணியாளர்: ஏற்கெனவே மழை பெய்து கொண்டிருக்கிறது

சாது: அதனால் என்ன? குடை கொண்டு போ!!

02.

கணவன்:ஏ‌ன்டி.. ந‌ல்ல பையன பெ‌த்து வ‌ச்‌சிரு‌க்கடி.

மனைவி:ஏ‌ங்க இ‌ப்போ தானே ந‌ல்ல ‌விதமா பே‌சி‌க்‌கிட்டு இரு‌ந்‌‌தீ‌ங்க..

கணவன்:ஆமா‌ம் 100‌‌க்கு 90 எடு‌க்க‌ச் சொ‌ல்‌லி அ‌றிவுரை சொ‌ன்னே‌ன்.

மனைவி: அ‌து‌க்கெ‌ன்ன இ‌ப்போ..?

கணவன்:எ‌ன் பா‌க்கெ‌ட்ல வ‌ச்ச 100 ரூபாய காணோ‌ம், வெறு‌ம் 10 ரூபா‌ய் தா‌ன் இரு‌க்கு.

03.

தந்தை: ஏன்டா தூ‌ங்கு‌ம்போது கூட ஸ்கேல ப‌க்க‌த்துல வ‌ச்‌சி‌க்‌கி‌ட்டு தூ‌ங்குற?

மகன்: எ‌ங்க ஆ‌சி‌ரிய‌ர்தா‌ன்பா சொ‌ன்னாரு..

தந்தை:எ‌ன்னா‌ன்னு சொ‌ன்னாரு..

மகன்:அளவோடு தூ‌ங்கு‌ங்க‌ன்ன

04.

பேரன்: தாத்தா இனிமே எது படி‌ச்சாலு‌ம் வே‌‌‌ஸ்‌ட்தா‌ன்.

தாத்தா: ஏ‌ன்டா அ‌ப்படி சொ‌ல்ற?

பேரன்:கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்.

தாத்தா: அப்போ நீ படிச்சா கிடைக்காதா...?

05.

தாய்: ஏன்டா ந‌ல்ல ச‌ட்டைய‌க் ‌கி‌ழி‌ச்‌சி அத துவச்சிக்கிட்டு இருக்க?

மகன்: எங்க சார்தானம்மா சொன்னாரு... கந்தையானாலும் கசக்கிக் கட்டுன்னு. அதான்.

06.

கவுண்டன்: பையன வக்கீலுக்கு படிக்க வச்சது ரொம்பத் தப்பாப் போச்சு

செந்தில்: ஏன்னே அப்படி சொல்றீங்க

கவுண்டன்: படிச்சு முடிச்ச கையோட, சொத்தை பிரிச்சுக் குடுக்கச் சொல்லி எனக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கான்.

07.

ஆசிரியர்: எ‌ன்னடா இது கண‌க்கு நோ‌ட்டுல பா‌ல் கண‌க்கு, ம‌ளிகை கண‌க்கு எ‌‌ல்லா‌ம் எழு‌தி‌க்‌கி‌ட்டு வ‌ந்‌திரு‌க்க?

‌மாணவன்: நீ‌ங்க தானே டீ‌ச்ச‌ர் சொ‌ன்‌னீ‌ங்க!

ஆசிரியர்:நா‌ன் எ‌ப்படா சொ‌ன்னே‌ன்?

மாணவன்:நே‌த்து சாய‌‌ந்‌திர‌ம்.. எ‌ல்லோரு‌ம் ‌வீ‌ட்டு‌க் கண‌க்கை ஒழு‌ங்கா எழு‌தி‌க்‌கி‌ட்டு வா‌ங்க‌‌ன்னு சொ‌ன்‌னீ‌ங்களே மற‌ந்து‌ட்டீ‌ங்களா!

08.

மகன்: அப்பா நம்ம பக்கத்து வீட்டுக்காரருக்கு கணக்கேத் தெரியலப்பா?

தந்தை: ஏன்டா அப்படி சொல்ற?

மகன்: பின்ன என்னப்பா? அவரோட 6வது பொ‌ண்ணுக்கு அஞ்சுன்னு பெயர் வச்சிருக்கார்.

09.

ஆசிரியர்: பாக்டீரியா படம் வரைஞ்சி பாகம் குறிக்க சொன்னேனே நீ ஏன் செய்யல?

மாணவன்: என்ன மிஸ் இப்படி சொல்றீங்கள், பாக்டீரியாவ நான் வரைஞ்சுதான் இருக்கேன், ஆனால் பாக்டீரியாவ கண்ணால பாக்க முடியாதுல்ல! அதான் உங்களுக்குத் தெரியல!

10

ஆசிரியர் : காந்திஜீ வாழ்நாள் முழுதும் சட்டை அணியவில்லை.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

மாணவன் : அவர் உடம்பு தெரியுது சார்

11

தாய்: ஏன் பையனப் போட்டு இப்படி அடிக்கறீங்க அப்படி என்னதான் கேட்டான்?

தந்தை: தமிழுக்கு தெலுங்குல என்னனு கேக்கறான்

12

(போனில் தன் தந்தையைப் போல். . )

சிறுவன் : என் பையனுக்கு உடம்பு சரியில்ல அதனால இன்னிக்கு ஸ்கூலுக்கு வரமாட்டான்.

ஹெட்மாஸ்டர் : ‌நீ‌ங்க யார் பேசறது?

சிறுவன் : நான்தான் என்னோட அப்பா பேசறேன்.

13

அப்பா : ப‌‌ரீ‌ட்சைல கேள்வி எ‌ல்லா‌ம் எப்படி இருந்தது?

மகள் : ரொம்ப ஈசி‌ப்பா!

அப்பா : அப்றம் ஏன் வருத்தமா இருக்காய்

மகள் : கேள்வி எ‌ல்லா‌ம் ஈசிதா‌ன், ஆனா இந்த பதில்தான். .

14

ஆசிரியர் : யாராவது தூங்கினா எங்கிட்ட சொல்லு.

மாணவர் : சரி‌ங்க சா‌ர். ஆனா ‌நீ‌ங்க தூ‌ங்‌கி‌ட்டு இரு‌ந்தா யா‌ர் ‌கி‌ட்ட சொ‌ல்றது

15

ஆசிரியர் :துரியோதனன் தன் உயிர தொடைலதான் வச்‌சிருந்தான்.

மாணவன் : அதெ‌ன்ன பெ‌ரிய ‌விஷயமா?

ஆ‌சி‌ரிய‌ர் : ‌இத‌விட பெ‌ரிய ‌விஷய‌‌ம் வேற ஏதா‌ச்சு‌ம் இரு‌க்கா எ‌ன்ன?

மாணவ‌ன் : ரவி அவனோட உயிர ரம்பாவோட தொடைலல்ல வச்சுருக்கான்.

16

ஆசிரியர்: உங்கிட்ட 1 ரூபா இருக்கு, உங்கப்பா கிட்ட 1 ரூபா கேக்கற. இ‌ப்போ உ‌ன்‌கி‌ட்ட மொத்தம் எ‌வ்வளவு இரு‌க்கு‌ம்?

மாணவன்: ஒரு ரூபா இருக்கும்.

ஆசிரியர்: உன‌க்கு கணக்கு தெரியல?

மாணவன்: உங்களுக்கு,  எங்க அப்பாவை பத்தி தெரியல!

17.

கவுண்டன்: ஏன்டா அந்த லைட் கம்பத்துல என்னடா தடவுற?

செந்தில் : நாய் கடி மருந்து

கவுண்டன்: அத ஏன்டா அங்க தடவற

செந்தில்: நாய் கடித்த இடத்துல இந்த மருந்தைத் தடவுன்னு டாக்டர்தான் கொடுத்தாரு.

18

சரளா: குழா‌யில த‌ண்‌ணி அடி‌க்க சொ‌ன்னன்,  ‌நீ‌ங்க இ‌ப்படி சு‌ம்மா உ‌ட்கா‌ர்‌ந்‌திரு‌க்‌‌கீ‌‌ங்க!

கவுண்டன்: குழா‌யிலயா? அத மொத‌ல்ல சொ‌ல்ல‌க் கூடாதா?

சரளா: ஏ‌ன்?

‌கவுண்டன்: நீ சொ‌ன்‌னியே‌‌ன்னு உ‌ன் செ‌யின கொ‌ண்டு போ‌ய் வ‌ச்‌சி‌ட்டு இ‌ப்ப‌த்தா‌ன் குடி‌ச்சு‌ட்டு வ‌ர்றே‌ன்.

19

ராமு: ஏ‌‌ண்டா... அ‌ந்த ப‌ஸ் ‌ஸ்டா‌ண்‌ட் ‌நி‌க்‌கிற ப‌ஸ்ல ஏறாம ‌நீ பா‌ட்டு‌க்கு நட‌ந்து போற?

வேலு: அ‌ந்த ப‌ஸ் ஓடுமா?

ராமு: ம்‌ம் ந‌ல்லா ஓடுமே...

வேலு: அதா‌ன் ஏறல.. எ‌ங்க அ‌ப்பா சொ‌ல்‌லி‌யிரு‌க்காரு.. ஓடுற ப‌ஸ்ல ஏறாத‌ன்னு,,

20

ஆசிரியர் : ஏன்டா உன் புத்தகங்களை எல்லாம் பக்கத்து டேபிள்ள வச்சிட்டு நீ வந்து இங்க உட்கார்ந்திருக்க?

மாணவன் :நீங்க தானே சார் பிரச்சினைகளை தள்ளி வைக்கணும்னு சொன்னீங்க?

தொகுப்பு :செ.மனுவேந்தன்

0 comments:

Post a Comment