நகைச்சுவை=ஜோக்ஸ்
-01-
கணவன்: உங்க குரல் ரொம்ப மெல்லிதா இருக்கே…
மனைவி (சிரித்து): ஆமாம், அதனால்தான் எல்லாரும் என்னை பறவையோட குரல்னு சொல்றாங்க.
கணவன்: (தனக்குள்) ம் ,ம்,உண்மையிலே , காகம் தான்!
-02-
மனைவி: உங்களோட தலையில் முடி கொஞ்சம் கொஞ்சமா குறையுது!
கணவன்: உங்க இடியோசை போன்ற ஏச்சினாலே எல்லாம் கொட்டிகிட்டு போகுது!
-03-
மனைவி: உங்க உயிரே நான் இல்லையா?
கணவன்: (தனக்குள்) அதுதான் என் உயிரை வாங்கி, ஊரெல்லாம் விக்கிறியா?
-04-
மனைவி: கல்யாணத்துக்குப் பிறகு நான் இன்னும் அழகா தெரியலையா?
கணவன்: ஆமாம்…கொஞ்சம், கொஞ்சம் பயமுறுத்துற மாதிரி அழகு.
-05-
மனைவி: நம்ம வாழ்க்கை எப்படி இருக்கு?
கணவன்: படம் மாதிரி இருக்கு.
மனைவி: என்ன படம்?
கணவன்: திகில் படம்!
-06-
காதலி: நான் சின்ன தவறு பண்ணினாலும் நீங்க கோபப்பட மாட்டீங்களா?
காதலன்: இல்லை… ஆனா பெரிய தவறு பண்ணினா நீங்க “என் மனைவி” ஆவீங்க!
-07-
காதலி: என் முகத்தில் ஏதாவது குறை இருக்கா?
காதலன்: குறைன்னா என்ன? இரண்டு கண்கள், ஒரு மூக்கு எல்லாம் ஓகே, ஆனால் வாய் தான் சற்று பெரிதாய் இருக்கே… கொஞ்சம் குறைஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும்!
-08-
காதலி: என்னை பார்த்தவுடனே
உங்களுக்கு என்ன தோணுது?
காதலன்: இன்றைக்கு எத்தனை ரூபா போகப்போகுது என்பதுதான் தோணுது!
-09-
காதலி: உங்க மனசுல என்னை தவிர வேற யாராவது இருக்காங்களா?
காதலன்: ஆமாம்… உனக்காக எனக்குக் கடன் தந்தவர்கள்.!
-10-
மாமி: என் இளமைக்காலத்தில் நான் தினமும் 10 கி.மீ நடந்தே போவேன்.
மருமகள்: அதான் நீங்க இப்போ வீடு முழுக்க என் பின்னால நடந்தே நம்மை 10 கி.மீ ஓட வைக்கிறீங்க மாமி!
-11-
மாமி: மருமகளே, வீடு எப்போ சுத்தம் பண்ணுவே?
மருமகள்: விருந்தினர்கள் வரப்போகிறாங்கன்னு மெசேஜ் வந்தால்தான் மாமி!
-12-
போலீஸ்: திருட உனக்கு வெட்கமா இல்லையா?
திருடன்: சார், இதைவிட வேலையே இல்லாம இருக்கிறதான் வெட்கம்… திருட்டுக்கு இல்லை!
-13-
போலீஸ்: ரொம்ப சாமர்த்தியமா திருடறே! யாரிடமிருந்து கற்றுக்கிட்டே?
திருடன்: சார், நீங்க பார்க்கிற டிவி சீரியல் கதாப்பாத்திரத்திலிருந்து தான்!
-14-
போலீஸ்: நீ எதுக்கு ஜாலியா சிரிக்கிறே?
திருடன்: சார், என் புகைப்படம் நாளைக்கு பத்திரிகையில வரப்போகுதுன்னு சந்தோஷம்!
-15-
நீதிபதி: உன்னை ஜெயிலுக்கு அனுப்பிற எண்டதும் மிக சந்தோசமாய் இருக்கிறாய். என்ன காரணம்?
கைதி: சார், வீட்டில் மனைவி இருக்கிறாங்க… ஜெயில் தான் எனக்கு safe place!
-16-
நீதிபதி: உனக்கு எதாவது கடைசி வேண்டுகோள் இருக்கா?
கைதி: சார், உங்களோட ஒரு செல்பி எடுக்கலாமா?
-17-
நீதிபதி: உனக்கு அறிவுரையாக சொல்லணும்!
கைதி: சார், அறிவுரையெல்லாம் வீட்டிலேயே full time கிடைக்குது.
-18-
.நீதிபதி: உனக்கு இனி ஜாமீன் கிடையாது!
கைதி: சார், அப்படி என்றால் ஜெயிலில் “unlimited food package” கிடைக்குமா?
-19-
நீதிபதி:நகைகள் திருடிய குற்றச்சாட்டில் நீ குற்றவாளி இல்லை என நிரூபிக்கபப்ட்டதால் உன்னை விடுதலை செய்கிறோம்.நீ போகலாம்.
குற்றவாளி:அப்படி எண்டால் திருடிய நகைகளை நானே வைச்சிருக்கட்டா சாமி!
-20-
ஆசிரியர்: ஐந்து ரூபாயில் இரண்டு ரூபாய் போனால் எவ்வளவு?
மாணவன்: ஐந்து ரூபாயில் பெரிய ஓட்டை இருக்கு என்று அர்த்தம் சார்!
ஆக்கம்::செ . மனுவேந்தன்
0 comments:
Post a Comment