திருக்குறள் தொடர்கிறது…
130. நெஞ்சொடு
புலத்தல்
👉குறள் 1291:
அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சேநீயெமக் காகாதது.
மு.வ உரை:
நெஞ்சே!
அவருடைய
நெஞ்சம்
( நம்மை
நினையாமல்
நம்மிடம்
வராமல்)
அவர்க்குத்
துணையாதலைக்
கண்டும்
நீ
எமக்குத்
துணையாகாதது
ஏன்?
சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சே!
அவருடைய
நெஞ்சு
நம்மை
எண்ணாது
அவருக்கே
துணையாய்
நிற்பதை
அறிந்தும்,
நீ
எனக்குத்
துணை
ஆகாமல்
அவரையே
நினைக்கக்
காரணம்
என்ன?
கலைஞர் உரை:
நெஞ்சே!
நம்மை
நினைக்காமல்
இருப்பதற்கு
அவருடைய
நெஞ்சு
அவருக்குத்
துணையாக
இருக்கும்போது
நீ
எமக்குத்
துணையாக
இல்லாமல்
அவரை
நினைத்து
உருகுவது
ஏன்?
English Explanation:
O my soul! although you have seen how his soul stands by
him, how is it you do not stand by me?
👉குறள் 1292:
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.
மு.வ உரை:
என்
நெஞசே!
நம்மேல்
அன்பு
கொள்ளாத
காதலரைக்
கண்டபோதும்,
அவர்
வெறுக்கமாட்டார்
என்று
எண்ணி
அவரிடம்
செல்கின்றாயே!
சாலமன் பாப்பையா உரை:
என்
நெஞ்சே!
என்மீது
அன்பு
இல்லாதவரை
உள்ளபடியே
நீ
அறிந்திருந்தும்
நாம்
போனால்
அவர்
கோபப்படமாட்டார்
என்று
எண்ணி
நீ
அவரிடமே
செல்லுகின்றாய்!
கலைஞர் உரை:
நெஞ்சே!
நம்மிடம்
அன்பு
காட்டாதவர்
அவர்
எனக்
கண்ட
பிறகும்,
நம்மை
வெறுக்க
மாட்டார்
என
நம்பி
அவரிடம்
செல்கின்றாயே.
English Explanation:
O my soul! although you have known
him who does not love me, still do you go to him, saying "he will not be
displeased."
👉குறள் 1293:
கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங் கவர்பின் செலல்.
மு.வ உரை:
நெஞ்சே!
நீ
உன்
விருப்பத்தின்படியே
அவர்
பின்
செல்வதற்குக்
காரணம்,
துன்பத்தால்
அழிந்தவர்க்கு
நண்பர்
இல்லை
என்னும்
எண்ணமோ?
சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சே!
நீ
என்னிடம்
இல்லாமல்
உன்
விருப்பப்படியே
அவரிடம்
செல்லக்
காரணம்,
இந்த
உலகத்தில்
கெட்டுப்
போனவர்களுக்கு
நண்பர்
இல்லை
என்பதனாலோ?
கலைஞர் உரை:
நெஞ்சே!
நீ
எனை
விடுத்து
அவரை
விரும்பிப்
பின்
தொடர்ந்து
செல்வது,
துன்பத்தால்
அழிந்தோர்க்கு
நண்பர்கள்
துணையிருக்க
மாட்டார்கள்
என்று
சொல்வது
போலவோ?
English Explanation:
O my soul! do you follow him at pleasure under the belief
that the ruined have no friends?
குறள் 1294:
👉இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.
மு.வ உரை:
நெஞ்சே!
நீ
ஊடலைச்
செய்து
அதன்
பயனை
நுகர
மாட்டாய்;
இனிமேல்
அத்தகையவற்றைப்
பற்றி
உன்னோடு
கலந்து
எண்ணப்
போகின்றவர்
யார்?
சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சே!
நீ
அவரைப்
பார்க்கும்போது
இன்பம்
நுகர
எண்ணுகிறாயே
தவிர,
அவர்
தவறுகளை
எண்ணி
ஊடி,
பிறகு
உறவு
கொள்ள
எண்ணமாட்டாய்.
ஆதலால்
இனி
இது
போன்றவற்றை
உன்னோடு
யார்
ஆலோசனை
செய்வார்?
நான்
செய்யமாட்டேன்.
கலைஞர் உரை:
நெஞ்சே!
முதலில்
ஊடல்
செய்து
பிறகு
அதன்
பயனைக்
கூடலில்
நுகர்வோம்
என
நினைக்க
மாட்டாய்;
எனவே
அதைப்பற்றி
உன்னிடம்
யார்
பேசப்
போகிறார்கள்?
நான்
பேசுவதாக
இல்லை.
English Explanation:
O my soul! you would not first seem
sulky and then enjoy (him); who then would in future consult you about such
things?
குறள் 1295:
👉பெறாஅமை அஞ்சும் பெறினபிரி வஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.
மு.வ உரை:
( காதலரைப்
பெறாதபோது)
பெறாமைக்கு
அஞ்சும்;
பெற்றால்
பிரிவை
நினைத்து
அஞ்சும்;
( இவ்வாறாக)
என்
நெஞ்சம்
தீராத
துன்பம்
உடையதாகின்றது.
சாலமன் பாப்பையா உரை:
என்
கணவர்
என்னைப்
பிரிந்து
இருந்தபோது
அவர்
இல்லாததற்குப்
பயப்படும்;
அவர்
வந்துவிட்டால்,
பிரிவாரே
என்று
பயப்படும்.
ஆகவே
என்
நெஞ்சம்
நீங்காத
துன்பத்தைப்
பெற்றிருக்கிறது.
கலைஞர் உரை:
என்
நெஞ்சத்துக்குத்
துன்பம்
தொடர்
கதையாகவே
இருக்கிறது
காதலரைக்
காணவில்லையே
என்று
அஞ்சும்;
அவர்
வந்து
விட்டாலோ
பிரிந்து
செல்வாரே
என
நினைத்து
அஞ்சும்.
English Explanation:
My soul fears when it is without
him; it also fears when it is with him; it is subject to incessant sorrow.
👉குறள் 1296:
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.
மு.வ உரை:
காதலரைப்
பிரிந்து
தனியே
இருந்து
அவருடைய
தவறுகளை
நினைத்தபோது
என்
நெஞ்சம்
என்னைத்
தின்பது
போல்
துன்பம்
செய்வதாக
இருந்தது.
சாலமன் பாப்பையா உரை:
காதலர்
பிரிவைத்
தனியே
இருந்து
நினைத்தபோது
என்
நெஞ்சம்
என்னைத்
தின்பது
போலக்
கொடுமையாக
இருந்தது.
கலைஞர் உரை:
காதலர்
பிரிவைத்
தனியே
இருந்து
நினைத்தபோது
என்
நெஞ்சம்
என்னைத்
தின்பது
போலக்
கொடுமையாக
இருந்தது.
English Explanation:
My mind has been (here) in order to
eat me up (as it were) whenever I think of him in my solitude.
👉குறள் 1297:
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென்
மாணா மடநெஞ்சிற் பட்டு.
மு.வ உரை:
காதலனை
மறக்க
முடியாத
என்னுடைய
சிறப்பில்லாத
மட
நெஞ்சினோடு
சேர்ந்து,
மறக்கத்
தகாததாகிய
நாணத்தையும்
மறந்து
விடடேன்.
சாலமன் பாப்பையா உரை:
தன்னை
மறந்த
காதலரைத்
தான்
மறக்க
முடியாத,
என்
நிலையில்லாத
மடநெஞ்சோடு
கூடி,
நான்
நாணத்தையும்
மறந்துவிட்டேன்.
கலைஞர் உரை:
அவரை
மறக்க
முடியாமல்
வாடும்
என்னுடைய
சிறப்பில்லாத
மட
நெஞ்சத்துடன்
சேர்ந்து
மறக்கக்
கூடாது
நாணத்தையும்
மறந்து
விட்டேன்.
English Explanation:
I have even forgotten my modesty,
having been caught in my foolish mind which is not dignified enough to forget
him.
👉குறள் 1298:
எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.
மு.வ உரை:
உயரின்
மேல்
காதல்
கொண்ட
என்
நெஞ்சம்,
பிரிந்த
காதலரை
இகழ்ந்தால்
இழிவாகும்
என்று
எண்ணி
அவருடைய
உயர்ந்த
பண்புகளையே
நினைக்கின்றது.
சாலமன் பாப்பையா உரை:
உயிர்மேல்
காதலை
உடைய
என்
நெஞ்சு,
நாமும்
அவரை
இகழ்ந்தால்
பிறகு
நமக்கும்
இழிவுவரும்
என்று
எண்ணி,
அவர்
வரவையும்
கலவியையுமே
நினைத்து
நின்றது.
கலைஞர் உரை:
பிரிந்து
சென்ற
காதலரை
இகழ்வது
தனக்கே
இழிவாகும்
என்பதால்,
அவருடைய
பெருமையைப்
பற்றியே
என்னுயிர்க்
காதல்
நெஞ்சம்
எண்ணிக்
கொண்டிருக்கும்.
English Explanation:
My soul which clings to life thinks
only of his (own) gain in the belief that it would be disgraceful for it to
despise him.
👉குறள் 1299:
துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடையநெஞ்சந் துணையல் வழி.
மு.வ உரை:
ஒருவர்க்குத்
துன்பம்
வந்தபோது,
தாம்
உரிமையாகப்
பெற்றுள்ள
நெஞ்சமே
துணையாகா
விட்டால்,
வேறு
யார்
துணையாவார்?
சாலமன் பாப்பையா உரை:
ஒருவரது
துன்பத்திற்குத்
தாம்
உரிமையாகப்
பெற்றிருக்கும்
தம்
நெஞ்சமே
துணையாகாதபோது,
வேறு
யார்
துணையாவார்?
கலைஞர் உரை:
துன்பம்
வரும்போது
அதனைத்
தாங்குவதற்கு
நெஞ்சமே
துணையாக
இல்லாவிட்டால்
பிறகு
யார்
துணையாக
இருப்பார்?
English Explanation:
Who would help me out of one's distress, when one's own soul
refuses help to one?
👉குறள் 1300:
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.
மு.வ உரை:
ஒருவர்க்கு
தாம்
உரிமையாகப்
பெற்ற
நெஞ்சமே
உறவாகாதபோது
அயலார்
உறவில்லாதவராக
இருப்பது
எளிதேயாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நமக்குரிய
நெஞ்சமே
நம்முடன்
உறவாக
இல்லாத
போது,
மற்றவர்
உறவில்லாதவராக
இருத்தல்
என்பது
எளிதேயாகும்.
கலைஞர் உரை:
நமக்குரிய
நெஞ்சமே
நம்முடன்
உறவாக
இல்லாத
போது,
மற்றவர்
உறவில்லாதவராக
இருத்தல்
என்பது
எளிதேயாகும்.
English Explanation:
It is hardly possible for strangers to behave like relations, when one's own soul acts like a stranger.
திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….
✬✬✬அடுத்த பகுதியை
வாசிக்க
... அழுத்துக...
✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக
0 comments:
Post a Comment