“வாழ்வின் ஒளி விளக்கு கல்வி”-
காலைப் பொழுதின் கதிரவன் போலே
கல்வி கற்றவன் கதிரொளி வீசுவான்;
காட்டுக் குடிலிலும் காலடி வைத்தால்
காற்றே நின்று கதையைக் கேட்கும்.
கண்ணின் ஒளி வழி காட்டுமே ஆனாலும்
மனத்தின் ஒளி வாழ்வைக் காட்டுமே;
அந்த ஒளியை விதைக்கும் விதையே
அம்மா சொல்லும் கல்வி வார்த்தை.
பள்ளிக் கல்லில் பாதம் பதித்தான்
பழகும் உலகம் புதிதாய் மாறும்;
எழுத்தின் சுவை அவன் நாவில் மலர
எண்ணத்தின் நதி ஓடத் தொடங்கும்.
கம்பீரம் வந்தால் தொழிலும் அமையும்
தொழிலும் உயர்ந்தால் காசும் பெருகும்
காசினை வெல்லும் வீரமும் வளரும்
ஊரார் கூடும் சந்தை நடுவில்
ஒரு சொல்லால் உயிர் எழுப்புவான்;
“நல்லது செய்” என்ற நெறிக் கூற்று
நாளைய தலைமுறையை மாற்றும்.
வயலில் விதைக்கும் விதை போல்
வாழ்க்கை விதைக்கும் கல்வி ஞானம்;
ஒரு மரம் நிழல் தரும் போலே
ஒரு மனிதன் பலரை காப்பான்.
தொழிலில் கைகள் தங்கம் ஆக
துணிவின் சுவாசம் சேர்ந்து நிற்கும்;
“உழைப்பே உயர்வு” என்ற நெறியை
உலகம் அறிய அவன் வாழ்வு சொல்லும்.
அவனின் இல்லம் அன்பின் ஆலயம்
அவனின் துணைவி ஒளியின் தோழி;
சிரிப்பில் மலரும் சந்தோஷம்
சிறு பிள்ளைகளின் கண்களில் விளையும்.
“அப்பா போல் நான் ஆக வேண்டும்”
என்று ஆசை விதை முளைக்கத் தொடங்கும்;
அந்த ஆசை மரமாகி நாளை
அறிவின் பழங்கள் தரும் தலைமுறை.
உறவுகள் வந்து உளம்திறப்பார்
உறுதியான வார்த்தை கேட்க;
அவனின் சொல் ஒரு தீபம் போல
அவலின் இருள் அகற்றும் சக்தி.
கல்வி கற்றவன் தனக்கு மட்டும் அல்ல
காலம் முழுவதும் சமூகத்துக்கே;
அவன் அறிவு ஓர் ஆற்றாகி
அனைவரின் வாழ்வை நனைத்திடும்.
நிலத்தில் விளையும் நெல் தானியமல்ல
நெஞ்சத்தில் விளையும் நன்மைதான்;
கல்வி கற்றவன் வாழ்வு முழுவதும்
காலத்துக்கு சொல்லும் இனிய பாடல்!
செ .மனுவேந்தன்
0 comments:
Post a Comment