"உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய தத்துவங்கள்"

 mm


"சாக்குப்போக்கு வேண்டாம் மனிதா

சாதகமாக எடுத்த காரியத்தை மேம்படுத்தி

சான்றாக உலகிற்கு காட்சிப் படுத்தி

சாதாரண மக்களுக்கும் உற்சாகம் கொடு!"

  

"சோர்வாக இருக்கே என்று பின்போடாமல்

சோதனை வருகுதென மனம் தளராமல்

சோம்பல் கொள்ளாமல் எடுத்த காரியத்தை

சோதித்து வெற்றி கண்டதுமே நிறுத்து!"

  

"கொள்கைகளில் சிறந்தது நேர்மை மனிதா

கொண்ட கருத்தில் நிலையாய் நிற்பது

கொடுமையிலும் கொடுமை எல்லோரிடமும் எதிர்பார்ப்பது

கொப்பூழ் கொடியென மலிவானவர்களிடமும் எதிர்பார்ப்பது!"

  

"உழைப்பு நேர்மையாக கடினமாக இருக்கட்டும்

உயர்ந்த எண்ணங்களே அங்கு ஒளிரட்டும்

உங்கள் வெற்றியே உங்கள் பலமாகட்டும்

உதவாக்கரை என்றவர்கள் காலில் விழட்டும்!"

 

"போகும் பாதையை தெளிவாக அறிந்து

போதும் என்றமனதுடன் விட்டு விலகாமல்

போவார் வருவார் சொற்களை கேட்காமல்

போதை கொண்டு கொள்கையில் முன்னேறு!"

 

"வெற்றிபடிக்கு பின்னல் பல தோல்விப்படிகள்

வெறிகொண்டு தோல்விகளை கடந்து செல்

வெற்றிகள் ஒன்றும் ஒரேஇரவில் வராது

வெளிச்சம் காட்டி உன்னை கூப்பிடாது!"

 

"நல்லதை மற்றவர்களுக்கு என்றும் செய்யுங்கள்

நச்சுப் பாம்பாய் மோசமாய் பேசாதீர்கள்

நற்பெயர் தங்கத்தை விட உயர்ந்தது

நட்புடன் பழகி தரமாக வாழுங்கள்!"

 

"சாதனைகள் புரிய கனவுகள் வேண்டும்

சாத்திரம் பார்த்து வாழ்வு அமைவதில்லை

சாட்சியாக உன்பாதை மற்றவர்களுக்கும் இருக்கும்

சாந்தமாய் அதை தொடர்ந்து மகிழ்வாயாக!"

 

"எதிர்த்து போராடுவது தோல்வியல்ல, முயற்சி

எங்கு விடாமுயற்சியோ  அங்கு வளர்ச்சி

எங்கு வளர்ச்சியோ அங்கு வெற்றி

எனவே மனிதா எதிர்த்து மல்லாடு!"

  

"திறந்த மனநிலையுடன் வாழ்வை அணுகினால்

தித்திக்க வைக்கும் உன்னை வெற்றியாக்கும்

திறக்காத மூடியமனம் மாற்றம் அடையாது

திறம்பட இயங்க ஒன்றையும் மாற்றாது!"

  

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] 

[1] Don’t make excuses, make improvements

2] Don’t stop when you’re tired, stop when you’re done

3] Honesty is a very expensive gift, do not expect it from cheap people

4] Work Hard in Silence, Let Your Success Be Your Noise

5] Don’t get side-tracked by people who are not on track

6]Behind every successful person are a lot of unsuccessful years

7]Live in such a way that if someone spoke badly of you, no one would believe it

8]Sometimes when you follow your dream, it opens the door for others to be able to follows theirs

9]Just because you are struggling does not mean you are failing

10] The hardest thing to open is a closed mind]


0 comments:

Post a Comment