கண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]


கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர்சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

 வாழ்க்கைக் குறிப்பு
கண்ணதாசனின்இயற்பெயர்முத்தையாதமிழ்நாடுசிறுகூடல்பட்டியில் தன வணிகர் மரபில் பிறந்தார். தாய் விசாலாட்சி ஆச்சி, தந்தை சாத்தப்பனார். இவருடன் உடன்பிறந்தோர் 8 பேர். சிறு வயதில் இவரை ஒருவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும்அமராவதி புதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார்.1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.

குடும்பம்
கண்ணதாசனுக்கு முதல் திருமணம் பொன்னழகி என்னும் பொன்னம்மா (இறப்பு:மே 312012) என்பவரோடு 1950 பிப்ரவரி 9 ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்றதுஇவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர். கண்ணதாசன் தனக்கு முதல் திருமணம் முடிந்த சில நாள்களிலேயே பார்வதிஎன்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும். ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் பிறந்தனஐம்பதாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் பிறந்தார்.
இந்து மதத்தில் பிறந்தவராயினும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர்கம்பரின் செய்யுளிலும்,பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர்.

அரசியல் ஈடுபாடு
அண்ணாவின் திராவிட கழகத்தில் இருந்த கண்ணதாசன் 1961 ஏப்ரல் 9 இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.

மறைவு
ஆன்மிகவாதி என வர்ணிக்கப்பட்ட கண்ணதாசன் பெதடின் போதையூசி போடும் வழக்கம் கொண்டிருந்தார். உடல்நலிந்து ஜூலை 24, 1981-ல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்திய நேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20-ல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22-ல் எரியூட்டப்பட்டது. 

மணிமண்டபம்
தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. இங்கு கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அரங்கம் ஒன்று உள்ளது. இங்கு 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

படைப்புகள்
·         அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்)
·         மாங்கனி
கவிதை நூல்கள்
·         பொன்மழை (ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ்ப்பாடல் வடிவம்)
·         கண்ணதாசன் கவிதைகள் - 6 பாகங்களில் * பாடிக்கொடுத்த மங்களங்கள் * கவிதாஞ்சலி * தாய்ப்பாவை* ஸ்ரீகிருஷ்ண கவசம்
·         சுருதி சேராத ராகங்கள்
·         முற்றுப்பெறாத காவியங்கள்
·         பஜகோவிந்தம்
·         கிருஷ்ண அந்தாதி, கிருஷ்ண கானம்
புதினங்கள்
·         அவள் ஒரு இந்துப் பெண்
·         சிவப்புக்கல் மூக்குத்தி
·         ரத்த புஷ்பங்கள்
·         சுவர்ணா சரஸ்வதி
·         நடந்த கதை
·         மிசா
·         சுருதி சேராத ராகங்கள்
·         முப்பது நாளும் பவுர்ணமி
·         அரங்கமும் அந்தரங்கமும்
·         ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி
·         தெய்வத் திருமணங்கள்
·         ஆயிரங்கால் மண்டபம்
·         காதல் கொண்ட தென்னாடு
·         அதைவிட ரகசியம்
·         ஒரு கவிஞனின் கதை
·         சிங்காரி பார்த்த சென்னை
·         வேலங்காட்டியூர் விழா
·         விளக்கு மட்டுமா சிவப்பு
·         வனவாசம்
·         பிருந்தாவனம்

வாழ்க்கைச்சரிதம்
·         எனது வசந்த காலங்கள்
·         வனவாசம் (பிறப்பு முதல் தி.மு..விலிருந்து பிரியும் வரை)
·         எனது சுயசரிதம் (வனவாசத்தின் விடுபட்ட பகுதிகள்)
·         மனவாசம் (காங்கிரசு கட்சியில் இருந்த காலத்தின் வாழ்க்கை)

கட்டுரைகள்
·         கடைசிப்பக்கம்
·         போய் வருகிறேன்
·         அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
·         நான் பார்த்த அரசியல்
·         எண்ணங்கள்
·         வாழ்க்கை என்னும் சோலையிலே
·         குடும்பசுகம்
·         ஞானாம்பிகா
·         ராகமாலிகா
·         இலக்கியத்தில் காதல்
·         தோட்டத்து மலர்கள்
·         இலக்கிய யுத்தங்கள்

நாடகங்கள்
·         அனார்கலி
·         சிவகங்கைச்சீமை
·         ராஜ தண்டனை
இவை தவிர கவிஞர் கண்ணதாசன் பகவத் கீதைக்கு உரை எழுதியுள்ளார், அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார்.

விருதுகள்
·         சாகித்ய அகாதமி விருது (சேரமான் காதலி படைப்பிற்காக)

                                                                                                                      







0 comments:

Post a Comment