திரையிலிருந்து துளிகள்



`பேட்டை' படத்தில் சசிகுமார் ஜோடியாக தமிழ் பட உலகுக்கு அறிமுகமானவர், மாளவிகா மோகனன். இப்போது `மாஸ்டர்' படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழ் பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான மீனா, ரஜினிகாந்துடன் `அண்ணாத்த' படத்திலும், ஒரு வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.

கவிஞர் வைரமுத்து திரைப்பட துறைக்கு வந்து 41-ம் வருட தொடக்கத்தில், ‘கட்டில்’ என்ற படத்துக்காக தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும், பண்பாட்டையும் உலக அரங்குக்கு எடுத்து சொல்லும் விதமாக, தனித்துவமான மொழி நடையில்,  பாடல் எழுதியிருக்கிறார்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய  தலைவி’ படத்தில் பேரறிஞர் அண்ணாவின் கதாபாத்திரத்தில் நடிக்க டைரக்டர் பாரதிகண்ண நடிக்க வைத்து இருக்கிறார்கள்.

நடிகர் விஜய்.இவரது நடிப்பில் கடந்த 2017
ஆம் ஆண்டு வெளியான மெர்ஷல் படத்தில் இடம்பெற்ற ஆளப் போறான் தமிழன் என்ற பாடல் தான் விஜய் பாடல்களில்   இதுவரை 11 கோடியே 16 லட்சம் அதிக பார்வையாளர்களைக் கடந்ததாக இருக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

உலகம் முழுவதும் கொரோனா அச்சம் பரவி வரும் நிலையில் மாநிலம் முழுவதும் திரையரங்குகளை மூடும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் படவெளியீடுகள் நிறுத்தப்பட்டுள்ளது, திரைப்படத் துறையினருக்கு பெரும் அதிர்ச்சியினைக் கொடுத்துள்ளது.

திரை அரங்குகளின் மூடலினால் , திரைப்படத்துறையினரின் அதிர்ச்சி குறித்து ,   'மக்களின் உயிர் பலிகளை விட அவர்கள் சம்பாதிக்கப்போகும் பணம்  பெரிதாகிவிட்டதா?' என ரசிகர்கள் சமூகத்தளங்களில் கருத்தினைப் பதிவு செய்துள்ளனர்.
🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥

0 comments:

Post a Comment