சிரிக்க...சிரிக்க....


சிரிப்பு வருது!

வக்கீல்: டாக்டர்! விநாயகத்துக்கு நீங்கள் பிரேதப் பரிசோதனை செய்த நேரத்தை கொஞ்சம் ஞாபகப்படுத்திக் கூற முடியுமா?

டாக்டர்: 8:30 மணி இருக்கும்

வக்கீல்: விநாயகம் அப்ப இறந்திருந்தார் அல்லவா?

டாக்டர் (கிண்டலாக): இல்லை, பக்கத்து டேபிளில் உட்கார்ந்துக்கிட்டு நான் பிரேதப் பரிசோதனை செய்றதைப் பார்த்துக்கிட்டு இருந்தார்.

………………………………………………………………………

*நேற்று என் கச்சேரிக்கு வருவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்...

*வரணும்னுதான் சார் நினைச்சேன். அதுக்குள்ள வேற கஷ்டம் ஒண்ணு வந்துட்டுது.

………………………………………………………………………

ஒருவன்: டேய்! ஏன்டா பேணை ஆப் பண்ணிட்ட?

மற்றொருவன்:எங்கப்பாதான் சொல்லி இருக்காரு,

வியர்வை சிந்தி சாப்பிடனும்ன்னு!

……………………………………………………

*ஒரு ரூபாய், 2 ரூபாய் கள்ள நோட்டு எதுக்கு அடிச்சே ?

*சில்லறைத் தட்டுப்பாட்டுல நிறையப் பேர் கஷ்டப்படறதைப் பார்த்து மனசுக்கு கஷ்டமா இருந்துதுங்க. அதான்

…………………………………

*யோவ் ராப்பிச்சை உன் பையனை எதுக்கு இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்ல சேர்த்தே ?

*அவனாவது ஃபாரின்ல போய் பிச்சை எடுக்கட்டும்னு தான்.

………………………………………

*கொலையும் செய்வாள் பத்தினின்னு கல்யாணத்துக்கு அப்புறம் கண்டு பிடிச்சியா எப்படி ?

*என் மனைவி சமையல் பண்ண ஆரம்பிச்சதிலிருந்து...

…………………………………………

காதலன்  : டார்லிங்  நாம  இரண்டு  பேரும்  மோதிரம்  மாத்திக்கலாமா ?

காதலி      :   வேணாம்

காதலன்   :   ஏன்  ?

காதலி      :   உன் மோதிரம்  ரெண்டு கிராம். என்  மோதிரம் எட்டு கிராம்.

……………………………………………

ஒருவன்  : என்னுடைய   அகராதியில்   முடியாது   என்கிற வார்த்தையே                       கிடையாது.

மற்றொருவன் :  இப்ப   சொல்லி  என்ன  பிரயோசனம், அகராதியை வாங்கும்  போது  பார்த்து  வாங்கியிருக்கணும்.

……………………………………………

நண்பன்           :  உங்க  பொண்ணுக்கு  ஏதாவது  மாப்பிள்ளை        கிடைச்சுதா?

பெண்ணின் அப்பா :  என்னத்த  சொல்ல   ஒன்னு  இருந்தா,ஒன்னு இல்ல . ஆமா,  உனக்கு  தெரிஞ்ச நல்ல  மாப்பிள்ளை  இருந்தா   சொல்லேம்ப்பா .

  நண்பன்               :       என்  அக்கா  பையனுக்குத்தான்  வரன்  பார்த்துட்டு இருக்கோம். பையன்   ராசா  மாதிரி  இருப்பான்.

பெண்ணின் அப்பா :  ரெம்ப  நல்லதா  போச்சு...ராசா  மாதிரி   இருந்தாத்தானே  இப்போ  இருக்கிற  விலைவாசிக்கு கட்டுப்படி  ஆகும்.

…………………………………………

பேஷண்ட் : இருந்தாலும் நீங்க ரொம்ப அதிர்ஷடசாலி டாக்டர் ..

டாக்டர் : எத வெச்சு சொல்றீங்க ?

பேஷண்ட் : உங்களுக்கு ஒரு ஆப்பரேஷன்னா நீங்க பண்ண தேவை இல்ல பாருங்க.

…………………………………………

டாக்டர்: இந்த டாக்டர் தொழிலையே விட்டுடலாமுன்னு இருக்கேன்

நண்பர் : ஏன் டாக்டர் பேஷண்ட்ஸ் யாரும் வரதில்லையா?

 டாக்டர் : இல்ல.. பேஷண்ட்ஸ் யாரும் பொழைக்கறதில்லை..

……………………………………

கணவன்: அடுத்த ஜென்மம்னு ஒன்னிருந்தா நான் பூனையா பிறக்கணும்னு ஆசைப்படறேன்.

மனைவி: பூனையாவா? ஏங்க?

கணவன்: பூனையைப் பார்த்தா மட்டும்தானே நீ பயப்படறே?

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣


0 comments:

Post a Comment