திருக்குறள் தொடர்கிறது…
105.
நல்குரவு
👉குறள் 1041:
இன்மையின் இன்னாத தியாதெனின்
இன்மையின்இன்மையே இன்னா தது.
மு.வ உரை:
வறுமையைப் போல் துன்பமானது எது என்று
கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
இன்மையை விடக் கொடியதுஎது என்றால், இல்லாமையை
விடக் கொடியது இல்லாமையே.
கலைஞர் உரை:
வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு
வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை.
English Explanation:
There is nothing that afflicts
(one) like poverty.
👉குறள் 1042:
இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.
மு.வ உரை:
வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை
நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும், இன்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.
சாலமன் பாப்பையா உரை:
இல்லாமை என்ற ஒரு பாவி ஒருவனிடத்தில்
சேர்ந்தால், அவன் பிறர்க்குக் கொடுக்க இல்லாதவன் ஆவதால் அவனுக்கு மறுமை இன்பமும் இல்லை;
தானே அனுபவிக்க ஏதும் இல்லாததால் இம்மை இன்பமும் இல்லை.
கலைஞர் உரை:
பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை
ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் நிம்மதி
என்பது கிடையாது.
English Explanation:
When cruel poverty comes on, it
deprives one of both the present and future (bliss).
👉குறள் 1043:
தொல்வரவும் தோலும் கெடுக்கும்
தொகையாகநல்குர வென்னும் நசை.
மு.வ உரை:
வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப்
பற்றினால், அவனுடைய பழைமையானக் குடிப் பண்பையும் புகழையும் ஒரு சேரக் கெடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
இல்லாமை என்று சொல்லப்படும் மன ஆசை எவரிடம்
இருக்கிறதோ, அவரின் பழம் குடும்பப் பெருமையையும் சிறந்த பாராட்டுக்களையும் அது மொத்தமாக
அழித்து விடும்.
கலைஞர் உரை:
ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை
ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும்.
English Explanation:
Hankering poverty destroys at once
the greatness of (one's) ancient descent and (the dignity of one's) speech.
👉குறள் 1044:
இற்பிறந்தார் கண்ணேயும்
இன்மை இளிவந்தசொற்பிறக்கும் சோர்வு தரும்.
மு.வ உரை:
வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும்
இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கி விடும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் கூட,
இல்லாமை வந்து விட்டால், இழிவான சொற்களைச் சொல்லும் தளர்ச்சியை உண்டாக்கி விடும்.
கலைஞர் உரை:
இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில்
பிறந்தவர்களிடம் இழிந்த சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும்.
English Explanation:
Even in those of high birth,
poverty will produce the fault of uttering mean words.
👉குறள் 1045:
நல்குர வென்னும் இடும்பையுள்
பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.
மு.வ உரை:
வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள்
பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும்.
சாலமன் பாப்பையா உரை:
இல்லாமை என்னும் துன்பத்திற்குள் எல்லா
வகைத் துன்பங்களும் அடங்கும்.
கலைஞர் உரை:
வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து
பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும்.
English Explanation:
The misery of poverty brings in its
train many (more) miseries.
👉குறள் 1046:
நற்பொருள் நன்குணர்ந்து
சொல்லினும் நல்கூர்ந்தார்சொற்பொருள் சோர்வு படும்.
மு.வ உரை:
நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச்
சொன்னப் போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல கருத்துக்களைத் தெளிவாகத் தெரிந்து
சொன்னாலும், சொல்பவர் ஏழை என்றால் அவர் சொல் மதிக்கப் பெறாது.
கலைஞர் உரை:
அரிய பல் நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து
சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகும்.
English Explanation:
The words of the poor are
profitless, though they may be sound in thought and clear in expression.
👉குறள் 1047:
அறஞ்சாரா நல்குர வீன்றதா
யானும்
பிறன்போல நோக்கப் படும்.
மு.வ உரை:
அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால்
பெற்றத் தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.
சாலமன் பாப்பையா உரை:
நியாயமான காரணங்கள் இல்லாத இல்லாமை ஒருவனுக்கு
இருந்தால், பெற்ற தாய் கூட அவனை அந்நியனாகவே பார்ப்பாள்.
கலைஞர் உரை:
வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து
விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போல்தான் கருதுவாள்.
English Explanation:
He that is reduced to absolute
poverty will be regarded as a stranger even by his own mother.
👉குறள் 1048:
இன்றும் வருவது கொல்லோ
நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.
மு.வ உரை:
நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய
வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்).
சாலமன் பாப்பையா உரை:
நேற்று என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைத்
தந்த இல்லாமை, இன்றும் கூட வருமோ?
கலைஞர் உரை:
கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்திய
வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்.
English Explanation:
Is the poverty that almost killed
me yesterday, to meet me today too?
👉குறள் 1049:
நெருப்பினுள் துஞ்சலும்
ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பா டரிது.
மு.வ உரை:
ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும்
முடியும், ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.
சாலமன் பாப்பையா உரை:
யோக வலிமையால் நெருப்பிற்குள் படுத்து
உறங்கவும் முடியும்; ஆனால், பசிக் கொடுமைக்குள் சிறிது கூடக் கண் மூட முடியாது.
கலைஞர் உரை:
நெருப்புக்குள் படுத்துக் தூங்குவதைகூட
ஒரு மனிதனால் முடியும்; ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது என்பது இயலாத ஒன்றாகும்.
English Explanation:
One may sleep in the midst of fire;
but by no means in the midst of poverty.
👉குறள் 1050:
துப்புர வில்லார் துவரத்
துறவாமை
உப்பிற்கும் காடிக்கும்
கூற்று.
மு.வ உரை:
நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந்
துறக்க கூடியவராக இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே
ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
உண்ண, உடுத்த ஏதம் இல்லாதவர் இல்லறத்தை
முழுமையாகத் துறந்து விடாதிருப்பது, பிறர் வீட்டில் இருக்கும் உப்புக்கும் கஞ்சித்
தண்ணீருக்கும் எமனாம்.
கலைஞர் உரை:
ஒழுங்குமறையற்றதால் வறுமையுற்றோர், முழுமையாகத்
தம்மைத் துறக்காமல் உயிர்வாழ்வது, உப்புக்கும் கஞ்சிக்கும்தான் கேடு.
English Explanation:
The destitute poor, who do not
renounce their bodies, only consume their neighbour's salt and water.
திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….
✬✬✬அடுத்த பகுதியை வாசிக்க
... அழுத்துக...
Theebam.com: திருக்குறள்... -/106/-இரவு
✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க
0 comments:
Post a Comment