திருக்குறள் தொடர்கிறது…
108. கயமை
👉குறள் 1071:
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.
மு.வ உரை:
மக்களே
போல்
இருப்பார்
கயவர்,
அவர்
மக்களை
ஒத்திருப்பது
போன்ற
ஒப்புமை
வேறு
எந்த
இருவகைப்
பொருள்களிடத்திலும்
யாம்
கண்டதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
கயவர்
வெளித்தோற்றத்தில்
மனிதரைப்
போலவே
இருப்பர்;
விலங்கு
பறவை
போன்ற
பிற
இனங்களில்
அவருக்கு
ஒப்பானவரை
நான்
கண்டது
இல்லை.
கலைஞர் உரை:
குணத்தில்
கயவராக
இருப்பர்
ஆனால்,
நல்லவரைப்
போலக்
காட்டிக்
கொள்வார்
மனிதர்களிடம்
மட்டும்தான்
இப்படி
இருவகையான
நிலைகளை
ஒரே
உருவத்தில்
காண
முடியும்.
English Explanation:
The base resemble men perfectly (as
regards form); and we have not seen such (exact) resemblance (among any other
species).
👉குறள் 1072:
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவலம் இலர்.
மு.வ உரை:
நன்மை
அறிந்தவரை
விடக்
கயவரே
நல்ல
பேறு
உடையவர்,
ஏன்
என்றால்,
கயவர்
தம்
நெஞ்சில்
எதைப்
பற்றியும்
கவலை
இல்லாதவர்.
சாலமன் பாப்பையா உரை:
நல்லது
கெட்டதை
அறிந்தவரைக்
காட்டிலும்
கயவர்
செல்வம்
உடையவர்
ஆவர்;
காரணம்,
கயவர்
நல்லத
கெட்டது
என்ற
கவலையே
நெஞ்சில்
இல்லாதவர்.
கலைஞர் உரை:
எப்போதும்
நல்லவை
பற்றியே
சிந்தித்துக்
கவலைப்பட்டுக்
கொண்டிருப்பவர்களைவிட
எதைப்
பற்றியும்
கவலைப்படாமலிருக்கும்
கயவர்கள்
ஒரு
வகையில்
பாக்கியசாலிகள்தான்!
English Explanation:
The low enjoy more felicity than those who know what is
good; for the former are not troubled with anxiety (as to the good).
👉குறள் 1073:
தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.
மு.வ உரை:
கயவரும்
தேவரைப்
போல்
தான்
விரும்புகின்றவைகளைச்
செய்து
மனம்
போன
போக்கில்
நடத்தலால்,
கயவர்
தேவரைப்
போன்றவர்.
சாலமன் பாப்பையா உரை:
தம்மைக்
கட்டுப்படுத்துவார்
இல்லாமல்
தாம்
விரும்பியபடி
எல்லாம்
செய்து
வாழ்வதால்,
கயவர்
தேவரைப்
போன்றவராவர்.
கலைஞர் உரை:
புராணங்களில்
வரும்
தேவர்களைப்
போல்
மனம்
விரும்பியதையெல்லாம்
செய்யக்கூடியவர்கள்
கயவர்கள்
என்பதால்,
இருவரையும்
சமமாகக்
கருதலாம்.
English Explanation:
The base resemble the Gods; for the
base act as they like.
👉குறள் 1074:
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
மு.வ உரை:
கீழ்
மக்கள்
தமக்கு
கீழ்
பட்டவராய்
நடப்பவரைக்
கண்டால்,
அவரை
விடத்
தாம்
மேம்பாடு
உடையவராய்
இறுமாப்படைவர்.
சாலமன் பாப்பையா உரை:
தனக்கும்
கீழாகத்
தான்
விரும்பியபடி
எல்லாம்
வாழும்
நாய்
போன்றவரைக்
கண்டால்
அவரைக்
காட்டிலும்
மேலாகத்
தன்
நிலையைக்
காட்டி
கயமை,
இறுமாப்புக்
கொள்ளும்.
கலைஞர் உரை:
பண்பாடு
இல்லாத
கயவர்கள்,
தம்மைக்
காட்டிலும்
இழிவான
குணமுடையோரைக்
கண்டால்,
அவர்களைவிடத்
தாம்
சிறந்தவர்கள்
என்ற
கர்வம்
கொள்வார்கள்.
English Explanation:
The base feels proud when he sees
persons whose acts meaner than his own.
👉குறள் 1075:
அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.
மு.வ உரை:
கீழ்
மக்களின்
ஆசாரத்திற்கு
காரணமாக
இருப்பது
அச்சமே,
எஞ்சியவற்றில்
அவா
உண்டானால்
அதனாலும்
சிறிதளவு
ஆசாரம்
உண்டாகும்.
சாலமன் பாப்பையா உரை:
கயவர்களிடம்
நல்ஒழுக்கம்
இருந்தால்
ஆட்சியைப்
பற்றிய
பயமே
காரணம்
ஆகும்.
அதையும்
மீறி
அவர்கள்
ஆசைப்படும்
பொருள்
கிடைப்பதாக
இருந்தால்
அதனாலும்
கொஞ்சம்
ஒழுக்கம்
இருக்கும்.
கலைஞர் உரை:
தாங்கள்
விரும்புவது
கிடைக்கும்
என்ற
நிலையேற்படும்போது
கீழ்மக்கள்,
தங்களை
ஒழுக்கமுடையவர்கள்
போலக்
காட்டிக்
கொள்வார்கள்
மற்ற
சமயங்களில்
அவர்கள்
பயத்தின்
காரணமாக
மட்டுமே
ஓரளவு
ஒழுக்கமுள்ளவர்களாக
நடந்து
கொள்வார்கள்.
English Explanation:
(The principle of) behaviour in the
mean is chiefly fear; if not, hope of gain, to some extent.
👉குறள் 1076:
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க் குய்த்துரைக்க லான்.
மு.வ உரை:
கயவர்,
தாம்
கேட்டறிந்த
மறைப்பொருளைப்
பிறர்க்கு
வலிய
கொண்டுபோய்ச்
சொல்லுவதலால்,
அறையப்படும்
பறை
போன்றவர்.
சாலமன் பாப்பையா உரை:
தாம்
அறிந்த
ரகசியங்களைப்
பிறரிடம்
வலியச்
சென்று
சொல்லுவதால்,
அடிக்கப்படும்
பறையைப்
போன்றவர்
கயவர்.
கலைஞர் உரை:
மறைக்கப்பட
வேண்டிய
இரகசியம்
ஒன்றைக்
கேட்ட
மாத்திரத்தில்,
ஓடிச்
சென்று
பிறருக்குச்
சொல்லுகிற
கயவர்களைத்,
தமுக்கு
என்னும்
கருவிக்கு
ஒப்பிடலாம்.
English Explanation:
The base are like a drum that is
beaten, for they unburden to others the secrets they have heard.
👉குறள் 1077:
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்
கூன்கையர் அல்லா தவர்க்கு.
மு.வ உரை:
கயவர்
தம்
கன்னத்தை
இடித்து
உடைக்கும்
படி
வளைந்த
கை
உடையவரல்லாத
மற்றவர்க்கு
உண்ட
எச்சில்
கையையும்
உதற
மாட்டார்.
சாலமன்
பாப்பையா
உரை:
தாடையை
உடைக்கும்
முறுக்கிய
கை
இல்லாதவர்க்குக்
கயவர்,
தாம்
உண்டு
கழுவிய
ஈரக்
கையைக்கூட
உதறமாட்டார்.
கலைஞர் உரை:
கையை
மடக்கிக்
கன்னத்தில்
ஒரு
குத்துவிடுகின்ற
முரடர்களுக்குக்
கொடுப்பார்களேயல்லாமல்,
ஈகைக்
குணமில்லாத
கயவர்கள்
ஏழை
எளியோருக்காகத்
தமது
எச்சில்
கைகைக்கூட
உதற
மாட்டார்கள்.
English Explanation:
The mean will not (even) shake off
(what sticks to) their hands (soon after a meal) to any but those who would
break their jaws with their clenched fists.
👉குறள் 1078:
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோ கொல்லப் பயன்படும் கீழ்.
மு.வ உரை:
அணுகி
குறைச்
சொல்லுகின்ற
அளவிலேயே
சான்றோர்
பயன்படுவர்,
கரும்புபோல்
அழித்துப்
பிழிந்தால்
தான்
கீழ்மக்கள்
பயன்படுவர்.
சாலமன் பாப்பையா உரை:
இல்லாதவர்
சென்று
தம்
நிலையைச்
சொன்ன
அளவில்,
சான்றோர்
இரங்கிக்
கொடுப்பர்;
கயவர்களோ
கரும்பைப்
பிழிவதுபோல்
பிழிந்தால்தான்
கொடுப்பர்.
கலைஞர் உரை:
குறைகளைச்
சொன்னவுடனே
சான்றோரிடம்
கோரி
பயனைப்
பெற
முடியும்;
ஆனால்
கயவரிடமோ
கரும்பை
நசுக்கிப்
பிழிவதுபோல்,
போராடித்தான்
கோரிய
பயனைப்
பெற
முடியும்.
English Explanation:
The great bestow (their alms) as
soon as they are informed; (but) the mean, like the sugar-cane, only when they
are tortured to death.
👉குறள் 1079:
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்வடுக்காண வற்றாகும் கீழ்.
மு.வ உரை:
கீழ்
மகன்
பிறர்
உடுப்பதையும்,
உண்பதையும்
கண்டால்
அவர்
மேல்
பொறாமை
கொண்டு,
வேண்டும்
என்றே
குற்றம்
காண
வல்லவனாவான்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர்
நன்கு
உடுத்த,
உண்ணக்
கண்டால்,
அவர்மீத
குற்றம்
காணும்
ஆற்றலை
உடையவர்
கயவர்.
கலைஞர் உரை:
ஒருவர்
உடுப்பதையும்
உண்பதையும்
கண்டுகூட
பெறாமைப்படுகிற
கயவன்,
அவர்மீது
வேண்டுமென்றே
குற்றம்
கூறுவதில்
வல்லவனாக
இருப்பான்.
English Explanation:
The base will bring an evil
(accusation) against others, as soon as he sees them (enjoying) good food.
👉குறள் 1080:
எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து.
மு.வ உரை:
கயவர்,
எதற்கு
உரியவர்,
ஒரு
துன்பம்
வந்தடைந்த
காலத்தில்
அதற்காக
தம்மை
பிறர்க்கு
விலையாக
விற்றுவிடுவதற்கு
உரியவர்
ஆவர்.
சாலமன் பாப்பையா உரை:
தமக்கு
லாபமோ
நட்டமோ
வரும்
என்றால்
தம்மைப்
பிறர்க்கு
அடிமை
ஆக்குவர்;
இதற்கு
அன்றி
வேறு
எந்தத்
தொழிலுக்குக்
கயவர்
உரியர்
ஆவர்?
கலைஞர் உரை:
ஒரு
துன்பம்
வரும்போது
அதிலிருந்து
தப்பித்துக்
கொள்ள,
தம்மையே
பிறரிடம்
விற்றுவிடுகிற
தகுதிதான்
கயவர்களுக்குரிய
தகுதியாகும்.
English Explanation:
The base will hasten to sell
themselves as soon as a calamity has befallen them. For what else are they
fitted?
திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….
✬✬✬அடுத்த பகுதியை வாசிக்க ... அழுத்துக...
✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக
Theebam.com: திருக்குறள்/01/ : கடவுள் வாழ்த்து
0 comments:
Post a Comment