திருக்குறள் தொடர்கிறது…
114. நாணுத்
துறவுரைத்தல்
👉குறள் 1131:
காமம் உழந்து வருந்தினார்க் கேம
மடலல்ல தில்லை வலி.
மு.வ உரை:
காமத்தால்
துன்புற்று
(காதலின்
அன்பு
பெறாமல்)
வருந்தினவர்க்குக்
காவல்
மடலூர்தல்
அல்லாமல்
வலிமையானத்
துணை
வேறொன்றும்
இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
காதல்
நிறைவேற
முடியாமல்
வருந்தும்
காதலர்க்கு
மடல்
ஏறுதலைத்
தவிர
வேறு
பலம்
இல்லை.
கலைஞர் உரை:
காதலால்
துன்புறும்
காளையொருவனுக்குப்
பாதுகாப்பு
முறையாக
மடலூர்தலைத்
தவிர,
வலிமையான
துணைவேறு
எதுவுமில்லை.
English Explanation:
To those who after enjoyment of
sexual pleasure suffer (for want of more), there is no help so efficient as the
palmyra horse.
👉குறள் 1132:
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.
மு.வ உரை:
(காதலின்
பிரிவால்
ஆகிய
துன்பத்தைப்)
பொறுக்காத
என்
உடம்பும்
உயிரும்,
நாணத்தை
நீக்கி
நிறுத்தி
விட்டு
மடலூரத்
துணிந்தன.
சாலமன் பாப்பையா உரை:
காதலை
நிறைவேற்ற
முடியாது
வருந்தும்
இந்த
உடலும்
உயிரும்
வெட்கத்தை
விட்டுவிட்டு
மடல்
ஏற
எண்ணுகின்றன.
கலைஞர் உரை:
எனது
உயிரும்,
உடலும்
காதலியின்
பிரிவைத்
தாங்க
முடியாமல்
தவிப்பதால்,
நாணத்தைப்
புறந்தள்ளிவிட்டு
மடலூர்வதற்குத்
துணிந்து
விட்டேன்.
English Explanation:
Having got rid of shame, the
suffering body and soul save themselves on the palmyra horse.
👉குறள் 1133:
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்காமுற்றார் ஏறும் மடல்.
மு.வ உரை:
நாணமும்
நல்ல
ஆண்மையும்
முன்பு
பெற்றிருந்தேன்,
(காதலியை
பிரிந்து
வருந்துகின்ற)
இப்போது
காமம்
மிக்கவர்
ஏறும்
மடலையே
உடையேன்.
சாலமன் பாப்பையா உரை:
நாணமும்
ஆண்மையும்
முன்பு
பெற்றிருந்தேன்;
இன்றோ
காதலர்
ஏறும்
மடலைப்
பெற்றிருகிறேன்.
கலைஞர் உரை:
நல்ல
ஆண்மையும்,
நாண
உணர்வையும்
முன்பு
கொண்டிருந்த
நான்,
இன்று
அவற்றை
மறந்து,
காதலுக்காக
மடலூர்வதை
மேற்கொண்டுள்ளேன்.
English Explanation:
Modesty and manliness were once my
own; now, my own is the palmyra horse that is ridden by the lustful.
👉குறள் 1134:
காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.
மு.வ உரை:
நாணமும்
நல்ல
ஆண்மையுமாகிய
தோணிகளைக்
காமம்
என்னும்
கடுமையான
வெள்ளம்
அடித்துக்
கொண்டு
போய்
விடுகின்றன.
சாலமன் பாப்பையா உரை:
ஆம்;
நாணம்,
ஆண்மை
என்னும்
படகுகளைக்
காதலாகிய
கடும்
வெள்ளம்
அடித்துக்
கொண்டு
போய்விட்டது.
கலைஞர் உரை:
காதல்
பெருவெள்ளமானது
நாணம்,
நல்ல
ஆண்மை
எனப்படும்
தோணிகளை
அடித்துக்கொண்டு
போய்விடும்
வலிமை
வாய்ந்தது.
English Explanation:
The raft of modesty and manliness,
is, alas, carried-off by the strong current of lust.
👉குறள் 1135:
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.
மு.வ உரை:
மடலோறுதலோடு
மாலைக்காலத்தில்
வருந்தும்
துயரத்தை
மாலைபோல்
தொடர்ந்த
சிறு
வளையல்
அணிந்த
காதலி
எனக்கு
தந்தாள்.
சாலமன் பாப்பையா உரை:
மாலைப்
பொழுதுகளில்
நான்
அடையும்
மயக்கத்தையும்
அதற்கு
மருந்தாகிய
மடல்
ஏறுதலையும்,
மலை
போல
வளையல்
அணிந்திருக்கும்
அவளே
எனக்குத்
தந்தாள்.
கலைஞர் உரை:
மேகலையையும்
மெல்லிய
வளையலையும்
அணிந்த
மங்கை
மாலை
மலரும்
நோயான
காதலையும்,
மடலூர்தல்
எனும்
வேலையையும்
எனக்குத்
தந்து
விட்டாள்.
English Explanation:
She with the small garland-like
bracelets has given me the palmyra horse and the sorrow that is endured at
night
👉குறள் 1136:
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படலொல்லா பேதைக்கென் கண்.
மு.வ உரை:
மடலூர்தலைப்
பற்றி
நள்ளிரவிலும்
உறுதியாக
நினைக்கின்றேன்,
காதலியின்
பிரிவின்
காரணமாக
என்
கண்கள்
உறங்காமல்
இருக்கின்றன.
சாலமன் பாப்பையா உரை:
அவள்
குணத்தை
எண்ணி
என்
கண்கள்
இரவெல்லாம்
உறங்குவதில்லை.
அதனால்
நள்ளிரவிலும்கூட
மடல்
ஊர்வது
பறிறயே
எண்ணுவேன்.
கலைஞர் உரை:
காதலிக்காக
என்
கண்கள்
உறங்காமல்
தவிக்கின்றன;
எனவே
மடலூர்தலைப்
பற்றி
நள்ளிரவிலும்
நான்
உறுதியாக
எண்ணிக்
கொண்டிருக்கிறேன்.
English Explanation:
Mine eyes will not close in sleep on
your mistress's account; even at midnight will I think of mounting the palmyra
horse.
👉குறள் 1137:
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்.
மு.வ உரை:
கடல்
போன்ற
காமநோயால்
வருந்தியும்,
மடலேறாமல்
துன்பத்தை
பொருத்துக்
கொண்டிருக்கும்
பெண்
பிறப்பை
போல்
பெருமை
உடைய
பிறவி
இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
அதுதான்
அவள்
பெருமை;
கடல்
போலக்
கரையில்லாத
காதல்
நோயை
அவளும்
அனுபவித்தாலும்
மடல்
ஊராது
பொறுத்திருக்கும்
பெண்
பிறவியைப்
போலப்
பெருமையான
பிறவி
இவ்வுலகத்தில்
வேறு
இல்லை.
கலைஞர் உரை:
கொந்தளிக்கும்
கடலாகக்
காதல்
நோய்
துன்புறுத்தினாலும்கூடப்
பொறுத்துக்கொண்டு,
மடலேறாமல்
இருக்கும்
பெண்ணின்
பெருமைக்கு
நிகரில்லை.
English Explanation:
There is nothing so noble as the
womanly nature that would not ride the palmyra horse, though plunged a sea of
lust.
👉குறள் 1138:
நிறையரியர் மன்னளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.
மு.வ உரை:
இவர்
நெஞ்சை
நிறுத்தும்
நிறை
இல்லாதவர்,
மிகவும்
இரங்கத்தக்கவர்
என்று
கருதாமல்
காமம்
மறைந்திருத்தலைக்
கடந்து
மன்றத்திலும்
வெளிப்படுகின்றதே.
சாலமன் பாப்பையா உரை:
இவள்
மன
அடக்கம்
மிக்கவள்;
பெரிதும்
இரக்கப்பட
வேண்டியவள்
என்று
எண்ணாமல்
இந்த
காதல்
எங்களுக்குள்
இருக்கும்
இரகசியத்தைக்
கடந்து
ஊருக்குள்ளேயும்
தெரியப்போகிறது.
கலைஞர் உரை:
பாவம்;
இவர்,
மனத்தில்
உள்ளதை
ஒளிக்கத்
தெரியாதவர்;
பரிதாபத்திற்குரியவர்;
என்றெல்லாம்
பார்க்காமல்,
ஊர்
அறிய
வெளிப்பட்டு
விடக்கூடியது
காதல்.
English Explanation:
Even the Lust (of women)
transgresses its secrecy and appears in public, forgetting that they are too
chaste and liberal (to be overcome by it).
👉குறள் 1139:
அறிகிலார் எல்லாரும் என்றேயென் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.
மு.வ உரை:
அமைதியாய்
இருந்ததால்
எல்லோரும்
அறியவில்லை
என்று
கருதி
என்னுடைய
காமம்
தெருவில்
பரவி
மயங்கிச்
சுழல்கின்றது.
சாலமன் பாப்பையா உரை:
என்
காதல்
எனது
மன
அடக்கத்தால்
எல்லாருக்கம்
தெரியவில்லை
என்று
எண்ணி
அதைத்
தெரிவிக்க
தெருவெங்கும்
தானே
அம்பலும்
அலருமாய்ச்
சுற்றிச்
சுற்றி
வருகிறது.
கலைஞர் உரை:
என்னைத்
தவிர
யாரும்
அறியவில்லை
என்பதற்காக
என்
காதல்
தெருவில்
பரவி
மயங்கித்
திரிகின்றது
போலும்!
English Explanation: It's as if my love is wandering
around the streets in a daze because no one knows it but me!
👉குறள் 1140:
யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.
மு.வ உரை:
யாம்
பட்ட
துன்பங்களைத்
தாம்
படாமையால்
அறிவில்லாதவர்
யாம்
கண்ணால்
காணுமாறு
எம்
எதிரில்
எம்மைக்கண்டு
நகைக்கின்றனர்.
சாலமன் பாப்பையா உரை:
நான்
பார்க்க,
இந்த
அறிவற்ற
மக்கள்
என்னைப்
பார்த்துச்
சிரிக்கின்றனர்.
அப்படிச்
சிரிக்க
காரணம்,
நான்
அனுபவித்த
துன்பங்களை
அவர்கள்
அனுபவிக்காததே!
கலைஞர் உரை:
காதல் நோயினால் வாடுவோரின் துன்பத்தை அனுபவித்தறியாதவர்கள்தான், அந்த நோயினால் வருந்துவோரைப் பார்த்து நகைப்பார்கள்.
திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….
✬✬✬அடுத்த பகுதியை வாசிக்க ... அழுத்துக...
✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக
0 comments:
Post a Comment