திருக்குறள் தொடர்கிறது…
113. காதற்
சிறப்புரைத்தல்
👉குறள் 1121:
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலேயி றூறிய நீர்.
மு.வ உரை:
மென்மையான
மொழிகளைப்
பேசு
கின்ற
இவளுடைய
தூய
பற்களில்
ஊறிய
நீர்
பாலுடன்
தேனைக்
கலந்தாற்
போன்றதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
என்னிடம்
மெல்லிதாகப்
பேசும்
என்
மனைவியின்
வெண்மையான
பற்களிடையே
ஊறிய
நீர்,
பாலோடு
தேனைக்
கலந்த
கலவை
போலும்!
கலைஞர் உரை:
இனியமொழி
பேசுகினற
இவளுடைய
வெண்முத்துப்
பற்களிடையே
சுரந்து
வரும்
உமிழ்நீர்,
பாலும்
தேனும்
கலந்தாற்போல்
சுவை
தருவதாகும்.
English Explanation:
The water which oozes from the white
teeth of this soft speeched damsel is like a mixture of milk and honey.
👉குறள் 1122:
உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொ டெம்மிடை நட்பு.
மு.வ உரை:
இம்
மடந்தையோடு
எம்மிடையே
உள்ள
நட்பு
முறைகள்,
உடம்போடு
உயிர்க்கு
உள்ள
தொடர்புகள்,
எத்தன்மையானவையோ
அத்தன்மையானவை.
சாலமன் பாப்பையா உரை:
என்
மனைவிக்கும்
எனக்கும்
இடையே
உள்ள
உறவு,
உடம்பிற்கும்
உயிருக்கும்
இடையே
எத்தகைய
உறவோ
அத்தகையது.
கலைஞர் உரை:
உயிரும்
உடலும்
ஒன்றையொன்று
பிரிந்து
தனித்தனியாக
இருப்பதில்லை;
அத்தகையதுதான்
எமது
உறவு.
English Explanation:
The love between me and this damsel
is like the union of body and soul.
👉குறள் 1123:
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற் கில்லை யிடம்.
மு.வ உரை:
என்
கண்ணின்
கருமணியில்
உள்ள
பாவையே
நீ
போய்
விடு,
யாம்
விரும்புகின்ற
இவளுக்கு
என்
கண்ணில்
இருக்க
இடம்
இல்லையே.
சாலமன் பாப்பையா உரை:
என்
கருமணிக்குள்
இருக்கும்
பாவையே!
நீ
அதை
விட்டுப்
போய்விடு;
நான்
விரும்பும்
என்
மனைவிக்கு
என்
கண்ணுக்குள்
இருக்க
இடம்
போதவில்லை.
கலைஞர் உரை:
நான்
விரும்புகின்ற
அழகிக்கு
என்
கண்ணிலேயே
இடம்
கொடுப்பதற்காக
என்
கண்ணின்
கருமணியில்
உள்ள
பாவையே!
அவளுக்கு
இடமளித்து
விட்டு
நீ
போய்விடு!
English Explanation:
O you image in the pupil (of my eye)! depart; there is no
room for (my) fair-browed beloved.
👉குறள் 1124:
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.
மு.வ உரை:
ஆராய்ந்து
அணிகலன்களை
அணிந்த
இவள்
கூடும்
போது
உயிர்க்கு
வாழ்வு
போன்றவள்,
பிரியும்
போது
உயிர்க்கு
சாவு
போன்றவள்.
சாலமன் பாப்பையா உரை:
என்
மனைவி,
நான்
அவளுடன்
கூடும்போது
உயிருக்கு
உடம்பு
போன்றிருக்கிறாள்.
அவளைப்
பிரியும்போது
உயிர்
உடம்பை
விட்டுப்
பிரிவது
போன்றிருக்கிறாள்.
கலைஞர் உரை:
ஆய்ந்து
தேர்ந்த
அரிய
பண்புகளையே
அணிகலனாய்ப்
பூண்ட
ஆயிழை
என்னோடு
கூடும்போது,
உயிர்
உடலோடு
கூடுவது
போலவும்,
அவள்
என்னைவிட்டு
நீங்கும்போது
என்னுயிர்
நீங்குவது
போலவும்
உணருகிறேன்.
English Explanation:
My fair-jewelled one resembles the
living soul (when she is in union with me), the dying soul when she leaves me.
👉குறள் 1125:
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.
மு.வ உரை:
போர்
செய்யும்
பண்புகளை
உடைய
இவளுடைய
பண்புகளை
யான்
மறந்தால்
பிறகு
நினைக்க
முடியும்
ஆனால்
ஒரு
போதும்
மறந்ததில்லையே.
சாலமன் பாப்பையா உரை:
ஒளியுடன்
கூடிய
கண்களை
உடைய
என்
மனைவியின்
குணங்களை
நான்
மறந்தால்
அல்லவா
அவளை
நினைப்பதற்கு?
மறப்பதும்
இல்லை.
அதனால்
நினைப்பதும்
இல்லை.
கலைஞர் உரை:
ஒளி
கொண்டிருக்கும்
விழிகளையுடைய
காதலியின்
பண்புகளை
நினைப்பதேயில்லை;
காரணம்
அவற்றை
மறந்தால்
அல்லவா
நினைப்பதற்கு.
English Explanation:
If I had forgotten her who has
bright battling eyes, I would have remembered (thee); but I never forget her
(Thus says he to her maid).
👉குறள் 1126:
கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார்
நுண்ணியர்எம் காத லவர்.
மு.வ உரை:
எம்
காதலர்
எம்
கண்ணுள்ளிருந்து
போக
மாட்டார்,
கண்ணை
மூடி
இமைத்தாலும்
அதனால்
வருந்த
மாட்டார்,
அவர்
அவ்வளவு
நுட்பமானவர்.
சாலமன் பாப்பையா உரை:
என்
அன்பர்
என்
கண்ணை
விட்டுப்
போகமாட்டிடார்;
ஒருவேளை
நான்
அறியாமல்
இமைத்தால்
வருந்தவும்
மாட்டார்.
பிறர்
அறிய
முடியாத
நுட்பத்
தன்மையர்
அவர்.
கலைஞர் உரை:
காதலர்,
கண்ணுக்குள்ளிருந்து
எங்கும்
போக
மாட்டார்;
கண்ணை
மூடி
இமைத்தாலும்
வருந்த
மாட்டார்;
காரணம்,
அவர்
அவ்வளவு
நுட்பமானவர்.
English Explanation:
My lover would not depart from mine
eyes; even if I wink, he would not suffer (from pain); he is so ethereal.
👉குறள் 1127:
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக் கறிந்து.
மு.வ உரை:
எம்
காதலர்
கண்ணினுள்
இருக்கின்றார்,
ஆகையால்
மை
எழுதினால்
அவர்
மறைவதை
எண்ணிக்
கண்ணுக்கு
மையும்
எழுதமாட்டோம்.
சாலமன் பாப்பையா உரை:
என்
கண்ணுக்குள்
அவர்
இருப்பதால்
கண்ணுக்கு
மை
தீட்டும்
நேரம்
அவர்
மறைய
நேரும்
என்பதை
அறிந்து
மையும்
தீட்டமாட்டேன்.
கலைஞர் உரை:
காதலர்
கண்ணுக்குள்ளேயே
இருக்கிற
காரணத்தினால்,
மைதீட்டினால்
எங்கே
மறைந்துவிடப்
போகிறாரோ
எனப்
பயந்து
மை
தீட்டாமல்
இருக்கிறேன்.
English Explanation:
As my lover abides in my eyes, I
will not even paint them, for he would (then) have to conceal himself.
👉குறள் 1128:
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து.
மு.வ உரை:
எம்
காதலர்
நெஞ்சினுள்
இருக்கின்றார்,
ஆகையால்
சூடான
பொருளை
உண்டால்
அவர்
வெப்பமுறுதலை
எண்ணிச்
சூடான
பொருளை
உண்ண
அஞ்சு
கின்றோம்.
சாலமன் பாப்பையா உரை:
என்னவர்
என்
நெஞ்சிலேயே
வாழ்வதால்
சூடாக
உண்டால்
அது
அவரைச்
சுட்டுவிடும்
என்று
எண்ணி
உண்ணப்
பயப்படுகிறேன்.
கலைஞர் உரை:
சூடான
பண்டத்தைச்
சாப்பிட்டால்
நெஞ்சுக்குள்
இருக்கின்ற
காதலருக்குச்
சுட்டுவிடும்
என்று
அஞ்சுகின்ற
அளவுக்கு
நெஞ்சோடு
நெஞ்சாகக்
கலந்திருப்பவர்களே
காதலர்களாவார்கள்.
English Explanation:
As my lover is in my heart, I am
afraid of eating (anything) hot, for I know it would pain him.
👉குறள் 1129:
இமைப்பிற் கரப்பாக் கறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னுமிவ் வூர்.
மு.வ உரை:
கண்
இமைத்தால்
காதலர்
மறைந்து
போதலை
அறிகின்றேன்,
அவ்வளவிற்கே
இந்த
ஊரார்
அவரை
அன்பில்லாதவர்
என்று
சொல்லுவர்.
சாலமன் பாப்பையா உரை:
என்
கண்கள்
இமைத்தால்
உள்ளிருக்கும்
என்னவர்
மறைவதை
அறிந்து
நான்
கண்களை
இமைப்பதில்லை.
இதை
விளங்கிக்
கொள்ளாத
உறவினர்
அவரை
அன்பற்றவர்
என்கின்றனர்.
கலைஞர் உரை:
கண்ணுக்குள்
இருக்கும்
காதலர்
மறைவார்
என
அறிந்து
கண்ணை
இமைக்காமல்
இருக்கின்றேன்;
அதற்கே
இந்த
ஊர்
தூக்கமில்லாத
துன்பத்தை
எனக்குத்
தந்த
அன்பில்லதாவர்
என்று
அவரைக்
கூறும்.
English Explanation:
I will not wink, knowing that if I
did, my lover would hide himself; and for this reason, this town says, he is
unloving.
👉குறள் 1130:
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்ஏதிலர் என்னுமிவ் வூர்.
மு.வ உரை:
காதலர்
எப்போதும்
என்
உள்ளத்தில்
மகிழ்ந்து
வாழ்கின்றார்,
ஆனால்
அதை
அறியாமல்
பிரிந்து
வாழ்கின்றார்,
அன்பில்லாதவர்
என்று
இந்த
ஊரார்
அவரைப்
பழிப்பர்.
சாலமன் பாப்பையா உரை:
என்னவர்
எப்போதும்
என்
நெஞ்சிற்குள்ளேயே
மகிழ்ந்து
இருக்கிறார்.
இதை
அறியாத
உறவினர்
அவருக்கு
அத்தனை
அன்பு
இல்லை
என்கின்றனர்.
கலைஞர் உரை:
காதலர்,
எப்போதும்
உள்ளதோடு
உள்ளமாய்
வாழ்ந்து
கொண்டிருக்கும்போது,
அதை
உணராத
ஊர்மக்கள்
அவர்கள்
ஒருவரையொருவர்
பிரிந்து
வாழ்வதாகப்
பழித்துரைப்பது
தவறு.
English Explanation:
My lover dwells in my heart with perpetual delight; but the
town says he is unloving and (therefore) dwells afar.
திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….
✬✬✬அடுத்த பகுதியை வாசிக்க ... அழுத்துக...
✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக
0 comments:
Post a Comment