திருக்குறள் தொடர்கிறது…
117. படர்மெலிந்
திரங்கல்
👉குறள் 1161:
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை தறைப்பவர்க்கூற்றுநீர் போல மிகும்.
மு.வ உரை:
இக்
காமநோயைப்
பிறர்
அறியாமல்
யான்
மறைப்பேன்,
ஆனால்
இது
இறைப்பவர்க்கு
ஊற்று
நீர்
மிகுவது
போல்
மிகுகின்றது.
சாலமன் பாப்பையா உரை:
என்
காதல்
துன்பத்தை
மற்றவர்
அறிந்துவிடக்கூடாது
என்று
மறைக்கவே
செய்தேன்;
ஆனாலும்
இறைக்க
இறைக்க
ஊற்றுநீர்
பெருகுவது
போல
மறைக்க
மறைக்க
என்
துன்பமும்
பெருகவே
செய்கிறது.
கலைஞர் உரை:
இறைக்க
இறைக்கப்
பெருகும்
ஊற்றுநீர்
போல,
பிறர்
அறியாமல்
மறைக்க
மறைக்கக்
காதல்
நோயும்
பெருகும்.
English Explanation:
I would hide this pain from others;
but it (only) swells like a spring to those who drain it.
👉குறள் 1162:
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்குரைத்தலும் நாணுத் தரும்.
மு.வ உரை:
இக்
காமநோயைப்
பிறர்
அறியாமல்
முற்றிலும்
மறைக்கவும்
முடியவில்லை,
நோய்
செய்த
காதலர்க்குச்
சொல்வதும்
நாணம்
தருகின்றது.
சாலமன் பாப்பையா உரை:
இந்தத்
துன்பத்தை
என்னால்
மறைக்கவும்
முடியவில்லை.
துன்பத்தைத்
தந்த
இவருக்கு
(எழுத்தில்
தொலைபேசியில்)
இதைச்
சொல்லவும்
வெட்கமாக
இருக்கிறது.
கலைஞர் உரை:
காதல்
நோயை
என்னால்
மறைக்கவும்
முடியவில்லை;
இதற்குக்
காரணமான
காதலரிடம்
நாணத்தால்
உரைக்கவும்
முடியவில்லை.
English Explanation:
I cannot conceal this pain, nor can
I relate it without shame to him who has caused it.
👉குறள் 1163:
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென்
நோனா உடம்பின் அகத்து.
மு.வ உரை:
துன்பத்தைப்
பொருக்காமல்
வருந்துகின்ற
என்
உடம்பினிடத்தில்
உயிரே
காவடித்தண்டாகக்
கொண்டு
காமநோயும்
நாணமும்
இருப்பக்கமாக
தொங்குகின்றன.
சாலமன் பாப்பையா உரை:
காதல்
துன்பத்தையும்,
அவரிடம்
சொல்ல
முடியாமல்
நான்படும்
வெட்கத்ததையும்
தாங்க
முடியாத
என்
உடம்பில்,
என்
உயிரையே
காவடித்
தண்டாகக்
கொண்டு
அதன்
ஒரு
புறத்தில்
காதல்
நோயும்,
மறுமுனையில்
வெட்கமும்
தொங்குகின்றன.
கலைஞர் உரை:
பிரிவைத்
தாங்கமுடியாது
உயிர்
துடிக்கும்
என்
உடலானது,
ஒருபுறம்
காதல்
நோயும்
மறுபுறம்
அதனை
வெளியிட
முடியாத
நாணமும்
கொண்டு
காவடி
போல
விளங்குகிறது.
English Explanation:
(Both) lust and shame, with my soul
for their shoulder pole balance themselves on a body that cannot bear them.
👉குறள் 1164:
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.
மு.வ உரை:
காமநோயாகிய
கடல்
இருக்கின்றது.
ஆனால்
அதை
நீந்திக்கடந்து
செல்வதற்கு
வேண்டிய
காவலான
தோணியோ
இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
காதல்
துன்பம்,
வெட்கம்,
இவ்விரண்டிலும்
என்னுள்
மிகுந்திருப்பது
காதல்
துன்பம்
என்னும்
கடலே;
அதைக்
கடக்கப்
பாதுகாப்பான
படகுதான்
இல்லை.
கலைஞர் உரை:
காதல்
கடல்போலச்
சூழ்ந்துகொண்டு
வருத்துகிறது
ஆனால்
அதை
நீந்திக்
கடந்து
செல்லப்
பாதுகாப்பான
தோணிதான்
இல்லை.
English Explanation:
There is indeed a flood of lust; but
there is no raft of safety to cross it with.
👉குறள் 1165:
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.
மு.வ உரை:
( இன்பமான)
நட்பிலேயே
துயரத்தை
வரச்
செய்வதில்
வல்லவர்.
( துன்பம்
தரும்
பகையை
வெல்லும்)
வலிமை
வேண்டும்போது
என்ன
ஆவாரோ?
சாலமன் பாப்பையா உரை:
இன்பம்
தருவதற்குரிய
நட்பிலேயே
துன்பத்தைத்
தரம்
இவர்,
பகைமையில்
என்னதான்
செய்வாரோ?
கலைஞர் உரை:
நட்பாக
இருக்கும்போதே
பிரிவுத்துயரை
நமக்குத்
தரக்கூடியவர்,
பகைமை
தோன்றினால்
எப்படிப்பட்டவராய்
இருப்பாரோ?
English Explanation:
What will they prove when angry tempests lower?
👉குறள் 1166:
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.
மு.வ உரை:
காமம்
மகிழ்விக்கும்போது
அதன்
இன்பம்
கடல்
போன்றது;
அது
வருத்தும்போது
அதன்
துன்பமோ
கடலைவிடப்
பெரியது.
சாலமன் பாப்பையா உரை:
காதல்
மகிழ்ச்சி
கடல்போலப்
பெரிது;
ஆனால்
பிரிவினால்
அது
துன்பம்
செய்யத்
தொடங்கிவிட்டால்
அத்துன்பம்
கடலைக்
காட்டிலும்
பெரிது.
கலைஞர் உரை:
காதல்
இன்பம்
கடல்
போன்றது
காதலர்
பிரிவு
ஏற்படுத்தும்
துன்பமோ,
கடலைவிடப்
பெரியது.
English Explanation:
The pleasure of lust is (as great
as) the sea; but the pain of lust is far greater.
👉குறள் 1167:
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.
மு.வ உரை:
காமம்
என்னும்
வெள்ளத்தை
நீந்தியும்
அதன்
கரையை
யான்
காணவில்லை;
நள்ளிரவிலும்
யான்
தனியே
இருக்கின்றேன்.
சாலமன் பாப்பையா உரை:
காதல்
துன்பமாகிய
கடலை
நீந்தியும்
என்னால்
கரை
காண
முடியவில்லை.
நள்ளிரவுப்
பொழுதினும்
உறங்காமல்
நான்
தனியாகவே
இருக்கிறேன்.
கலைஞர் உரை:
நள்ளிரவிலும்
என்
துணையின்றி
நான்
மட்டுமே
இருக்கிறேன்;
அதனால்,
காதலின்பக்
கடும்
வெள்ளத்தில்
நீந்தி,
அதன்
கரையைக்
காண
இயலாமல்
கலங்குகிறேன்.
English Explanation:
I have swam across the terrible
flood of lust, but have not seen its shore; even at midnight I am alone; still
I live.
👉குறள் 1168:
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்ல தில்லை துணை.
மு.வ உரை:
இந்த
இராக்காலம்
இரங்கத்தக்கது;
எல்லா
உயிரையும்
தூங்கச்
செய்துவிட்டு
என்னை
அல்லாமல்
வேறு
துணை
இல்லாமல்
இருக்கின்றது.
சாலமன் பாப்பையா உரை:
பாவம்
இந்த
இரவு!
இது
எல்லா
உயிர்களையும்
தூங்கச்
செய்துவிட்டுத்
தனியாகவே
இருக்கிறது.
இதற்கு
என்னைத்
தவிர
வேறு
துணை
இல்லை!
கலைஞர் உரை:
`இரவே!
உலகில்
உள்ள
எல்லா
உயிர்களையும்
நீ
உறங்கச்
செய்துவிட்டுப்
பாவம்
இப்போது
என்னைத்தவிர
வேறு
துணையில்லாமல்
இருக்கிறாய்.'
English Explanation:
The night which graciously lulls to sleep all living
creatures, has me alone for her companion.
👉குறள் 1169:
கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்நெடிய கழியும் இரா.
மு.வ உரை:
( பிரிந்து
துன்புறுகின்ற)
இந்நாட்களில்
நெடுநேரம்
உடையனவாய்க்
கழிகின்ற
இராக்காலங்கள்,
பிரிந்த
கொடியவரின்
கொடுமையை
விடத்
தாம்
கொடியவை.
சாலமன் பாப்பையா உரை:
இப்போதெல்லாம்
இரவுகள்
கழிவதற்கு
நெடும்பொழுது
ஆகிறது;
என்னைப்
பிரிந்து
போன
என்
கணவரின்
கொடுமையிலும்
இவை
மிகக்
கொடுமையாக
இருக்கின்றன.
கலைஞர் உரை:
இந்த
இரவுகள்
நீண்டுகொண்டே
போவதுபோல்
தோன்றும்
கொடுமை
இருக்கிறதே
அது
காதலரின்
பிரிவால்
ஏற்படும்
கொடுமையைவிடப்
பெரிதாக
உள்ளது.
English Explanation:
The long nights of these days are
far more cruel than the heartless one who is torturing me.
👉குறள் 1170:
உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்நீந்தல மன்னோவென் கண்.
மு.வ உரை:
காதலர்
உள்ள
இடத்திற்கு
என்
மனத்தைப்போல்
செல்ல
முடியுமானால்,
என்
கண்கள்
இவ்வாறு
வெள்ளமாகிய
கண்ணீரில்
நீந்த
வேண்டியதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
என்
மனம்
போலவே
என்
கண்களும்
என்னவர்
இருக்கும்
ஊருக்குச்
செல்ல
முடியுமானால்,
அவை
கண்ணீர்
வெள்ளத்தில்
நீந்தமாட்டா.
கலைஞர் உரை:
காதலர்
இருக்குமிடத்துக்கு
என்
நெஞ்சத்தைப்
போலச்
செல்ல
முடியுமானால்,
என்
கருவிழிகள்,
அவரைக்
காண்பதற்குக்
கண்ணீர்
வெள்ளத்தில்
நீந்த
வேண்டிய
நிலை
ஏற்பட்டிருக்காது.
English Explanation:
Could mine eyes travel like my thoughts to the abode (of my
absent lord), they would not swim in this flood of tears.
திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….
✬✬✬அடுத்த பகுதியை
வாசிக்க
... அழுத்துக...
✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக
0 comments:
Post a Comment