வெளிச்சம் காட்டி இருட்டாக்கியது ஏனோ?

 


"அன்பே! உயிரே!! விட்டுப் பிரிகிறேன்

அருகில் வந்து அவமானப் படாமல்

அறம் அற்றவளாய் பார்ப்பதை விட  

அழகியே அறிவுடன் நானே விலகுகிறேன்!"

 

"நேற்று வரை உன்னை நம்பினேன்

நேசம் கொண்டவளாய் நீயும் காட்டினாய்

நேரார் போல் இன்று உதைக்கிறாய்

நேர்மை கொண்டு நானே ஒதுங்குகிறேன்!"

 

"குரங்கு போல் நீ இருப்பாயோ

மரம் விட்டு மரம் தாவுகிறாயோ

கரம் நீட்டி சந்திக்கக் கூப்பிட்டாயே  

தூரம் சொல்லி விலகியது சரியாச்சோ?"  

 

"அன்பு கொட்டி பாசாங்காய் அழைத்தாயோ  

அழகு காட்டி பொழுது போக்கினியோ

அடுத்தவனை தேடும் வரை தற்காலிகமோ

அடுப்புக்கு பொறுக்கும் விறகோ நான்!" 

 

"ஆசை தீர்க்க நண்பா என்றாயோ

ஆடி அடங்க வேறு தேடினியோ

ஆழமான நட்பென ஏமாந்தது நானோ   

ஆண்டாள் மாலையில் வண்டுகள் மேயுதோ?"

 

"வெற கொடிக்கப் போற பொண்ணே

வெட்கம் ஏது சொல்லு பெண்ணே

வெறுமையை எனக்கு தந்தது எனோ

வெளிச்சம் காட்டி இருட்டாக்கியது ஏனோ ?"

 

(நேரார் - பகைவர்; foes)

 

:-கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்

0 comments:

Post a Comment