இறைச்சிமேல் இராமனின் இச்சை

ராஜ ரிஷிகளின் சம்மதத்தோடு நடைபெற்ற  வேட்டையாடும் பழக்கம் உலகின் வேறு எவற்றாலும் வெல்ல முடியாததாக இருந்துள்ளது வேட்டையில் அவனுக்கிருந்த ஆர்வம், மாமிசம் உண்பதில் அவனுக்கு இருந்த அதீதமான விருப்பத்தையே காட்டுகிறது.
லட்சுமணனையும் வானப் பிரஸ்த வாழ்க்கை வாழச் சொல்லிக் கங்கையைக் கடந்தான். நடு ஆற்றில் வரும்போது, நதியை வணங்கி சீதை தன் சங்கல்பத்தைக் கூறினாள்:

காட்டிலிருந்து பத்திரமாகத் திரும்பி வந்தால் நதிக்கு 1000 குடம் மதுவையும் (ஒயின்) மாமிச உணவும் படைப்பதாக உறுதியளித்தாள். (அயோத்யாகாண்டம் சர்க்கம் 52 சுலோகம் 89)
நதியின் தெற்குக் கரையை அடைந்தபோது, அவள் இதை உறுதிப்படுத்தினாள். சகோதரர்கள் இரவுப் பட்டினி, பசியால் வாடினர். வளர் பருவத்தில் இருந்த அவர்களின் (ராமனுக்கு அப்போது வயது 17தான்) வலுவான உடல் வழக்கமான உணவுக்காக ஏங்கியது; காட்டில் இருக்கும் நிலை தூண்டவே, நான்கு விலங்குகளை வேட்டையாடிக் கொன்றனர்; ஒரு காட்டுப் பன்றி, புள்ளிமான், சாம்பார் மான், ருரு (எனும் ஒருவகை விலங்கு) ஆகியவற்றைக் கொன்று அவற்றின் மாமிசத்தை எடுத்துச் சமைத்து ஒரு மரத்தடியைத் தம் வீடாக்கித் தின்றனர் (அயோத்யா காண்டம். சர்க்கம் 52, சுலோகம் 102)

சித்திர கூடத்தில் ராமனுடன் காட்டாற்றுக் கரைகளில் உலவி வந்த சீதையைத் திருப்திப்படுத்த மாமிச உணவைக் கொடுத்து ராமன் கூறினான், ``இது ஊட்டம்மிக்க உணவு, ருசியான, திருப்பத்தைத் தரக்கூடியது (அயோத்யா காண்டம், சர்க்கம் 96 சுலோகம் 1)

ராமனிடம் கபந்தன் சொன்னவற்றின்படி `கி போன்ற மாமிசம் மிக்க நீர்ப் பறவைகளும் மீன்களும் ராமனுக்கு மிகவும் பிடித்தமானவை. பம்பா ஏரியில் தெளிந்த நீரில் நீந்தி விளையாடும் மீன்களைக் கூரிய அம்புகளை எய்து லட்சுமணன் பிடித்து வரவேண்டும் என்று கபந்தன் விரும்பினான்....
அதோடு போகவில்லை அவர்களின் மாமிச மோகம்! நீர்க்கோழி (கி.)களில் இறைச்சி அதிகமாக இருக்குமாம். ஆகவே அவையும் மீன்களும் மிகவும் பிடிக்குமாம்.

கபந்தன் என்பான் லட்சுமணனிடம் கூறுகிறான் - தெள்ளிய ஆற்று நீரில் பம்பா ஏரியில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. அவற்றை உன் கூரிய அம்பை எய்துக் கொன்று ருசி பாருங்கள், ராமனுக்கு ரொம்ப ஆசையாசன உணவு இது என்கிறான் (நூலின் பக்கங்கள் 131, 132).

இத்துடன் முடியவில்லை. ``இறைச்சிப் படலம்! விருந்தினர்களுக்கு, அவர்கள் வேண்டாத விருந்தாளியாக இருந்தாலும், இறைச்சிச் சாப்பாடு போட்டிருக்கிறார்கள்.

தனியே இருந்த சீதையின் குடிலுக்கு மாறு வேடத்தில் ராவணன் வருகிறான்.

அவனை வரவேற்றுப் பேசி சீதை கூறுகிறாள்
- சவுகரியமாக இருங்கள், என் கணவர் விரைவில் வந்து விடுவார். காட்டுப் பொருள்கள் (புஷ்கலம், வன்யா) கொண்டு வருவார். மான்கறி கொண்டு வருவார்; இஷ்னுமான் (முதலை முட்டை சாப்பிடும் விலங்கு) காட்டுப் பன்றிகளைக் கொன்று அவற்றின் இறைச்சியைக் கொண்டு வருவார் (ஆரண்ய காண்டம், சர்க்கம் 47, பாடல்கள் 22,23).

யமுனை நதியின் தெற்குக் கரையில் உள்ள ஆலமரத்தைத் தாண்டி காட்டினுள் சென்று வேட்டையாடி ஏராளமான (எண்ணெய்) மான்களை வேட்டையாடி வந்தனர் (அயோத்யா காண்டம், சர்க்கம் 55, பாடல் 32) (நூலின் பக்கங்கள் 139, 141).

இராமன் கறி தின்றதை, ஏதோ ஓரிடத்தில் எழுதினார் என்றில்லாமல் பலப்பல இடங்களில் குறித்துள்ளார்

வால்மீகி ராமன் இறைச்சியையே விரும்பி உண்ணும் இளைஞன் பல இடங்களில் வலியுறுத்தி நிக்கிறார்.

இந்த லட்சணத்தில் `ராமனை எதோ சுத்தப் சுயம்பிரகாசம் என்பது போலச் சிலர் இங்கே பேசுகிறார்கள், இன்றைக்கும் பேசுகிறார்கள் என்றால், இவர்களை என்ன பெயரிட்டழைப்பது.

இராவணன் சிறந்த சைவத் தமிழ் மன்னன்..


கம்பன் சிறந்த தமிழ் கவிஞர் வடநாட்டவனை கடவுளாக சித்தரித்து தமிழர்களுக்கு பெரும் துரோகம் செய்து விட்டான்.

குடும்பங்கள் மற்றும் திருமணங்களின் பரிணாமம்' / பகுதி: 08



மனித சமுதாய வரலாற்றின் படி பார்த்தால், ஒருவனுக்கு ஒருத்தி என்ற நாகரிகம் பல படிகளைக் கடந்த பின்னரே வந்திருக்கிறது. இது ஒருத்திக்கு ஒருவன் என்ற ஒரே நிலையை, கற்பு வளையமாக மாற்றி விட்ட  நெறியில் இருந்து, படிப்படியாக உள்வாங்க பட்டதாகும்.

 

மகாபாரதம் ஆதி பருவத்தில், ரிஷி தீர்க்கதமஸ் பற்றிய ஒரு கதை வருகிறது. இவர் பிறவியிலேயே பார்வையற்றவர். பார்வையற்றவராக இருந்ததால், தீர்க்கதமஸை திருமணம் செய்து கொள்ள யாரும் முன்வரவில்லை. என்றாலும் ப்ரத்வேஷீ என்ற பெண், அவருடைய வேத அறிவைக் கண்டு அவரைத் திருமணம் செய்தார். ரிஷி தீர்க்கதமஸ் எப்போதும் மனைவியுடன் இன்பம் துய்ப்பதில் ஒரே கண்ணும் கருத்துமாக இருந்தார், இதனால், கவுதமர் உட்பட பல குழந்தைகளை ஒவ்வொரு ஆண்டும் பெற்றாள். எப்போதும் வயிற்றில் பிள்ளையைச் சுமந்து இருப்பதை எண்ணி ப்ரத்வேஷீக்கு வெறுப்பு உண்டானது. எனவே அவரை விட்டகல அல்லது அவரை அகற்ற முடிவு செய்தாள். அப்போது ரிஷி தீர்க்கதமஸ் “இன்றிலிருந்து ஒரு பெண்ணுக்கு, கணவனாகிய ஒரே ஆண்தான் எல்லாமும். அவன் உயிருடன் இருந்தாலும், இல்லா விட்டாலும் அவள் மாற்றானை நாடலாகாது. இந்த விதியை அவள் மீறினால், குலத்தில் இருந்து விலக்கப் படுவாள்’’ என்று ஒரு விதி செய்தார் எனப்படுகிறது. அதாவது கணவன்-மனைவி என்ற உறவில், ஆணின் ஆதிக்கத்தைப் பெண் பொறுத்துத்தான் ஆக   வேண்டும். இல்லையேல் சபிக்கப்படுவது உறுதி என்ற ஒரு புராண நீதியை இங்கு காண்கிறோம்.  அது மட்டும் அல்ல, சங்க காலத்தில் அல்லது சங்கமருவிய காலத்தில் கூட  ஒருத்திக்கு ஒருவன் என்ற நிலை இருந்ததையும் [உதாரணம் கோவலன், கண்ணகி மாதவி / முருகன், வள்ளி, தெய்வானை] ஒரு பக்கக் கற்பு நெறியும், கைம்மை [widowhood] நெறியுமே, தீவிரமாக்கப்பட்ட நிலையைக் காணமுடிகிறது.

 

 

விவசாய சமுதாயம் உலகில் முதல் எழுச்சி பெறும் பொழுது, உதாரணமாக, சுமேரியாவில், சமுதாயம் ஒரு நிலையான, ஓர் இடத்தில் தொடர்ந்து வாழக் கூடிய அமைப்பாக மாறியது. அதனால், குடும்ப வாரிசின் அல்லது குடும்ப நீட்சியின் தொடர்ச்சியை உறுதி செய்து, நிலையான சமூக அமைப்பை அந்த சமூகம் கோர வேண்டிய சூழ்நிலை உருவாகியது [the society demanded for stable arrangements because it ensured the continuation of the family line and provided social stability]. அதாவது திருமணத்தின் முதன்மை நோக்கம் உயிரியல் ரீதியாக அது அவரின் குழந்தை என்பதை உறுதிப் படுத்துவதே ஆகும் [to ensure that the man’s children are biologically his]. எனவே, சுமேரியாவின் தொடர்ச்சியான பண்டைய பாபிலோனில் [Babylon] பாலியல் உண்மையில் மிகவும் தாராளமாக பரந்த கொள்கையுடன் இருந்தாலும், ஒருத்திக்கு ஒருவன் என்ற ரீதியில் மட்டுமே அங்கு காணப்பட்டது. ஆனால், திருமணம் ஒரு சமூக செயல்பாடாக, கடுமையாக, நெகிழ்வு தன்மையற்று கட்டுப்படுத்தப் பட்டது [marriage was rigidly stiff and controlled, as a social function]. சுமேரியன் காதல் பாடல்கள் இவ்வற்றை உறுதி படுத்துகின்றன. உதாரணமாக, கிமு 2000 ஆண்டுகளுக்கு முன் செய்யுள் வடிவத்தில் களிமண் பலகைகளில் எழுதப்பட்ட, உலகில் தோன்றிய முதல் இலக்கியமான கில்கமெஷ் காப்பியத்தில் [Epic of Gilgamesh/ written c. 2150 - 1400 BCE], முக்கிய கதாபாத்திரம் அங்கு கூறிய ஒன்றை ஒரு மேற்கோளாக காட்டலாம்.

உங்கள் வயிறு நிரம்பட்டும்,

உங்கள் உடைகள் சுத்தமா இருக்கட்டும்,

உங்கள் உடல், தலை நீராடட்டும், 

இரவும் பகலும் மகிழுங்கள்,

ஆடி பாடி மகிழுங்கள்;

உங்கள் கையைப் பிடிக்கும் குழந்தையைப் பாருங்கள்,

உங்கள் மனைவி உங்கள் மடியில் மகிழ்ச்சியடையட்டும் !

இதுதான் மனிதர்களின் விதி”

[“Let your belly be full,

your clothes clean,

your body and head washed;

enjoy yourself day and night,

dance, sing and have fun;

look upon the child who holds your hand,

and let your wife delight in your lap!

This is the destiny of mortals.”]

ஆறாம் நூற்றாண்டு காரைக்காலம்மையின் [இயற் பெயர் புனிதவதி] வரலாற்றை நாம் பார்ப்போமாயின், இவர் சிறுவயது முதலே சிவனை வழி படுவதிலும் சிவனடியார்களைப் போற்றிப் பாதுகாப் பதிலும் ஆர்வம் உடையவராக விளங்கினார். இவர் மணப் பருவம் எய்தியதும் மிகப் பெரிய வணிகராகிய தனதத்தன் மகன் பரமதத்தனுக்கு, இவரை மணம் செய்து கொடுத்தனர் பெற்றோர்கள். ஒரு முறை தான் மனைவியிடம் ஒருவர் மூலம் அனுப்பிவைத்த இரு மாங்கனிகளில் ஒன்றை உண்ட பரமதத்தன் சுவை மிகுதி காரணமாக மற்ற மாங்கனியையும் உண்ணக் கேட்கின்றான். ஆனால் அதை ஏற்கனவே காரைக்காலம்மை சிவனடியாருக்குத் கொடுத்து விட்டார். தம் கணவனிடம் உண்மையைக் கூறத் தயங்கிய காரைக்காலம்மை, [எந்த ஒரு சிறு காரியமும் கணவன் சொற் கேளாமல், அவள் செய்யலாகாது என்ற உறுத்தலோ?  - இங்கு ஒரு குடும்பத்தில் மனைவியின் நிலையை காண்கிறோம்]  இறைவனிடம் வேண்டி, மாங்கனி ஒன்று பெற்று கணவரிடம் கொடுக்கிறார். என்றாலும் உண்மை கணவருக்கு பின் தெரிய வருகிறது. அதன் பின் கணவன் அவளை விட்டு மதுரைக்குச் சென்று, வேறு ஒரு பெண்ணை மணந்து, புதிய வாணிபம் தொடங்கினான் என்று வரலாறு கூறுகிறது. கணவன் வெறுத்தாலும், மனைவி அவனை விட்டு விலகலாமா, எனவே அவளைக் கணவரிடம் அழைத்துச் சென்றனர். ஆனால் அந்தக் கணவன் அவளைத் தன் மனைவியாக, தனக்கு அடங்க வேண்டியவளாகக் கருதவில்லை. அவள் காலில் தன் புது மனைவி மகளோடு விழுந்து வணங்கினான்.  சிவபக்தி, அவளுக்கு உலகில் திருமண வாழ்க்கை இல்லை என்று நிர்ணயித்து விட்டதை காண்கிறோம். பூமியில் ஓராடவனுக்குத் திருமண விதிப்படி உரிமையான பிறகு, அந்தப் பெண், ஆண்டவனுக்கும் கூடத் தன் உடலை, உள்ளத்தை  உரிமையாக்க முடியாது என்ற கற்பியல் மிக அழுத்தமாக இந்த வரலாற்றில் அறிவுறுத்தப் படுகிறது.

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்

பகுதி 09 தொடரும்... Theebam.com: குடும்பங்கள் மற்றும் திருமணங்களின் பரிணாமம்' / பகு...9:

ஆரம்பத்திலிருந்து வாசிக்கத்  தொடுங்கள் - Theebam.com: 'குடும்பங்கள் / திருமணங்களின் பரிணாமம்' / பகுதி: 01: 

கொரோனா ஓமிக்ரோன்-பூஸ்டர்-எப்படி?

 


கொரோனா வைரஸ்: ஒமிக்ரானுக்கு எதிராக இரு டோஸ் தடுப்பூசி வேலை செய்யவில்லையா? பூஸ்டர் சிறப்பாக வேலை செய்கிறதா?

சில தடுப்பூசிகள் இரு டோஸ் செலுத்திக் கொண்ட பிறகும் ஒமிக்ரான் திரிபுக்கு எதிராக கிட்டத்தட்ட எந்த வித பாதுகாப்பும் வழங்கவில்லை என்றாலும், தீவிர உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயத்தை கணிசமாக குறைக்க வேண்டும்.

 

தற்போது புழக்கத்தில் உள்ள எல்லா தடுப்பூசிகளும் ஏறாத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு முன் பரவிக் கொண்டிருந்த கொரொனா திரிபுக்கு எதிராக செயல்பட உருவாக்கப்பட்டது.

 

எனவே, மூன்றாவது டோஸ் தடுப்பூசி அல்லது பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வது பாதுகாப்பு விவகாரத்தில் ஏதேனும் மாற்றத்தைக் கொடுக்குமா அல்லது ஒமிக்ரான் திரிபு கொரோனா தடுப்பூசிகளின் பாதுகாப்பை கடந்துவிட்டதா?

 

அதிர்ஷ்டவசமாக, நமக்குச் செலுத்தப்படும் தடுப்பூசி மருந்து ஒரே மாதிரியானதாக இருந்தாலும், மனித உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்துக்கு பூஸ்டர் டோஸ் என்பது ஒரே மாதிரியான விளைவை ஏற்படுத்தாது.

 

மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின் உங்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பு மிக அதிகம்.

 

கொரோனா பள்ளி

கொரோனவுக்கு எதிராக போராடுவதை உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் கற்றுக் கொள்ள வேண்டும்.

 

உண்மையாகவே கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் போது, நோயெதிர்ப்பு மண்டலம் வைரஸை எதிர்கொள்ளப் பழகலாம். ஆனால் அது தவறாகச் செல்லும் அபாயம் அதிகம். தீவிர உடல் நலக்குறைவு ஏற்படும் அபாயமும் உள்ளது.

 

தடுப்பூசிகள் என்பது ஒரு பள்ளியைப் போன்றது. மனிதர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்துக்கு கொரோனா தொடர்பான கல்வியை பயிற்றுவிக்கும் ஒரு பாதுகாப்பான சூழல் அது.

 

முதல் டோஸ் தடுப்பூசி என்பது தொடக்கப் பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் கல்வி போன்றது, அது அடிப்படைகளை நோயெதிர்ப்பு மண்டலத்துக்கு கற்றுக் கொடுக்கிறது.

 

இரண்டாவது டோஸ் தடுப்பூசி நோயெதிர்ப்பு மண்டலத்தை மேனிலைப் பள்ளிக்கும், மூன்றாவது டோஸ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்புவதற்குச் சமமானது. எனவே நோயெதிர்ப்பு மண்டலத்துக்கு, கொரோனா வைரஸ் தொடர்பான புரிதலை ஆழப்படுத்தும்.

 

"நோயெதிர்ப்பு மண்டலத்துக்கு கொரோனா வைரஸ் தொடர்பான ஆழ்ந்த அறிவையும் புரிதலையும் ஏற்படுத்துகிறது" என நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் நச்சுயிரியல் நிபுணர் பேராசிரியர் ஜோனதன் பால் கூறினார்.

 

கொரோனா வைரஸை எதிர்க்கும் விவகாரத்தில் நன்கு பயிற்சி பெற்ற நோயெதிர்ப்பு அமைப்பு என்பது ஒமிக்ரான் திரிபுக்கு சிக்கலானது மற்றும் அதன் வளர்ச்சிக்கு எதிரான சூழல் என்கிறார் ஜோனதன் பால்.

 

இப்பயிற்சியில் ஆன்டிபாடிகள் என்கிற எதிர்ப்பான்கள் மிகப்பெரிய நன்மை பயக்கும் விஷயம்.

 

இந்த ஒட்டும் திறன் கொண்ட புரதங்கள், கொரோனா வைரஸின் வெளிப்புறத்தில் தன்னைத்தானே ஒட்டிக் கொள்கின்றன. வைரஸை அழிக்கும் எதிர்ப்பான்கள் (ஆன்டிபாடிகள்) கொரோனா வைரஸை செயலிழக்கச் செய்வதால், வைரஸால் உடலில் இருக்கும் செல்லுக்குள் நுழைய முடியாமல் போகிறது. கொரோனா வைரஸின் மீதுள்ள ஆன்டிபாடிக்கள், 'வைரஸைக் கொல்லுங்கள்' என குறிப்பிடும் நியான் விளக்கைப் போன்று செயல்படுகிறது.

 

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின், உடலிலுள்ள வைரஸை அழிக்கும் எதிர்ப்பான்கள், ஒமிக்ரான் திரிபுக்கு எதிராக மிகவும் குறைந்த செயல்திறனோடு இருப்பதாக பல ஆய்வக பரிசோதனைகள் மற்றும் நிஜ உலக தரவுகள் குறிப்பிடுகின்றன.

 

நீங்கள் எந்த வித பாதுகாப்புமின்றி நோய் தொற்றுக்கு காத்திருக்கும் நபராக இருப்பீர் என்கிறார் இம்பீரியல் காலேஜ் ஆஃப் லண்டனைச் சேர்ந்த நோயெதிர்ப்பியல் நிபுணர் பேராசிரியர் டேனி ஆல்ட்மென்.

 

மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம்.

 

ஒவ்வொரு டோஸ் தடுப்பூசியும், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தில் இருக்கும் ஆன்டிபாடிகளின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியைத் தூண்டுகின்றன. மேம்ட்ட ஆன்டிபாடிகள், வைரஸைத் தேடி இன்னும் உறுதியாக தன்னை இணைத்துக் கொள்கின்றன. இதை ஆங்கிலத்தில் Affinity Maturation என்கிறார்கள்.

 

"உங்கள் உடலில் உள்ள எதிர்ப்பான்கள் காலப்போக்கில் தங்களைப் புதுமைப்படுத்திக் கொள்ளும், நவீனப்படுத்திக்கொள்ளும்" என்கிறார் பேராசிரியர் ஆல்ட்மென்.

 

ஒருவேளை ஆன்டிபாடிகள் எனப்படும் நோய் எதிர்ப்பான்கள் கொரோனா வைரஸோடு இறுக்கமாக இணைய முடிந்தால், ஒமிக்ரான் திரிபுக்கு எதிர்ப்பான்களைக் கடப்பது சிரமமாக இருக்கும். ஒமிக்ரான் திரிபு அதிக பிறழ்வுகளைக் கொண்டது என்றாலும், அடிப்படையில் ஒரே மாதிரியான கொரோனா வைரஸ்தான். அதன் பல பாகங்கள் இன்னும் பெரிதாக மாறவில்லை.

 

மேற்கொண்டு செலுத்தப்படும் தடுப்பூசி டோஸ்கள், புதிய எதிர்ப்பான்களோடு நோயெதிர்ப்பு மண்டலத்தை விரிவுபடுத்துவதாக இருக்கும். அது கொரோனா வைரஸைக் கொல்ல பல புதிய வழிகளைக் கண்டுபிடிக்கும்.

 

எண் விளையாட்டு

 

கூடுதல் தடுப்பூசி டோஸ்களால் ஆன்டிபாடிகள் எனப்படும் நோய் எதிர்ப்பான்களின் தரம் மட்டுமல்ல, எண்ணிக்கையையும் அதிகரிக்கும்.

 

"அதிகம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் போது, ரத்தத்தில் எதிர்ப்பான்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், ஆனால் அந்த பாதுகாப்பு எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது தெரியவில்லை. அதிக முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது, நீண்ட காலத்துக்கு நோயெதிர்ப்பு நினைவைக் கொடுக்கும்," என்கிறார் பேராசிரியர் சர்லஸ் பங்கம்.

 

ஒமிக்ரான் திரிபுக்கு எதிராக இரண்டு டோஸ் தடுப்பூசி பலவீனமானது என, இது போன்ற ஆய்வுகளில், இதன் தாக்கம் குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருடோஸ் தடுப்பூசிக்குப் பிறகு, பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்ட பின், கொரோனா தொற்று ஏற்படுவதிலிருந்து கிடைக்கும் பாதுகாப்பு 75 சதவீதம் வரை அதிகரிக்கிறது.

 

அதுபோக பூஸ்டர் டோஸ்கள் மனித நோயெதிர்ப்பு மண்டலத்துக்கு, எதிர்கால கொரோனா திரிபுகளுக்கு எதிராகவும் பாதுகாப்பு வழங்குகிறது.

 

மனித உடலில் உள்ள பீ -செல்கள்தான் ஆன்டிபாடிகளை அதிகளவில் உற்பத்தி செய்கின்றன. பூஸ்டர் செலுத்தப்பட்ட பின், முதிர்ச்சியடைந்த சில பீ செல்கள் அதீத ஒட்டுத்தன்மை கொண்ட நோய் எதிர்ப்பான்களை உருவாக்குகின்றன. மற்ற முதிர்ச்சியடையாத பீ செல்களால் கொரோனா வைரஸை அடையாளம் காண முடியும். ஆனால் அதனால் முழுமையாக செயல்பட முடியாதவையாக, வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டதாக இருக்கும்.

 

"இது பல திசைகளில் பயணிக்கக் கூடியது, பல்கிப் பெருகும் போது அவை, புதிய கொரோனா திரிபைத் தொடர்ந்து சென்று தாக்கத் தொடங்கும்" என்கிறார் பேராசிரியர் பால்.

 

பூஸ்டர் செலுத்திக் கொண்டால்,உடலில் உள்ள டி செல்கள் எண்ணிக்கையில் அதிகரித்து, கொரோனா வைரஸைத் தாக்கும்.

 

டி-செல்கள் கொரோனா வைரஸைக் கண்டுபிடிக்க வேறொரு வழியைப் பயன்படுத்துகின்றன. உடலின் காவலர்களைப் போல ரோந்து செல்லும் டி-செல்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள உடல் பாகங்களைக் கண்டுபிடிக்கின்றன. கொரோனாவால் எளிதில் பிறழ்வுகளை ஏற்படுத்திக் கொள்ள முடியாத பாகங்களை டி செல்கள் கண்டுபிடிக்கின்றன.

 

எனவே, ஒமிக்ரான் மனித உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தைக் கடந்து செல்ல முயற்சிக்கும் போது, ஒவ்வொரு தடுப்பூசி டோஸ் மற்றும் ஒவ்வொரு முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் போதும், கொரோனா வைரஸை அழிக்க நம் உடலின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு கூடுதல் சாதனங்கள் கிடைக்கின்றன.

 

"ஒரு வைரஸுக்கு எதிராக எப்போதுமே கிட்டத்தட்ட முழுமையான பாதுகாப்பு கிடைக்காது, எப்போதும் கிட்டத்தட்ட மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் உங்களுக்கே தெரியாமல் அல்லது தொற்று ஏற்பட்ட தெரியாத அளவுக்கு மீண்டும் லேசாக தொற்றுக்கு உட்படுவது மட்டுமே நீங்கள் செய்ய வேண்டும்" என்கிறார் பேராசிரியர் பங்கம்.

ஜேம்ஸ் கலேகர்:சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர்/BBC

மரினோ கடற்கரை கொழும்பு




marino beach colombo