மறுத்துப் பேசுவாரா உங்கள் நண்பி!

எனது ஒரு நண்பர் நான் சூரியன் நாளைக் காலை உதிக்கும் என்று கூறினாலும், மறுத்துப் பேசும் சுபாவம் உடையவர்.அது கூறியவரின்  மனத்தினைப் புண்படுத்தும் என்பது அவர் உணராத விடயம்.
இப்பழக்கம்  சில குடும்பங்களிலும் கணவன், மனைவிக்கிடையில் இடைவெளியினை அதிகரித்துக் கொள்ளும் என்பது அவர்கள் உணராத விடயம் . அந்த இடைவெளியில் வரும் துன்பம் , அவர் மறுத்துப்பேசுவதால் காணும் சுகத்தினைவிட கடுமையானது என அவர்கள் உணர்ந்தாலேயே அவர்கள் போக்கில் மாற்றம் வரும்.
அதேவேளை , உண்மையான ஒரு தகவலுக்காக, தவறாகக் கூறும் ஒரு கருத்து எது ஒன்றையும் மறுக்க நமக்கு உரிமை உண்டு. ஆனால் அதே நேரத்தில் எவரையும் புண்படுத்த நமக்கு உரிமை இல்லை என்பதை நாம் உணர்ந்து வைத்திருக்க வேண்டும்மறுப்புகளை முகத்தில் அறைந்தாற்போல் சொல்வதில்லை என்கிற கொள்கையில் தீர்மானமாக இருங்கள்.

உங்களுக்கு எப்படி இல்லை; முடியாதுன்னு சொல்றதுன்னுதான் யோசிக்கிறேன்என்கிற பதிலில் மென்மையும் இருக்கிறது. ”முடியாது போய்யாஎன்கிற வலிமையான எதிர்மறைச் செய்தியும் இருக்கிறது.
மறுப்புச் சிரிப்பு சிரிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். மறுப்புச் சிரிப்பா? இது என்ன சிரிப்பு? இதை எப்படி வெளிப்படுத்துவது? கற்றுத் தாருங்கள் என்பவர்களுக்கு என் பதில் இதுதான். முகத்தை சற்றே அதிருப்தியாக வைத்துக் கொள்ள வேண்டும். தலையை எதிரும் புதிருமாக வலுவாக ஆட்டாமல் மெதுவாக ஆட்ட வேண்டும்.
இதை ஆங்கிலத்தில் (Non Verbal Negative) என்பார்கள். ஒரு வார்த்தைக்கூட நீங்கள் சொல்லவில்லை. ஆனால் எதிராளிக்கு உங்களது இயலாமையை அழகுறச் சொல்லிவிட்டீர்கள்.
அது வந்து. அது வந்துஎன்ற இடைவெளி விட்டு இழுத்து இழுத்து வாக்கியத்தை முடித்து விடாமல் மொட்டையாக முடிப்பதும் ஒருவித மறுப்புதான். ஏன் இந்தாள் இப்படி அசடு வழியறாரு என்று எதிரி முடிவிற்கு வந்தாலும் பரவாயில்லை. புண்படாதபடி மறுத்துவிட்ட வெற்றி நமக்கே சொந்தம்.
சில நேரங்களில் எதிராளி சாமர்த்தியசாலியாகவும் காரியவாதியாகவும் அமைந்துவிடுவது உண்டு. இத்தகையவர்கள் நம்மிடமிருந்து மறுப்பை வெளிப்படையாக எதிர்பார்ப்பார்கள். இவர்களிடம் கூட நாம் தோற்றுவிடக் கூடாது.
என் வாயால அந்த வார்த்தையைச் சொல்ல வைக்காதீங்கஎன்று சொல்லியே இவர்களைச் சமாளித்து விடலாம்.
பாவம் சொல்லவே சங்கடப்படுகிறார். இதற்கு மேல் அவரைக் கேட்கக் கூடாது என்று எதிராளியை எண்ண வைத்தால் அதுவே ஒரு மறுப்பிற்குக் கிடைத்த வெற்றி எனலாம்.

🌹🌹🌹🌹🌹தொகுப்பு:கயல்விழி,பரந்தாமன்🌹🌹🌹🌹🌹

ஓசோ கூறிய சாத்தான் கதை


[-சொல்வேந்தர் சுகி-சிவம் அவர்களின் உரையினைப் பின்பற்றித் தொகுக்கப்பட்டது.]


ஒருமுறை  ஞானி ஒருவர் உலகில் தோன்றினார். எனவே  இனி உலகம் ஆன்மீகத்தில் மூழ்கி  நல்வழியில் உய்ந்துவிடும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட் டது.

இதை அறிந்த ஒரு குட்டிச்சாத்தான், தன் தலைவன் சாத்தனிடம் ஓடிவந்து வயிற்றிலும், வாயிலும் அடித்து நிலத்தினில் புரண்டு அலறியது. 
காரணம் புரியாது வினவிய சாத்தானை  நோக்கி மேலும் குட்டிச்சாத்தான் 
'' ஐயகோ! ,அக்கிரமம் ,  பூ உலகில் ஒரு மெய்ஞானி தோன்றிவிட்டார். அவரின் வழிகாட்டலில் பூமியிலுள்ள மக்கள் திருந்தி நல்ல மனிதர்களாக வாழப்போகிறார்கள். எல்லோரும் நல்லவர்களானால் எங்களை பின்பற்ற யாரும் இல்லையே! எங்களுக்கு ஒரு வேலையும் இல்லையே!'' என்று கூறி கதறியது.
சாத்தானும் சிரித்துக்கொண்டே ''பயப்பிடாதே!  இவரைப்போல் எத்தனை ஞானிகளை நாம்  சந்திச்கொண்டோம். முன்னரைப் போலவே இவரின் வருகையினையொட்டியும் இவர்கூற விருக்கும்  நல்வழிகளை முறியடிக்கத் தேவையான ஏற்பாடுகளை நாம் ஒழுங்குபடுத்திவிட்டோம் .''என்றது.
ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்த்த குட்டிச்சாத்தானிடம் சாத்தான்,'' கீழே பூவுலகினை ப் பார்,   மத போதகர்கள், பூசாரிகள் , இவரைப்பற்றி ஆன்மிகம் என்ற பெயரில்சொற்பொழிவாற்றும் இடைத்தரகர்கள் எல்லோரும் அந்த மெய்ஞானம் அடைந்த ஞானி அவரைச் சுற்றி குழுமி  நிற்கிறார்கள்.''

குறுக்கிட்ட  குட்டிச்சாத்தானும் ''அய்யகோ அத்தனைபேரும் இணைந்தல்லவா பிரசாரம் செய்யப்போகிறார்கள்.''

''அவசரப்படாதே!நடக்கப்போவதைக் கேள். நீ பார்த்துப் பயப்பிடும்  மத போதகர்கள், பூசாரிகள் , இடைத்தரகர்கள் எல்லோருமே  என்னால் நியமிக்கப்படடவர்களே!''

எதுவும் புரியாது விழித்துநின்ற குட்டிச்சாத்தானை நோக்கி மேலும் சாத்தான்  '' இந்த ஞானி நேரே மக்களுக்குக் கூறியிருந்தால் மக்களுக்குப் புரிந்திருக்கும்.அவர்களும் நல்வழியில் வாழ்ந்திருப்பார். ஆனால் என்னால் நியமிக்கப்பட்டவர்கள் அவற்றினை மக்களுக்கு புரியாத முறையில் கவர்ச்சியாக சொல்வதுபோல்  சொல்லி  மக்களை ஏமாற்றி பிழைத்துக் கொள்வார்கள். மீண்டும் எம் கை ஓங்கும்.''' என நம்பிக்கையுடன் கூறியது.
குட்டிச் சாத்தானும் அமைதியடைந்தது .

இதிலிருந்து நாம் பெரிய ஒரு உண்மையினை உணரமுடிகிறது. இன்று சைவ சமயம் அல்லது இந்துசமயம் என எடுத்துக்கொண்டால் அது முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது. மக்களுக்கு பய நம்பிக்கைகளை பெருக்கி பூசைகளும், விரதங்களும், கடவுள்களும் பல சமைக்கப்பட்டு ஆன்மிகத்திற்கான ஆலய வழிபாட்டினை அறவே அழித்து ஒழித்த பங்கு இன்றய ஆலயங்களும், ஐயர்மாரும் , ஆலய தொண்டர்களும் , ஆன்மீகம் என்ற பெயரில் ஐயர்மார்களுக்கு சாதகமாகப் பேசும் பேச்சாளர்களும் ,தரகர்களும் பொறுப்பு என்பது உண்மை.
எந்தவித ஆன்மீக போதனைகளற்ற ஆலய வழிபாடு மதமாற்றத்திற்கு ஏதுவாகிறது. ஆன்மீக  அறிவினை பெற்றுக் கொள்ளாமையினால் மக்களால் அவர்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடை தெரியாது விலகிக்கொள்கிறார்கள். இந்நிலைமை  எதிர்காலத்தில் பிள்ளைகளை ஆலயம் செல்லும்   அக்கறையினை அவர்கள் மனதிலிருந்து முற்றாக அகற்றிவிட்டது என்பது உண்மை . கட்டப்பட் ட ஆலயங்களும், கட்டிக்கொண்டிருக்கும் ஆலயங்களும் வெகுவிரைவில் , இந்துக்களின் நினைவுச் சின்னங்களாகவாவது இருக்கும் என்பது காலத்தின் கட்டாயம் என்பதினை மட்டும் உணரமுடிகிறது.

⏳⏳⏳⏳⏳⏳-மனுவேந்தன்-செ ⏳⏳⏳⏳⏳⏳





கானகத்தைக் காத்திடாவிடில் .......



கானகம் தரும்
இயற்கை அழகை
காக்க தவறின்
கானகமும் கதறியழும் 
கண்ணீரிலும் கானகம்
மானிடனை மூழ்கடித்துவிடும்!
கானகம் இல்லைன்னா
மானிடனும் நிராயுதபாணியாய்
கானகத்தின் இன்னல்களால்
ஆரோக்கியத்தை
இழந்துவிடுவான்!

கானகத்தின் முடிவுமனித 
வாழ்க்கையை மாற்றிவிடும்
உயிர்ப்போடு வாழ வைப்போம்
கவனத்தோடு செயல்பட்டு
கானகத்தை பாதுகாப்போம்

🎄🌴🌳🌲காலையடி,அகிலன் ராஜா🌲🌳🌴🎄


சினிமாத் துளிகள்


இப்படியும் ஒரு கொண்டாட்டம் 

.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உட்பட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் சர்கார்.
 இந்த படத்தின் 100வது நாள் விழாவை கொண்டாட ஈரோடு மாவட்டத்தில் பிரபல தியேட்டரில் வரும் 17 ஆம் தேதி காலை 7 மணிக்கு சர்கார் மீண்டும் திரையிடப்பட்டு கொண்டாடப்படவுள்ளதாம்.
 இது எப்படியிருக்கு?   


இப்படியும்  ஒரு நிலைமை

வரிசையாக படங்களில் நடித்து வரும் நடிகர்களில் ஒருவரான விஜய் ஆண்டனி அடுத்ததாக மெட்ரோ திரைப்பட இயக்குனருடன் ஒருப் படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளார்.
விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படம் தெலுங்கில் சக்கைப்போடு போட்டது. அதுவரை தனக்கு ஏற்றக் கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜய் ஆண்டனி அதன் பின் மசாலா ரூட்டில் இறங்கினார். தெலுங்கு ரசிகர்களையும் கவர எடுத்த இந்த முடிவு தமிழ் ரசிகர்களிடம் இருந்து அவரைத் தள்ளி வைத்தது.
வரிசையாக அவர் நடித்த காளி, அண்ணாதுரை, திமிரு புடிச்சவன் ஆகியப் படங்கள் படுதோல்வி அடைந்தன. இதனையடுத்துக் கவனமாகப் படங்களைத் தேர்வு செய்யும் விஜய் ஆண்டனி இப்போது மக்கள் ஆதரவைப் பெற்ற மெட்ரோப் பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணனோடுக் கைகோர்த்துள்ளார்.
பெயர் சூட்டப்படாத இந்த படம் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாக இருக்கிறது. இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

 கர்ணன் வேடத்தில் விக்ரம் 

தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் செலவில் மகாவீர் கர்ணா என்றப் படம் உருவாகி வருகிறது. இதில் இந்தியாவின் உச்ச நட்சத்திரங்கள் பலர் நடிக்க, கர்ணன் வேடத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார். இப்படத்தை மலையாள இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இயக்குகிறார். இப்படத்தின் வசனங்களைப் பல எழுத்தாளர்கள் எழுதுகின்றனர். அதில் தமிழ் வடிவத்துக்கான வசனங்களை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதுகிறார். இப்படத்தை அமெரிக்காவைச் சேர்ந்த யுனைடெட் ஃபிலிம் கிங்டம் நிறுவனம் தயாரிக்கிறது..
விக்ரம் இல்லாத மற்ற நடிகர் நடிகைகளின் காட்சிகளைப் படக்குழு இதுவரைப் படமாக்கி வந்தது. இந்நிலையில் கடாரம்கொண்டான் பட வேலைகளை முடித்துள்ள விக்ரம் இப்போது கரணா படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து இப்படத்தின் இயக்குனர் ஆர்.எஸ்.விமல்கடைசியாக அந்த நாள் வந்துவிட்டது. தொடங்கியது மகாவீர் கர்ணா. தலைசிறந்த நடிகரான சீயான் விக்ரமுக்கு முதன்முறையாக ஆக்ஷன் சொன்னது மிகுந்த மகிழ்ச்சியளித்தது. நன்றி கடவுளேஎனக் கூறியுள்ளார்.

🎥🎥🎥🎥🎥தொகுப்பு:கயல்விழி,பரந்தாமன் 🎥🎥🎥🎥🎥