மெதுவாக சாப்பிடுவதால் கிடைத்திடும் நன்மைகள்

மெதுவாக, உணவை நீண்ட நேரம் சாப்பிடும்போது, குடலில் சுரக்கும் ஹார்மோன்களுக்கு, ‘உடலுக்குத் தேவையான அளவு உணவு கிடைத்துவிட்டதுஎன்று மூளையில் இருந்து சமிக்ஞைகளை அனுப்பும். சுமார் 20 நிமிடத்துக்கு மேல் சாப்பிடும்போது, வயிறு நிறைந்த திருப்தி உண்டாகும்.

மெதுவாக சாப்பிடுவதால் உடல் எடை குறையும் என்ற கருத்து பலரிடம் உள்ளது. ‘ஸ்லோ ஈட்டிங்என்பது நாம் சாப்பிடும் உணவின் அளவை குறைக்கும். இதனால் இயல்பாகவே உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கலாம்.

லெப்டின் மற்றும் க்ரெலின்எனும் இரண்டு ஹார்மோன்களும் பசிக்குத் தொடர்புடையவை ஆகும். இதில்லெப்டின்உடலுக்குத் தேவையான கலோரியின் அளவு மற்றும் பசியைக்  கட்டுப்படுத்தும். உடல் எடை இழப்புக்கு உதவும். ‘க்ரெலின்பசியைத் தூண்டும்; உடல் எடையை அதிகரிக்க உதவும். 

மெதுவாக, உணவை நீண்ட நேரம் சாப்பிடும்போது, குடலில் சுரக்கும் ஹார்மோன்களுக்கு, ‘உடலுக்குத் தேவையான அளவு உணவு கிடைத்துவிட்டதுஎன்று மூளையில் இருந்து சமிக்ஞைகளை அனுப்பும். சுமார் 20 நிமிடத்துக்கு மேல் சாப்பிடும்போது, வயிறு நிறைந்த திருப்தி உண்டாகும்.

மேலும், மெதுவாக உணவு சாப்பிடும்போது உணவில் உள்ள சுவையையும், வாசனையையும் நம்மால் நன்றாக உணர முடியும். அதேநேரம், சுவையின் இன்பத்தை ரசிக்கும் போது சாப்பிடும் நேரம் இரட்டிப்பாகும். இது சாப்பிடும் உணவின் அளவை தன்னிச்சையாக குறைக்கும்.

உணவின் சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது இயற்கை மற்றும் ஆரோக்கியமான உணவுகளே அதிகமாக உணவு விருப்பப் பட்டியலில் இடம்பெறும். அடுத்த முறை உணவு உண்ணும்போது, சுவையின் திருப்தியை நாம் அடைந்தவுடன் பசியின்மை ஏற்படும்.

உணவை நன்றாக மென்று சாப்பிடும்போது,  உணவுப் பொருட்கள் வாயில் உள்ள உமிழ் நீருடன் கலக்கும். உமிழ்நீரில் உயிரியல் ரீதியாக செயல்படும் பொருட்கள் உள்ளன. ஆகையால், இது உணவு செரிமானத்தை வாயில் இருந்தே தொடங்குகிறது.

மெதுவாக சாப்பிடும்போது உணவு வயிற்றை சென்றடைய 20 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். இது வயிற்றின் வேலையை மிகவும் எளிதாக்குவதுடன், சாப்பிட்ட உணவை எளிதில் செரிமானம் அடையச் செய்யும். இதனால், நாம் அடுத்த வேளை உணவு சாப்பிடும்போது இயல்பாகவே உற்சாகம் ஊற்றெடுக்கும்.

 :படித்ததில் பிடித்தது

நான்மணிக்கடிகை/11/வாழ்க்கை உண்மைகளை வெளிக்காட்டும்...

 சங்ககால இலக்கியங்களில், பதினெண் கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான 'நான்மணிக்கடிகை' என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் 'நான்மணிக்கடிகை' எனப் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் விளம்பி நாகனார்.இவரின் காலம் கி.பி. 200 க்கு முன்னர் ஆகும்.


 தொடர்ச்சி..


51-👇👇👇

யாறு உள் அடங்கும் குளம் உள; வீறு சால்

மன்னர் விழையும் குடி உள; தொல் மரபின்

வேதம் உறுவன பாட்டு உள; வேளாண்மை

வேள்வியோடு ஒப்ப உள.

ஆறுகள் தம்முள் அடங்கத்தக்க குளங்களும் உள்ளன. அரசர்களால் விரும்பப்படும் குடிகளும் உள்ளன. வேதக் கருத்துக்களையுடைய பழைய தனிப் பாட்டுகளும் உள்ளன. வேள்விக்கு நிகரான ஈகைகளும் உள்ளன.

 

52-👇👇👇

எருது உடையான் வேளாளன்; ஏலாதான் பார்ப்பான்,

ஒரு தொடையான் வெல்வது கோழி; உருவோடு

அறிவு உடையாள் இல்வாழ்க்கைப் பெண் என்ப; சேனைச்

செறிவு உடையான் சேனாபதி.

உழவு மாடுடையவன் வேளாளன். ஒரு காலால் பெடையை வயப்படுத்துவதான கோழியைப் போல எவரோடும் மாறுபடாது ஒற்றுமையுடன் வாழ்பவன் பார்ப்பனன். அழகும் அறிவும் உடையவள் வாழ்க்கைத் துணை. சேனையோடு ஒன்றுபட்டு உடனுறைபவன் சேனாபதி.

 

53-👇👇👇

யானை உடையார் கதன் உவப்பர்; மன்னர்

கடும் பரி மாக் காதலித்து ஊர்வர்; கொடுங் குழை

நல்லாரை நல்லவர் நாண் உவப்பர்; அல்லாரை

அல்லார் உவப்பது கேடு.      

யானையை உடையவர்கள் அதன் சினத்தை விரும்புவார்கள். அரசர்கள் விரைந்து செல்லும் குதிரையை விரும்புவார்கள். நல்லியல்புடைய ஆடவர்கள் நன்மங்கையரின் நாணத்தை விரும்புவார்கள். தீய ஆடவர்கள் தீய பெண்களின் தீதையே விரும்புவர்.

 

54-👇👇👇

கண்ணின் சிறந்த உறுப்பு இல்லை; கொண்டானின்

துன்னிய கேளிர் பிறர் இல்லை; மக்களின்

ஒண்மைய வாய் சான்ற பொருள் இல்லை; ஈன்றாளின்

என்ன கடவுளும் இல்.

ஒருவனுக்குக் கண்ணைப் போலச் சிறந்த உறுப்பில்லை. குலமகளுக்குக் கணவனைப் போல் நெருங்கிய உறவினர் வேறில்லை. பெற்றோருக்கு மக்களைப் போல ஒளியுள்ள பொருள்கள் வேறில்லை. குழந்தைகளுக்குத் தாயைப் போல கடவுள் வேறெதுவுமில்லை.

 

55-👇👇👇

கற்றன்னர், கற்றாரைக் காதலர்; கண்ணோடார்

செற்றன்னர்; செற்றாரைச் சேர்ந்தவர், தெற்றென

உற்றது உரையாதார்; உள் கரந்து பாம்பு உறையும்

புற்ற அன்னர், புல்லறிவினார்.       

கல்வியறிவுடையவர்களுடன் விரும்பி உடனிருப்பவர்கள், கல்வியறிவுடையவர்களுக்கு இரக்கம் இல்லாதவர்கள் இடர் செய்வாருக்கு ஒப்பாவர். உண்மையைத் தெளிவாகச் சொல்லாதவர்கள் பகைவருக்கு நிகராவர். சிற்றறிவுடையோர் பாம்புப் புற்றுக்கு ஒப்பாவர்.

 

நான்மணிக்கடிகை தொடரும்…..


ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக👉

Theebam.com: 'நான்மணிக்கடிகை' /01/வாழ்க்கை உண்மைகளை வெளிப்படு...

நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், இல்லை, நான்மணிக்கடிகை, பதினெண், விரும்புவார்கள், கீழ்க்கணக்கு, ஆடவர்கள், சிறந்த, வேறில்லை, ஒப்பாவர், வேளாளன், சங்க, மன்னர், உடையான், சேனாபதி, உவப்பர்

"எதை தேடி என்ன பயன் ?"

 

"எதை தேடி என்ன பயன் ?"

அறிவை தேடி பள்ளிக்கூடம் போனேன்

பட்டம் வாங்க பல்கலைக்கழகம் சென்றேன்

வேலை செய்ய நிறுவனம் நுழைந்தேன்

எதை தேடி என்ன பயன் ?

 

 அழகை ரசிக்க ஆசை வேண்டாமா?

அன்பை பகிர நண்பி வேண்டாமா?

இன்பம் கொள்ள காதல் வேண்டாமா?

கணவன் மனைவி உறவு  வேண்டாமா?

உறவு கொள்ள காமம் தேடினேன்

உள்ளம் பறிக்க காதல் கொட்டினேன்

வாழ்வை முழுமையாக்க மழலை வேண்டினேன்

எதை தேடி என்ன பயன் ?

 

வயது போக முதியோர் இல்லம்

தேடிய சொத்துக்கு பிள்ளைகள் சண்டை

மகிழ்ச்சி தந்த வனப்பும் போச்சு

மஞ்சத்தில் படுத்தும் நித்திரை இல்லை?

உலகை புரிய மீண்டும் தேடுகிறேன்

உண்மையை உணர ஆன்மிகம் தேடுகிறேன்

நிம்மதி வேண்டி தனிமை தேடுகிறேன்

எதை தேடி என்ன பயன் ?"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]