இப்படியும் சில பெண்கள்

படம் : .
இசை : G.ராமநாதன்
குரல் : T.M.சௌந்தர்ராஜன்
வரிகள் : உடுமலை நாராயணகவி

தொகையறா:
கண்டால் கொல்லும் விஷமாம்
கட்டழகு மங்கையரை
நாம் கொண்டாடி திரியாமல்
குருடாவதெக்காலம்
பாடல் :
பெண்களை நம்பாதே கண்களே
பெண்களை நம்பாதே

வீண் பெருமை காட்டி சிறுமை காட்டும்
பெண்களை நம்பாதே
கண்களே பெண்களை நம்பாதே

மங்களம் போல மற்றவர் தொட்டால்
மாசுறும் பெண்மை என்றே பேசிடும் உண்மை
கேட்டு வெண்கலம் போல எவர் தொட்டாலும்
விளக்கி எடுத்து விரும்பும் தன்மை
பெண்களை நம்பாதே ................
தொகையறா :
ஒய்யார கொண்டையிலே தாழம்பூவாம்
அதன் உள்ளே இருக்கிறது ஈரும் பேனாம்
இதை மெய்யாய் உணர்ந்தவனே புத்திமானாம்
மாயமினுக்கும் பெண்டுகளை பார்த்திடானாம்
பாடல்:
கண்டவரோடு கண்ணால் பேசி
காமுறும் மாது
இந்த பூமியின் மீது
கொண்ட கணவன் தன்னை கழுத்தறுப்பாள்
காரிகை ரூபத்தில் காணும் பிசாசு ...
( பெண்களை நம்பாதே ........)
அனுப்பியவர்: Kandiah Thillaivinayagalingam

1 comments:

  1. ...... கண்ணதாசன் கண்ட கன்னி.....
    காலங்களில் அவள் வசந்தம்
    கலைகளிலே அவள் ஓவியம்
    மாதங்களில் அவள் மார்கழி
    மலர்களிலே அவள் மல்லிகை
    பறவைகளில் அவள் மணிப்புறா
    பாடல்களில் அவள் தாலாட்டு
    கனிகளிலே அவள் மாங்கனி
    காற்றினிலே அவள் தென்றல்
    பால் போல் சிரிப்பதில் பிள்ளை
    அவள் பனி போல் அணைப்பதில் கன்னி
    கண் போல் வளர்ப்பதில் அன்னை
    அவள் கவிஞனாக்கினாள் என்னை

    ReplyDelete