குடும்பங்கள் மற்றும் திருமணங்களின் பரிணாமம்' / பகுதி: 03

 


ஆண் ஆணை திருமணம் செய்யும் ஒரு பால் திருமணம் வரலாற்றில் மிக மிக அரிதாகவே உள்ளது. கிபி 54 முதல் 68 வரை ரோமப் பேரரசை ஆட்சி செய்த மன்னனான நீரோ, இரு முறை ஒரு பால் திருமணம், முறையான திருமண சடங்குகளுடன் செய்தான். அது மட்டும் அல்ல, ஏகாதிபத்திய நீதிமன்றம் [Imperial Court] அவர்களை அவரது மனைவிகளாகக் கருத வேண்டும் என்று வலுக்கட்டாயப் படுத்தினான். இதை தொடர்ந்து இரண்டாம் மூன்றாம் நூறாண்டில், உரோமில் ஓரினச் சேர்க்கை திருமணங்கள் கவலை அளிக்கும் அளவுக்கு பொதுவானதாகி விட்டது. இதனால், ரோமானியர்கள் கி பி 342 இல் இதை முறையான சட்டம் மூலம் முற்றாக தடை செய்தனர்.

 

சமூக விமர்சகர் ஜூவனல் [Juvenal], மர்லின் யலொமின் 'மனைவிகளின் ஒரு வரலாறு' [A History of the Wife by Marilyn Yalom] என்ற புத்தகத்திற்கு விமர்சனம் செய்யும் பொழுது "பார் - குடும்பமும் மற்றும் அதிர்ஷ்டம் கொண்ட ஒரு மனிதன் [ஆண்]  - ஒரு மனிதனை [ஆணை] திருமணம் செய்துகொண்டான்". மேலும்  "இது போன்ற விடயங்கள், நாம் மிகவும் வயதாகிவிடும் முன், பொதுவில் செய்யப்படும்" என்று இந்த நூறாண்டில் எழுதினார் ["Look—a man of family and fortune—being wed to a man!" Juvenal wrote. "Such things, before we're very much older, will be done in public."]. அவர் மேலும் அதை கேலி செய்து, இந்த மணப்பெண் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொண்டு தங்கள் கணவர்களை கவர [பிடிக்க] முடியாது என்கிறார். எது எப்படியாகினும் முதன் முதலாக 2001 இல் நெதர்லாந்தில் ஒருபால் திருமணத்தை ஒப்புக் கொள்ளும் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதை தொடர்ந்து இன்று, அர்ஜென்டினா, பெல்ஜியம், பிரேசில், கனடா, கொலம்பியா, டென்மார்க், பிரான்சு, ஐசுலாந்து, அயர்லாந்து, லக்சம்பர்க், மெக்சிக்கோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, போர்த்துகல், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின், சுவீடன், ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, உருகுவை ...  ஆகிய நாடுகளில் ஒருபால் திருமணம் சட்ட பூர்வமாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

 

திருமணத்தின் தோற்றம் குறித்த இலக்கிய, வரலாற்று சான்றுகள் குறைவாகவே உள்ளன. இது பல்வேறு காலங்களில், அந்தந்த  கலாச்சார ரீதியாக ஏற்பட்டதால், பல்வேறு வழிகளில் இது வரையறுக்கப் பட்டும் உள்ளது. எது எப்படியாகினும் திருமணம் ஒரு நிறுவனமாக உள்ளதால், அதன் வரையறையில் கணிசமான உடன்பாடு அல்லது ஒற்றுமை காணப் படுகிறது. ஆரம்ப கால சமூகங்கள் ஒற்றை அல்லது பலதார மணமாக அல்லது கூட்டு வாழ்க்கையாக இருந்தாலும், பாலியலை கட்டுப்பாடுடன் அல்லது சுதந்திரமாக கடைப் பிடித்தாலும் அல்லது பெண்ணால் ஆளப்படும் அல்லது ஆணால் ஆளப்படும் சமூகமாக இருந்தாலும் (matriarchal or patriarchal), தத்துவார்த்த ரீதியாக திருமணம் என்பது குடும்பங்களைப் போல பழையதாக இல்லை என்பதே பொதுவான கருத்தாகும். 

 

நீங்கள் மனித வரலாற்றை நுணுக்கமாக பார்த்தால், பழமையான கலாச்சாரத்தில், திருமணம் என்பது, மனித இனப்பெருக்கத்தின், ஒரு தர்க்கரீதியான நீட்டிப்பாகும் [Further in Primitive culture, marriage was a logical extension of human reproduction]. எனவே, குடும்பமும் குடும்பங்களை சுற்றி அமைக்கப் பட்ட சமுதாயமும் நிலைத்து உயிர் வாழ்வதற்கு இது உதவுகிறது. எப்படியாகினும், கடந்த நூறு ஆண்டுகளில் எம் மனித இனம் வியத்தகு மாற்றம் அடைந்துள்ளது. நாம் இன்று வேட்டுவ உணவு திரட்டிகள் அல்லது விவசாய அடிப்படை சமூகங்கள் [hunter-gatherers or agriculturally based communities] அல்ல. நாங்கள் உயர் தொழில் நுட்பம் கொண்ட சமூகமாக இருக்கிறோம். இன்று எம்மிடம் தொலைபேசி, வானொலி, தொலைகாட்சி, விமானங்கள், ரயில்கள், கார்கள், மேம்பட்ட மருந்துகள், மரபணுப் பொறியியல் [genetic engineering], இணையம், பிறப்பு கட்டுப்பாடு, கருக்கலைப்பு, குளோனிங் அல்லது நகலி [cloning], சோதனைக் குழாய் குழந்தைகள், மற்றும் பல இருக்கின்றன. நாம் இன்று கூடிய ஆண்டு உயிர் வாழ்கிறோம். பல காரணங்களால் இன்று மனித இனம் முன்னதை காட்டிலும் வேறு பட்டுள்ளது. அந்த வேறுபாடுகள் இன்று திருமணம் என்ற கட்டுக்கோப்பை பாதிக்கிறது அல்லது மாற்றுகிறது. உதாரணமாக, எம்மை இறப்பு பிரிக்கும் மட்டும் ["till death do us part"] என்ற அர்ப்பணிப்பு இன்று இல்லை. மேலும் அவர்கள் குடும்பமாக இருந்தாலும், தனித்தனியாக அல்லது வெவ்வேறாக பல விடயங்களை கையாள முடியும். எனவே உங்கள் துணையை பெரிய கட்டுப்பாடுகள் அற்று தேர்ந்து எடுக்க முடியும். மேலும் marriage என்ற ஆங்கில சொல்லை எடுத்தால், அதில் உள்ள "MARRY" என்ற சொல் லத்தீன் சொல்லான maritus (married) ஆகும். இந்தோ ஐரோப்பியன் மூல சொல் mari இளம் பெண்ணை (young woman) குறிக்கிறது. “mother” [தாய்] க்கான பிரெஞ்சு சொல் mere or Matri , மேலும்  திருமணத்திற்கான சொல் matrimony, இது matri+mony , என்று பிரிக்கலாம். இதில் mony , செயல், நிலை அல்லது நிபந்தனையை குறிக்கிறது. எனவே ஒரு பெண் தாய்மை அடைவதற்கான தொடக்கத்தை உண்டாக்கும் நிலையை தெரியப்படுத்தும் சடங்கு எனலாம் [matrimony  = matri  + mony, Here, mony, a suffix indicating “action, state, or condition. ”Hence Matrimony refers to that that rites wherein a woman enters the state that inaugurates an openness to motherhood]. எனவே, பொதுவாக ஒரு இல்லறவாழ்வு அல்லது மண வாழ்க்கைக்குரிய உறவு [conjugal relations], என்பது பெண் தாய்மை அடைதல் ஆகும் என எடுத்து கொள்ளலாம்.

 

எனவே திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும், ஒரு நிரந்தர மற்றும் பிரத்தியேக அர்ப்பணிப்புகளுடன் ஒன்றிணைவதுடன், இயற்கையாகவே (இயல்பாகவே அமையப்பெற்ற) குழந்தைகளை பெற்று ஒன்றாக வளர்ப்பதன் மூலம் நிறைவேற்றப் படுகிறது. அதாவது, ஆண் பெண் பாலியல் நடத்தைக்கு ஒரு அங்கீகாரம் வழங்கி அவர்களை ஒன்றாக குடும்பமாக வாழ வைப்பது திருமணம் என்று பொதுவாக சொல்லப் படுகிறது. அது மட்டும் அல்ல குடும்பங்கள் ஒரு தலை முறையிலிருந்து அடுத்த தலை முறை வரை ஒரு கலாச்சாரத்தின் மதிப்பை [culture's values] கடத்தும் ஒரு கட்டமைப் பாகவும் செயல் படுகிறது.

 

உலக வரலாற்றை நோக்கும் பொழுது பல ஆட்சியாளர்கள் ஓரின சேர்க்கையாளர்கள் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். என்றாலும் அவர்கள் திருமணம் செய்யும் பொழுது, கட்டாயம், உதாரணமாக ஆட்சியாளர் ஆணாக இருக்கும் தருவாயில், மற்றவர் பெண்ணாகவே இருக்கிறார். எனவே திருமணம் என்பது தன்னிச்சையான கட்டுமானம் அல்ல; அது ஒரு “கெளரவமான அமைப்பு“. இது ஆண் பெண்களின் வேறுபட்ட மற்றும் இணக்கமான இயல்புகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. இதனால் தான் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன், தொல்காப்பியர் இயம்பியவாறு சடங்குகளால் வலுப்படுத்தப் பட்டு சட்டப் பூர்வமாக பிணைக்கப் பட்டுள்ளது. உங்களுக்கு நன்றாகவே தெரியும், இதயத்திற்கு இரத்தத்தை உந்தி தள்ளும் செயல்பாடு உள்ளது, அப்படியே கண்ணுக்கு பார்க்கும் செயல்பாடு உள்ளது, எனவே கட்டாயம் மனித நிறுவனங்களுக்கு (human institutions) மிகவும் வெளிப் படையாக ஒரு தேவை இருக்கும். அதை யாரும் மறுக்க முடியாது.

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
பகுதி 04 தொடரும்....  
வாசிக்கத்  தொடுங்கள் Theebam.com: 'குடும்பங்கள் மற்றும் திருமணங்களின் பரிணாமம்' / பக...4:  

ஆரம்பத்திலிருந்து வாசிக்கத்  தொடுங்கள் -Theebam.com: 'குடும்பங்கள் / திருமணங்களின் பரிணாமம்' / பகுதி: 01

0 comments:

Post a Comment