திருக்குறள் தொடர்கிறது…
110. குறிப்பறிதல்
குறள் 1091:
இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
மு.வ உரை:
இவளுடைய
மை
தீட்டிய
கண்களில்
உள்ளது
இருவகைப்பட்ட
நோக்கமாகும்,
அவற்றுள்
ஒரு
நோக்கம்
நோய்
செய்யும்
நோக்கம்,
மற்றொன்று
அந்
நோய்க்கு
மருந்தாகும்.
சாலமன் பாப்பையா உரை:
இவளின்
மையூட்டப்பட்ட
கண்களில்
என்மேல்
இரண்டு
நோக்கம்
இருப்பது
தெரிகிறது.
ஒரு
நோக்கம்
எனக்கு
துன்பம்
தெரிகிறது.
மற்றொன்று
அந்தத்
துன்பத்திற்கு
மருந்து
ஆகிறது.
கலைஞர் உரை:
காதலியின்
மைதீட்டிய
கண்களில்
இரண்டு
வகையான
பார்வைகள்
இருக்கின்றன;
ஒரு
பார்வை
காதல்
நோயைத்
தரும்
பார்வை;
மற்றொரு
பார்வை
அந்த
நோய்க்கு
மருந்தளிக்கும்
பார்வை.
English Explanation:
There are two looks in the dyed eyes
of this (fair one); one causes pain, and the other is the cure thereof.
குறள் 1092:
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்செம்பாகம் அன்று பெரிது.
மு.வ உரை:
கண்ணால்
என்னை
நோக்கிக்
களவு
கொள்கின்ற
சுருங்கிய
பார்வை
காமத்தில்
நேர்பாதி
அன்று,
அதைவிடப்
பெரிய
பகுதியாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நான்
பார்க்காதபோது,
என்னைக்
களவாக
பார்க்கும்
இவளின்
சிறு
பார்வை,
காதலில்
சரி
பாதி
அன்று
அதற்கு
மேலாம்.
கலைஞர் உரை:
கள்ளத்தனமான
அந்தக்
கடைக்கண்
பார்வை,
காம
இன்பத்தின்
பாதியளவைக்
காட்டிலும்
பெரிது!
English Explanation:
A single stolen glance of her eyes is more than half the
pleasure (of sexual embrace).
குறள் 1093:
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்யாப்பினுள் அட்டிய நீர்.
மு.வ உரை:
என்னை
நோக்கினாள்,
யான்
கண்டதும்
நோக்கித்
தலைகுனிந்தால்,
அது
அவள்
வளர்க்கும்
அன்பினுள்
வார்க்கின்ற
நீராகும்.
சாலமன் பாப்பையா உரை:
நான்
பார்க்காதபோது,
என்னைப்
பார்த்தாள்;
பார்த்து
நாணத்தால்
தலைகுனிந்தாள்;
இந்த
செயல்
எங்களுக்குள்
காதல்
பயிர்
வளர
அவள்
ஊற்றிய
நீராகும்.
கலைஞர் உரை:
கடைக்கண்ணால்
அவள்
என்னைப்
பார்த்த
பார்வையில்
நாணம்
மிகுந்திருந்தது;
அந்தச்
செயல்
அவள்
என்மீது
கொண்ட
அன்புப்
பயிருக்கு
நீராக
இருந்தது.
English Explanation:
She has looked (at men) and stooped
(her head); and that (sign) waters as it were (the corn of) our love.
குறள் 1094:
யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்காக்கால்தானோக்கி மெல்ல நகும்.
மு.வ உரை:
யான்
நோக்கும்
போது
அவள்
நிலத்தை
நோக்குவாள்,
யான்
நோக்காத
போது
அவள்
என்னை
நோக்கி
மெல்லத்
தனக்குள்
மகிழ்வாள்.
சாலமன் பாப்பையா உரை:
நான்
அவளை
பார்க்கும்போது
தலைகுனிந்து
நிலத்தைப்
பார்ப்பாள்,
நான்
பார்க்காதபோதோ
என்னைப்
பார்த்து
மெல்ல
தனக்குள்ளே
சிரிப்பாள்.
கலைஞர் உரை:
நான்
பார்க்கும்போது
குனிந்து
நிலத்தைப்
பார்ப்பதும்,
நான்
பார்க்காத
போது
என்னைப்
பார்த்துத்
தனக்குள்
மகிழ்ந்து
புன்னகை
புரிவதும்
என்
மீது
கொண்டுள்ள
காதலை
அறிவிக்கும்
குறிப்பல்லவா?
English Explanation:
When I look, she looks down; when I do not, she looks and
smiles gently.
குறள் 1095:
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும்.
மு.வ உரை:
என்னை
நேராகக்
குறித்துப்
பார்க்காத
அத்
தன்மையே
அல்லாமல்,
ஒரு
கண்ணைச்
சுருக்கினவள்
போல்
என்னைப்
பார்த்து
தனக்குள்
மகிழ்வாள்.
சாலமன் பாப்பையா உரை:
நேரே
பார்க்காமல்
ஒரு
கண்ணை
மட்டும்
சுருக்கி
பார்ப்பவள்
போல
என்னைப்
பார்த்துப்
பார்த்துப்
பிறகு
தனக்குள்
தானே
மகிழ்வாள்.
கலைஞர் உரை:
அவள்
என்னை
நேராக
உற்றுப்
பார்க்கவில்லையே
தவிர,
ஒரு
கண்ணைச்
சுருக்கி
வைத்துக்
கொண்டதைப்
போல
என்னை
நோக்கியவாறு
தனக்குள்
மகிழ்கிறாள்.
English Explanation:
She not only avoids a direct look at
me, but looks as it were with a half-closed eye and smiles.
குறள் 1096:
உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல்ஒல்லை உணரப் படும்.
மு.வ உரை:
புறத்தே
அயலார்
போல்
அன்பில்லாத
சொற்களைச்
சொன்னாலும்,
அகத்தே
பகையில்லாதவரின்
சொல்
என்பது
விரைவில்
அறியப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
(பேசினேன்)
அவள்
யாரோ
எவரோ
என்று
பதில்
சொன்னாள்;
சொன்னாலும்,
மனத்தில்
பகை
இல்லாத
அவளது
சொல்லின்
பொருள்
விரைவில்
அறியப்படும்.
கலைஞர் உரை:
காதலை
மறைத்துக்
கொண்டு,
புறத்தில்
அயலார்
போலக்
கடுமொழி
கூறினாலும்,
அவள்
அகத்தில்
கோபமின்றி
அன்பு
கொண்டிருப்பது
விரைவில்
வெளிப்பட்டுவிடும்.
English Explanation:
Though they may speak harshly as if
they were strangers, the words of the friendly are soon understood.
குறள் 1097:
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்உறாஅர்போன் றுற்றார் குறிப்பு.
மு.வ உரை:
பகை
கொள்ளாத
கடுஞ்சொல்லும்,
பகைவர்
போல்
பார்க்கும்
பார்வையும்
புறத்தே
அயலார்
போல்
இருந்து
அகத்தே
அன்பு
கொண்டவரின்
குறிப்பாகும்.
சாலமன் பாப்பையா உரை:
(ஆம்.
இப்போது
தெரிகிறது)
கோபம்
இல்லாமல்
பேசும்
பேச்சும்,
பகைவர்
போன்ற
பார்வையும்,
யாரோ
போலத்
தோன்றி
நட்பாவார்
காட்டும்
அடையாளங்கள்.
கலைஞர் உரை:
பகையுணர்வு
இல்லாத
கடுமொழியும்,
பகைவரை
நோக்குவது
போன்ற
கடுவிழியும்,
வெளியில்
அயலார்
போல
நடித்துக்கொண்டு
உள்ளத்தால்
அன்பு
கொண்டிருப்பவரை
அடையாளம்
காட்டும்
குறிப்புகளாகும்.
English Explanation:
Little words that are harsh and
looks that are hateful are (but) the expressions of lovers who wish to act like
strangers.
குறள் 1098:
அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்சையினள் பைய நகும்.
மு.வ உரை:
யான்
நோக்கும்
போது
அதற்காக
அன்பு
கொண்டவளாய்
மெல்லச்
சிரிப்பாள்,
அசையும்
மெல்லிய
இயல்பை
உடைய
அவளுக்கு
அப்போது
ஓர்
அழகு
உள்ளது.
சாலமன் பாப்பையா உரை:
யாரோ
எவரோ
போல
அவள்
பேசிய
பின்பும்
நான்
அவளைப்
பார்க்க,
அவள்
மனம்
நெகிழ்ந்து
மனத்திற்குள்
மெல்ல
சிரித்தாள்;
அச்சிரிப்பிலும்
அவளுக்கு
ஏதோ
ஒரு
குறிப்பு
இருப்பது
தெரிகிறது.
கலைஞர் உரை:
நான்
பார்க்கும்
போது
என்
மீது
பரிவு
கொண்டவளாக
மெல்லச்
சிரிப்பாள்;
அப்போது,
துவளுகின்ற
அந்தத்
துடியிடையாள்
ஒரு
புதிய
பொலிவுடன்
தோன்றுகிறாள்.
English Explanation:
When I look, the pitying maid looks
in return and smiles gently; and that is a comforting sign for me.
குறள் 1099:
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.
மு.வ உரை:
புறத்தே
அயலார்போல்
அன்பில்லாத
பொது
நோக்கம்
கொண்டு
பார்த்தல்,
அகத்தே
காதல்
கொண்டவரிடம்
உள்ள
இயல்பாகும்.
சாலமன் பாப்பையா உரை:
முன்பின்
தெரியாதவர்
போல,
பொதுவாக
பார்த்தப்
பேசுவது
காதலர்களிடம்
இருக்கும்
குணந்தான்.
கலைஞர் உரை:
காதலர்களுக்கு
ஓர்
இயல்பு
உண்டு;
அதாவது,
அவர்கள்
பொது
இடத்தில்
ஒருவரையொருவர்
அந்நியரைப்
பார்ப்பதுபோலப்
பார்த்துக்கொள்வர்.
English Explanation:
Both the lovers are capable of
looking at each other in an ordinary way, as if they were perfect strangers.
குறள் 1100:
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்என்ன பயனும் இல.
மு.வ உரை:
கண்களோடு
கண்கள்
நோக்காமல்
ஒத்திருந்து
அன்பு
செய்யுமானால்
வாய்ச்
சொற்கள்
என்ன
பயனும்
இல்லாமற்
போகின்றன.
சாலமன் பாப்பையா உரை:
காதலரில்
ஒருவர்
கண்ணோடு
மற்றொருவர்
கண்ணும்
பார்வையால்
பேசிவிட்டால்
அதற்கு
பிறகு
வாய்ச்
சொற்களால்
ஒரு
பயனும்
இல்லை.
கலைஞர் உரை:
ஒத்த
அன்புடன்
கண்களோடு
கண்கள்
கலந்து
ஒன்றுபட்டு
விடுமானால்,
வாய்ச்சொற்கள்
தேவையற்றுப்
போகின்றன.
English Explanation:
The words of the mouths are of no use whatever, when there
is perfect agreement between the eyes (of lovers).
திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….
✬✬✬அடுத்த
பகுதியை
வாசிக்க
... அழுத்துக...
✬✬✬ஆரம்பத்திலிருந்து
வாசிக்க...அழுத்துக
தீபம் இணையத்தளம் /theebam /dheepam / www.ttamil.com
0 comments:
Post a Comment