திருக்குறள் தொடர்கிறது…
109. தகை
அணங்குறுத்தல்
குறள் 1081:
அணங்குகொல்
ஆய்மயில்
கொல்லோ
கனங்குழைமாதர்கொல்
மாலுமென்
நெஞ்சு.
மு.வ உரை:
தெய்வப்
பெண்ணோ!
மயிலோ,
கனமான
குழை
அணிந்த
மனிதப்
பெண்ணோ,
என்
நெஞ்சம்
மயங்குகின்றதே.
சாலமன் பாப்பையா உரை:
அதோ
பெரிய
கம்மல்அணிந்து
இருப்பது
தெய்வமா?
நல்லமயிலா?
பெண்ணா?
யார்
என்று
அறிய
முடியாமல்
என்
மனம்
மயங்குகிறது.
கலைஞர் உரை:
எனை
வாட்டும்
அழகோ!
வண்ண
மயிலோ!
இந்த
மங்கையைக்
கண்டு
மயங்குகிறதே
நெஞ்சம்.
English Explanation:
Is this jewelled female a celestial,
a choice peahen, or a human being ? My mind is perplexed.
குறள் 1082:
நோக்கினாள்
நோக்கெதிர்
நோக்குதல்
தாக்கணங்குதானைக்கொண்
டன்ன
துடைத்து.
மு.வ உரை:
நோக்கிய
அவள்
பார்வைக்கு
எதிரே
நோக்குதல்
தானே
தாக்கி
வருத்தும்
அணங்கு,
ஒரு
சேனையையும்
கொண்டு
வந்து
தாக்கினாற்
போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
என்
பார்வைக்கு
எதிராக
அவள்
என்னைப்
பார்ப்பது,
தானே
தாக்கி
எவரையும்
கொல்லும்
ஒரு
தெய்வம்,
தாக்குவதற்குப்
படைகளையும்
கூட்டி
வந்ததது
போல்
இருக்கிறது.
கலைஞர் உரை:
அவள்
வீசிடும்
விழிவேலுக்கு
எதிராக
நான்
அவளை
நோக்க,
அக்கணமே
அவள்
என்னைத்
திரும்ப
நோக்கியது
தானெருத்தி
மட்டும்
தாக்குவது
போதாதென்று,
ஒரு
தானையுடன்
வந்து
என்னைத்
தாக்குவது
போன்று
இருந்தது.
English Explanation:
Is this jewelled female a celestial,
a choice peahen, or a human being ? My mind is perplexed.
குறள் 1083:
பண்டறியேன்
கூற்றென்
பதனை
இனியறிந்தேன்பெண்டகையால்
பேரமர்க்
கட்டு.
மு.வ உரை:
எமன்
என்று
சொல்லப்படுவதை
முன்பு
அறியேன்,
இப்பொழுது
கண்டறிந்தேன்,
அது
பெண்
தனமையுடன்
போர்
செய்யும்
பெரிய
கண்களை
உடையது.
சாலமன் பாப்பையா உரை:
எமன்
என்று
நூலோர்
சொல்ல
முன்பு
கேட்டிருக்கிறேன்;
பார்த்தது
இல்லை;
இப்போது
தெரிந்து
கொண்டேன்.
பெண்ணிற்கே
உரிய
நல்ல
குணங்களுடன்
பெரிதாய்ப்
போரிடும்
கண்களையும்
உடையது
தான்
எமன்.
கலைஞர் உரை:
கூற்றுவன்
எனப்படும்
பொல்லாத
எமனை,
எனக்கு
முன்பெல்லாம்
தெரியாது;
இப்போது
தெரிந்து
கொண்டேன்
அந்த
எமன்
என்பவன்
பெண்ணுருவத்தில்
வந்து
போர்
தொடுக்கக்கூடிய
விழியம்புகளை
உடையவன்
என்ற
உண்மையை.
English Explanation:
I never knew before what is called
Yama; I see it now; it is the eyes that carry on a great fight with (the help
of) female qualities.
குறள் 1084:
கண்டார்
உயிருண்ணும்
தோற்றத்தால்
பெண்டகைப்பேதைக்
கமர்த்தன
கண்.
மு.வ உரை:
பெண்தன்மை
உடைய
இந்தப்
பேதைக்குக்
கண்கள்
கண்டவரின்
உயிரை
உண்ணும்
தோற்றத்தோடு
கூடி
ஒன்றோடொன்று
மாறுபட்டிருந்தன.
சாலமன் பாப்பையா உரை:
பெண்மைக்
குணம்
மிக்க
இப்பெண்ணின்
கண்களுக்கு
அவற்றைப்
பார்ப்பவர்
உயிரைப்
பறிக்கும்
தோற்றம்
இருப்பதால்
அவள்
குணத்திற்கும்
அறிவிற்கும்
மாறுபட்டு
போர்
செய்கின்றன.
கலைஞர் உரை:
பெண்மையின்
வார்ப்படமாகத்
திகழுகிற
இந்தப்
பேதையின்
கண்கள்
மட்டும்
உயிரைப்
பறிப்பதுபோல்
தோன்றுகின்றனவே!
ஏனிந்த
மாறுபாடு?
English Explanation:
These eyes that seem to kill those who look at them are as
it were in hostilities with this feminine simplicity.
குறள் 1085:
கூற்றமோ
கண்ணோ
பிணையோ
மடவரல்
நோக்கமிம்
மூன்றும்
உடைத்து.
மு.வ உரை:
எமனோ.
கண்ணோ,
பெண்மானோ,
இந்த
இளம்
பெண்ணின்
பார்வை
இந்த
மூன்றன்
தன்மையும்
உடையதாக
இருக்கிறது.
சாலமன் பாப்பையா உரை:
என்னை
துன்புறுத்துவது
எமனா?
என்
மேனி
எங்கும்
படர்வதால்
கண்ணா?
ஏதோ
ஒரு
பயம்
தெரிவதால்
பெண்மானா?
இப்பெண்ணின்
பார்வை
இம்மூன்று
குணங்களையும்
பெற்றிருக்கிறது.
கலைஞர் உரை:
உயிர்பறிக்கும்
கூற்றமோ?
உறவாடும்
விழியோ?
மருட்சிகொள்ளும்
பெண்மானோ?
இளம்
பெண்ணின்
பார்வை
இந்த
மூன்று
கேள்விகளையும்
எழுப்புகிறதே.
English Explanation:
Is it Yama, (a pair of) eyes or a
hind ?- Are not all these three in the looks of this maid?
குறள் 1086:
கொடும்புருவம்
கோடா
மறைப்பின்
நடுங்கஞர்செய்யல
மன்னிவள்
கண்.
மு.வ உரை:
வளைந்த
புருவங்கள்
கோணாமல்
நேராக
இருந்து
மறைக்குமானால்,
இவளுடைய
கண்கள்
யான்
நடுங்கும்
படியான
துன்பத்தைச்
செய்யமாட்டா.
சாலமன் பாப்பையா உரை:
அதோ
வளைந்து
இருக்கும்
புருவங்கள்
வளையாமல்
நேராக
நின்று
தடுத்தால்,
அவள்
கண்கள்,
எனக்கு
நடுக்கம்
தரும்
துன்பத்தை
தரமாட்டா.
கலைஞர் உரை:
புருவங்கள்
வளைந்து
கோணாமல்
நேராக
இருந்து
மறைக்குமானால்,
இவள்
கண்கள்,
நான்
நடுங்கும்படியான
துன்பத்தைச்
செய்யமாட்டா.
English Explanation:
Her eyes will cause (me) no
trembling sorrow, if they are properly hidden by her cruel arched eyebrows.
குறள் 1087:
கடாஅக்
களிற்றின்மேற்
கட்படாம்
மாதர்
படாஅ
முலைமேல்
துகில்.
மு.வ உரை:
மாதருடைய
சாயாத
கொங்கைகளின்
மேல்
அணிந்த
ஆடை,
மதம்
பிடித்த
யானையின்
மேல்
இட்ட
முகப்படாம்
போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
அந்தப்
பெண்ணின்
சாயாத
முலைமேல்
இருக்கும்
சேலை,
கொல்லம்
மதம்
பிடித்த
ஆண்
யானையின்
முகபடாம்
போன்று
இருக்கிறது.
கலைஞர் உரை:
மதங்கொண்ட
யானையின்
மத்தகத்தின்
மேலிட்ட
முகபடாம்
கண்டேன்;
அது
மங்கையொருத்தியின்
சாயாத
கொங்கை
மேல்
அசைந்தாடும்
ஆடைபோல்
இருந்தது.
English Explanation:
The cloth that covers the firm bosom
of this maiden is (like) that which covers the eyes of a rutting elephant.
குறள் 1088:
ஒண்ணுதற்
கோஒ
உடைந்ததே
ஞாட்பினுள்
நண்ணாரும்
உட்குமென்
பீடு.
மு.வ உரை:
போர்க்களத்தில்
பகைவரும்
அஞ்சுதற்க்கு
காரணமான
என்
வலிமை,
இவளுடைய
ஒளி
பொருந்திய
நெற்றிக்குத்
தோற்று
அழிந்ததே.
சாலமன் பாப்பையா உரை:
களத்தில்
முன்பு
என்னை
அறியாதவரும்
அறிந்தவர்
சொல்லக்
கேட்டு
வியக்கும்
என்
திறம்,
அவள்
ஒளி
பொருந்திய
நெற்றியைக்
கண்ட
அளவில்
அழிந்துவிட்டதே.
கலைஞர் உரை:
களத்தில்
பகைவரைக்
கலங்கவைக்கும்
என்
வலிமை
இதோ
இந்தக்
காதலியின்
ஒளி
பொருந்திய
நெற்றிக்கு
வளைந்து
கொடுத்துவிட்டதே!
English Explanation:
On her bright brow alone is destroyed even that power of
mine that used to terrify the most fearless.
குறள் 1089:
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்
கணியெவனோ ஏதில தந்து.
மு.வ உரை:
பெண்மானைப்
போன்ற
இளமைப்
பார்வையும்
நாணமும்
உடைய
இவளுக்கு,
ஒரு
தொடர்பும்
இல்லாத
அணிகளைச்
செய்து
அணிவது
ஏனோ.
சாலமன் பாப்பையா உரை:
பெண்மானைப்
போன்ற
அச்சப்
பார்வையையும்
உள்ளத்தில்
நாணத்தையும்
நகைகளாகக்
கொண்டிருக்கும்
இவளுக்கு
வேறு
வேறு
வகைப்பட்ட
நகைகளை
அணிவித்திருப்பது
எதற்காகவோ?
கலைஞர் உரை:
பெண்மானைப்
போன்ற
இளமை
துள்ளும்
பார்வையையும்,
நாணத்தையும்
இயற்கையாகவே
அணிகலன்களாகக்
கொண்ட
இப்பேரழகிக்குச்
செயற்கையான
அணிகலன்கள்
எதற்காக?
English Explanation:
Of what use are other jewels to her who is adorned with
modesty, and the meek looks of a hind?
குறள் 1090:
உண்டார்க ணல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.
மு.வ உரை:
கள்,
தன்னை
உண்டவரிடத்தில்
அல்லாமல்
காமத்தைப்
போல்
தன்னைக்
கண்டவரிடத்தில்
மயக்கத்தை
உண்டாக்குவதில்லையே.
சாலமன் பாப்பையா உரை:
காய்ச்சப்பட்ட
கள்,
உண்டவர்க்கே
மகிழ்ச்சி
தரும்;
காதலைப்
போல்,
காண்பவருக்கும்
அது
மகிழ்ச்சி
தருவது
இல்லை.
கலைஞர் உரை:
மதுவை
உண்டால்தான்
மயக்கம்
வரும்;
ஆனால்,
கண்டாலே
மயக்கம்
தருவது
காதல்தான்.
English Explanation:
Unlike boiled honey which yields delight only when it is
drunk, love gives pleasure even when looked at.
திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….
✬✬✬அடுத்த பகுதியை வாசிக்க ... அழுத்துக...
✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக
0 comments:
Post a Comment