திருக்குறள் தொடர்கிறது…
111. புணர்ச்சி
மகிழ்தல்
குறள் 1101:
கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்ஒண்தொடி கண்ணே உள.
மு.வ உரை:
கண்டும்
கேட்டும்
உண்டும்
முகர்ந்தும்
உற்றும்
அறிகின்ற
ஐந்து
புலன்களாகிய
இன்பங்களும்
ஒளி
பொருந்திய
வளையல்
அணிந்த
இவளிடத்தில்
உள்ளன.
சாலமன் பாப்பையா உரை:
விழியால்
பார்த்து,
செவியால்கேட்டு,
நாவால்
உண்டு,
மூக்கால்
மோந்து,
உடம்பால்
தீண்டி
என்
ஐம்பொறிகளாலும்
அனுபவிக்கும்படும்
இன்பம்
ஒளிமிக்க
வளையல்களை
அணிந்த
மனைவியிடம்
மட்டுமே
உண்டு.
கலைஞர் உரை:
வளையல்
அணிந்த
இந்த
வடிவழகியிடம்;
கண்டு
மகிழவும்,
கேட்டு
மகிழவும்,
தொட்டு
மகிழவும்,
முகர்ந்துண்டு
மகிழவுமான
ஐம்புல
இன்பங்களும்
நிறைந்துள்ளன.
ஆங்கில விளக்கம்:
The (simultaneous) enjoyment of the five senses of sight,
hearing, taste, smell and touch can only be found with bright braceleted
(women).
குறள் 1102:
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்னோய்க்குத் தானே மருந்து.
மு.வ உரை:
நோய்களுக்கு
மருந்து
வேறு
பொருள்களாக
இருக்கின்றன,
ஆனால்
அணிகலன்
அணிந்த
இவளால்
வளர்ந்த
நோய்க்கு
இவளே
மருந்தாக
இருக்கின்றாள்.
சாலமன் பாப்பையா உரை:
நோய்களுக்கு
மருந்து
பெரும்பாலும்,
அந்நோய்களுக்கு
மாறான
இயல்பை
உடையவையே.
ஆனால்
இவள்
தந்த
நோய்க்கு
இவளே
மருந்து.
கலைஞர் உரை:
நோய்களைத்
தீர்க்கும்
மருந்துகள்
பல
உள்ளன;
ஆனால்
காதல்
நோயைத்
தீர்க்கும்
மருந்து
அந்தக்
காதலியே
ஆவாள்.
ஆங்கில விளக்கம்:
The remedy for a disease is always something different (from
it); but for the disease caused by this jewelled maid, she is herself the cure.
குறள் 1103:
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்தாமரைக் கண்ணான் உலகு.
மு.வ உரை:
தாமரைக்
கண்ணனுடைய
உலகம்,
தாம்
விரும்பும்
காதலியரின்
மெல்லிய
தோள்களில்
துயிலும்
துயில்
போல்
இனிமை
உடையதோ.
சாலமன் பாப்பையா உரை:
தாம்
விரும்பும்
மனைவியின்
மெல்லிய
தோளைத்
தழுவித்
தூங்கும்
உறக்கத்தைவிடத்
தாமரைக்
கண்ணனாகிய
திருமாலின்
உலகம்
இனிமை
ஆனதோ?
கலைஞர் உரை:
தாமரைக்
கண்ணான்
உலகம்
என்றெல்லாம்
சொல்கிறார்களே,
அது
என்ன!
அன்பு
நிறைந்த
காதலியின்
தோளில்
சாய்ந்து
துயில்வது
போல
அவ்வளவு
இனிமை
வாய்ந்ததா?
ஆங்கில விளக்கம்:
Can the lotus-eyed Vishnu's heaven be indeed as sweet to
those who delight to sleep in the delicate arms of their beloved ?
குறள் 1104:
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்தீயாண்டுப் பெற்றாள் இவள்.
மு.வ உரை:
நீங்கினால்
சுடுகின்றது,
அணுகினால்
குளிர்ச்சியாக
இருக்கின்றது,
இத்தகைய
புதுமையானத்
தீயை
இவள்
எவ்விடத்திலிருந்து
பெற்றாள்.
சாலமன் பாப்பையா உரை:
தன்னை
நீங்கினால்
சுடும்,
நெருங்கினால்
குளிரும்
ஒரு
தீயை
என்
உள்ளத்தில்
ஏற்ற,
இவள்
அதை
எங்கிருந்து
பெற்றாள்?
கலைஞர் உரை:
நீங்கினால்
சுடக்கூடியதும்
நெருங்கினால்
குளிரக்
கூடியதுமான
புதுமையான
நெருப்பை
இந்த
மங்கை
எங்கிருந்து
பெற்றாள்.
ஆங்கில விளக்கம்:
From whence has she got this fire that burns when I withdraw
and cools when I approach?
குறள் 1105:
வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.
மு.வ உரை:
மலரணிந்த
கூந்தலை
உடைய
இவளுடைய
தோள்கள்
விருப்பமான
பொருள்களை
நினைத்து
விரும்பிய
பொழுது
அவ்வப்
பொருள்களைப்
போலவே
இன்பம்
செய்கின்றன.
சாலமன் பாப்பையா உரை:
நாம்
விரும்பும்
பொருள்கள்
விரும்பியபொழுது
விரும்பியவாறே
இன்பம்
தருவது
போல,
பூச்சூடிய
கூந்தலை
உடைய
இவள்
தோள்கள்
இவளுடன்
எப்போது
கூடினாலும்
இன்பம்
தருகின்றன.
கலைஞர் உரை:
விருப்பமான
பொருள்
ஒன்று,
விரும்பிய
பொழுதெல்லாம்
வந்து
இன்பம்
வழங்கினால்
எப்படியிருக்குமோ
அதைப்
போலவே
பூ
முடித்த
பூவையின்
தோள்கள்
இன்பம்
வழங்குகின்றன.
ஆங்கில விளக்கம்:
Each varied form of joy the soul can wish is found.
குறள் 1106:
உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்
கமிழ்தின் இயன்றன தோள்.
மு.வ உரை:
பொருந்து
போதெல்லாம்
உயிர்
தளிர்க்கும்
படியாகத்
தீண்டுதலால்
இவளுக்கு
தோள்கள்
அமிழ்தத்தால்
செய்யப்பட்டிருக்க
வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
இவளை
அணைக்கும்போது
எல்லாம்
வாடிக்
கிடந்த
என்
உயிர்
தளிர்க்கும்படி
என்னைத்
தொடுவதால்,
இவளின்
தோள்கள்
அமிழ்தத்தில்
செய்யப்பட்டவை
போலும்.
கலைஞர் உரை:
இந்த
இளமங்கையைத்
தழுவும்
போதெல்லாம்
நான்
புத்துயிர்
பெறுவதற்கு
இவளின்
அழகிய
தோள்கள்
அமிழ்தத்தினால்
ஆனவை
என்பதுதான்
காரணம்
போலும்.
ஆங்கில விளக்கம்:
The shoulders of this fair one are made of ambrosia, for
they revive me with pleasure every time I embrace them.
குறள் 1107:
தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.
மு.வ உரை:
அழகிய
மா
நிறம்
உடைய
இவளுடைய
தழுவுதல்,
தம்முடைய
வீட்டிலிருந்து
தாம்
ஈட்டிய
பொருளைப்
பகுந்து
கொடுத்து
உண்டாற்
போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
அழகிய
மா
நிறப்
பெண்ணாகிய
என்
மனைவியிடம்
கூடிப்
பெறும்
சுகம்,
தன்
சொந்த
வீட்டில்
இருந்து
கொண்டு,
தன்
உழைப்பில்
வந்தவற்றைத்
தனக்குரியவர்களுடன்
பகிர்ந்து
உண்ண
வரும்
சுகம்
போன்றது.
கலைஞர் உரை:
தானே
உழைத்துச்
சேர்த்ததைப்
பலருக்கும்
பகுத்து
வழங்கி
உண்டு
களிப்பதில்
ஏற்படும்
இன்பம்,
தனது
அழகிய
காதல்
மனைவியைத்
தழுவுகின்ற
இன்பத்துக்கு
ஒப்பானது.
ஆங்கில விளக்கம்:
The embraces of a gold-complexioned beautiful female are as
pleasant as to dwell in one's own house and live by one's own (earnings) after
distributing (a portion of it in charity).
குறள் 1108:
வீழும் இருவர்க் கினிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.
மு.வ உரை:
காற்று
இடையறுத்துச்
செல்லாதபடி
தழுவும்
தழுவுதல்,
ஒருவரை
ஒருவர்
விரும்பிய
காதலர்
இருவருக்கும்
இனிமை
உடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
இறுக
அணைத்துக்
கிடப்பதால்
காற்றும்
ஊடே
நுழைய
முடியாதபடி
கூடிப்
பெறும்
சுகம்,
விரும்பிக்
காதலிப்பார்
இருவர்க்கும்
இனிமையானதே.
கலைஞர் உரை:
காதலர்க்கு
மிக
இனிமை
தருவது,
காற்றுகூட
இடையில்
நுழைய
முடியாத
அளவுக்கு
இருவரும்
இறுகத்
தழுவி
மகிழ்வதாகும்.
ஆங்கில விளக்கம்:
To ardent lovers sweet is the embrace that cannot be
penetrated even by a breath of breeze.
குறள் 1109:
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.
மு.வ உரை:
ஊடுதல்,
ஊடலை
உணர்ந்து
விடுதல்,
அதன்பின்
கூடுதல்
ஆகிய
இவை
காதல்
வாழ்வு
நிறைவேறப்
பெற்றவர்
பெற்ற
பயன்களாகும்.
சாலமன் பாப்பையா உரை:
படுக்கைக்குப்
போகுமுன்
சிறு
ஊடல்
செய்தல்,
தவறு
உணர்ந்து
சமாதானம்
ஆதல்,
அதன்பின்
கூடல்
இவை
அல்லவா
திருமணம்
செய்து
கொண்டவர்
பெற்ற
பயன்கள்!
கலைஞர் உரை:
ஊடல்
கொள்வதும்,
அதனால்
விளையும்
இன்பம்
போதுமென
உணர்ந்து
அதற்கும்
மேலான
இன்பம்
காணப்
புணர்ந்து
மயங்குவதும்
காதல்
வாழ்வினர்
பெற்றிடும்
பயன்களாகும்.
ஆங்கில விளக்கம்:
Love quarrel, reconciliation and intercourse - these are the
advantages reaped by those who marry for lust.
குறள் 1110:
அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.
மு.வ உரை:
செந்நிற
அணிகலன்களை
அணிந்த
இவளிடம்
பொருந்துந்தோறும்
காதல்
உணர்தல்,நூற்
பொருள்களை
அறிய
அறிய
அறியாதமைக்
கண்டாற்
போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
நூல்களாலும்
நுண்
அறிவாலும்
அறிய
அறிய
முன்னைய
நம்
அறியாமை
தெரிவதுபோல,
நல்ல
அணிகளை
அணிந்திருக்கும்
என்
மனைவியுடன்
கூடக்
கூட
அவள்
மீது
உள்ள
என்
காதற்சுவையும்
புதிது
புதிதாகத்
தெரிகிறது.
கலைஞர் உரை:
மாம்பழ
மேனியில்
அழகிய
அணிகலன்கள்
பூண்ட
மங்கையிடம்
இன்பம்
நுகரும்
போதெல்லாம்
ஏற்படும்
காதலானது,
இதுவரை
அறியாதவற்றைப்
புதிதுபுதிதாக
அறிவதுபோல்
இருக்கிறது.
ஆங்கில விளக்கம்:
As (one's) ignorance is discovered the more one learns, so
does repeated intercourse with a welladorned female (only create a desire for
more).
திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….
✬✬✬அடுத்த பகுதியை
வாசிக்க
... அழுத்துக...
✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக
0 comments:
Post a Comment