இராஜேஷ் (Rajesh, 20 திசம்பர் 1949 - 29 மே 2025) தமிழ், மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்த இந்திய நடிகராவார். திரைப்படங்களில் 49 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்துள்ள இவர், 150-இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் முன்னணிக் கதாபாத்திரங்களிலும் துணை வேடங்களிலும் நடித்துள்ளார்.[4] கதாநாயகன் முதல் குணச்சித்திர நடிகர் வரை பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார்.
வாழ்க்கை வரலாறு……
இராஜேஷ் 1949 இல் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் வில்லியம்சு நாட்டார், இலில்லி கிரேசு மண்கொண்டார் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். ஆனால் இவரது குடும்பம் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அணைக்காடு பகுதியைச் சேர்ந்தது. திண்டுக்கல், வடமதுரை, மேலநாதம் அணைக்காடு, சின்னமனூர் தேனி போன்ற ஊர்களில் படித்து முடித்தார். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பி. யு. சி முடித்த பிறகு, இவர் பச்சையப்பா கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் எதிர்பாராத நிலையில் தனது கல்லூரிக் கல்வியை முடிக்கவில்லை. புரசைவாக்கத்தில் உள்ள புனித பவுல் உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர் 1972 முதல் 1979 வரை திருவல்லிக்கேணியிலுள்ள கெல்லெட் மேல்நிலைப் பள்ளியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.
1974 இல், இவருக்கு அவள் ஒரு தொடர்கதை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதில் ஒரு சிறிய பாத்திரத்தில் மட்டுமே நடித்தார்.[4] கதாநாயகனாக இவரது முதற் படம் இராஜ்கண்ணு தயாரித்த கன்னிப்பருவத்திலே (1979). கே. பாலசந்தரின் அச்சமில்லைஅச்சமில்லை திரைப்படத்தில் ராஜேஷ் நடித்தார். பின்னர், இவர் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். கமலகாசனுடன் சத்யா, மகாநதி, விருமாண்டி போன்ற படங்களில் நடித்தார்.
உணவகம் நடத்துதல், வீடு நிலம் வாங்கி விற்கும் வணிகத்திலும் ஈடுபட்டார். நகரத்தில் ஒரு முன்னணிக் கட்டுமானர் ஆவார். ஆங்கிலத் திரைப்பட நடிகர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் தமிழில் எழுதினார்.
கிறிஸ்தவர், பெரியாரின் சித்தாந்தங்களில் தீவிரமாக இருந்தார். பின்னர் சோதிடத்தில் ஈடுபட்டார். சோதிடம் குறித்து பல புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை…..
1983-இல், புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதியும் திராவிடத் தலைவருமான பட்டுக்கோட்டை தாவிசு வனத்திராயரின் பேத்தியான ஜோன் சிலிவியா வனத்திராயர் என்பவரை மணந்தார். இவர்களுக்கு திவ்யா என்ற ஒரு மகளும், தீபக் என்ற ஒரு மகனும் உள்ளனர். தீபக் 2014-இல் அறிமுகமானார். இராஜேசின் மனைவி 2012 ஆகத்து 6 அன்று இறந்தார்.
1985-இல் சென்னை கே. கே. நகர் அருகே திரைப்படப் படப்பிடிப்பிற்காக ஒரு பங்களா கட்டிய முதல் தமிழ் நடிகர் ஆவார். இது அப்போதைய முதலமைச்சர் எம். ஜி. இராமச்சந்திரனால் திறந்து வைக்கப்பட்டது. அந்த வீட்டில் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்த பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்றன. பின்னர் 1993-இல் வீடு, நிலம் வாங்கி விற்கும் வணிகத்தைத் தொடங்கியபோது அதை விற்றார். 90களின் முற்பகுதியில், இவருடைய நண்பர் ஜேப்பியார் அறிவுறுத்தியபடி, வீடு, நிலம் வாங்கி விற்கும் வணிகத்தைத் தொடங்கினார். பின்னர் உணவகத்தையும், கட்டுமான வணிகத்தையும் தொடங்கினார். 1987 முதல் 1991 வரை வி. என். ஜானகியை ஆதரித்து அரசியலில் தீவிரமாக இருந்தார். கார்ல் மார்க்சின் ஆதரவாளரும் ஆவார். இங்கிலாந்து சென்று மாபெரும் தலைவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
இவர் தன்னுடைய 40 வயதிலேயே தனக்கு கல்லறை கட்டி இருக்கிறார். அதற்கு அவர் சொன்ன காரணம்…
'ஒரு முறை லண்டனுக்கு சென்று இருந்தேன். அப்போது காரல் மார்க்ஸ் கல்லறையை பார்த்தேன். அந்த கல்லறை எனக்கு பிடித்து விட்டது. அந்த கல்லறையில் நின்று நான் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டேன். அதற்கு அடுத்த வருடமே எனக்கு நானே ஒரு கல்லறைக் கட்டிக் கொண்டேன். காரல் மார்க்ஸ் கல்லறையில் அவர்களுடைய குடும்பத்தினருக்கு அடுத்தடுத்து அடக்கம் செய்யும் வகையில் அறைகள் இருக்கும். தனக்கு கல்லறை கட்டிய நடிகர் ராஜேஷ் ஒருவருடைய உடல் கீழே போனதும் அடுத்தவருடைய உடல் மேலே வைப்பது போன்று இருக்கும். அதேபோல நானும் மார்பல் வைத்து ஒரு கல்லறை கட்டி வைத்திருந்தேன். நான் கல்லறை கட்டி சில மாதங்களில் என்னுடைய அம்மா இறந்துவிட்டார். அதற்குப் பிறகு என்னுடைய அப்பா, அடுத்ததாக என்னுடைய மனைவி என்று அடுத்தடுத்து சில வருடங்களில் எல்லோரும் இறந்து விட்டார்கள். அவர்களை எல்லோரையும் அந்த கல்லறையில் தான் அடக்கம் செய்திருக்கிறேன்.
நான் நூறு வயது வரை இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு கட்டவில்லை. ஆனால் என்னுடைய கல்லறை எப்படி இருக்க வேண்டும் என்று நான் இறந்த பிறகு பார்க்க முடியாது அதனால் இதுதான் என்னுடைய கல்லறை என்று நானே பார்த்துக் கொள்ளும் வகையில் தான் அந்த கல்லறையை கட்டி இருந்தேன். ‘என்றார்.
தானே கட்டிய கல்லறைக்கு செல்வதற்காக 29 மே 2025 அன்று காலை உடல்நலக் குறைவால் இயற்கை எய்தியிருக்கிறார் நடிகர் ராஜேஷ்.. அன்று இவருக்கு வயது 76.
நடித்த திரைப்படங்கள்….
4. அருவா வேலு
9. அனல் காற்று
10. ஆட்டோகிராப்
11. ஆயுதம்
12. ஆலய தீபம்
13. ஆறுமனமே
15. இராவணன்
16. இலங்கேஸ்வரன்
17. உத்தமி
18. உன்னை நெனச்சேன் பாட்டுபடிச்சேன்
19. என் உயிர் நீதானே
21. கண்ணும் கண்ணும்
24. காதலர் கதை
27. காற்றுள்ளவரை
28. குடும்ப சங்கிலி
29. குழந்தை ஏசு
30. கொலுசு
31. சங்கநாதம்
33. சத்திரபதி
34. சத்யா
35. சந்தோஷக் கனவுகள்
36. சர்வம் சக்திமயம்
38. சித்து +2
40. சிறை
42. சின்ன ஜமீன்
43. செயின் ஜெயபால்
44. தம்பி பொண்டாட்டி
45. தர்மதேவன்
46. தர்மபுரி
47. தனிக்காட்டு ராஜா
48. தனிமரம்
49. தாமரை
50. தாய் வீடு
51. தாலி புதுசு
52. திருடன் போலீஸ்
53. திருப்பதி
54. தீண்ட தீண்ட
55. தீனா
56. துணிவே தோழன்
57. தைப்பொங்கல்
59. நான் நானே தான்
60. நிலவே மலரே
61. நினைத்து நினைத்துப் பார்த்தேன்
63. பரசுராம்
64. பரமசிவன்
67. பொங்கலோ பொங்கல்
68. மகாநதி
70. மண்ணைத் தொட்டு கும்பிடணும்
71. மயில்
72. மனக்கணக்கு
73. மானஸ்தன்
74. முடிவல்ல ஆரம்பம்
75. முதல் சீதனம்
76. மெட்டி
77. மேல்மருவத்தூர் அற்புதங்கள்
78. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி
80. யானை
81. ரமணா
83. லவ் சேனல்
84. வரலாறு
85. வருத்தப்படாத வாலிபர் சங்கம்
87. வாத்தியார் வீட்டுப் பிள்ளை
88. வானமே எல்லை
89. விருமாண்டி
91. வேலி
92. ஜன்னல் ஓரம்
93. ஜி
94. ஜெய்ஹிந்த்
பின்னணிக் குரல் கலைஞராக……
நடிகர் | திரைப்படம் | குறிப்புகள் |
டும் டும் டும் (2001), | ||
பொய் சொல்லப் போறோம் (2008) |
தொலைக்காட்சிகளில்…
ஆண்டு | தலைப்பு | கதாபாத்திரம் | தொலைக்காட்சி | மொழி |
2000 | சிறு தொடர்கள்-அழுக்கு வேட்டி | |||
சிறு தொடர்கள்-சவுக்கடி | ||||
2001–2003 | அலைகள் | கிருஷ்ணா | ||
2004–2006 | கணவருக்காக | |||
2005 | சுவாமி ஐயப்பன் | |||
2012 | ஆண்பாவம் | கோபாலசாமி | ||
2013 | தாயம் | |||
2014 | ||||
அக்கா | ||||
2015–2016 | களத்து வீடு | |||
2018–2022 | டைகர் மாணிக்கம் | |||
2020 | செல்வகணபதி (சிறப்புத் தோற்றம்) | |||
டைகர் மாணிக்கம் (சிறப்புத் தோற்றம்) | ||||
2021 | சில்லுனு ஒரு காதல் | சிவராமன் சமீந்தார் (சிறப்புத் தோற்றம்) | ||
2022 | கனா காணும் காலங்கள் | சக்திவேல் | ||
2022–2025 | கார்த்திகை தீபம் | தர்மலிங்கம் |
அஞ்சலி :தீபம் இணையத்தளம்
0 comments:
Post a Comment