திருக்குறள் தொடர்கிறது…
112. நலம்
புனைந்து
உரைத்தல்
குறள் 1111:
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.
மு.வ உரை:
அனிச்சப்பூவே
நல்ல
மென்மை
தன்மை
பெற்றிறுக்கின்றாய்,
நீ
வாழ்க,
யாம்
விரும்பும்
காதலி
உன்னை
விட
மெல்லியத்
தன்மை
கொண்டவள்.
சாலமன் பாப்பையா உரை:
அனிச்சம்
பூவே!
நீ
எல்லாப்
பூக்களிலுமே
மென்மையால்
சிறந்த
இயல்பை
உடையை
வாழ்ந்து
போ!
ஒன்று
உனக்குத்
தெரியுமா?
என்னால்
விரும்பப்படும்
என்
மனைவி
உன்னைக்
காட்டிலும்
மென்மையானவள்!
கலைஞர் உரை:
அனிச்ச
மலரின்
மென்மையைப்
புகழ்ந்து
பாராட்டுகிறேன்;
ஆனால்
அந்த
மலரைவிட
மென்மையானவள்
என்
காதலி.
English Explanation:
May you flourish, O Anicham! you
have a delicate nature But my beloved is more delicate than you.
குறள் 1112:
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று.
மு.வ உரை:
நெஞ்சமே!
இவளுடைய
கண்கள்
பலரும்
காண்கின்ற
மலர்களை
ஒத்திருக்கின்றன,
என்று
நினைத்து
ஒத்த
மலர்களைக்
கண்டால்
நீ
மயங்குகின்றாய்.
சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சே
நான்
ஒருவனே
காணும்
என்
மனைவியின்
கண்கள்,
பலருங்
காணும்
பூக்களைப்
போல்
இருக்கும்
என்று
எண்ணி
மலர்களைக்
கண்டு
மயங்குகிறாயே!
(இதோ
பார்)
கலைஞர் உரை:
மலரைக்கண்டு
மயங்குகின்ற
நெஞ்சமே!
இவளுடைய
கண்ணைப்
பார்;
பலரும்
கண்டு
வியக்கும்
மலராகவே
திகழ்கிறது.
English Explanation:
O my soul, fancying that flowers
which are seen by many can resemble her eyes, you become confused at the sight
of them.
குறள் 1113:
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.
மு.வ உரை:
மூங்கில்
போன்ற
தோளை
உடைய
இவளுக்குத்
தளிரே
மேனி,
முத்தே
பல்,
இயற்கை
மணமே
மணம்,
வேலே
மை
உண்ட
கண்.
சாலமன் பாப்பையா உரை:
மூங்கில்
போன்ற
தோளை
உடைய
அவளுக்கு
மேனி
இளந்தளிர்;
பல்லோ
முத்து;
உடல்
மணமோ
நறுமணம்;
மையூட்டப்
பெற்ற
கண்களோ
வேல்!
கலைஞர் உரை:
முத்துப்பல்
வரிசை,
மூங்கிலனைய
தோள்,
மாந்தளிர்
மேனி,
மயக்கமூட்டும்
நறுமணம்,
மையெழுதிய
வேல்விழி;
அவளே
என்
காதலி!
English Explanation:
The complexion of this bamboo-shouldered one is that of a
shoot; her teeth, are pearls; her breath.
குறள் 1114:
காணின்
குவளை
கவிழ்ந்து
நிலனோக்கும்
மாணிழை
கண்ணொவ்வேம்
என்று.
மு.வ உரை:
குவளை
மலர்கள்
காணும்
தன்மைப்
பெற்றுக்
கண்டால்,
இவளுடைய
கண்களுக்கு
தாம்
ஒப்பாக
வில்லையே
என்று
தலை
கவிழ்ந்து
நிலத்தை
நோக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
குவளைப்
பூக்களால்
காண
முடியுமானால்,
சிறந்த
அணிகளைப்
பூண்டிருக்கும்
என்
மனைவியின்
கண்ணைப்
போல
தாம்
இருக்கமாட்டோம்
என்று
எண்ணி
நாணத்தால்
தலைகுனிந்து
நிலத்தைப்
பார்க்கும்.
கலைஞர் உரை:
என்
காதலியைக்
குவளை
மலர்கள்
காண
முடிந்தால்,
``இவள்
கண்களுக்கு
நாம்
ஒப்பாக
முடியவில்லையே!''
எனத்
தலைகுனிந்து
நிலம்
நோக்கும்.
English Explanation:
If the blue lotus could see, it
would stoop and look at the ground saying, "I can never resemble the eyes
of this excellent jewelled one."
குறள் 1115:
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை.
மு.வ உரை:
அவள்
தன்
மென்மை
அறியாமல்
அனிச்ச
மலர்களைக்
காம்பு
களையாமல்
சூடினால்,
அவற்றால்
நொந்து
வருத்தும்
அவளுடைய
இடைக்குப்
பறைகள்
நல்லனவாய்
ஒலியா.
சாலமன் பாப்பையா உரை:
என்
மனைவி
தன்
மென்மையை
எண்ணாமல்
அனிச்சம்பூவை
அதன்
காம்பின்
அடிப்பகுதியைக்
களையாமல்
அப்படியே
சூடிவிட்டாள்.
அதனால்
நொந்து
வருந்தும்
இவள்
இடுப்பிற்கு
நல்ல
மங்கல
ஒலி
இனி
ஒலிக்காது.
கலைஞர் உரை:
அவளுக்காக
நல்லபறை
ஒலிக்கவில்லை;
ஏனெனில்
அவள்
இடை
ஒடிந்து
வீழ்ந்துவிட்டாள்;
காரணம்,
அவள்
அனிச்ச
மலர்களைக்
காம்பு
நீக்காமல்
தலையில்
வைத்துக்கொண்டதுதான்.
English Explanation:
No merry drums will be beaten for
the (tender) waist of her who has adorned herself with the anicham without
having removed its stem.
குறள் 1116:
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.
மு.வ உரை:
விண்மீன்கள்
திங்களையும்
இவளுடைய
முகத்தையும்
வேறுபாடு
கண்டு
அறியமுடியாமல்
தம்
நிலையில்
நிற்காமல்
கலங்கித்
திரிகின்றன.
சாலமன் பாப்பையா உரை:
அதோ,
நிலாவிற்கும்
என்
மனைவியின்
முகத்திற்கும்
வேறுபாடு
தெரியாது
நட்சத்திரங்கள்,
தாம்
இருந்த
இடத்திலிருந்து
இடம்
விட்டுக்
கலங்கித்
திரிகின்றன!
கலைஞர் உரை:
மங்கையின்
முகத்துக்கும்,
நிலவுக்கும்
வேறுபாடு
தெரியாமல்
விண்மீன்கள்
மயங்கிக்
தவிக்கின்றன.
English Explanation:
The stars have become confused in
their places not being able to distinguish between the moon and the maid's
countenance.
குறள் 1117:
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.
மு.வ உரை:
குறைந்த
இடமெல்லாம்
படிப்படியாக
நிறைந்து
விளங்குகின்ற
திங்களிடம்
உள்ளது
போல்
இந்த
மாதர்
முகத்தில்
களங்கம்
உண்டோ.இல்லையே.
சாலமன் பாப்பையா உரை:
நட்சத்திரங்கள்
ஏன்
கலங்க
வேண்டும்?
தேய்ந்து
முழுமை
பெறும்
ஒளிமிக்க
நிலாவில்
இருப்பது
போல
என்
மனைவியின்
முகத்தில்
மறு
ஏதும்
உண்டா
என்ன?
கலைஞர் உரை:
தேய்ந்தும்,
வளர்ந்தும்
ஒளிபொழியும்
நிலவில்
உள்ள
சிறுகளங்கம்கூட,
இந்த
மங்கை
நல்லாள்
முகத்தில்
கிடையாதே!
English Explanation:
Could there be spots in the face of this maid like those in
the bright full moon?
குறள் 1118:
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.
மு.வ உரை:
திங்களே!
இம்
மாதரின்
முகத்தைப்
போல
உண்ணால்
ஒளி
வீச
முடியுமானால்,
நீயும்
இவள்
போல்
என்
காதலுக்கு
உரிமை
பெறுவாய்.
சாலமன் பாப்பையா உரை:
நிலவே!
நீ
வாழ்க!
என்
மனைவியின்
முகம்போல்
நான்
மகிழும்படி
ஒளிவீசுவாய்
என்றால்
நீயும்
என்
காதலைப்
பெறுவாய்.
கலைஞர் உரை:
முழுமதியே!
என்
காதலுக்குரியவளாக
நீயும்
ஆக
வேண்டுமெனில்,
என்
காதலியின்
முகம்
போல
ஒளிதவழ
நீடு
வாழ்வாயாக.
English Explanation:
If you can indeed shine like the
face of women, flourish, O moon, for then would you be worth loving?
குறள் 1119:
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.
மு.வ உரை:
திங்களே!
மலர்போன்ற
கண்களை
உடைய
இவளுடைய
முகத்தை
ஒத்திருக்க
விரும்பினால்,
நீ
பலரும்
காணும்படியாகத்
தோன்றாதே.
சாலமன் பாப்பையா உரை:
நிலவே
மலர்
போன்ற
கண்ணை
உடைய
என்
மனைவியின்
முகம்
போல
ஆக
நீ
விரும்பினால்
நான்
மட்டும்
காணத்
தோன்று;
பலரும்
காணும்படி
தோன்றாதே.
கலைஞர் உரை:
நிலவே!
முலரனைய
கண்களையுடைய
என்
காதல்
மங்கையின்
முகத்திற்கு
ஒப்பாக
நீயிருப்பதாய்
பெருமைப்பட்டுக்
கொள்ள
வேண்டுமேயானால்
(அந்தப்
போட்டியில்
நீ
தோல்வியுறாமல்
இருந்திட)
பலரும்
காணும்படியாக
நீ
தோன்றாது
இருப்பதே
மேல்.
English Explanation:
O moon, if you wish to resemble the
face of her whose eyes are like (these) flowers, do not appear so as to be seen
by all.
குறள் 1120:
அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.
மு.வ உரை:
அனிச்ச
மலரும்,
அன்னப்பறவையின்
இறகும்
ஆகிய
இவைகள்
மாதரின்
மெல்லிய
அடிகளுக்கு
நெருஞ்சிமுள்
போன்றவை.
சாலமன் பாப்பையா உரை:
உலகம்
மென்மைக்குச்
சொல்லும்
அனிச்சம்
பூவும்,
அன்னப்
பறவையின்
இளஞ்சிறகும்,
என்
மனைவியின்
பாதங்களுக்கு
நெருஞ்சிப்பழம்
போல
வருத்தம்
தரும்.
கலைஞர் உரை:
அனிச்ச
மலராயினும்,
அன்னப்பறவை
இறகாயினும்
இரண்டுமே
நெருஞ்சி
முள்
தைத்தது
போல்
துன்புறுத்தக்
கூடிய
அளவுக்கு,
என்
காதலியின்
காலடிகள்அவ்வளவு
மென்மையானவை.
English Explanation:
The anicham and the feathers of the swan are to the feet of
females, like the fruit of the (thorny) Nerunji.
திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….
✬✬✬அடுத்த பகுதியை
வாசிக்க
... அழுத்துக...
✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக
0 comments:
Post a Comment