மண்ணும் மரமும் மனிதனும்
மண்ணில் பிறக்கிறது மனிதன்,
மரங்கள் உபயோகிக்கப் பெறுகின்றன,
வேர்கள் விழும் வரை வளர்கிறான்,
வேர்களோ நிலத்தில் பதிந்தே நின்றன.
மண் எனும் தாயின் மேலே நடக்கிறான்,
மரத்தின் நிழலில் சாந்தியாய் துயில்கிறான்,
இரண்டும் தந்த வானம், நீர், உயிர்,
அவையில்லாமல் மனிதனோ வெறும் நிழல்.
மரம் வளர்ச்சி, மண் நிலைத்தன்மை,
மனிதன் வளர, அவை வழிகாட்டுவை,
ஆனால் இன்று மரங்களை வெட்டுகிறான்,
மண்ணை குப்பையால் மூடுகிறான்!
மரங்கள் அழிந்தால் காற்று அழுகும்,
மண் வறண்டால் உயிர்கள் அழியும்,
மனிதனே! நினைத்துப் பார்,
நீயும் மரமாய் வாழ வேண்டியதுதான்.
மண்ணை மதித்து நட, மரம் போல நின்று இரு,
மனிதத்துவம் நீர் போல பாயட்டும்,
மண்ணும் மரமும் மனிதனும் ஒன்றாய்,
இயற்கையின் இசையில் ஒன்றிணையட்டும்.
:செ.மனுவேந்தன்.
"மண்ணும் மரமும்"
"மண்ணும் மரமும் பண்பு காட்டும்
ஒன்றுபட்டு மனிதனை வாழ வைக்கும்
கண்ணும் இமையும் போல இருந்தே
மனித வாழ்வைத் தக்க வைக்கும்!!"
"வானத்தின் அடியில் மண் இருக்கும்
நீண்டு நிரப்பும் வேருக்கு தொட்டிலாகும்!
விதை புதைந்து மரம் உயரும்
மண்ணில் வளர்ந்து வானம் தொடும்!!"
"பழைய கதைகளை மண் கிசுகிசுக்கும்
தோண்டிப் பார்த்தால் வரலாறு புரியும்!
காலத்தின் தழுவலில் இயற்கையின் பிணைப்பில்
மண் உடலே! மரம் கருணையே!!"
நன்றி:[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்
0 comments:
Post a Comment