புது தம்பதி | PUDHU THAMBATHI | Simply Time Pass
திருமணம் முடிந்தால் புதிய உறவுகளை புரிந்து கொள்ளும் வகையில் நடந்துகொண்டால் பிரச்சனைகளுக்கு இடமேது!!📽பகிர்வு: தீபம் இணையதளம் / theebam.com / ttamil.com / dheepam
புது தம்பதி | PUDHU THAMBATHI | Simply Time Pass
திருமணம் முடிந்தால் புதிய உறவுகளை புரிந்து கொள்ளும் வகையில் நடந்துகொண்டால் பிரச்சனைகளுக்கு இடமேது!!📽பகிர்வு: தீபம் இணையதளம் / theebam.com / ttamil.com / dheepam
நகைச்சுவை= ஜோக்ஸ்
-01-
காதலி: நான் பேசாம இருந்தா எப்பிடி இருக்கும்?
காதலன்: உலகமே அமைதியாகிவிடும்!
காதலி:(ஆத்திரத்துடன்) என்ன சொல்கிறீர்கள்?
காதலன்:(சமாளிக்க)என் உலகமே நீதான் என்று சொல்ல வந்தேன்.
-02-
செந்தில்: நான் பயப்பட மாட்டேன்!
கவுண்டர்: ஆமா… மூளை இல்லாம நிலைமையை புரிஞ்சுக்காதவங்க பயப்பட மாட்டாங்க! 😂
-03-
நோயாளி: எனக்கு இரவுகளில்லை
தூக்கம் வருகுது இல்லை. டாக்டர்!
டாக்டர்: அப்போ பகலிலை
தூங்கிங்க! 😄
-04-
நோயாளி: டாக்டர், என் இடது கால் ரொம்ப வலிக்குது.
டாக்டர்: இது வயசான காலத்துல வர்ற வலிதான்.
நோயாளி: அப்படின்னா என் வலது காலுக்கும் அதே வயசுதானே ஆகுது, அது ஏன் வலிக்கல?
-05-
நோயாளி: டாக்டர், நான் உங்ககிட்ட சிகிச்சைக்கு வந்தப்ப என் எடை 100 கிலோ. இப்போ 50 கிலோதான் இருக்கேன்.
டாக்டர்: வெரி குட்... நான் கொடுத்த மருந்து நல்லா வேலை செஞ்சிருக்கு.
நோயாளி: மருந்து இல்ல டாக்டர்... உங்க பில்லைக் கட்டியே பாதியா இளைச்சுட்டேன்!
-06-
நோயாளி: டாக்டர், எனக்கு ஞாபக மறதி அதிகமா இருக்கு. என்ன பண்ணலாம்?
டாக்டர்: முதல்ல என் கன்சல்டேஷன் பீஸைக் குடுங்க, அப்புறம் சொல்றேன்.
-07-
மனைவி: டாக்டர், என் கணவர் தூக்கத்துலயே பேசுறாரு. அதுக்கு ஏதாவது மருந்து கொடுங்க.
டாக்டர்: அவர் முழிச்சுட்டு இருக்கும்போது அவரைப் பேச விடுங்க... தானா சரியாயிடும்.
-08-
😄டாக்டர்: ஆப்ரேஷன் முடிஞ்சுடுச்சு... ஆனா இந்த நோயாளி தப்பிக்கல.
உதவியாளர்: ஏன் டாக்டர்?
டாக்டர்: தப்பிச்சு ஓடி இருந்தா பீஸ் தராம போயிருப்பார்ல, அதான் பெட்லயே கட்டிப் போட்டுட்டேன்!
-09-
நண்பன் 1: அந்த டாக்டர் ஒரு மந்திரவாதி மாதிரி.
நண்பன் 2: ஏன் அப்படி சொல்ற?
நண்பன் 1: நோயாளிக்கு என்ன நோய்னு தெரியலனாலும், அவருக்குத் தேவையான பணத்தை மட்டும் சரியா எடுத்துடுறார்!
-10-
டாக்டர்: உங்களுக்கு இரத்த அழுத்தம் ரொம்ப அதிகமா இருக்கு.
நோயாளி: என் மனைவி கிட்ட 5 நிமிஷம் பேசிப் பாருங்க டாக்டர்... உங்களுக்கு 'ஹார்ட் அட்டாக்கே' வந்துடும்!
-11-
நோயாளி: டாக்டர், என்னால 100 வரை எண்ண முடியல.
டாக்டர்: ஏன்?
நோயாளி: 100 ரூபா வந்த உடனே உங்க பீஸ்னு ஞாபகம் வந்துடுது, அதுக்கப்புறம் எண்ண முடியல!
-12-
நோயாளி: டாக்டர், எனக்கு தூக்கத்துல ஆந்தை அலறுற மாதிரி சத்தம் கேக்குது.
டாக்டர்: அது உங்க மனைவி குறட்டை விடுற சத்தமா இருக்கும், செக் பண்ணுங்க!
-13-
நோயாளி: டாக்டர், ஆபரேஷன் பண்ணா நான் பிழைப்பேனா?
டாக்டர்: கவலைப்படாதீங்க, இது நூறாவது ஆபரேஷன்.
நோயாளி: அப்போ நான் பிழைச்சிடுவேன்ல?
டாக்டர்: தெரியல... ஆனா இதுவரைக்கும் பண்ண 99 தடவையும் தோத்துட்டேன், இந்தத் தடவையாவது ஜெயிக்கணும்னு வேண்டிக்கோங்க!
-14-
நோயாளி: டாக்டர், ஒரு மாசம் முன்னாடி உங்ககிட்ட வந்தப்ப, இனிமே முட்டை சாப்பிடாதீங்கன்னு சொன்னீங்க. இப்போ சாப்பிடுங்கன்னு சொல்றீங்க. ஏன்?
டாக்டர்: அப்போ என்கிட்ட கோழி வளர்ப்புப் பண்ணை இல்ல, இப்போ ஆரம்பிச்சுட்டேன்!
-15-
மகள்: அம்மா, நீங்க ஏன் அப்பாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?
அம்மா: அதானே... நானும் இன்னும் அந்தத் தப்புக்குக் காரணம் என்னன்னு யோசிச்சுக்கிட்டே தான் இருக்கேன்!
கணவன்: (மெதுவாக மக்களிடம் ) நல்லவேளை, நான் மட்டும் தான் அந்த யோசனையில இருக்கேன்னு நினைச்சேன்!
-16-
மகள்: அப்பா, ஸ்கூல்ல 'மூளை இல்லாத மனிதன்' பற்றி கட்டுரை எழுதச் சொன்னாங்க.
கணவன்: அப்படியா? நீ யாரை பத்தி எழுதின?
மகள்: நான் ஏன் வெளியில தேடணும்? அம்மாவைத் தானே அதிகமாப் பார்த்திருக்கேன்!
-17-
மகன் : அம்மா, எனக்கு ஒரு தங்கைச்சிப்
பாப்பா வேணும்.
அம்மா: உங்க அப்பா கிட்ட கேளுமா.
கணவன்: ஒருத்தி பண்ணுற அட்டகாசத்தையே தாங்க முடியல, இதுல 'பார்ட் 2' வேறயா?
-18-
மகள்: அம்மா, கல்யாணம்னா என்ன?
அம்மா: ஒருத்தரை மட்டும் ஆயுள் முழுக்கத் திட்ட நமக்குக் கிடைக்கிற லைசென்ஸ் தான் கல்யாணம்!
கணவன்: (பெருமூச்சுடன்) அந்த லைசென்ஸை வச்சு என்னைத் தான் ஓட்டிக்கிட்டு இருக்காங்க!
-19-
மகள்: அம்மா, நீங்க ஏன் அடிக்கடி அப்பாவோட சண்டை போடுறீங்க?
அம்மா: அப்போதான்
வீட்டில இருக்கிறதை
விட ஆபீஸ் வேலை எவ்வளவோ பரவாயில்லை எண்டு ஒழுங்கா வேலைக்குப் போவாரு!
-20-
மனைவி: ஏங்க, நாம ஏன் ஒரு கார் வாங்கக் கூடாது?
கணவன்: காசு இல்லையே!
மகள்: கவலைப்படாதீங்கப்பா... அம்மாவோட நகையை வித்தா ரெண்டு கார் வாங்கலாம்! (அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை!)
-செ-மனுவேந்தன்
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka
chronicles' from a scientific perspective" [In Tamil & English]
[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்த பதிப்பாகும்.]
பகுதி: 18 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'உண்மையில் தேவநம்பியதிஸ்ஸ இருந்தாரா?'
இன்னும் ஒரு ஒப்பீட்டையும் நான் சொல்லவேண்டும். தேவநம்பிய தீசன் மூத்தசிவாவின் [Mutasiva] இரண்டாவது மகன். அதேபோல அசோகனும் பிந்துசாரரின் (Bindusara) இரண்டாவது மகனாவார். தேவநம்பிய தீசன் 40 ஆண்டுகள் ஆண்டார் என இலங்கை நாளாகமம் [Ceylon chronicles] கூறுகிறது. இலங்கை நாளாகமத்தின் படி, அரியானை எறியபின் அசோகன் 37 ஆண்டுகள் ஆண்டதாக கூறினாலும், இந்தியா செய்திகளின் படி இது 36 ஆண்டுகளாக காணப்படுகிறது. அசோகன் முறையான முடிசூட்டு விழாவிற்கு நாலு ஆண்டுகள் முன்பே ஆள தொடங்கிவிட்டான். எனவே அவனும் 40 ஆண்டுகள் ஆட்சி செய்ததாகிறது. மேலும் இவ்விருவருக்கும் தேவநம்பிய என்றே அதே அடைமொழி [same
epithet ‘Devanampiya’] காணப்படுகிறது. அப்படி என்றால் அசோகனுக்கு ஒத்ததாக இலங்கையில் ஒரு தேவநம்பிய தீசன் உண்டாக்கப் பட்டானா என்ற கேள்வியும் எழுகிறது [Is the author of the Dipavamsa
created a Lanka counter part of Asoka with the same epithet?]? இதனால் போலும் தொல்பொருள் அல்லது கல்வெட்டு சான்று ஒன்றும் தேவநம்பிய தீசனுக்கு இலங்கையில் இல்லை. ஆனால் அசோகனுக்கு அவை தாராளமாக உண்டு. புத்தரின் சமகால மன்னர் பிம்பிசாரன் மற்றும் அசோகனின் தந்தை பிந்துசாரர், இருவரும் வெவ்வேறு ஆட்களாகும். [Bimbisara, the contemporary king
of the Buddha is different from the Bindusara, the father of Asoka]
மேலே குறிப்பிட்டுள்ளபடி, விஜயன் முதல் தேவநம்பியதிஸ்ஸ வரை எந்த வரலாற்று அல்லது தொல்பொருள் ஆதாரங்களும் இல்லாமல் இந்த மன்னர்கள் காணப்படு கிறார்கள். அப்படி என்றால், அன்றைய காலத்தில் இலங்கையில் அரசர்கள் இல்லை என்பதல்ல. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் தலைவர்கள் இருந்திருக்க வேண்டும், அவர்களின் பெயர்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, இந்த கண்டு பிடிக்கப்பட்ட மன்னர்கள் 'புத்த மதத்தின் பக்தியுள்ளவர்களின் அமைதியான மகிழ்ச்சி மற்றும் உணர்ச்சிகளுக்கு / 'serene
joy and emotions of the pious.' பதிலாக இங்கு மாற்றப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மகாவம்சம் அத்தியாயத்தின் முடிவிலும் இது கூறப்பட்டுள்ளது.
தேரவாத பௌத்தத்தில், பக்திமான்களின் அமைதியான மகிழ்ச்சியையும் உணர்ச்சியையும் உருவாக்கவென, மகாவம்சம் அதன் வாசகர்களிடையே இப்படி, ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் கூறுகிறது. இது பார்வையாளர்களுக்குள் ஒரு உணர்வுகளை தூண்டவும் மற்றும் கண்மூடித்தனமான ஒரு பக்தியை வளர்க்கவும் என்று நாம் கருதலாம். இது வரலாற்று நிகழ்வுகளுக்கு மட்டுமல்லாமல், அதைப் பின்பற்றுபவர்களிடையே ஆழமான உணர்ச்சி மற்றும் ஒரு தொடர்பை ஏற்படுத்துவதற்காகவும் வடிவமைக்கப்பட்ட ஒரு உரையாக இருக்கலாம். / In
Theravada Buddhism, serene joy and emotion of the pious relates to the
emotional impact the Mahavamsa aims to create in its readers. It represents
both the desired emotional response to its teachings and the ultimate goal of
its compilation: to foster spiritual feelings and devotion within the audience.
This highlights the Mahavamsa as a text designed not only for historical
recounting but also for evoking a deep emotional and spiritual connection among
its followers.
முன்பே கூறியது போல், சில அனுமானங்களின்படி, மூத்தசிவா குறைந்தது 137 ஆண்டுகள் வரை வாழ்ந்திருக்க வேண்டும். அதாவது, அதன்படி, மூத்தசிவா அரியணை ஏறும் போது அவனுக்கு 77 அகவையாகும். முத்தசிவனுக்கு முப்பது வயது இருக்கும் போது இரண்டாவது மகன் தேவநம்பிய தீசன் பிறந்திருந்தால், அரியணை ஏறும் போது தேவநம்பியதிசனுக்கு 107 வயது இருந்திருக்கும், மேலும் அவர் 147 வயது வரை மிகவும் பழுத்த வயது வரை தொடர்ந்து வாழ்ந்திருக்க வேண்டும் [(107-30-30)+60+40, அல்லது 137 - 30 + 40 வரை].
இப்போது அசேல மன்னனின் ஆட்சியைப் பார்ப்போம். அசேல முத்தசிவாவின் ஒன்பதாவது மகன். முத்தசிவனுக்கு ஐம்பது வயது இருக்கும் போது அவர் பிறந்தார் என்று வைத்துக் கொள்வோம்.
தேவநம்பிய திசாவுக்கு பிறகு இவனின் தம்பி உத்திய 10 ஆண்டுகள், அடுத்த தம்பி மகாசிவ 10 ஆண்டுகள், அடுத்த தம்பி சூரதிச்ச 10 ஆண்டுகள், அதைத் தொடர்ந்து சேனா மற்றும் குட்டாகனும் 22 ஆண்டுகள், அதன் பின் கடைசிக்கு முதல் தம்பி அசேல முடி சூடுகிறான். எங்கள் முன்னைய ஊகத்தின் படி அசேலக்கும் திஸ்ஸவுக்கும் இருபது ஆண்டு வித்தியாசம் இருந்ததால் அல்லது முத்தசிவனுக்கு ஐம்பது வயது இருக்கும் போது அசேல பிறந்தார் என்றால், குறைந்தது 179 அகவையில் [147 - 20
+ 10 + 10 + 10 + 22 = 179] அல்லது 137- 50 +
40 + 10+ 10 + 10 + 22 = 179] அசேல [Asela] முடி சூடுகிறான். அதன் பின் 10 ஆண்டுகள் ஆள்கிறான். எனவே குறைந்தது 189 ஆண்டுகள் வாழ்ந்து உள்ளான். இது ஒரு பரிதாபகரமான பொய்யாக இருக்க வேண்டும். பண்டுக முதல் அசேல வரையிலான ஆட்சியாளர்களின் வயது வழக்கத்தை விட மிக அதிகம்.
புத்தர் மறைந்து இருநூற்று பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அசோகரின் முடிசூட்டு விழா நடந்தது. இருப்பினும், இந்திய பாரம்பரியத்தின்படி புத்தர் மறைந்து நூறு ஆண்டுகளுக்குப் பிறகுதான் அசோகரின் முடிசூட்டு விழா நடந்தது. இரண்டு மரபுகளுக்கும் இடையே நூற்று பதினெட்டு ஆண்டுகால மாறுபாடு உள்ளது. இப்போது அறிஞர்கள் புத்தர் இறந்த ஆண்டை கி பி 400 க்கும் கி பி 369 க்கும் இடையில் கணிக்கிறார்கள். பண்டுவாசுதேவரில் இருந்து அசேல வரையிலான ஆட்சியின் நீளம், தமிழ் மன்னர்களான சேனனும் குத்திகனும் [22 ஆண்டுகள்] தவிர, 30, 20,
70, 60, 40, 10, 10, 10 மற்றும் 10 ஆகியவை ஆகும். இவர்கள் எல்லோரும் எல்லோரும் நேர்த்தியான வட்ட இரட்டை எண்களாக இருப்பதும் ஆச்சரியமே! இனி வரும் பாடங்களில் பண்டுவாசுதேவருக்கும் துட்டகாமினிக்கும் இடையிலான சகாப்தம் விரிவாக பகுப்பாய்வு செய்யப்படும்.
*அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக...
*ஆரம்பத்திலிருந்து
வாசிக்க
அழுத்துக...
Part: 18 /
The Kings who ruled after Vijaya and the related affairs / 'Did
Devanampiyatissa really exist?'
Let us now look at Devanampiyatissa
again. He was the second son of Mutasiva. Asoka was also the second son of
Bindusara. Devanampiyatissa ruled for forty years as per the Ceylon chronicles.
Asoka ruled for thirty-seven years after his consecration as per the Ceylon
chronicles. However, Asoka assumed the power about four years prior to his
formal coronation. Asoka therefore ruled forty-one years in total as per the
Ceylon chronicles. The Indian tradition says that Asoka ruled thirty-six years
after the coronation. Adding four years prior to the coronation, Asoka ruled
forty years, as did Devanampiyatissa. Both are with the same epithet
‘Devanampiya’. Therefore, the author of the Dipavamsa created a Lanka counter
part of Asoka with the same epithet. He could not have been a real person. That
is why there are no archaeological or inscriptional evidence in Lanka about
Devanampiyatissa while evidences for Asoka are available in length and breadth
of India except in Tamil country. Bimbisara, the contemporary king of the
Buddha is different from the Bindusara, the father of Asoka. As noted above, Vijaya to Devanampiyatissa
are invented kings without any historical or archaeological evidences. This
does not mean that there were no kings in Ceylon during that time. There must
have been chieftains in various parts of Lanka, and all their names were
obliterated and these invented kings were substituted for the serene joy and
emotions of the pious. As stated above,
Mutasiva must have lived to a very old age of one hundred and thirty seven. If
the second son Tissa was born when Mutasiva was thirty years of age, then
Devanampiyatissa would have been 107 years of age when he ascended the throne,
and he should have continued to live for the very ripe age of 147 years,
[(107-30-30)+60+40, or 137 - 30 + 40]
Now let us look at the king Asela’s
rule. Asela was the ninth son of Mutasiva. Suppose he was born when Mutasiva
was fifty years of age. Considering the rules of Uttiya (10 years), Mahasiva
(10 years), Suratissa (10 years), Sena and Guttika (22 years), Asela must have
ascended the throne when he was, (107-30-50)+60+40+ 10+ 10 + 10 + 22, 179 years
of age and he must have been killed by Elara when Asela was 189 of age, after
the reign of ten years. This must be a pathetic lie. The ages of rulers from
Panduka to Asela are very much longer than usual. Asoka’s coronation took place
two hundred and eighteen years after the demise of the Buddha as per the
Ceylonese chronicles. However, Asoka’s coronation took place only one hundred
years after the demise of the Buddha as per the Indian tradition. There is a
variation of one hundred and eighteen years between the two traditions. Now
scholars prefer 400 B. C. to 369 B. C. as the preferred range in which the
Buddha died. The lengths of reigns from Panduvasudeva to Asela, except the
Damila kings Sena and Guttika [22 years] - 30, 20, 70, 60, 40, 10, 10, 10 and
10 are neat round even numbers indicating cooked up numbers. The era between
Panduvasudeva to Dutthagamani is analysed in detail further down in this chapter.
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah
Thillaivinayagalingam,
Athiady,
Jaffna]
பகுதி / Part: 19 தொடரும் / Will Follow
ஆரம்பம் : ஐப்பசி ,2010
நோக்கம் :இணைந்த வளர்ச்சி
தேடல் : வளரும் வாசகர்கள்
போடல் : பயனுள்ள தகவல்கள்
நாடல்: நல்லதோர் சமுதாயம்
ஆக்குவோர்:
தில்லை விநாயக லிங்கம்[u.k]
செல்வதுரை சந்திரகாசன்[aus.]
செல்லத்துரை மனுவேந்தன்[can.]
காலையடி அகிலன் [can.]
அகிலா, பரந்தாமன்[S.L]
தொடர்பு:
s.manuventhan@hotmail.com