சிரிக்க.... சில நிமிடம்

 


-01-

காதலன்: "நீ எனக்கு உயிரை விட முக்கியம்!"

காதலி: "அப்போ உயிரை விட்டுட்டு என்னை எடுத்துக்கோ!"


-02-

கணவன் : "நீ என்னை விட உன்  செல்போனை அதிகம் காதலிக்கிறாய்!"
கணவன்: "அது உண்மைதான்... செல்போன்  என்கூட  ரொம்ப நேரம் பேசுது... நீங்க அப்பிடி பேச மாட்டீங்க!"


-03-

மனைவி: “நான் இவ்வளவு நேரமாய் பேசினது  உங்களுக்கு புரியுதா?”
கணவன்: (தனக்குள்)“புரியுதா இல்லையா தெரியல… பேசியதிலிருந்து ஏதாவது கேள்வி கேட்டுவிடுவியோ எண்டுதான்  பயமா இருக்கு!”


-04-

மனைவி: “ என்னங்க நீங்க இன்றைக்கு அமைதியா இருக்கீங்களே?”
கணவன்: “ எல்லாமே ஒரு பாதுகாப்பு நடவடிக்கைதான்!”


-05-

மனைவி: “நான் பேசுறது அதிகமா?”
கணவன்: “இல்ல… நம்ம வாழ்க்கைக் கதையில்  background music மாதிரி இருக்கு!”


-06-

போலீஸ்: லைசன்ஸ் காட்டுங்க.
டிரைவர்: சார், நேற்றுத் தான் எக்ஸ்பயர்.
போலீஸ்: அப்ப போயிற்று நேற்றைக்கு வா!


-07-

போலீஸ்: குடிச்சிருக்கியா?
டிரைவர்: இல்ல சார்.
போலீஸ்: அப்ப நீ பேசுறது ஏன் கீறு விழுந்த ஆடியோ ரெக்கார்ட் மாதிரி கேட்குது ?


-08-  

போலீஸ்: ஏன் வண்டியில சைடு மிரர் இல்ல?டிரைவர்: சார், முன்னாடிதான் பாக்குறேன், ஓடுறேன்.

போலீஸ்: அப்போ, பின்னாடி வர்ற பிரச்சனை யார் பாக்குறர்து?

டிரைவர் : அந்த பிரச்சனையைப் பின்னால வருபவன் பார்த்துக்கொள்வான் சார் !


-09-

போலீஸ்: ஏன் இவ்வளவு வேகமாய் வண்டியை ஓட்டுறாய்?
டிரைவர்: சார், சீக்கிரம் போக.
போலீஸ்: சீக்கிரம்  போறது சொர்க்கத்துக்கா, நரகத்துக்கா!


-10-

மனைவி: இந்த காக்கா கத்துறதா பாத்தா உங்க அம்மா வரப்போறது மாறி தெரியுது..

கணவர்: எப்புடி சொல்ற நீ..?

மனைவி: எவ்வளவு துரத்துனாலும் போகாமல் கத்திக்கிட்டே இருக்குல அதா வச்சு தான்.


-11-

மனைவி: ஏன் கிட்ட உங்களுக்கு ரொம்ப புடிச்சது என்ன.. அழகான முகமா..! பணிவான குணமா..! இல்ல பாசமான மனமா..!

கணவர்: உன்னோட இந்த காமெடி தான்..!


-12-

மனைவி: உங்கள எப்போதும் பார்த்துகிட்டே இருக்கனும்னு போல இருக்குங்க.

கணவர்: ம்,,,ம் ...அப்பவே ஜோசியர் சொன்னாரு , கலியாணத்துக்கு  அப்புறம் சனியோட பார்வை நம்ம  மேல தான் இருக்கும்னு.


-13-

மனைவி: தூக்கத்துல திடீர்னு ஏன் சிரிச்சீங்க.?

கணவர்: அதுவா கனவுல தமன்னாங்க வந்த அதனால தான்

மனைவி: அப்றம் ஏன் திடீர்னு கத்துனீங்க..?

கணவர்: டக்குனு நடுவுல நீ வந்துட்ட.


-14-

ஆசிரியர்: இரண்டு கழுதை சேர்ந்து கணக்குப் போட்டா எப்படி இருக்கும்?

மாணவன்: எங்கேயாவது உதைக்கும்.


-15-

மாணவன் :சார், பேப்பர்ல முட்டை போடாதீங்க.

ஆசிரியர்: ஏண்டா? 

மாணவன்; நான் சைவம் சார்.


-16-

ராமு : எங்க டீச்சர் ஒருவகையில் எனக்கு அம்மா மாதிரி.

வேலு: அவ்ளோ அன்பா இருப்பாங்களா? 

ராமு:இல்ல, நல்லா தூங்க வைப்பாங்க.


-17-

மாணவன்: சார், என் தலையில் எறும்பு ஏறுது பாருங்கள்.

ஆசிரியர்: அதை ஏண்டா என்ன பார்க்க சொல்ற? மாணவன்: நீங்க தான்  சார் என் தலையில எதுவுமே ஏறாதுன்னு சொன்னீங்க அதான்.


-18-

மாணவனின் தந்தை: என் பையன் ஒழுங்கா படிக்கறதில்லன்னு இருந்த டிவிய வித்துட்டன்.

வீட்டுக்கு வந்த ஆசிரியர்: வெரிகுட், பையன எங்க காணோம்? 

மாணவனின் தந்தை:பக்கத்து வீட்டுக்கு டிவி பாக்க போய் இருக்கான்.


-19-

மன்னன்: தளபதி, போரில் நாம் தோல்வியை சந்திக்காமல் இருப்பதற்கு என்ன வழி சொல்லுங்க?

தளபதி: போரையே சந்திக்காமல் இருப்பது தான் ஒரே வழி மன்னா.


-20-

அமைச்சர்: செல்போன் அடிச்சாலே மன்னர் மயக்கமாகி விழுந்து விடுகிறாரே ஏன்?

தளபதி : யாரோ போர்முரசு ஒளியை ரிங் டோனாக வைத்துக் கொடுத்து உள்ளார்களாம்.


😁😁😁😁😁😁😁😁தொகுப்பு:செ.மனுவேந்தன் 


0 comments:

Post a Comment