கல்வி மட்டும்தான் பிள்ளைகளின் முக்கிய திறமை என்று தவறாக மனிதர்கள் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எதோ ஒரு தனித்திறமை இருப்பதனை பலரும் உணர்வதில்லை. கல்வி மட்டும் தான் ஒருவரை செம்மைப்படுத்தும் என்று நம்பினால் நாம் அந்த பிள்ளைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக இருக்கின்றோம் என்பது அர்த்தம். குழந்தைகளின் திறமைகளையும் அவர்களின் படைப்பாற்றலையும் வெளிக்கொண்டு வர வேண்டியது ஆசிரியர் பெற்றோர் சமுதாயத்தின் கடமையாகும். அவர்களின் திறனை மறுக்கும் மனிதர்தான் மக்குகள் என அழைக்கப்பட வேண்டும்.
📽பகிர்வு:தீபம் இணையத்தளம் /theebam.com/ www.ttamil.com / dheepam
0 comments:
Post a Comment