முட்கள் ......(காலையடி அகிலன்)

Image result for வலி இன்றி வாழ்வில்
வலி இன்றி வாழ்வில் 
இனிமை தான் வந்துடுமோ 
  அவரவர்  தன்   வாழ்க்கைப்   
பாதையில்  செல்லும்   போது 
முட்கள்  காயம் கொள்ள ச்செய்யும் 
அதை கண்டு கண்ணீரை சிந்தி விடாதே!

இருள் நிறைந்த பாதையில் செல்லும் போது 
முட்கள்  தெரிவதில்லை தானே 
அவையை கடக்கும் போது 
  உணரச்   செய்கின்றன வலியை 

அவை இன்பத்தின் 
அருமையை தெரியபடுத்த தான் 
வரும் முள்ளு  என உணர்ந்து 
கடந்து செல்லு 
இனிமையான  பாதை அமைத்துடுவாய் சந்ததிக்கு  

இனிமையான பாதை நீ அமைத்தால் 
உன் சந்ததிகளுக்கு 
ஒளியான பாதை வந்துவிடுமே 

அங்கே  தெருவோரம் இருக்கும் 
மூடர் உன்னை 
கேலி பண்ணி முட்களை எறிவார்! 
அதனால் மனம் உடைந்து விடாதே 
தந்த வலியை  தாங்கும் மன வலிமை அடைந்து 
உன் இலக்கு பாதையை நோக்கி நகர்ந்து செல்லு 
முட்கள் தந்த வலி உதிர்ந்து போகும்!
                                                  

0 comments:

Post a Comment