நகைச்சுவை=ஜோக்ஸ்
-01-
மனைவி: ஏங்க, கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கு நிறைய கிப்ட் வாங்கித்
தருவீங்க, இப்போ ஏன் தர்றது இல்ல?
கணவன்: யாராவது தூண்டில்ல சிக்கின மீனுக்கு இரை போடுவாங்களா?
-02-
கணவன்: நேத்து கனவுல உன்ன ஒருத்தன் கடத்திட்டு போயிட்டான்.
மனைவி: நிஜமாவா? அப்புறம் என்னாச்சு?
கணவன்: என்னாச்சுன்னு தெரியல.. அவன்கிட்ட 'தாங்க்ஸ்' சொல்லலாலாம்
எண்டு நினைச்சேன், அதுக்குள்ள முழிப்பு வந்துருச்சு!
-03-
மனைவி: என்னங்க! நம்ம கல்யாண போட்டொவை பார்த்திங்களா! நாம தாலிகட்டும்போது நமக்கு பின்னால நிக்கிற சொந்தக்காரர் எல்லாம் நல்ல சந்தோசமாய் சிரிக்கிறார்கள் பாருங்க!.
கணவன்:அது ஒண்ணுமில்லடி! தாங்கள் விழுந்த குழிக்குள்ள நாங்களும் விழுந்த சந்தோசமடி அது!
-04-
மனைவி: கல்யாணத்துக்கு முன்னாடி "உனக்காக உலகத்தையே எதிர்ப்பேன்"னு சொன்னீங்களே, இப்போ ஏன் எங்க அம்மா வந்தா பயந்து நடுங்குறீங்க?
கணவன்: உலகம் வேறடி!,அமேரிக்கா வேறடி!
-05-
மனைவி: ஏங்க, நான் செத்துப் போயிட்டா நீங்க என்ன பண்ணுவீங்க?
கணவன்: நானும் செத்துப் போயிடுவேன்.
மனைவி: ஏன்? அவ்வளவு பாசமா என்மேல?
கணவன்: இல்ல.. அப்படியான சந்தோஷத்தை என்னால தாங்கிக்க முடியாது எண்டு டொக்டர் சொல்லியிருக்கார்!
-06-
மனைவி: உங்க பிரண்ட் கல்யாணம் பண்ணிக்க போறாராம், அவருக்கு என்ன அட்வைஸ் கொடுப்பீங்க?
கணவன்: "வெல்கம் டு தி ஜெயில்"னு ஒரு போஸ்டர் அடிச்சு கொடுப்பேன்!
-07-
மனைவி: நம்ம வீட்டுக்கு முன்னாடி இருக்குற அந்த பிச்சைக்காரன் எனக்கு ரொம்ப நன்றி சொன்னான்.
கணவன்: எதுக்கு?
மனைவி: நான் சமைச்ச சாப்பாட்டை அவனுக்கு போட்டேன்.
கணவன்: பாவம், அவனுக்கு வேற வழியே இல்ல போல!
-08-
மனைவி: நான் ஒரு மாசம் அம்மா வீட்டுக்கு போறேன்.
கணவன்: (கண்ணீருடன்) நிஜமாவா?
மனைவி: ஏன் அழறீங்க?
கணவன்: இது ஆனந்த கண்ணீருன்னு உனக்கு எப்படி புரிய வைப்பேன்!
-09-
கணவன்: இன்னைக்கு என்ன ஸ்பெஷல் சாப்பாடு?
மனைவி: எதுவுமே இல்ல.
கணவன்: நேத்தும் இதே தான சொன்ன?
மனைவி: நேத்து பண்ணினதுல மீதி இருக்குறது தான் இன்னைக்கும்!
-10-
மனைவி: "ஏங்க, நான் செத்துப்போயிட்டா நீங்க வேற கல்யாணம் பண்ணிப்பீங்களா?"
கணவன்: "மாட்டேன்."
மனைவி: "ஏன்? என் மேல அவ்வளவு பாசமா?"
கணவன்: "இல்ல... மறுபடியும் ஒரு தப்பு பண்ண எனக்கு விருப்பம் இல்ல!"
-11-
காதலி: "நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க குடிக்கிறதை விட்டுடுவீங்களா?"
காதலன்: "கண்டிப்பா...விருப்பம்தான், ஆனா அதுக்கப்புறம் குடிக்க வேண்டிய அவசியம் உன்னாலயே வந்துடும்னு நினைக்கிறேன்!"
-12-
காதலன்: (கைபேசியில்) "உனக்காக நான் ஏழு கடலையும் தாண்டி வருவேன்டி!"
காதலி: "நிஜமாவா? சரி, இப்போ வெளிய மழை பெய்யுது, பால் இல்லை.கொஞ்சம் கடைக்கு போய் பால் பாக்கெட் வாங்கிட்டு வரீங்களா?"
காதலன்: "ஐயய்யோ ... மழையில நனைஞ்சா எனக்கு ஜலதோஷம் பிடிக்குமே!"
-13-
காதலன்: "உன் கண்கள் ரெண்டும் மீன் மாதிரி இருக்கு."
காதலி: "அப்படியா? அப்புறம்?"
காதலன்: "ஆனா வாயைத் திறந்தா மட்டும் முதலை மாதிரி இருக்கு!"
-14-
காதலி: "நீங்க என்னை காதலிக்கிறதுக்கு முன்னாடி எத்தனை பொண்ணுங்களை காதலிச்சீங்க?"
காதலன்: (மௌனமாக இருக்கிறான்)
காதலி: "ஏன் அமைதியா இருக்கீங்க?"
காதலன்: "இல்ல, எண்ணிட்டு இருக்கேன்... குறுக்கே பேசி எண்ணிக்கையை மறக்கடிக்காதே!"
-15-
காதலி: "என்னை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்?"
காதலன்: "உப்பை விட அதிகமா பிடிக்கும்."
காதலி: "ஏன்?"
காதலன்: "உப்பு அதிகமானாலும் கஷ்டம், இல்லன்னாலும் கஷ்டம்!"
-16-
போலீஸ்: என்னப்பா, திருடன் உன் முன்னாடியே நகையைத் திருடிட்டு போறான், நீ ஏன் தடுக்கல?
காவலாளி: அவர்தான் சார் முகமூடி போட்டிருந்தாரே, நான் ஏதோ சினிமா ஷூட்டிங்னு நினைச்சு வேடிக்கை பார்த்தேன்!
-17-
இன்ஸ்பெக்டர்: என்னடா இது, திருடுன வீட்டுலேயே தூங்கிட்ட?
திருடன்: என்ன பண்றது சார்... அந்த வீட்டுல 'தூங்குவது எப்படி? என்ற புத்தகத்தை படிச்சேன், அப்படியே தூங்கிட்டேன்!
-18-
முதலாம் பைத்தியம்: டேய், நான் ஒரு பெரிய கவிதை எழுதிருக்கேன் பாரு.
இரண்டாம் பைத்தியம்: ஆனா காகிதத்துல ஒரு எழுத்து கூட இல்லையே?
முதலாம் பைத்தியம்: இது "மௌனக் கவிதை"டா!
-19-
டாக்டர்: உனக்கு ஏன் இவ்வளவு பெரிய காயம் ஆச்சு?
பைத்தியம்: தூங்கும்போது கொசு கடிச்சது டாக்டர், அதான் கல்லெடுத்து அது மேல அடிச்சேன்!
-20-
ஆசிரியர்: ஒரு வாரத்தில் எத்தனை நாட்கள்?
மாணவன்: ஆறு நாட்கள்.
ஆசிரியர்: ஏன்?
மாணவன்: ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அல்லவா!
தொகுப்பு:செ.மனுவேந்தன்
0 comments:
Post a Comment