"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific
perspective" [In Tamil & English]
[This detailed Tamil article is based on the unfinished
historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran,
a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்த பதிப்பாகும்.]
பகுதி: 17 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / ''திஸ்ஸ' என்ற பெயர் சிங்களவர்களை மட்டுமே குறிக்கிறதா?'
பெயர் 'திஸ்ஸ ' [Tissa] ஒரு பொதுவான புத்த நாடுகளில் உள்ள ஒரு சொல்லாகும். ஆனால் அதே பெயர் கொஞ்சம் நீளமாக, உதாரணமாக திசைநாயகம் / திஸ்ஸநாயகம், திசைவீரசிங்கம் / திஸ்ஸவீரசிங்கம், [Tissanayagam, Tissaveerasingam, and Tissam etc ] போன்ற பெயர்கள் தமிழ் மக்களிடமும் உண்டு. அது மட்டும் அல்ல, இதை ஒப்புவிப்பது போல, 2014 / 2015 ஆண்டு, கீழடி தொல்பொருள் ஆய்வில், பெயர் 'திஸ்ஸ' கண்டு பிடிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. இந்த தொல்பொருளின் காலம் ஏறத்தாழ கி மு 300 இல் இருந்து கி மு 400 என கணிக்கப்பட்டும் உள்ளது. தேவநம்பிய தீசனின் காலமும் கி மு 247 இல் இருந்து கி மு 207 என்பதும் குறிப்பிடத் தக்கது. அத்துடன், புத்த மதத்திற்கு மாறமுன், அவன் சிவனை வழிபட்டவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கீழடிக்கு வருகை தந்த பாண்டிச்சேரி பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் k ராஜன், தமிழ்-பிராமி கல்வெட்டுகள் கொண்ட பானை ஓடுகள் தகவல் தொடர்பு முறையின் பரவலைக் காட்டுவதாகக் கூறினார். பிராமி எழுத்துமுறை பயன்படுத்தப்பட்டாலும், தமிழ் மற்றும் பிராகிருதம் ஆகிய இரண்டு மொழிகளும் பயன்படுத்தப்பட்டன. பானை ஓடு ஒன்றில் பிராமி எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட "திஸ்ஸா" என்ற பெயர் பிராகிருத மொழிக்கு சொந்தமானது. பிராகிருதப் பெயர் கீழடிக்கு இலங்கையுடன் கடல்சார் வர்த்தகம் இருந்ததை உணர்த்துவதாக ராஜன் உறுதியாக நம்புகிறார். / 'Digging up Madurai’s Sangam
past'. கீழடி, பள்ளிச்சந்தை திடலில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்களிடையே சுமார் பதினெட்டு மட்பாண்டச்சில்லுகளில் தமிழ் - பிராமி எழுத்துருக்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன. அச்சில்லுகளில் வேந்தன், சேந்தன் அவதி, சந்தன், சாத்தன், மடைசி, எரவாதன், உத்திரை, ஆதன், முயன், இயனன், திஸன், குவிரன், குலவன், உலசன், போன்ற தமிழ் சொற்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.
[Vendan, Sendan Avadi, Chandan, Satan, Madasi, Eravadan, Uthtrai,
Aathan, Muyan, Iyanan, Tissan, Kwiran, Kulavan, Ulasan. இங்கு கடைசியில் உள்ள 'ன்' ['N'] எடுக்கப்பட்டு திஸ்ஸ ஆக மாறி உள்ளது எனலாம்.
ஒரு காலத்தில் தமிழரும் புத்த மதத்தை தழுவி இருந்ததும் குறிப்பிடத் தக்கது எனவே திஸ்ஸ என்ற பெயர் சிங்களவர்களை மட்டும் குறிக்கவில்லை என்பது தெளிவாகிறது. இது ஒரு பௌத்தப் பெயராக இருந்திருக்கலாம்? மேலும் தமிழ் நாடுகள் சமணம், சைவம், வைணவம் மற்றும் பிற மதங்களுடன் பௌத்தத்தையும் ஒரு காலத்தில் பின்பற்றின என்பதும் குறிப்பிடத் தக்கது. அதாவது, தமிழ் பகுதிகள், இந்தியா கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததால், பல்வேறு மதங்கள் மேலோங்கி இருந்தன, மேலும் சில காலப்போக்கில் செல்வாக்கை இழந்தன, மற்றவை முக்கியத்துவம் பெற்றன என்பதே உண்மை.
இலங்கை அம்பாறை மாவட்டத்திலுள்ள கொடுவில்லில் [குடுவில் கல்வெட்டு, அம்பாறை / Kuḍuvil inscription, Amparai] கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று ‘திஸ’ [திஸ்ஸ]
என்னும் பெயருடைய தமிழ் பெருவணிகனொருவன் அங்குள்ள பௌத்த சங்கத்துக்கு தானம் வழங்கிய செய்தியைத் தெரிவிக்கின்றது. [The cave of the merchants who are
the citizens of Dighavapi, of the sons of . . . . and of the wife Tissā, the
Tamil. / Paranavitana, Senarath (1970). "Inscriptions of Ceylon - Volume
I, Inscription no. 480". inscriptions.lk. Retrieved 14 December 2023.] மேலும் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் சுமார் 15 கல்வெட்டுகளில் ‘திஸ’ எனும் பெயர் இடம்பெற்றுள்ளது. வணிக சமூகத்தில் ‘திஸ’ ஒரு தனிச்சிறப்பு மிக்க நிலையைக் குறிப்பதாக இலங்கை ஆய்வாளர் புஷ்பரத்னம் கருதுகிறார்.
மேலும் அனுராதபுரம் புராதன நகரில் உள்ள அபயகிரி விகாரைப் பகுதியில் தமிழ் குடும்பத் தலைவன் பற்றிய ஒரு பிராமிக் கல்வெட்டு காணப்படுகிறது. அபயகிரி தூபியின் மேற்குப் பக்கத்தில் சுமார் 300 மீற்றர் தூரத்தில் சில கற்பாறைகள் காணப்படுகின்றன. இவற்றில் ஒரு பாறையில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. [A Brahmic inscription on the head
of a Tamil family is found in the Abhayagiri Viharai area in the ancient city
of Anuradhapuram. At a distance of about 300 meters on the western side of
Abhayagiri obelisk some boulders are found. An inscription is engraved on one
of these rocks. ]
பேராசிரியர் பரணவிதானா, இந்த கல்வெட்டை மொழிபெயர்த்து இப்படி கூறுகிறார்,
இது “இல்லு பரதனான தமிழன் சமன மூலம் அமைக்கப்பட்ட தமிழ் குடும்பத் தலைவனின் மடம். சகவின் ஆசனம், நசடவின் ஆசனம், க…திசனின் ஆசனம், .. .. ..ஆசனம், குபிர சுஜாதாவின் ஆசனம், கப்பலோட்டி கரவனின் ஆசனம்
எனப் பொருள்படுகிறது என்கிறார். இந்தக் கல்வெட்டில் இரண்டு இடங்களில் தமிழர்கள் என திருப்ப திருப்ப
குறிப்பிடப்பட்டுள்ளனர். முதலாவது “தமிழ் சமணன்” என்றும், இரண்டாவது “தமிழ் குடும்பத் தலைவர்” என்றும் ஆகும். இந்த கட்டிடம் தமிழ் பாரம்பரிய சின்னமாக உள்ளது. இங்கும்
'திஸ்ஸ' ஒரு தமிழரைக் குறிக்கிறது.
*அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக...
Theebam.com: "அறிவியல் நோக்கில் ' பெளத்தம் - ஒரு அலசல்- பகுதி: 18:
*ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...
Part: 17 / The Kings who ruled after Vijaya and the related affairs /
'Does the name 'Tissa' refer only to Sinhalese people?'
Tissa is a common name as per the chronicles in the Buddhist
countries, but it was a common name with extension, such as Tissanayagam,
Tissaveerasingam, and Tissam etc among Tamils too. The Name Tissa was found in
the recent archaeological excavation at Keezzadi in Tamil Nadu-India during
2014 to 2015. It was widely reported. This was dated to be about 300 B. C. to
400 B. C. Devanampiyatissa’s reign id from 247 B. C. to 207 B. C. The names,
which were found on the potsherds, are Uthiran, Aathan, Saathan, Tissan, Surama
etc. If ‘n’ in the name Tissan is left out then it is Tissa. It is therefore
clear that the name Tissa does not exclusively indicate Sinhalese. It could
have been a Buddhist name, and the Tamil countries were following Buddhism
along with Jainism, Saivism, Vaisnava and various other religions during that
time. Being part of a continental India, various religions prevailed, and some
lost influence with passage of time and others gained prominence.
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
பகுதி / Part: 18 தொடரும் / Will Follow
0 comments:
Post a Comment